என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Heat"
- ஈரப்பதம் சுழற்சி பெரும்பாலும் வடக்கு வங்காள விரிகுடாவை சுற்றியே குவிந்துள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே உள்ளது. மேற்கு கடற்கரை பகுதிகளில் பருவமழை தீவிரமடையும் பகுதிகளில் இருந்து வறண்ட காற்றின் வருகையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகலில் வெப்பநிலை ஒரு டிகிரி உயரக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வறண்ட மேற்கு திசை காற்று வீசி வருவதால் சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் கிழக்கு கடற்கரை முழுவதும் அடுத்த ஒரு வாரத்திற்கு வெப்பநிலை உயரும் மேற்கு பகுதியில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைந்து உள்ளதே இதற்கு காரணம். ஈரப்பதம் சுழற்சி பெரும்பாலும் வடக்கு வங்காள விரிகுடாவை சுற்றியே குவிந்துள்ளது.
சென்னை மண்டல வானிலையும் பெரும்பாலும் வறண்டதாகவே உள்ளது என்று இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 1-ந் தேதிக்குள் வானிலையில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடமேற்கு பகுதிகள் கடல் காற்றுடன் ஒன்றிணைந்து வெப்ப சலனத்தை தூண்டும் என்பதால் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- அடுத்து வரும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்து வரும் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலை நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்து வரக்கூடிய 5 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிபடியாக உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி மின்னனுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்தில்அதிகப்பட்ச வெப்பநிலையாக 37 டிகிரி வெப்பநிலை பதிவாக கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்க 55 கிலோ வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- டெல்லியின் முன்கேஸ்பூர் பகுதியில் இன்று சுமார் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு பதிவான 49.2 டிகிரி செல்ஸியஸ் என்பதே அதிகபட்சமாக வெப்பநிலையாக இருந்தது.
காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் ஏற்படத் தொடங்கியிருக்கும் அசாதாரணமான பருவநிலை இந்தியாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. இயல்பாகவே அதீத காலநிலை நிலவும் இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நகரம் முழுவதும் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் வரலாறு காணாத வகையில் இந்தியாவில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை டெல்லியில் இன்று (மே 29) பதிவாகியுள்ளது. அதன்படி டெல்லியின் முன்கேஸ்பூர் பகுதியில் இன்று சுமார் 52.3 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய வானிலை மைய வட்டார இயக்குனர் குல்தீப் ஸ்ரீவத்சவா, ராஜஸ்தானில் இருந்துவீசும் வெப்பக் காற்றானது டெல்லியின் புறநகர் பகுதிகளை முதலில் தாக்குவதால் ஏற்கனவே நகரத்தில் நிலவில் அதீத வெப்பநிலையுடன் வெளியில் இருந்து வரும் இந்த வெப்பக்க காற்றானது இணைந்ததில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
52.3 டிகிரி செல்ஸியஸ் என்பது டெல்லியில் இன்று சராசரியாக கணிக்கப்பட்ட வெப்பநிலையை விட 9 டிகிரி அதிகமாக பதிவாகியுள்ளது. கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு பதிவான 49.2 டிகிரி செல்ஸியஸ் என்பதே அதிகபட்சமாக வெப்பநிலையாக இருந்தது.
சுமார் 30 மில்லியன் மக்கள் வாழும் டெல்லியில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த கால நிலை மாற்றத்தின் தாக்கம் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. ஹீட் ஸ்டார்க் உள்ளிட்ட வெப்ப பாதிப்புளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி தவிர்த்து இன்று ராஜஸ்தானில் 51 டிகிரி செல்சியஸும், அரியானாவில் 50.3 டிகிரி செல்சியஸும் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது. இதற்கிடையில் கடும் வெப்பத்துக்கு மத்தியிலும் இன்று மாலை வேலையில் டெல்லியின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளதால் மக்கள் சற்று ஆசுவாசம் அடைந்துள்ளனர்.
- பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
- தென் மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக பல இடங்களில் மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருகிறது. ஆண்டு தோறும் மார்ச் முதல் ஜூன் வரையான கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பது வழக்கம். குறிப்பாக கத்திரி வெயிலின் போது வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.
அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கம் முதலே தமிழகத்தில் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட 4-5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்ததுடன், வெப்ப அலையும் வீசியது. குறிப்பாக ஈரோடு, பரமத்திவேலூர் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் 111 டிகிரி பாரஹீட் வரை வெயில் கட்டெரித்தது. பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்த 4-ந்தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மாறாக தற்போது பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் வெப்ப தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது.
நேற்றைய நிலவரப்படி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட குறைவாக இருந்தது. குறிப்பாக திருத்தணியில் 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இது இயல்பை விட 3 டிகிரி செல்சியல் குறைவு. அதே போல் ஈரோட்டில் 97 டிகிரியும், பரமத்திவேலூரில் 93 டிகிரியும் வெப்பம் பதிவானது. இது இயல்பை விட 1.6 டிகிரி செல்சியஸ் குறைவு. இதற்கிடையே சென்னை மீனம்பாக்கத்தில் 95 டிகிரி, நுங்கம்பாக்கத்தில் 92 டிகிரி வெப்பம் பதிவானது. இது இயல்பை விட சுமார் 2.7 டிகிரி செல்சியஸ் குறைவு.
தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட குறைவாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கி இருப்பதால், பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது.
- நேற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
சென்னை:
தமிழ்நாட்டில் நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு சென்னை தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குனர் நேற்று அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கி இருப்பதால், பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகும் இடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்தவகையில் நேற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கும்படி, இணை இயக்குனர்களுக்கு, தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.
- ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும், பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.
- நடைமுறை மே மாதம் இறுதி வரை கடைபிடிக்கப்பட வேண்டும்.
சென்னை:
தமிழ்நாட்டில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தாலும், பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.
இதனால் திறந்த வெளியில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் கடுமையாக சிரமப்படுகிறார்கள். இதை அறிந்த தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு கட்டுமான நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது குறித்து சென்னை தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தற்போது நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நடைமுறை மே மாதம் இறுதி வரை கடைபிடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாக குளம் மற்றும் மரங்கள் வரண்டு போனது.
- அயல் நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக பறவைகள் வருவதும் அதனை பார்க்க பொது மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே அமைந்துள்ளது வெள்ளோடு பறவைகள் சரணாலயம். சுமார் 240 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பறவைகள் சரணாலயத்தில் 50 ஏக்கர் அளவில் 30 அடிக்கு தண்ணீர் தேக்கும் வகையில் குளம் அமைக்கபட்டுள்ளது.
கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் மற்றும் மழை காலத்தில் நீர் வழி ஓடையின் மூலமாக வரும் தண்ணீரையே ஆதாரமாக கொண்டுள்ளது இந்த பறவைகள் சரணாலயம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வறட்சியின் காரணமாக குளம் மற்றும் மரங்கள் வரண்டு போனது.
இதனையடுத்து ரூ.2 கோடியே 35 லட்சம் மதிப்பில் பறவைகள் சரணாலயம் புதுப்பிக்கபட்டு சரணாலயத்தை சுற்றி கரைகள் பலப்படுத்தப்பட்டு சிறு பாலங்கள், நடை பாதைகள், பறவைகளின் வண்ண ஓவியங்கள், பட்டாம்பூச்சி பூங்கா, செல்பி பாயின்ட் என பல்வேறு மேம்பாட்டு பணிகள் முடிவுற்று எழில்மிகு ரம்மியமாக காட்சியளிக்கின்றது வெள்ளோடு பறவைகள் சரணாலயம்.
இந்த சரணாயத்தில் உள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்டு இனப்பெருக்கம் செய்ய பறவைகள் அதிகம் வருவதுண்டு. ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் பறவைகளுக்காக சீசன் தொடங்கும்.
