search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nellai rain"

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.
    • டோக்கன் பெற்றவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள், வயல்வெளிகள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரணம் அறிவித்தது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தில் நிவாரண தொகை பெற இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டோக்கன் பெற்றவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் கட்டாயம் நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    மேலும் நெல்லை மாவட்டத்தில் 92 சதவீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனவரி 4-ந்தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழக்கம்போல் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் ஆட்சியர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் சில இடங்களில் ரூ.6000 நிவாரண நிதிக்கு பதிலாக ரூ.1000 வழங்கப்படுவதை வாங்க மறுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் நெல்லை மாநகரில் தாழ்வான பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்கியது. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் தெப்பக்குளம் தொடர் மழையால் நிரம்பி காணப்படுகிறது.

    மேலும் பாபநாசம் அணை, சேர்வலாறு அணை பகுதிகளில் நேற்று பகலில் பரவலாக மழை பெய்தது. இதனால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் உபரி தண்ணீரும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்தபடி வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது.

    தென்காசியில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக இருந்தது. மாலையில் பலத்த மழை விட்டுவிட்டு பெய்தது. குற்றாலத்திலும் மழை பெய்ததால், அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவிகளில் செம்மண் நிறத்தில் தண்ணீர் சென்றது.

    குற்றாலம் பஜாரிலும், பழைய குற்றாலம் செல்லும் படிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தூத்துக்குடி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்து உள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

    மீன்வளத்துறை ஏற்பாட்டில் சிறிய தெர்மாகோல் படகில், பண்ணை பசுமை காய்கறி கடை பணியாளர்கள் காய்கறி பைகளை எடுத்து சென்றனர். அவர்கள் ரூ.100-க்கான காய்கறிகள் தொகுப்பை விற்பனை செய்தனர். இதே போன்று மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக அந்த படகை பயன்படுத்தி வெளியிலும் வந்து சென்றனர்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதையொட்டி மாணவ-மாணவிகளின் நலன் கருதி இன்று ஒரு நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    நெல்லை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக மணிமுத்தாறு அணை நீர்மட்டம் இன்று 99.10 அடியாக உயர்ந்தது. #NellaiRain #ManimutharDam
    நெல்லை:

    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் லேசாக வெயில் அடித்த நிலையில் மாலையில் கரு மேகங்கள் சூழ்ந்தன.

    பின்னர் சில பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக மணிமுத்தாறு அணை, செங்கோட்டை, கருப்பாநதி அணைப்பகுதியில் மிதமான மழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள‌து.

    இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 119.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1004 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 516 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 128.38 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 130.97 அடியாக உயர்ந்துள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 98.75 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 99.10 அடியாக உயர்ந்தது. மாலையில் இந்த அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 424 கன அடி தண்ணீர் வருகிறது. கடனா அணை நீர்மட்டம் நேற்று 73.80 அடியாக இருந்தது. இன்று இது 74.20 அடியாக அதிகரித்துள்ளது.

    ராமநதி அணை நீர்மட்டம் 66.75 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.60 அடியாகவும் உள்ளன. அடவிநயினார் அணை நீர்மட்டம் 97.50 அடியாக இருக்கிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு அணைப்பகுதியில் 28.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:‍-

    கருப்பாநதி-21, செங்கோட்டை-19, குண்டாறு-11, நம்பியாறு-8, பாபநாசம்-7, சேர்வலாறு-6, களக்காடு-5.4, ராமநதி-5, தென்காசி-4.3, கடனா நதி-2, அடவிநயினார் அணை-2.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. சாத்தான்குளத்தில் 4 மில்லிமீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 2.5 மில்லிமீட்டரும், தூத்துக்குடியில் 2.4 மில்லிமீட்டரும், கடம்பூர், வைப்பரில் தலா 2 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. #NellaiRain #ManimutharDam
    நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு பல்வேறு இடங்களில் பெய்த மழை நேற்று முதல் இன்று காலை வரை எந்த பகுதியிலும் மழை பெய்யவில்லை.

    நெல்லை:

    நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முதல் இன்று காலை வரை நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களில் எந்த பகுதியிலும் மழை பெய்யவில்லை.

    வங்காள விரிகுடாவில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் மழை எதுவும் பெய்யாவிட்டாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் குறைந்த அளவு வந்து கொண்டு இருக்கிறது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 679 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 604 கனஅடி தண்ணீர் வெளியேற் றப்படுகிறது. இன்று காலை பாபநாசம் அணை நீர்மட்டம் 120.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 132.02 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 457 கனஅடி தண்ணீர் வருகிறது. இன்று காலை அணை நீர்மட்டம் 97.60 அடியாக உள்ளது. இதுபோல மற்ற அணைகளுக்கும் குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நீர்மட்டம் பெரிய அளவில் உயரவில்லை.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நடப்பு ஆண்டில் 74 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. #NellaiRain
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. தொடர்ந்து ஆகஸ்டு மாதம் இறுதிவரை மழை பெய்தது.

    இதனால் மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் பிரதான பாசன அணையான பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடு முடியாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் நிரம்பின. மொத்தமுள்ள 11 அணைகளிலும் நீர் இருப்பு மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 771 மில்லியன் கன அடியாகும்.

    தாமிரபரணி பாசனத்தில் சராசரியாக ஆண்டுக்கு 1084 மில்லிமீட்டர் மழை பெய்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்தன. ஆண்டுக்கு சராசரியாக 814.80 மில்லிமீட்டர் மழையே பெய்தது. இதன்காரணமாக அணைகள் முழு அளவில் நிரம்பவில்லை. பாசனத்துக்கும் முழுமையாக தண்ணீர் கிடைக்கவில்லை.

    இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மாவட்டத்தில் 278 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது இயல்பைவிட 165 சதவீதம் அதிகமாகும். பாபநாசம் உள்ளிட்ட அணைப்பகுதிகளிலும், அம்பை, தென்காசி பகுதிகளிலும் அதிகபட்ச மழை பெய்தது. பாபநாசம் அணையில் மொத்தம் 441 மில்லிமீட்டரும், செங்கோட்டை குண்டாறு பகுதியில் 563 மில்லிமீட்டர் மழையும் பதிவானது.

    பொதுவாக ஆகஸ்டு மாதம் மட்டுமே சராசரியாக 23.30 மில்லிமீட்டர் மழை பெய்யவேண்டும். ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 137.76 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் இது அதிகபட்சம் ஆகும். 2006, 2008, 2011, 2014 மற்றும் 2015 ஆண்டுகளில் சராசரியான மழையை விட கூடுதல் மழை பெய்தது. இந்த ஆண்டு 518.56 மில்லிமீட்டர் பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 74 சதவீதம் அதிகமாகும்.

    இதன்காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள அணைகளில் மொத்தம் 9055.23 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட 60 சதவீதம் கூடுதலாகும்.

    இது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் இந்த ஆண்டு நவம்பர் மாதம் பிசான சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்கும் என்று விவசாயிகள் நம்புகின்றனர்.

    இதனிடையே பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தொடர்ந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், இந்த அணைகளில் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. கடந்த 20-ந்தேதி பாபநாசம் அணை நீர்மட்டம் 141.80 அடியாக இருந்தது. தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் 10 நாட்களில் இந்த அணை நீர்மட்டம் 10 அடி குறைந்து, நேற்று 130.20 அடியாக இருந்தது. இன்று இந்த அணை நீர்மட்டம் 128.95 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் கடந்த 20-ந் தேதி 146.09 அடியாக இருந்தது. 10 நாட்களில் இந்த அணை நீர்மட்டம் 25 அடி குறைந்து நேற்று 120.47 அடியாக இருந்தது. இன்று இது 119.88 அடியாக உள்ளது.

    பாபநாசம் அணையில் இருந்து விநாடிக்கு 1,405 கனஅடி நீரும், சேர்வலாறு அணையில் இருந்து விநாடிக்கு 2003 கனஅடி நீரும் நேற்று வெளியேற்றப்படுகிற‌து.

    இதேபோல் மற்ற அணைகளிலும் அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. எனவே விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அணைகளில் நீர் இருப்பு வைத்து பிசான சாகுபடிக்கு உரியநேரத்தில் தண்ணீர் திறக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. #NellaiRain
    தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் 150 குளங்கள் நிரம்பின. மேலும் 500 குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. #NellaiRain
    நெல்லை:

    தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் 6 அணைகள் நிரம்பியுள்ளன. மழை காரணமாக தென்காசி சுற்றுபகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    தென்காசி மற்றும் சுற்றுவட்டரா பகுதியில் தென்காசி சீவலப்பேரிகுளம், கீழப்புலியூர், சுந்தரபாண்டியபுரம், இலஞ்சி, கம்பிளி, ஆகிய பகுதிகளில் உள்ள பல குளங்கள் உள்ளன. இதற்கு குற்றாலம் அருவி, குண்டாறு அணை, அடவிநயினார் அணை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பாசனம் பெற்று வருகின்றன.

    தற்போது இந்த பகுதி குளங்கள் நிரம்பியுள்ளன. மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்னும் சில தினங்களில் அனைத்து குளங்களும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிற்றாற்றில் மேலப்பாவூருக்கு மேற்கே உள்ள தடுப்பு அணையிலிருந்து மேலப்பாவூர் குளத்திற்கும் கீழப்பாவூர் பெரிய குளத்திற்கும் தண்ணீர் வருகிறது. இந்த இரண்டு குளங்களும் பெருகிய பின்பு மருகால் வழியாக இதனை தொடர்ந்து நாகல்குளம், கடம்பன்குளம், தன்பத்து குளம், பூலாங்குளம், சின்னபூலாங்குளம், கோயிலுற்று குளம், ஆண்டிபட்டிகுளம் ஆகிய குளங்கள் பாசன வசதி பெறுகிறது.

    மேலும் இங்கிருந்து தொட்டியான் கால்வாய் மூலம் ஆலங்குளம் தொட்டியான் குளம் உட்பட 18க்கும் மேற்பட்ட குளங்களுக்கு கீழப்பாவூர் குளத்திலிருந்து வரும் தண்ணீர் தான் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இதன் மூலம் பலஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏமாற்றிய தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மேலப்பாவூர்குளம் மற்றும் கீழப்பாவூர் பெரிய குளம் முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.

    இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில், ‘நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2518 குளங்கள் உள்ளன. இதில் 1221 குளங்கள் கால்வரத்து குளங்களும், 1297 குளங்கள் மானாவாரி குளங்களும் ஆகும். தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, சிவகிரி, களக்காடு, கடையம், அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, பாளை பகுதி குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு, அடவிநயினார், குண்டாறு ஆகிய 8 அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதன் காரணமாக தற்போது நெல்லை மாவட்டத்தில் சுமார் 150 குளங்கள் வரை நிரம்பி உள்ளது. மேலும் 500 குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பெரியகுளங்களில் 2 மாதத்திற்கு போதுமான தண்ணீரும், சிறிய குளங்களில் 1 மாதத்திற்கு போதுமான தண்ணீரும் உள்ளது‘ என்றார். #NellaiRain
    ×