search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South West Monsoon"

    • தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
    • ஹாவேரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலோர மாவட்டங்கள், மலை மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது. தொடர் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    ஹாவேரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் வீடுகளின் சுவர்கள் ஈரப்பதமாக காணப்படுகிறது. ஹாவேரி மாவட்டம் சவனூர் தாலுகா காரடகி அருகே உள்ள மாதப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த சன்னம்மா தொட்டபசப்பா ஹரகுனி (35) என்பவர் தனது குழந்தைகள் அமுல்யா முத்தப்பா ஹரகுனி (2), அனுஸ்ரீ முத்தப்பா ஹரகுனி ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். இன்று அதிகாலை பெய்த மழையின் காரணமாக அவர்களது வீட்டின் சுவர் இடிந்து தூங்கி கொண்டு இருந்த அவர்கள் மீது விழுந்தது.

    இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தாய் மற்றும் 2 குழந்தைகளும் பரிதாமாக இறந்தனர். இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்களின் உடல்களை மீட்டனர்.

    • குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • தென்காசி பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மலை அடிவாரத்தில் உள்ள அருவிகளான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்றும் காலை முதலே குற்றாலம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில், அருவிகளில் மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ஆற்றுப்படுகையின் ஓரமாக யாரும் இறங்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    மழை குறைந்து அருவிகளில் தண்ணீர் வரத்து குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் பகுதி அருவிகளில் ஆனந்த குளிக்க முடியாததால் ஏமாற்றத்துடனே திரும்பி சென்றனர். இன்று காலை முதல் மழை நீடித்து வருவதால் தென்காசி பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர் தனது ஜிம்மில் இருந்த 32 பேர்களுடன் சேர்ந்து இந்த நீர்வீழ்ச்சிக்கு குளிக்க வந்துள்ளார்.
    • 2 நாட்களாக இளைஞரை தேடியும் அவரது உடல் இன்னமும் கிடைக்கவில்லை

    இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் வடமாநிலங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் புனேவில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தம்ஹினி காட் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில் குதித்து நீச்சல் அடிக்கும் போது அடித்து செல்லப்பட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்வப்னில் தாவ்டே என்ற இளைஞர் தனது ஜிம்மில் இருந்த 32 பேர்களுடன் சேர்ந்து இந்த நீர்வீழ்ச்சிக்கு குளிக்க வந்துள்ளார். வந்த இடத்தில் நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்டு இளைஞர் காணாமல் போயுள்ளார்.

    2 நாட்களாக இளைஞரை தேடியும் அவரது உடல் இன்னமும் கிடைக்கவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தை அடுத்து, மழைக்காலங்களில் காடுகள் மலைகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று புனே வனத்துறை அதிகாரி துஷார் சவான் தெரிவித்துள்ளார்.

    • தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
    • குற்றாலத்தில் குளு குளு சீசன் நிலவுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    கேரளாவில் மழை தீவிரம் எடுத்துள்ள நிலையில் தென்காசியிலும் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அங்கு குளு குளு சீசன் நிலவுகிறது.

    சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. தற்போது மெயின்அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் குளுமையான காற்றுடன் அவ்வப்போது சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்து வருகிறது.

    இதனால் குற்றாலத்தில் சீசன் களைகட்டி உள்ளது. இதனால் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக கார்களிலும், வேன்களிலும் வந்தனர்.

    இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் அருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    • குண்டாறு அணை நிரம்பி வழிகிறது.
    • மலைப்பகுதியில் மழை வெகுவாக குறைந்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

    நெல்லை மாவட்டத்தில் தொடர்மழையால் பிரதான அணையான 143 அடி கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. நேற்று 100 அடியை எட்டிய அந்த அணையில் இன்று மேலும் 2 அடி நீர் இருப்பு அதிகரித்து 102 அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 2 மில்லிமீட்டர் மட்டுமே மழை பெய்துள்ளது.

    ஆனாலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 5 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில், இன்று 2 ஆயிரம் அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 806 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி உயர்ந்து 115.81 அடியாக உள்ளது.

    118 அடி கொண்ட மணிமுத்தாறு அணையில் 78.64 அடி தண்ணீர் உள்ளது. திருக்குறுங்குடி அருகே உள்ள 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ள நிலையில், அணைக்கு வரும் 20 கனஅடி நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. அந்த அணையில் இருந்து கார் பருவ சாகுபடி பணிக்காக வருகிற 1-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே மலைப்பகுதிகளில் மழை குறைந்தாலும், தண்ணீர் வரத்து தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதால், மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று 4-வது நாளாக தடை நீடிக்கிறது.

    அதே நேரம் களக்காடு மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கடந்த 26-ந்தேதி முதல் தலையணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

    தென்காசி மாவட்டத்திலும் மலைப்பகுதியில் மழை வெகுவாக குறைந்துவிட்டது. எனினும் அணைகளுக்கு நீர் வரத்து இருப்பதால், அவற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடனா அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 60 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 76 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று 2 அடி உயர்ந்து 92 அடியை எட்டியுள்ளது. அந்த அணை பகுதியில் அதிகபட்சமாக 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

    • குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலம் அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலையில் தென்காசி, செங்கோட்டை, புளியரை, மேலகரம், இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை தொடர்ந்து பெய்தது.

    மலைப்பகுதிகளிலும் மழை பெய்ததன் காரணமாக குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அபாய ஒலி எழுப்பப்பட்டு மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இன்று காலையில் பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தொடர்ந்து பெய்த சாரல் மழையால் அங்கு தண்ணீர் மேலும் அதிகரித்ததால் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் போலீசாரால் உடனடியாக அப்புறப்படுத்தப் பட்டனர்.

    மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிற்றருவி மற்றும் புலியருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    பிரதான அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். 

    • புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழைக்கு வாய்ப்பு.
    • இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. ஒருசில மாவட்டங்களில் கனமழை கொட்டியது.

    இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் ஏற்பட்டிருக்கும் புயல் சுழற்சி காரணமாக கேரள மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதில் குறிப்பாக மாநிலத்தில் இன்றும் நாளையும் கனமழையும், 23-ந்தேதி மிக கனமழையும் பெய்யும் என்று கூறப்பட்டிருக்கிறது. வானிலை மையம் தெரிவித்தபடியே கடந்த சில நாட்களாக கேளாவில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

    மேலும் கேரள கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டு அலைகள் ஆக்ரோஷமாக அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் கேரள மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது. மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களுடன் மொத்தம் 9 குழுக்கள் கேரளா வந்திருக்கின்றன.

    கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் இடுக்கி, பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கொல்லம், கோழிக்கோடு, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அரக்கோணம் 4-வது பட்டாலியன் கமாண்டன்ட் தெரிவித்திருக்கிறார்.

    மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு மீட்பு பணிகளை மேற்கொள்வ

    தற்காக தேசிய பேரிடர் மீட்பு படை மூலம் கேரளாவில் அவசர கால செயல்பாட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டி ருக்கிறது. அந்த அறை அரக்கோணத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கமான ஒன்று.
    • கடந்த வாரம் 650 ரூபாய்க்கு விற்ற முந்திரி பருப்பு, இந்த வாரம் ரூ.100 உயர்ந்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்படுகிறது

    மதுரை:

    சந்தை நிலவரத்தை பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் தினந்தோறும் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். வரத்து குறைவு மற்றும் அதிகரிப்பு, மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் மார்க்கெட்டில் இன்றைய தானியங்கள் விலை நிலவரம் (கிலோவில்)

