என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heat"

    • தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    13-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இன்று முதல் 13-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை முதல் 14-ந்தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 14-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 11-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 13-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    3-ந்தேதி மற்றும் 4-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    5-ந்தேதி மற்றும் 6-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இதனிடையே இன்று முதல் 2-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்

    இன்று முதல் 2-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் 4-ந்தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • தூத்துக்குடி , திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 103 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து உள்ளது.
    • வலுவான மேற்கு காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னையிலும் வெயில் அதிகரித்துள்ள நிலையில் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-

    மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரியும் சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, மதுரை நகரம் ஆகிய இடங்களில் 103 டிகிரியும் வெயில் பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடி , திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 103 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து உள்ளது.

    இன்று காலை 8.30 மணி நிலவரப்படி துரைப்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 5 செ.மீ, கண்ணகி நகர், மேடவாக்கம், மடிப்பாக்கம், மணலியில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

    வலுவான மேற்கு காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடல் காற்று உள் நுழைவதில் ஏற்படும் தடை மற்றும் தாமதம் காரணமாக கடலோர மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது.

    தமிழகத்தில் பகல் நேரத்தில் வெப்பமான சூழலே நிலவும், கடலோர மாவட்டங்களில் பகல்நேர வெப்ப நிலை 100 டிகிரி அளவுக்கு பதிவாக வாய்ப்பு உள்ளது.

    சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் தவிப்புக்கு ஆளானார்கள்.
    • சென்னையில் இன்று வெயிலின் தாக்கம் 100 டிகிரியை கூட தொடவில்லை.

    சென்னை:

    சென்னையில் இன்று கடுமையான வெயில் கொளுத்தியது. மக்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் தவிப்புக்கு ஆளானார்கள். இது தொடர்பாக வானிலை மையத்திடம் கேட்டபோது கூறியதாவது:-

    வெயிலின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும். அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இன்று சென்னையில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை கூட தொடவில்லை. ஆனாலும் மக்கள் உஷ்ணத்தை அதிகமாக உணர்வதற்கு காற்றில் ஈரப்பதம் மிகவும் குறைவாக உள்ளதுதான் காரணம் ஆகும்.

    இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • கடந்த 2 நாட்களாக கொடூர வெயில் அடித்து வருகிறது.
    • வெப்ப காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடையின் தாக்கம் தொடங்கி வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

    பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. கடந்த மே 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் தொடங்கியது. இது கடந்த 28-ந்தேதி முடிவடைந்தது.

    அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட குறைந்தே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சில நாட்கள் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து காணப்பட்டது.

    இதற்கிடையே அக்னி நட்சத்திரத்துக்கு பிறகும் சென்னையில் வெயில் தாக்கம் அதிகரித்தது. நேற்று வெப்ப காற்று வீசியது. இந்த நிலையில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் 38 செல்சியஸ் (100.4 டிகிரி) வரை வெயில் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    அதன்படி இன்று சென்னையில் வெயில் சுட்டெரித்தது. வெப்பம் காரணமாக மக்கள் கடும் அவதியடைந்தனர். வெப்ப காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

    அக்னி நட்சத்திர காலத்துக்கு பிறகு வெயிலின் தாக்கம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக கொடூர வெயில் அடித்து வருகிறது.

    மாநிலம் முழுவதும் நாளை வரை சில பகுதிகளில் வெப்பநிலை 2முதல் 3 செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக வானிலை நிபுணர்கள் கூறும்போது, "வட-வட மேற்கு காற்று வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் ஈரப்பதத்துடன் அது இன்னும் வெப்பமாக உணரக்கூடும். மாலையில் மட்டுமே கடல் காற்று வீசுகிறது. இது சிறிய அளவில் பயன் அளிக்கிறது. அடுத்த 3 அல்லது 4 நாட்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    ஆனால் வெப்பநிலையை கணிசமாகக் குறைக்க இது போதுமானதாக இருக்காது. அடுத்த ஒரு வாரத்திற்கு உயர்ந்த வெப்பநிலை தொடர வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சர்வ சாதாரணமாக 100 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி வருகின்றனர். வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மதிய நேரங்களில் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, மேட்டூர் ரோடு, ஆர்.கே.வி. ரோடு ஆகியவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெளியே செல்லும் பெண்கள் குடையை கொண்டு செல்கின்றனர். இன்னும் சிலர் முகத்தில் துணியை மறைத்து செல்கின்றனர்.

    வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்பானங்களை அதிக அளவில் பருகி வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் முலாம்பழம், நுங்கு, கரும்பு பால், இளநீர் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் மக்கள் திணறி வருகின்றனர். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இன்று மற்றும் நாளை வரை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகத்தில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

    தமிழகத்தில் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் உயரக்கூடும்.

    இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

    தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இன்று மற்றும் நாளை வரை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

    26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    27-ந்தேதி மற்றும் 28-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.
    • தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைவாக பதிவானது.

    கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டின் அனேக இடங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பொழிந்தது.

    இதனால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் 5 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைவாக பதிவானது.

    இந்நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட குறைவாகவே இருக்கும் என தெரிவித்துள்ள வானிலை மையம், நாளை மறுநாள் முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் வீடுகள் மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
    • சமைக்காத அசைவ கழிவுகளை வீட்டுக்கு அருகில் கொட்ட கூடாது.

    திருப்பூர் :

    மலைக்கிராமங்கள், மற்றும் கிராமப்புற பகுதி களில் கோடைக்காலங்கள் வந்துவிட்டாலே பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து விடும். குளிர், மற்றும் மழைக்காலங்களில் பதுங்கி கிடக்கும் பாம்புகள் வெயில் காலம் அதற்கு ஏற்ற காலம் என்பதால் வசிப்பிடங்களில் எளிதாக வந்து செல்லும். இரவு நேரங்களில் மனிதர்கள் மிதித்துவிட்டாலோ அல்லது அதன் அருகில் சென்று விட்டாலோ அது தனது சுய பாதுகாப்புகாக கடித்து விடுகிறது. வெயில் காலம் தொடங்கி உள்ள நிலையில் பாம்பு கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து திருப்பூர் மருத்துவர்கள் கூறுகை யில்;- கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் வீடுகள், மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். செங்கற்கள், தேங்காய் மட்டைகள் மற்றும் பழைய பொருட்கள் வைத்திருக்கும் அறை ஆகியவற்றை அடி க்கடி பராமரித்து வைத்தி ருக்க வேண்டும்.. கூடிய வரைக்கும் செங்கற்கள், தேங்காய் மட்டைகளை வீட்டுக்கு அருகில் வைத்தி ருப்பதை தவிர்ப்பது நல்லது. சமைக்காத அசைவ கழிவுகளை வீட்டுக்கு அருகில் கொட்ட கூடாது. குழித்தோண்டி அதில் புதைத்து விட வேண்டும். இரவு நேரம் மின்விளக்குகள் எரிய வேண்டும்.

    பாம்பு கடித்த உடனே அந்த இடத்தில் வாயை வைத்து உடனடியாக ரத்த த்தை உறிஞ்சி வெளியே எடுத்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என்று கூட ஒரு மூட நம்பிக்கை உண்டு. அதனை செய்ய கூடாது. காலம் பொன் போன்றது என்பது பாம்பு கடித்தவருக்கு தான் பொருந்தும். பாம்பு கடிப்ப ட்டவரை விரைவாக அரசு மருத்துவமனை கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வது தான் நல்லது. பெரும்பாலான தனியார் மருத்துவமனை களில் பாம்பு கடி மருந்துகள் இருப்பதில்லை.

    இயற்கை மருத்துவம் எனும் பெயரில் பாம்பு கடித்த இடத்தின் அருகே கிடைக்கும் பச்சை இலை சாறை ஊற்ற வேண்டும் என்றும் ஒரு செய்தி உலா வருகிறது. இதுவரை இதற்கு அறிவியல்பூர்வமான நிரூபணம் எதுவும் இல்லை. ஆனால் இவை யாவும் அறிவியலுக்குப் பொருந்தா தவை மட்டு மல்ல, உண்மை யும் அல்ல. இவற்றால் நேரம் வீணாகி பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட வருக்கு உயிர் போகும் ஆபத்துதான் அதிகமாகும்.

    எந்த வகை பாம்பு கடித்தது என்பதை மருத்து வர்களுக்கு தெரியப்படுத்து வதற்காக அந்தப்பாம்பின் வகையை கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

    பாம்பு கடித்த இடத்தின் அருகே இறுக்கமான கயிறு உள்ளிட்டவற்றை கொண்டு கட்டுவதால் எந்த ஒரு பயனும் இருக்காது. ஒரு வேளை அப்படி கட்டப்ப ட்டால் ,அந்தக்கட்டு அக ற்றப்படுவதை நல்ல மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உடைய பெரிய மருத்துவ மனைகள், மருத்துவக்க ல்லூரி மருத்துவமனை கள் உள்ளிட்டவற்றில் செய்வதே நல்லது. ஏனென்றால், இறுக்கமாக கட்டப்பட்டி ருந்த கட்டு பிரிக்கப்படும் பொழுது அந்த இடத்தில் இருந்து ரத்த ஓட்டம் அதிக மாகும். இதன் காரணமாக உடலின் பிற பாகங்களுக்கும் விஷம் சென்றடைந்து பாதிப்பும் அதிகமாகும். நல்ல வசதிகள் உள்ள மருத்துவமனைகளில் இந்த பாதிப்பை குறைப்பதற்கான சிகிச்சைகளை எளிதில் செய்ய முடியும்.

