search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirunelveli rain"

    • நெல்லையில் நாளை மற்றும் 10-ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • ஆற்றில் யாரும் இறங்கவோ, கால்நடைகளை இறக்கவோ வேண்டாம்.

    நெல்லை:

    நெல்லையில் நாளை மற்றும் 10-ம் தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாகவும், ஆற்றில் யாரும் இறங்கவோ, கால்நடைகளை இறக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
    • வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது.

    இந்நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் டிசம்பர் 31-ம் தேதி ரேஷன் கடைகள் செயல்படும். நிவாரண நிதி வழங்கும் பணிகளுக்காக அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
    • வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதன்படி, வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.

    சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட வட்டங்களில் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.

    • கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்படும்.
    • 16 கிராமங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ துவரம் பருப்பு நிவாரணமாக வழங்க மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

    கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்படும். குடும்ப அட்டை அடிப்படையில் பொருட்களை வழங்குவதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய, அனைத்து வட்ட அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


    நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் 16 கிராமங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • மழை வெள்ள பாதிப்பால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • 1,064 குடிசை வீடுகள் முற்றிலும் இடிந்து சேதம்.

    நெல்லை :

    நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேற்றுவரை எடுக்கப்பட்ட பாதிப்பு விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    மழை வெள்ள பாதிப்பால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 67 மாடுகள், 135 கன்றுகள், 504 ஆடுகள், 28,392 கோழிகள் உயிரிழப்பு. 1,064 குடிசை வீடுகள் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்துள்ளது.


    இழப்பீடு நிவாரணமாக ரூ.2.87 கோடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.58.14 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    • ஆற்றுப்படுகையில் உள்ள 300க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
    • உறை கிணறுகளின் மின் மோட்டார்கள், நீரேற்றும் நிலையங்களும் வெள்ளத்திற்கு தப்பவில்லை.

    நெல்லை:

    நெல்லையில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதி பெய்த அதீத கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை குறைந்த பிறகு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளம் வடியத் தொடங்கியதும் பேருந்து, ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதையடுத்து சேத விவரங்கள் கணக்கீடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடிநீர் திட்ட குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் செல்கிறது. ஆற்றுப்படுகையில் உள்ள 300க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும், குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    உறை கிணறுகளின் மின் மோட்டார்கள், நீரேற்றும் நிலையங்களும் வெள்ளத்திற்கு தப்பவில்லை.

    • நெல்லையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டது.
    • தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி, நெல்லையில் அதிகனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் இரு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

    தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • வெள்ள முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும்.
    • வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

    வெள்ள முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் செயல்படும் என்றும் வெள்ளிக்கிழமை முதல் பள்ளிகள் திறக்க ஆய்வு செய்யப்படுகிறது என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
    • மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 நியாய விலைக் கடைகளில் 63 நியாய விலைக் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளன.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தற்போது, வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் நெல்லை மாவட்டத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    இந்நிலையில், நெல்லை மாவட்டத்தின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறியதாவது:-

    * நெல்லை மாவட்டத்தில் உள்ள 1195 பள்ளிகளில் 1108 பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன. மீதமுள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    * கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

    * மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 நியாய விலைக் கடைகளில் 63 நியாய விலைக் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளன.

    இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

    கனமழையால் உடைப்பு ஏற்பட்ட பாலத்தில் அமர்ந்து ரெட்டியார்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் சாலைகளும் பாதிக்கப்பட்டு காணப்படுகிறது.

    பாளை என்.ஜி.ஓ. காலனி குளக்கரையில் இருந்து ரெட்டியார்பட்டி ஆவின் பால்பண்ணை செல்லும் வழியில் ஒரு பாலம் உள்ளது. நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக அங்குள்ள குளம் நிரம்பி பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் அந்தபாலத்தில் உடைப்பு ஏற்பட்டு 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று காலை திடீரென அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் உடைப்பு ஏற்பட்ட பாலத்தில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக பாலம் சீரமைக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இதே போல் கனமழைக்கு தெற்கு புறவழிச்சாலை சிக்னல் அருகே உள்ள மின்மாற்றி முழுவதும் நேற்றிரவு தண்ணீரில் மூழ்கியது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    உடனடியாக நெல்லை மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், செயற்பொறியாளர் முத்துக்குட்டி ஆகியோர் விரைந்து சென்று வேறுபகுதிகளில் இருந்து இணைப்பு வழங்கி மின்சாரம் வழங்கினர்.

