என் மலர்

    தென்காசி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிளாஸ்டிக் பைகள், குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்டவை பயன்பாட்டை தடுக்க வேண்டும்.
    • பொருட்கள் வாங்க செல்லும்பொழுது துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியருப்பதாவது:-

    தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தினை தென்காசி மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்திட ஏதுவாக மாவட்டம் முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.

    இதனை மாவட்டம் முழுவதும் அமல்படுத்தி பசுமை மாவட்டமாக உருவாக்கும் நோக்கில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தாள்களில் வழங்கப்படும் உணவு பொட்டலங்கள், பிளாஸ்டிக் மேசை விரிப்பு, பிளாஸ்டிக் கால் செய்யப்பட்ட தட்டுகள், தேநீர் குவளைகள், குடிநீர் பாட்டில்கள், பாக்கெட்டுகள் பயன்பாட்டை தடுக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்களும், வணிகர்களும் தடை செய் யப்பட்ட இந்த பொருட்களை பயன் படுத்துவதை கைவிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீட்டு கழிவுகளை மக்கும், மக்காத கழிவுகள் என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கிட வேண்டும். மேலும் கடை வீதிகளில் பொருட்கள் வாங்க செல்லும்பொழுது துணிப்பைகளை எடுத்து செல்ல வேண்டும்.

    வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக அரசு அலுவ லர்களால் எவ்வித முன்னறி விப்புமின்றி திடீர் ஆய்வுகள் மேற் கொள்ளப் படும்.

    அப்போது அந்த பொருட் களின் பயன்பாடு கண்டறி யப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்வதோடு அபராதமும் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொரோனா காலத்தில் கடையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கோவில் சார்பில் தினமும் மதியம் உணவு வழங்கப்பட்டது.
    • அவ்வப்போது மாணவ-மாணவிகளை அழைத்து பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    தென்காசி:

    கடையம் அருகே தோரணமலை முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    அகத்தியர், தேரையர் தங்கி வழிபாடு நடத்திய தலம். அகத்தியர் இங்குதான் முதன்முதலி்ல் பல்கலைக்கழகம் போல் பாடசாலை அமைத்தார். முதன்முதலாக கபால அறுவை சிகிச்சை நடந்த இடமும் இதுதான்.

    இக்கோவிலில் தைப்பூசம் விழா விமரிசையாக நடைபெறும். மேலும் வைகாசி விசாகம், தமிழ்புத்தாண்டு, தமிழ்மாத கடைசி வெள்ளி வழிபாடு, பவுர்ணமி கிரிவலம், கிருத்திகை பூஜை போன்ற வையும் சிறப்பாக நடை பெறும்.

    இங்கு தினமும் மதியம் அன்னதானம் நடந்து வருகிறது. மேலும் ஞாயிற்றுக் கிழமை, தமிழ் மாத கடைசிவெள்ளி, பவுர்ணமி நாளில் காலையில் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    இக்கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் ஆன்மிகப்பணியோடு அறப்பணியையும் செய்து வருகிறார். கடைசி வெள்ளி அன்று விவசாயம் செழிக்க வருண கலச பூஜை நடத்தப்படுகிறது. தமிழ்புத்தாண்டு அன்று சிறந்த சமூக சேவகர்களுக்கு தோரணமலையான் விருது வழங்கப்படுகிறது.

    கொரோனா காலத்தில் கடையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கோவில் சார்பில் தினமும் மதியம் உணவு வழங்கப் பட்டது. மேலும் பொதுநல ஊழியர்களுக்கு முக்கசவசம், கிருமி நாசினியும் இலவசமாக வழங்கப்பட்டது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் இறைஅருளோடு பொது அறிவையும் பெற்றுச் செல்லும் வகையில் நூல்நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

    அங்கு ஆன்மிக புத்தகங்கள் மட்டுமின்றி, பொதுஅறிவு நூல்களும், போட்டித் தேர்வுக்கான புத்தகங்களும் உள்ளன. மாணவர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு பயிற்சியும் அவ்வப்போது அளிக்கப்படுகிறது.

    மேலும் காவல்துறை, ராணுவம் போன்ற பணிகளுக்கு செல்ல விரும்புவோருக்காக உடற்பயிற்சி மைதானமும் அமைக்கப்பட்டு உள்ளது.

    அவ்வப்போது பக்கத்து ஊர்களில் இருக்கும் பள்ளி மாணவ-மாணவிகளை அழைத்து பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது.

    கடந்த கோடை விடுமுறையின்போது ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சி, விளை யாட்டுப்போட்டி, கிராமிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    தோரணமலை பரம்பரை அறங்காவலர் கே.ஆதிநாராயணன் - ஆ சந்திரலீலா வாழ்ந்த வீட்டை முத்துமாலைபுரத்தில் இலவச மாலை நேர படிப்பகமாக மாற்றி மாணவ- மாணவிகள் பயன் பெரும் வகையில் உருவாக்கியுள்ளார்கள் .

