என் மலர்
நீங்கள் தேடியது "தென்காசி மழை"
- கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 24 மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 122 அடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் அந்த அணை நீர்மட்டம் 7 அடி உயர்ந்துள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 130.71 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 11 அடி உயர்ந்து 141.27 அடியை எட்டியுள்ளது. இந்த 2 அணைகளுக்கும் வினாடிக்கு 6 ஆயிரத்து 178 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 700 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. 118 அடி கொண்ட மணி முத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,974 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மலைப்பகுதியில் தொடரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், தாமிரபரணி ஆற்றில் சற்று அதிகமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் நீர் ஆற்றில் கலந்து காட்டாற்று வெள்ளமாக செல்கிறது. இதன் காரணமாக வழக்கத்தை விட ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.
நெல்லை மாநகர பகுதியை பொறுத்தவரை டவுன் குறுக்குத்துறையில் உள்ள முருகன்கோவில் மண்டபம் முழுவதுமாக மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகரில் நேற்று பகலில் விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில், மாலையில் கனமழை பெய்தது.
நள்ளிரவு வரையிலும் பெய்த கனமழையால் சாலை பள்ளங்களில் குளம் போல் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. அதிகபட்சமாக நெல்லையில் 56 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
புறநகர் பகுதியை பொறுத்தவரை சேரன்மகாதேவி, களக்காடு, மூலைக்கரைப்பட்டி, அம்பை, நாங்குநேரி மற்றும் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 1 வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் அடவிநயினார், குண்டாறு அணைகள் நிரம்பி வழியும் நிலையில், நேற்றும் பரவலாக பெய்த மழையால் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அந்த அணைகளும் முழு கொள்ளளவை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குண்டாறு அணை பகுதியிலும், கடனா அணை பகுதிகளிலும் தலா 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. ராமநதி, கருப்பாநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
85 அடி கொண்ட கடனா அணை நீர்மட்டம் 71 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 73 ½ அடியாகவும் இருக்கிறது. 71 அடி கொண்ட கருப்பாநதி அணை நீர் மட்டம் 62 அடியை நெருங்கி உள்ளது.
நகர் பகுதியை பொறுத்தவரை செங்கோட்டை, தென்காசி மற்றும் ஆய்குடி சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இதேபோல் சங்கரன் கோவில் மற்றும் சிவகிரி சுற்று வட்டாரத்தில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் சுற்றுவட்டார கிராமங்களில் தொடர்ந்து பெய்த மழையால் குளங்கள் நீர்இருப்பு வேகமாக உயர்ந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கடலோர பகுதிகளான திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் மற்றும் காயல்பட்டினம் சுற்று வட்டாரத்தில் மிக கனமழை பெய்தது. குலசேகரன்பட்டினம், திருச்செந்தூரில் 13 சென்டி மீட்டரும், காயல்பட்டினத்தில் 10 சென்டிமீட்டரும் மழை பெய்தது.
கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், விளாத்தி குளம், சூரங்குடி, ஒட்டப்பிடாரம், மணியாச்சி, வேடநத்தம், கீழஅரசடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளும் தீவிரம் எடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், கோரம்பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும்படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் கலெக்டர் இளம்பகவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மருதூர் அணைக்கட்டு, ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும் உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
- குற்றால அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி சென்று வருகின்றனர்.
- ஐந்தருவியிலும் காலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்தன.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றான குற்றாலம் மெயின் அருவியில் கன மழையின் காரணமாக சற்று தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் நேற்று இரவு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது வரை தண்ணீரின் சீற்றம் குறையாத காரணத்தினால் குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக இன்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் காலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து குற்றால அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடனே திரும்பி சென்று வருகின்றனர்.
ஐந்தருவியிலும் காலையில் நீர்வரத்து அதிகரித்ததால் அங்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 86 அடியை எட்டியுள்ளது.
- சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மதியம் வரையிலும் கனமழை பெய்த நிலையில், மாலை நேரத்திலும் பரவலாக மழை பெய்தது.
நெல்லை மாநகரில் நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்தது. பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. டவுன் ரதவீதிகள் உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து ஓடியது.