இந்த காலத்தில உள்நாட்டு பறவைகளான மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை அரிவால் மூக்கன், பொறி உள்ளான், நீலவால் இரைக்கோழி, சிறிய நீர் காகம், சாம்பல் நாரை, பஞ்சுருட்டான் போன்ற உள்நாட்டு பறவைகளும் சைபீரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து சுழைக்கடா, வண்ண நாரை, நெடுங்கல் உள்ளான், செம்பருந்துபூ நாரை, வால் காக்கை, காஸ்பியன் ஆலா, வெண்புருவ சின்னான், கருங்கழுத்து நாரை போன்ற வெளிநாட்டு பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த சரணாலய குளத்தில் குளித்து கும்மாலமிட்டு மீன்களை உணவாக உண்டு மரங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து குஞ்சுகள் வளர்ந்தவுடன் பறந்து சென்று விடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
இந்த பறவைகளைகான ஈரோடு மாவட்டம் மட்டு மின்றி அருகிலுள்ள கோவை, சேலம், திருச்செங்கோடு என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவது உண்டு. ஈரோடு மாவட்ட த்தின் சிறந்த சுற்றுலா தளமாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் திகழ்ந்து வந்தது. அயல் நாடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக பறவைகள் வருவதும் அதனை பார்க்க பொது மக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில ஈரோடு மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து நாட்டிலேயே 2-வது இடத்தை ஈரோடு மாவட்டம் பிடித்தது. 110 டிகிரி பாரன் ஹிட் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பகல் நேரங்களில் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது.
தற்போது வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் மேம்படுத்தப்பட்ட பணிகள் நிறைவடைந்து சரணாலயம் ரம்யமாக காட்சி அளித்தாலும். வெயிலின் தாக்கம் காரணமாக வெளிநாட்டு பறவைகள் வரத்து இல்லை. பறவைகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு சில உள்நாட்டு பறவைகள் மட்டுமே வந்து செல்கின்றன.
இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
- மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது.
- வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. 110 டிகிரி வரை தற்போது வெயில் தாக்கி வருகிறது.
இந்த நிலையில் குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்ய தொடங்கியுள்ளது. மலை மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் நேற்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலையும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வந்தது.
இதை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
- நீண்ட நாட்களாக வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை கொடுத்தது.
கூடலூர்:
தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் உள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் பகல் பொழுதில் வெளியே நடமாடுவதை பொதுமக்கள் தவிர்ப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.
தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஆண்டிபட்டி, வருசநாடு, கூடலூர், பெரியகுளம், தேனி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. நீண்ட நாட்களாக வெப்பத்தின் பிடியில் சிக்கித் தவித்த பொதுமக்களுக்கு இந்த மழை ஓரளவு நிம்மதியை கொடுத்தது. மழை தொடர்ந்து பெய்தால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வழக்கம்போல் ஜூன் முதல் வாரத்தில முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும். எனவே மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 114.85 அடியாக உள்ளது 3 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 100 கனஅடி திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 56.59 அடியாக உள்ளது. 50 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 100.69 அடியாக உள்ளது வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
தேக்கடி 2.6, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 7.4, சண்முகாநதி அணை 19.4, வைகை அணை 12.4, சோத்துப்பாறை 7, பெரியகுளம் 23, வீரபாண்டி 24, ஆண்டிபட்டி 6 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- போக்குவரத்து சந்திப்புகளில் நிற்கும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
- சென்னை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக 199 இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
கோடை வெப்பத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சென்னையில் 10 இடங்களில் பச்சை நிறத்திலான பசுமை நிழல் பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன.
சென்னையில் போக்குவரத்து சந்திப்புகளில் நிற்கும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளை வெப்பத்தில் இருந்து காப்பதற்காக 10 சந்திப்புகளில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே ராஜா முத்தையா சாலை ஈ.வெ.ரா. பெரியார் சாலை சந்திப்பு, திருமங்கலம் ரவுண்டானா சந்திப்பு, கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை, 3-வது அவென்யூ சந்திப்பு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம் சேத்துப்பட்டு சந்திப்பு, அடையாறு எஸ்.பி.சாலை-மேற்கு அவென்யூ சாலை சந்திப்பு, திருவான்மியூர் பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்ட 10 இடங்களில் பசுமை நிழற்பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. 3 நாட்களில் இதனை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
சென்னை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக 199 இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. 1 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்ப அயர்ச்சி (ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
- காரைக்கால் பகுதிகளில் இதுவரை மது போதையில் வெயில் மயக்கத்துடன் 6 பேர் சுருண்டு விழுந்து பலியாகி உள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முழுவதும் கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது.