    இன்று காலை அந்த மின்மாற்றி சரி செய்யும் பணி நடந்து வருகிறது. 


    நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. #Rain

    நெல்லை:

    நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பகலில் வானம் மேகமூட்டத்துடனும் மாலையில் மழையும் பெய்து வருகிறது. இரவு விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை அதிகபட்சமாக ராதாபுரம் கடலோரப்பகுதியில் 5.2 மில்லிமீட்டரும், நம்பியாறு அணைப்பகுதியில் 5 மில்லிமீட்டரும், பாபநாசம் அணைப்பகுதியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 797 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 395 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 119.75 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 132.45 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைப் பகுதியில் 1 மில்லிமீட்டர் அளவுக்கு மட்டுமே மழை பெய்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 256 கனஅடி தண்ணீர் வருகிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று காலை 96.75 அடியாக உள்ளது. இதுபோல மற்ற அணைகளுக்கும் குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோரப்பகுதியில் பரவலாக கனமழையும், சாரல்மழையும் மாறிமாறி பெய்து வருகிறது. அதிகபட்சமாக சூரங்குடி பகுதியில் 27 மில்லிமீட்டரும், வைப்பாறு பகுதியில் 22 மில்லிமீட்டரும் பெய்துள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், குலசேகரப்பட்டினம் பகுதியிலும் ஒரளவு நன்றாக மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    ராதாபுரம்-5.2, நம்பியாறு-5.00, பாபநாசம்-4, பாளை-2, சேர்வலாறு-2, நாங்குநேரி-2, அம்பை-1, மணிமுத்தாறு-1

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலைவரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    சூரங்குடி-27, வைப் ‘பார்-22, ஸ்ரீவைகுண்டம்-16.5, ஓட்டப்பிடாரம்-14, திருச்செந்தூர்-14, குலசேகரபட்டினம்-12, விளாத்திகுளம்-12, தூத்துக்குடி-7.2, வேடநத்தம்-7, கடம்பூர்-6, சாத்தான்குளம் -6, கீழஅரசடி-5.6, காயல்பட்டினம்-3, கயத்தாறு-1, கோவில்பட்டி-1. #Rain

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.#Rain

    நெல்லை:

    தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் மழை கொட்டியது. செங்கோட்டை, குற்றாலம், அம்பை, பாளை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணைப்பகுதியில் 49 மில்லி மீட்டரும், செங்கோட்டையில் 33 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. இந்த மழையினால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் ஓடியது. ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு மழை காரணமாக மின் தடை ஏற்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

    பாபநாசம், குற்றாலம், களக்காடு மலைப்பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 104.65 அடியாக இருந்தது. இன்று இது 105.30 அடியாக அதிகரித்து உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 1100 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது.


     

    118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 84.40 அடியாக உள்ளது. இதேபோல 85 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கடனா அணை நீர்மட்டம் 63அடியாகவும், 84 அடி உச்சநீர்மட்டம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 53.50அடியாகவும், 72.10 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 59.39 அடியாகவும் உள்ளன.

    36.10 அடி உச்சநீர்மட்டம் கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் ஏற்கனவே தென்மேற்கு பருவ மழையினால் நிரம்பியது. பின்னர் பாசனத்துக்கு அணையில் இருந்து தண்னீர் திறந்து விடபப்ட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் இந்த அணை மீண்டும் நிரம்பியது. இதேபோல 23.60 உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு அணை ஏற்கனவே தென்மேற்கு பருவம்ழையினால் நிரம்பியது. இந்த அணையின் நீர்மட்டம் நேற்று 21.31 அடியாக இருந்தது. இன்று இந்த அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது.

    50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு அணை 20 அடியாகவும், 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 30 அடியாகவும், 132.22 அடி உச்சநீர்மட்டம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 83 அடியாகவும் உள்ளன.

    குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழையினால் நேற்று முன்தினம் மாலையில் மெயினருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் கடும் வெள்ளப்பேருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்ருலா பயணிகள் குளிக்க தடை விதிக்கபப்ட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை வெள்ளம் குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கபப்ட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் மழை கொட்டியதால் அருவிகளில் வெள்ளப்பேருக்கு ஏற்பட்டது. இன்று காலையும் அருவிகளில் அதிகளவு தண்ணீர் விழுகிறது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தான்டி மழை தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 1000 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தொடர் மழை காரணமாக நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் பயிர்கள் முளைவிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே பெய்த மழையினால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. அவற்றை வெளியேற்றும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்ததால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. #Rain

    ×