டவுனில் நேற்று பகலில் பெய்த கனமழை காரணமாக டவுன் சுந்தரர் தெருவில் ஒரு வீட்டின் மாடி அறையானது முழுமையாக இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் வேளாண்துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமசாமி என்பவர் தனது மனைவி மற்றும் மகன்களான சிவா, பரமேஸ்வரன் ஆகியோருடன் வசித்து வந்தார்.
தற்போது சிவா, பரமேஸ்வரன் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், நேற்று 2 பேரும் வெளியே சென்ற நேரத்தில் வீடு இடிந்தது. இதனால் பெரிய அளவு பாதிப்பு இல்லை. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், டவுன் தாசில்தார் தலைமையில் குழு சென்று பார்வையிட்டனர்.
மாநகரில் இன்று காலை நிலவரப்படி பாளையில் 26 மில்லிமீட்டரும், நெல்லையில் 21.60 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் 5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,425 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றப்படவில்லை. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 944 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 86 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 93 அடியாக உள்ளது.
மாவட்டத்தில் களக்காடு சுற்றுவட்டாரத்தில் 8 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தலையணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நம்பியாற்றிலும் வெள்ளம் அதிக அளவு சென்றது. நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் கொட்டித்தீர்த்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.
இந்த பகுதிகளில் பிற்பகலில் மழை குறைந்த நிலையில், இன்று காலை வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. அம்பை பகுதியில் நேற்று இரவில் சற்று கனமழை பெய்தது. அங்கு 77 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கொடுமுடியாறு, நம்பியாறு என அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று இரவு வரையிலும் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக 52 அடி கொண்ட கொடுமுடியாறு அணை பகுதியில் தொடர் மழையால் நேற்று ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்து 31.25 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 201 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் வறண்டு போன குளங்கள், கால்வாய்களில் நீர்வரத்து சற்று ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அதிகாலை தொடங்கி மாலை வரையிலும் கொட்டித்தீர்த்த கனமழையால் கடனா அணையில் 1 அடியும், ராமநதி அணையில் 1½ அடியும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 42.28 அடியாக இருந்த கருப்பாநதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 47½ அடியானது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 115 அடியை கடந்துள்ளது.
நகர் பகுதியை பொறுத்தவரை செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 35 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சங்கரன்கோவில், சிவகிரி பகுதியில் நேற்று பிற்பகலில் இருந்து மழை சற்று குறைந்துவிட்டது. எனினும் நேற்று முன்தினம் தொடங்கி பெய்த மழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் தொடர்மழையால் மின்தடை ஏற்பட்டது. சில கிராமங்களில் மாலையில் தொடங்கி சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. ஆனாலும் மின் ஊழியர்கள் கொட்டும் மழையிலும் மின்தடங்கலை சீர் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை மாநகரில் பரவலாக மழை பெய்தது. கழுகுமலை சுற்றுவட்டாரத்தில் 10 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. திருச்செந்தூர், கோவில்பட்டி, சூரன்குடி, வைப்பார், கீழ அரசடி, மணியாச்சி, கயத்தாறு சுற்றுவட்டாரங்களில் பரவலான மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
- ராதாபுரத்தில் 13 மில்லி மீட்டரும், நாங்குநேரியில் 14 மில்லி மீட்டரும், களக்காட்டில் 9 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.
- கொடுமுடியாறு அணைப்பகுதியில் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நெல்லை:
தென்கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து லேசான சாரல் மழை பெய்தது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அணை பகுதிகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணை பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பாபநாசம் மலைப்பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, பாபநாசம், ராதாபுரம், களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
ராதாபுரத்தில் 13 மில்லி மீட்டரும், நாங்குநேரியில் 14 மில்லி மீட்டரும், களக்காட்டில் 9 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. கொடுமுடியாறு அணைப்பகுதியில் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நாலுமுக்கில் 18 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 17 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. இதுதவிர காக்காச்சி, ஊத்து பகுதியில் தலா 9 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மாநகரப் பகுதியிலும் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசு செய்முறை தேர்வு தொடங்கியுள்ளது. ஆனால் அதிகாலை முதலே பெய்து வரும் மழை காரணமாக பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
மாநகரப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பேட்டை செக்போஸ்ட் முதல் நயினார் குளம் ஆர்ச் வரையிலான சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் தொண்டர் சன்னதி, நயினார் குளம் சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன.