புதுச்சேரியில் நேற்று 96.1 டிகிரி வெயில் பதிவானது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வருகிற 10-ந் தேதி வரை 96.8 டிகிரி முதல் 100 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்ப அயர்ச்சி (ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக முதலுதவி செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து நேரலாம்.
இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள பகல் நேரங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.
புதுவை, காரைக்கால் பகுதிகளில் இதுவரை மது போதையில் வெயில் மயக்கத்துடன் 6 பேர் சுருண்டு விழுந்து பலியாகி உள்ளனர்.
புதுவையில் வெயிலின் தாக்கத்தில் மயக்கம் அடைப வர்களுக்கு சிகிச்சை அளிக்க புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிகளில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-
புதுவை மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தற்போது கதிர் காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 5 படுக்கைகள் கொண்ட வார்டும், ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 5 படுக்கைகள் கொண்ட வார்டும், அரசு பொது மருத்துவமனையில் 2 படுக்கைகள் கொண்ட வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. போதுமான மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அங்கு பணியில் இருப்பார்கள்.
வெப்ப அயர்ச்சியால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு அவர்களை சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெயிலின் தாக்கம் ரெயில்வே துறையிலும் எதிரொலிக்கிறது.
- ரெயில்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை:
வெயிலின் தாக்கம் ரெயில்வே துறையிலும் எதிரொலிக்கிறது. கோடை விடுமுறை காரணமாகவும, வெயில் காரணமாகவும் சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கும், கோடை வாசஸ்தலங்களுக்கும் படையெடுக்கிறார்கள்.
இதனால் அனைத்து ரெயில்களும் நிரம்பி வழிகின்றன. எந்த ரெயிலிலும் டிக்கெட் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடுகிறார்கள்.
அதே நேரம் தண்ணீர் கிடைக்காமல் ரெயில்கள் திண்டாடுகின்றன. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து தொலை தூரங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் நிரப்புவதற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும் தனியார் தண்ணீர் லாரிகளும் தேவையான அளவு சப்ளை செய்ய முடியாததாலும் தண்ணீர் தேவையை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்கள்.
வார நாட்களில் 50 சதவீதமும், வார இறுதி நாட்களில் 75 சதவீதமும் தண்ணீர் நிரப்பினார்கள். இப்போது வார நாட்களில் சுமார் 25 சதவீதம்தான் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
இதனால் ரெயில் புறப்பட்ட 2 முதல் 3 மணி நேரத்தில் தண்ணீர் தீர்ந்து விடுகிறது. அதன் பிறகு தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.
குறிப்பாக கழிவறைகளில் தண்ணீர் பயன்படுத்த முடியாததால் நாற்றம் அடிக்கிறது. இதனால் தொலைதூரம் பயணிக்கும் பயணிகள் நிம்மதியை தொலைக்கிறார்கள்.
இந்த பிரச்சினை பற்றி ரெயில்வே துறை அதிகாரிகள் கூறிய போது, உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் ஒரு சில நீண்ட தூர ரெயில்களுக்கு வேறு ரெயில் நிலையங்களில் நீர் நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரெயில் பெட்டிகளை கழுவுதல், சுத்தப் படுத்துவதற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றார்.
ஒரு ரெயில் தொலை தூரத்திற்கு சென்று வர 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இந்த தட்டுப்பாடு காரணமாக ரெயில் பெட்டிகளின் வெளிப்புறம் கழுவுவதற்கு தண்ணீர் கொடுக்கவில்லை.
சென்னை பேசின்பிரஜ், பராமரிப்பு நிலையத்தில் 45-க்கும் மேற்பட்ட ரெயில்கள் பராமரிக்கப்படு கிறது. இதற்கு நாள் ஒன்றுக்கு 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
சென்ட்ரலுக்கு சுமார் 10 லட்சம் லிட்டரும், எழும்பூர் ரெயில் நிலையத்தற்கு 10 லட்சம் லிட்டரும் தேவைப்படும். ஆனால் தண்ணீர் தேவையை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக கூறினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்