    அதேபோல் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஊர் இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உலக சுற்றுலாத்தினத்தையொட்டி கடந்த 24-ந் தேதி சுற்றுலாத் துறையும், தோரணமலை நிர்வாகமும் இணைந்து மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் தோரணமலை கோவில் நடத்தப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிக்கு கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் வெற்றிபெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் ஆ.செண்ப கராமன் செய்திருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக்கொண்டார்.
    • கூட்டத்தில் பட்டாமாறுதல் உள்பட 527 மனுக்கள் பெறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக்கொண்டார்.

    இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 527 மொத்தம் மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ஷேக், மாவட்ட உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கலைஞர் உரிமைத்தொகை பலருக்கு கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • தொலைபேசி எண்கள் இல்லாமல் முதியவர்கள் பலருக்கும் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    தென்காசி:

    தமிழ்நாடு அரசின் சார்பில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் உரிமை தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    ரூ. 1000 உரிமைத்தொகை

    இருப்பினும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பெண்கள் அந்நிறுவனங்களின் சார்பில் ஓய்வு தொகையைப் பெற்று வந்தாலும் தமிழக அரசின் சார்பில் கொடுக்கப்படும் கலைஞர் உரிமைத்தொகை ரூ. 1000 பலருக்கும் கிடைக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக எவ்வித ஓய்வூதிய மும் பெறாமல் இருந்து வரும் வயதான முதியவர்கள் பலருக்கும் தொலைபேசி எண்கள் எதுவும் இல்லாமல் உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    மூதாட்டி கோரிக்கை

    அதன்படி நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மந்தியூர் ஊராட்சி பிள்ளை யார்குளம் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மூதாட்டிகள், முன்னர் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டதன் காரணமாக அதற்கு ஓய்வூதியமாக மாதம் ரூ. 700 பெற்று வருகிறோம்.

    ஆனால் தற்போது தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் கலைஞர் உரிமைத்தொகை ரூ. 1000 பெறுவதற்கு பதிவு செய்தி ருந்தும் கிடைக்கவில்லை. எனவே பீடி தொழிலாளர்க ளாகிய வயதான எங்களுக்கு ஆயிரம் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி கலெக்டர் ரவிச்சந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆலங்குளம் அருகே மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும்.

    ஆலங்குளம்:

    நெல்லை-தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட 90 சதவீதம் சாலைப் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணியையும் முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    இப்பணிகளின் ஒரு பகுதியாக, ஆலங்குளம் அருகே மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இங்கு சுங்கச்சாவடி அமைக்க வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி மண்டல தலைவரும், அமைப்பின் தென்காசி மாவட்ட தலைவருமான டி.பி.வி. வைகுண்டராஜா நிருபர்க ளிடம் கூறியதாவது:- ஆலங்குளம் அருகே மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் பலமுறை கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரி வித்தோம். இதை பொருட்ப டுத்தாமல் சுங்கச்சாவடி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். புதிதாக எந்த சாலையும் அமைக்காமல் பழைய சாலையின் இருபுறமும் சற்று விரிவாக்கம் செய்து, சுங்கச்சா வடி அமைத்து சுங்க கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பானது.

    மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலித்தால் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். அனைத்து பொருட்களின் விலையும் உயரும். எனவே சுங்கச்சாவடி அமைப்பதை நிறுத்த வேண்டும். அதையும் மீறி அமைத்தால் எதிர்த்து சட்டப் பூர்வமான போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆலமரத்தின் அடிப்பகுதி தீ பிடித்து எரிந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
    • ஆலமரத்தின் பெரிய கிளை அருகில் இருந்த மின்கம்பத்தில் விழுந்தது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் வடக்கு பகுதியில் 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இந்நிலையில் அந்த வழியே சென்ற பொதுமக்கள் ஆலமரத்தின் அடிப்பகுதி புகையுடன் தீ பிடித்து எரிந்ததை பார்த்துள்ளனர். இது குறித்து சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் ரமேஷ்,போக்குவரத்து பாலசந்தர் சிறப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன், வீரர்கள் மாடசாமி, சமுத்திரபாண்டி, குமார், சவரணகுமார் மற்றும் வீரர்கள் ஆலமரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தனர். மேலும் தீ விபத்தால் ஆலமரத்தின் பெரிய கிளை ஒன்று அருகில் இருந்த மின்கம்பத்தில் விழுந்ததால் மின் வயர்கள் அறுந்து ஐந்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தது. உடனடியாக அந்தப் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அதனை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். கீழப்பாவூரில் பழமை வாய்ந்த ஆலமரம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சமுதாய வளைகாப்பு விழா வாசுதேவநல்லூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.
    • பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கினார்.