இதன் காரணமாக காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த பகுதியில் சரக்கு இறக்கும் வாகனங்கள் சரக்குகளை இறக்காமல் அப்படியே நயினர்குளம் சாலையில் நிறுத்தப்பட்டுள்ளதால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது.
வண்ணார்ப்பேட்டை புதிய பஸ் நிலையம், மேலப்பாளையம், பாளை சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மீண்டும் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் மாவட்டம் முழுவதிலும் தற்போது நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் மழை பெய்வதால் விவசாயிகள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர். ஒரு சில இடங்களில் ஏற்கனவே அறுவடை பணிகள் முடிந்து விட்டாலும் இன்னும் பெரும்பாலான பகுதிகளில் அறுவடை பணிகள் முடியவில்லை என்பதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலும் இன்று அதிகாலை முதல் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திருச்செந்தூர், குலசேகரபட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்து வரும் பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குலசேகரப்பட்டினத்தில் அதிகபட்சமாக 20 மில்லி மீட்டரும், திருச்செந்தூரில் 19 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி, சாத்தான்குளம் காயல்பட்டினம், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எட்டயபுரம், காடல்குடி, வைப்பாரு, கீழ அரசடி ஆகிய இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. கயத்தாறு, மணியாச்சி, கடம்பூர், கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
- மாநகரில் இன்றும் காலை முதலே மாநகர பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
- சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு கனமழை பெய்ய ஆரம்பித்தது. மாநகரில் சந்திப்பு, மேலப்பாளையம், பாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது.
பேட்டையில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து சாலைகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட மாநகராட்சி 17-வது வார்டு பழைய பேட்டை சர்தார்புரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையே தெரியாத அளவிற்கு மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லமுடியாமல் சிரமத்துடன் சென்றனர்.
மாநகரில் இன்றும் காலை முதலே மாநகர பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கி கிடந்தது. மாநகரில் பாதாள சாக்கடை பணிகள் நடக்கும் பகுதிகளில் மழை காரணாக சாலைகள் சகதியாக காணப்பட்டது. பாளை வ.உ.சி. மைதானம், மகாராஜாநகர் சாலைகளிலும் குளம் போல் மழைநீர் தேங்கி கிடந்தது.
ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், காலையில் இருந்தே பெய்த மழையால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதி அடைந்தனர். பணிக்கு செல்வோர் குடை பிடித்தபடி சென்றனர். அதிகபட்சமாக பாளையில் 11 மில்லிமீட்டரும், நெல்லையில் 4.4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
மாவட்டத்தின் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் திடீர் கனமழை பெய்தது. அங்குள்ள சாலையோரம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இன்றும் காலையில் இருந்தே சாரல் அடித்தது. இதேபோல் களக்காடு, மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இன்று சாலையில் சாரல் மழை பெய்தது.
சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இன்று அதிகாலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் அவதி அடைந்தனர். மாவட்டத்தில் சேரன்மகாதேவியில் 10.6 மில்லிமீட்டரும், அம்பையில் 5.6 மில்லிமீட்டரும், களக்காடு மற்றும் நாங்குநேரியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அவ்வளவாக பெய்யவில்லை. என்றாலும் மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் 1.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. இன்றும் காலையில் இருந்தே வெயில் அடிக்கவில்லை. இதனால் ரம்மியமான சூழ்நிலை நிலவியது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 44 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சிவகிரியில் லேசான சாரல் பெய்தது.
ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் 10 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடுமுறை முடிந்துவிட்டதால் அருவிக்கரைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் ஏராளமான இடங்களில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. குறிப்பாக எட்டயபுரம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
அதிகபட்சமாக எட்டையபுரத்தில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. கோவில்பட்டியில் 7 மில்லிமீட்டரும், சூரன்குடி, கழுகுமலையில் தலா 6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு சாரல் அடித்தது. இன்றும் காலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.
- மழை நீரை அகற்றும் பணியில் கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
தென்காசி:
வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
இது புயலாக மாறுவதால் இதற்கு 'டானா' புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டானா புயல் வடக்கு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்று ஒடிசா மாநிலம் பூரி-மேற்குவங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு இடையே நாளை நள்ளிரவு தீவிர புயலாகி மாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், சங்கரநாராயண சுவாமி கோவிலுக்குள் மழை நீர் புகுந்தது.
