search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடி"

    • தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.
    • சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந் தது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் உருவான மேல் அடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    புதுச்சேரியில் நேற்று காலை வானம் இருண்டு காணப்பட்டது. ஆனால் பிற்பகல் வரை மழை பெய்யவில்லை. மாலை 3.30 மணிக்கு திடீரென இடியுடன் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது.

    கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. மழை நின்றதும் வெள்ள நீர் வடிந்தது. தொடர்ந்து இரவிலும் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் மழை கொட்டியது. பெருத்த இடி ஒசையால் வீடுகளில் தூங்கியவர்கள் அச்சமடைந்தனர். குழந்தைகள் இடி சத்தத்தை கேட்டு அரண்டு போனார்கள்.

    வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்களின் இணைப்புகளை துண்டித்தனர். தொடர்ந்து காலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்படுகிறது.

    தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன.

    குறிப்பாக புதுச்சேரியின் நகர பகுதியான புஸ்சி வீதி, பாரதி வீதி, சின்னசுப்புராய பிள்ளை வீதி, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.

    கனமழை காரணமாக உழவர்கரை தொகுதி மூலக்குளம் பகுதியில் வசித்து வரும் வசந்தா என்ப வர் வீட்டின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென அதிகாலை 5 மணியளவில் இடிந்து விழுந்தது.

    சுவர் இடிந்து விழுந்ததில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந் தது. வீட்டில் வசிப்போர் யாரும் அருகில் இல்லாததால் காயம் ஏற்படவில்லை.

    இதனிடையே கடலில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்புமாறு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து மீன்வளதுறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 29-ந் தேதி தாழ்வு மண்டலமாக வலுப் பெற கூடும் என வானிலை மையம் தெரித்துள்ளது. எனவே ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் வருகிற 28-ந் தேதிக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

    மேலும், ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு தொலை தொடர்பு உபகரணங்கள் மூலம் புதுவை மீன்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    • இடியுடன் கூடிய மழை பெய்தது. திடீரென அங்கு மின்னல் பாய்ந்தது.
    • வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மருங்கால்புரி அடுத்த வகுத்தால்வார்பட்டியை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 30).

    சம்பவத்தன்று இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்து லெட்சுமி(40), பெரியம்மாள் (55) ஆகியோர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. திடீரென அங்கு மின்னல் பாய்ந்தது. மணிமேகலை வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது. இதில் மணிமேகலை படுகாயம் அடைந்தார். மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து காயமடைந்த 3 பேரையும் மணபாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இடிதாக்கியதில் ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் வினய் குமார் (வயது21). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பாப்பான் சத்திரத்தில் வீடு எடுத்து தங்கி தண்டலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் வினய்குமார் உடன் படிக்கும் தனது நண்பர்களான ரேவனு, திவ்ய தேஜாவுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    கல்லூரி அருகே பெங்களூர்-சென்னை தேசிய சாலையில் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்த வினய் குமார் மீது திடீரென இடி தாக்கியது. இதில் வினய் குமார், மற்றும் உடன் இருந்த ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த வினய்குமாரை மீட்டு அருகில் உள்ள தனி யார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினய்குமார் பரிதாபமாக இறந்தார். இடிதாக்கியதில் ரேவனு, திவ்ய தேஜா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயரிங் மாணவர் இடி தாக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்க வில்லை யெனினும் ஓரளவு மழை பெய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தது.
    • இதனால் பல்வேறு இடங்களில் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்க வில்லை யெனினும் ஓரளவு மழை பெய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தது. குறிப்பாக சேலம், தம்மம்பட்டி, எடப்பாடி, மேட்டூர், ஏற்காடு, சங்ககிரி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இங்கு பல மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது.

    விவசாய பணிகள்

    இதனால் கிணறுகள், குளங்கள், குட்டைகள், ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மதகுகள், ஓடைகள், வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    பூ செடிகள், காபி செடிகள், அழகு செடிகள், தென்ைன மர கன்றுகள், நெற்பயிர்கள், வெண்டைக்காய், தக்காளி, மிளகாய், புதினா, கொத்த மல்லி, சோளம், மரவள்ளிக்கிழங்கு, கரும்பு உள்ளிட்டவை சாகுபடி செய்துள்ளனர்.

    தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    எடப்பாடியில் பலத்த மழை

    இந்த நிலையில் எடப்பாடி, அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தாலும் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

    இதையடுத்து நள்ளிரவு நேரத்தில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் மழை வெள்ளம் சாலைகளில் கரைபுரண்டு தாழ்வான பகுதிகளில் பாய்ந்தோடியது.

    பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

    எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கியது. குறிப்பாக எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் மேற்கொண்டிருந்தனர். நள்ளிரவில் பெய்த மிக கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சோளம், வாழை, பருத்தி, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாய்ந்தன.

    பூலாம்பட்டி பில்லுக்குறிச்சி, உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு செய்யப்பட்டு இருந்த வயல்களில் தண்ணீர் அதிக அளவு தேங்கி உள்ளது. இதனால் நெற்பயிர்கள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சோளப் பயிர்கள் மழைக்கு தாக்குப்பிடிக்க இயலாமல் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைப் பாதிப்புகள் குறித்து அப்பகுதியில் வருவாய் துறையினர் மற்றும் வேளாண் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • கடுமையான வெப்பம் நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.
    • நேற்று நள்ளிரவு முதல் இரண்டு மணி நேரத்திற்கு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    திருவாரூர்:

    கடந்த இரண்டு மாதங்களாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.

    குறிப்பாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை வெயிலின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்க ப்பட்டனர்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் குளிர்ந்த காற்று வீசிவந்த நிலையில் கடந்த இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    குறிப்பாக திருவாரூர், நன்னிலம், சண்ணாநல்லூர், மாங்குடி, கமலாபுரம், பூந்தோட்டம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த கனமழையின் காரணமாக பொதுமக்கள் மக்கள் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் பயிர்கள் கருகி வந்த நிலையில் இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக நன்னிலத்தில் 5 சென்டிமீட்டர் மழை அளவு, திருவாரூரில் 2 சென்டிமீட்டர், மன்னார்கு டியில் 1.7 சென்டிமீட்டர், வலங்கைமான் நீடாமங்க லத்தில் 1 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் 135 மில்லி மீட்டர் மலையளவு பதிவாகியுள்ளது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன் கன மழை பெய்யும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நாளை 15-ந் தேதி இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

    மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நாளை சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    இடி தாக்கி 7 ஆடுகள் பலியாகின.
    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையை சேர்ந்தவர் ஆண்டி (வயது 50). இவர் 15ஆடுகள் வளர்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கருப்புசாமி (35) என்பவர் 19 ஆடுகள் வளர்த்து வந்தார். 

    குலசேகரன்கோட்டை பகுதியல் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை அந்த 30 நிமிடங்கள் பெய்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக கூவாகரடு அருகே மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளை இடி தாக்கியது. இதில் 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    அதில் ஆண்டிக்கு சொந்தமாக 4 ஆடுகளும், கருப்பு சாமிக்கு சொந்தமான 3 ஆடுகளும் அடங்கும்.இதுகுறித்து தகவலறிந்த நீரேத்தான் வருவாய் ஆய்வாளர் அசோக்குமார், குலசேகரன் கோட்டை கிராம நிர்வாக அதிகாரி முத்துப்பாண்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

    வாடிப்பட்டி கால்நடை மருத்துவர் டாக்டர் விஜயபாஸ்கர் ஆடுகளை உடல் கூறு ஆய்வு செய்தார்.
    ×