    சிவகிரி:

    சிறப்பு மருத்துவ மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு விழா வாசுதேவநல்லூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு பொருட்களை வழங்கினார். வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன், முன்னாள் கவுன்சிலர் செல்வம், சுந்தர், உள்ளார் விக்கி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி, மேற்பார்வையாளர்கள் அமுதா, சுகந்தி, பணியா ளர்கள் காளியம்மாள் (மகளிர் தொண்டர் அணி), இந்திரா, சீனியம்மாள், முத்துமாரி, துரைகண்மீரால், பரமேஸ்வரி, அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய அளவில் பா.ஜனதா கடந்த 2014-ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
    • வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியதால் எங்களுக்கு நஷ்டம் இல்லை. அ.தி.மு.க.விற்கு தான் நஷ்டம். 1991-ல் இருந்து பா.ஜனதா தேசிய அளவில் தனித்து நின்று தனித்திறமையை நிரூபித்துள்ளது. பா.ஜனதாவாகிய நாங்கள் தி.மு.க.வுடனும் கூட்டணி வைத்துள்ளோம். அ.தி.மு.க.வுடனும் கூட்டணி வைத்துள்ளோம்.

    கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அண்ணாதுரையை பற்றி உண்மைக்கு மாறாக பேசவில்லை. கூட்டணி என்பது பொது எதிரியை வீழ்த்துவதற்காக ஓட்டுகள் சிதறாமல் இருப்பதற்காக அமைக்கப்படுவது.

    இந்திய அளவில் பா.ஜனதா கடந்த 2014-ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 2014-ல் தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி 20 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம்.

    அப்போதே தமிழகத்தில் பா.ஜனதா கால் ஊன்றி விட்டது. அப்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எங்களைவிட தி.மு.க. 2 சதவீதம் தான் அதிகமான வாக்குகளை பெற்றது. ஜெயலலிதா மறைந்ததற்கு பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க. நெல்லிக்காய் மூட்டை போல் சிதறி பிரிந்து இருந்தது. சிதறி பிரிந்து கிடந்த அ.தி.மு.க.வை ஒன்று சேர்த்தது பா.ஜனதா தான். அப்போது நானும் உடன் இருந்தேன்.

    பிரிந்து இருந்த அ.தி.மு.க. தலைவர்களை ஒன்று சேர்த்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தியது பா.ஜனதா. எடப்பாடி பழனிசாமி இப்போது நன்றி இல்லாமல் செயல்படுகிறார்.

    வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பா.ஜனதாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தென்காசி மாவட்ட பா.ஜனதா முன்னாள் தலைவர் ராம ராஜா, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் வன்னியராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சின்ன கோவிலான்குளம் கிராமத்தில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் கட்டப்பட்டது.
    • ஆராய்ச்சி மைய கட்டிடங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன கோவிலான்குளம் கிராமத்தில் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம் ரூ. 1.52 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அந்த ஆராய்ச்சி மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தென்காசி எம்.பி. தனுஷ் குமார், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன் திருமலை குமார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் முன்னிலை வகித்தனர்.

    இதில் தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வெள்ளாட்டின ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்தார்.

    இதில் கால்நடை மருத்துவர் துறை மண்டல துணை இயக்குனர் ரோஜர், கால்நடை மருத்துவர் மலர்கொடி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கே எஸ் எஸ் மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் உலக அளவிலான யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
    • மாணவ-மாணவிகளுக்கு, எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    ஸ்கூல் கேம் ஆக்டிவிட்டி டெவலப்மெண்ட் பவுண்டேஷன் சார்பில் தேசிய அளவிலான யோகா போட்டி கடந்த 17-ந் தேதி மதுரை பாத்திமா கல்லூரியில் நடைபெற்றது. இதில் வீ.கே.புதூர் பீனிக்ஸ் யோகா பயிற்சி மையத்தை சேர்ந்த அரசு, தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் 40 பேர் கலந்து கொண்டனர். அதில், 26 பேர் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை பெற்று நவம்பர் மாதம் நடக்க உள்ள உலக அளவிலான யோகா போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

    தேர்வான மாணவ-மாணவிகள் தங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.வை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து மாணவ-மாணவிகள் யோகாசனம் செய்து அசத்தினர். அவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி கல்வி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு, எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர்கள் மருதுபாண்டி, ரேவதி, மூர்த்தி, கணேஷ், ஜெயக்குமார், கார்த்தி, வக்கீல் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.