மழை நீரை அகற்றும் பணியில் கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர், சேர்ந்தமரம், வீரசிகாமணி, புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
- களக்காடு சுற்றுவட்டாரத்தில் 29.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
- தென்காசி நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை, தென்காசி மாவட்டத்தில் காலையில் இருந்து மாலை வரையிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலை முதல் வெயில் அடித்தது
நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் நீர்வரத்து சற்று குறைந்துள்ளதால் தலையணையின் கீழ் பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
களக்காடு சுற்றுவட்டாரத்தில் 29.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு வரையிலும் நீடித்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக நாங்குநேரியில் 51 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மூலக்கரைப்பட்டியில் 25 மில்லிமீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்தது. சேரன்மகாதேவியில் 9.6 மில்லிமீட்டர், அம்பையில் 8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தின் மற்ற பகுதியில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
அணைகளை பொறுத்தவரை சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பரவலாக பெய்தது. அந்த அணை பகுதிகளில் தலா 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 92.55 அடியாக இருந்த நிலையில் இன்று சுமார் 1 அடி அதிகரித்து 93.40 அடியை எட்டியுள்ளது. பிற்பகல் 94 அடிரைய எட்டியது.
அந்த அணைக்கு நேற்று காலை வரை வினாடிக்கு 288 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் தொடர்மழையால் இன்று காலை நிலவரப்படி 1,185 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 104.49 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து காரணமாக ஒரே நாளில் 2 1/4 அடி உயர்ந்து 106.82 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 63.70 அடியாக உள்ளது. அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் மக்கள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் 46 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 42 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை சுற்றுவட்டாரத்தில் 31 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இதனிடையே இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள நடத்தகூடாது என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று காலையில் தொடங்கி இரவு வரையிலும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சில இடங்களில் இடி-மின்னலுடன் மாலை நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 38 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.
தென்காசி நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆயக்குடி, சிவகிரி பகுதிகளிலும் கனமழை பெய்ததால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் லேசான சாரல் மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. ராமநதியில் 24 மில்லிமீட்டரும், கடனா அணையில் 17 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. கடனா அணை நீர்மட்டம் இன்று 1 1/2 அடி உயர்ந்து 42 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 55.50 அடியாகவும் இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள் நீர் இருப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. இன்று காலை வரை அங்கு 32.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 73 அடியாக உள்ளது. அந்த அணை பகுதியில் நேற்று 17 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணைக்கு வரும் 40 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேலும் கனமழை எச்சரிக்கையால் தென்காசி மாவட்டத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என தனியார் பள்ளிகளுக்கு கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 9 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. குலசேகரன்பட்டினம் மற்றும் காயல்பட்டினத்தில் தலா 4 மில்லிமீட்டரும், சாத்தான்குளத்தில் 8.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
- சேரன்மகாதேவியில் 5 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
- தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாநகர் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் பகலில் வெயில் அடித்து வந்த நிலையில் மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்தது. களக்காடு, சேரன்மகாதேவி, ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது.
அதிகபட்சமாக சேரன்மகாதேவியில் 5 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. நாங்குநேரி, களக்காட்டில் தலா 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாநகரில் மழை இல்லை. இன்றும் காலை முதலே வெயில் அடித்தது.
அணைகளை பொறுத்த வரை கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை பகுதியில் நேற்று 13 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு வினாடிக்கு 1,444 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 1 அடி உயர்ந்த நிலையில் இன்று மேலும் 1½ அடி உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 95 அடியை எட்டி உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 107.70 அடியை எட்டி உள்ளது. அந்த அணை பகுதியில் 11 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 63.84 அடியாக உள்ளது.
களக்காடு தலையணையில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை என்பதால் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதியில் 21 மில்லிமீட்டர் கனமழை பெய்தது. குண்டாறு அணையில் 8 மில்லிமீட்டரும், கடனா அணையில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கடம்பூர் மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் அங்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 38 மில்லிமீட்ரும், கடம்பூரில் 26 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. கீழ அரசடி, விளாத்திகுளம், வைப்பார் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கீழஅரசடியில் பெய்த 18 மில்லிமீட்டர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.