    கடித்தது எந்த வகை பாம்பு என்று ஆராய்ச்சி செய்து நேரத்தை கடத்து வதை விட, விரைவில் பாதிக்கப்பட்டவரை மருத்து வமனைக்கு கொண்டு செல்வதில்தான் கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெ ன்றால், எந்த வகைப் பாம்பு கடித்து இருந்தாலும் பாம்பு கடிக்கு எதிராக வழங்க ப்படும் மருந்து ஒன்றுதான் கடிப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பாம்புக்கடி பட்ட பின்பு கயிறு கட்டுவதால் பலனி ல்லை என்பதையும் தாண்டி அந்த நச்சு கடிபட்ட இடத்திலேயே அதிகமாக தேங்கி இருப்பத ற்கும் கயிறு கட்டப்படுவது வழி வகுக்கும். இதன் காரணமாக கடிபட்ட இடத்தில் அணு க்கள் பாதிக்கப்பட்டு, சீழ் பிடிக்கும் நிலை கூட உண்டாகலாம் என்கிறார் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் கோபால கிருஷ்ணன். மேலும் அவர் கூறுகையில், நாக பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன். இந்த நான்கு வகைப் பாம்புகளே இந்தியாவில் அதிக பாம்பு க்கடி மரணத்துக்கு காரண மாக உள்ளன.

    ஒருவருக்கு பாம்பு கடித்தது தெரியவந்தாலோ அது கடித்து இருப்பது போல உணர்ந்தாலோ என்ன செய்ய வேண்டும் என்ற சில வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ளது. உடனடியாக கடி பட்ட இடத்தில் இறுக்க மான ஆடை அணிந்து இருந்தால் அதை அகற்ற வேண்டும். ஏனென்றால் கடிபட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் இவற்றின் காரணமாக அபாயம் ஏற்படலாம். பாம்பு கடித்த உடல் பாகம் அருகே இறுக்க மாகக் கட்டக் கூடாது. அப்படி இறுக்க மாக இருந்தால் ரத்த ஓட்டம் தடைபடும். பாம்பு கடித்த இடத்தில் வீக்கத்தை உண்டாக்காமல் நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தன்மையுள்ள பாம்புகளின் கடிகளுக்கு மட்டும் கை அல்லது கால் விரல்களில் இருந்து கடிபட்ட இடம் மற்றும் அதற்கும் மேல் பேண்டேஜ் அல்லது எலாஸ்டிக் சுற்றி நச்சு உடலின் பிற பாகங்களுக்கு பரவாமல் தடுக்கலாம். ஆனால், ரத்த ஓட்டம் தடைபடும் அளவுக்கு மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது. தசைப் பிடிப்புக்கு ஒட்டப்படும் பேண்டேஜின் இறுக்கமே போதுமானது. எலாஸ்டிக் அல்லது பேண்டேஜ் இல்லாதபோது துணி, துண்டு ஆகியவற்றை கிழித்து பயன்படுத்தலாம். கடிபட்டவர் இயன்றவரை உடலை அசைக்காமல் இருக்க வேண்டும். பார ம்பரிய மருத்துவ முறை எனும் பெயரில் அறிவியல்பூர்வமாக அங்கீகரிக்கக்கப்படாத அல்லது ஆபத்தை விளை விக்க கூடிய எந்த வகையான முதலுதவி சிகிச்சையையும் செய்யக்கூ டாது. மருத்துவ வசதி கிடைக்கும் வரை பாதிக்க ப்பட்டவரை இடது பக்க மாக ரெக்கவரி பொசி ஷனில் படுக்க வைக்கவும். மேலும் பாம்பு கடிப்பட்ட வரிடம் நம்பிக்கையூட்டும் வகையில் பேசி அவர் மனப்பயத்தை போக்க வேண்டும். வாகன வசதிகள் இல்லாத கிராமப்புறங்கள் என்றால் அரசு ஆம்புலன்ஸ் வசதியை பயன்படுத்தி பாம்பு கடித்து 1 மணி நேரத்துக்குள் அருகில் உள்ள அரசு மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சையை மேற்கொ ண்டால் பாம்பு கடிப்பட்ட வர் உயிரை காப்பாற்றி விடலாம். இவ்வாறு அவர் கூறினார். 

    • குமாரபாளை யம் ஆனங்கூர் பிரிவு சாலையில் சுமை தூக்குவோர் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா நடைபெற்றது.
    • நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்கள், இளநீர் ஆகிய வற்றை விநியோகித்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. பொது மக்கள் வெப்பத்தின் தாக்கு தலில் இருந்து சமாளிக்க இளநீர், தர்பூசணி பழங்கள், குளிர்பானங்கள் ஆகிய வற்றை உண்டு வருகின்றனர்.

    கோடை வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பொதுமக்களுக்கு உதவும் வகையில், பொதுமக்கள் தாகம் தீர்க்க குமாரபாளை யம் ஆனங்கூர் பிரிவு சாலையில் சுமை தூக்குவோர் தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் தொடக்க விழா நடைபெற்றது.

    நகராட்சித்தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழங்கள், இளநீர் ஆகிய வற்றை விநியோகித்தார். இதில் சங்க நிர்வாகிகள், கவுன்சிலர் ஜேம்ஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×