    துவரம் பருப்பு 1 கிலோ ரூ.186, பாசிப்பருப்பு-ரூ.112, பாசிப்பயறு-ரூ.110, உளுத்தம் பருப்பு-ரூ.140, பச்சை பட்டாணி-ரூ.98, வெள்ளை பட்டாணி-ரூ.49, கருப்பு சுண்டல்-ரூ.94, வறுகடலை-ரூ.98, மொச்சை-ரூ.132, சிவப்பு தட்டை பயறு-ரூ.98, மசூர் துவரை-ரூ.70, சீரகம்-ரூ.370, சோம்பு-ரூ.130, கடுகு-ரூ.70, வெந்தயம்-ரூ.78, மல்லி பெருவெட்டு-ரூ.95, மல்லி சிறியது-ரூ.90, மீல் மேக்கர்-ரூ.89, கேழ்வரகு-ரூ.42, காணப்பயறு-ரூ.76, கோதுமை-36, கம்பு-ரூ.32 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த வாரம் 650 ரூபாய்க்கு விற்ற முந்திரி பருப்பு, இந்த வாரம் ரூ.100 உயர்ந்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கடந்த வாரம் 650 ரூபாய்க்கு விற்ற மிளகு இந்த வாரம் 100 ரூபாய் உயர்ந்து 750 ரூபாய்க்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கடந்த வாரம் ரூ.2,400-க்கு விற்ற ஏலக்காய் 300 ரூபாய் உயர்ந்து கிலோ ரூ.2,700 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அங்கிருந்து அதிக அளவில் வரக்கூடிய முந்திரி, ஏலக்காய், மிளகு ஆகியவற்றின் வரத்து குறைந்துள்ளதும் இந்த விலையறேற்றத்திற்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • அடவிநயினார் அணை பகுதியில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் இன்று காலை வரை 12 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் நேற்று சுமார் 4½ அடி உயர்ந்து 81.80 அடியாக இருந்த நிலையில், தொடர் நீர்வரத்து காரணமாக இன்று மேலும் 3½ அடி உயர்ந்து 85.15 அடியை எட்டியுள்ளது. இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 10 அடி வரை உயர்ந்த நிலையில் இன்று மேலும் 3 அடி உயர்ந்து 104.26 அடியாக உள்ளது.

    சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.33 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 43.25 அடியாக உள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் அடித்தது.

    மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊத்து எஸ்டேட்டில் 24 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. காக்காச்சி மற்றும் மாஞ்சோலை பகுதிகளிலும் தொடர்ந்து 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. காக்காச்சியில் 14 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தென்காசியில் அதிகபட்சமாக 11 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. செங்கோட்டை யில் 1.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழையால் ராமநதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் நேற்று 57 அடியாக இருந்த நிலையில் இன்று 3 அடி உயர்ந்து 60 அடியை எட்டியுள்ளது.

    குண்டாறு அணை நீர்மட்டம் 21.36 அடியாக உள்ளது. அந்த அணை நிரம்புவதற்கு இன்னும் 15 அடி நீரே தேவை. கருப்பாநதி அணையில் நீர் இருப்பு 29.86 அடியாக உள்ளது.

    இன்று காலை வரை குண்டாறு அணை பகுதியில் 4.8 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    • காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் காலை 5.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது.
    • 22 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காலங்களில் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கொங்கன் வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களின் நேரம் மாற்றப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு இன்று (10-ந் தேதி) முதல் அந்த வழித்தடத்தில் செல்லும் ரெயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    அதன்படி நெல்லையில் இருந்து நாகர்கோவில் டவுன் வழியாக இயக்கப்படும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை 8 மணிக்கு புறப்படும் ஹாபா எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 19577) காலை 5.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது.

    வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும் காந்திதாம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 20923) ரெயிலும் காலை 5.15 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 22 ரெயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31-ந் தேதி வரை இந்த மாற்றம் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • கேரளா, லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    வருகிற 13-ந் தேதி வரை இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் இதன் காரணமாக கேரளம் மற்றும் தமிழக கடற்கரையோரங்களில் 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் கேரளா, லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இன்று மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டின் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான அளவில் மழை தொடரக்கூடும்.
    • தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×