என் மலர்
நீங்கள் தேடியது "வானிலை ஆய்வாளர்"
- தூத்துக்குடி , திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 103 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து உள்ளது.
- வலுவான மேற்கு காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது.
சென்னை:
தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னையிலும் வெயில் அதிகரித்துள்ள நிலையில் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-
மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரியும் சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, மதுரை நகரம் ஆகிய இடங்களில் 103 டிகிரியும் வெயில் பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி , திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 103 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து உள்ளது.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி துரைப்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 5 செ.மீ, கண்ணகி நகர், மேடவாக்கம், மடிப்பாக்கம், மணலியில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வலுவான மேற்கு காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடல் காற்று உள் நுழைவதில் ஏற்படும் தடை மற்றும் தாமதம் காரணமாக கடலோர மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்தில் பகல் நேரத்தில் வெப்பமான சூழலே நிலவும், கடலோர மாவட்டங்களில் பகல்நேர வெப்ப நிலை 100 டிகிரி அளவுக்கு பதிவாக வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ஓரிரு இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.
- ஒட்டுமொத்த தமிழகத்திலுமே மழை பொழிவை எதிர்பார்க்கலாம்.
சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. தென் மாவட்டங்களில் கோடை மழை வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தியுள்ள போதிலும் சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த 3 நாட்களும் கோடை வெயில் வாட்டி எடுக்கும் என்றும் அதன் பின்னர் 2 வாரங்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
நேற்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. சேலத்தில் 39.8 டிகிரி செல்சியசும், வேலூரில் 39.7 டிகிரி செல்சியசும், ஈரோடடில் 39.6 டிகிரி செல்சியசும், சென்னை மீனம்பாக்கத்தில் 39.2 டிகிரி செல்சியசும், கரூர், பரமத்தி, தர்மபுரி பகுதிகளில் 39 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் எந்த பகுதியிலும் நேற்று மழை பெய்யவில்லை.
இன்று முதல் 3 நாட்களுக்கு (ஏப்ரல் 2-ந்தேதி வரையில்) கடலோர மாவட்டங்களில் 34 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.
வேலூர், திருப்பத்தூர், கரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது.
ஏப்ரல் 3-ந்தேதி முதல் கோடை வெப்பச்சலன மழை படிப்படியாக மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் என ஒட்டுமொத்த தமிழகத்திலுமே மழை பொழிவை எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வந்த நிலையில், கத்திரி வெயிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. கடும் வெயில் காரணமாக அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலுக்கு பயந்து மக்கள் வீடுகளிலேயே முடங்கி வருகின்றனர்.
இந்தநிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு.
வீசும் அனல் காற்றின் வேகம் உயர வாய்ப்பு இல்லை. அடுத்த 48 மணி நேரம் (இன்றும், நாளையும்) இதே போக்கு தொடரும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனேயே காணப்படும். மாலை நேரத்தில் ஆங்காங்கே குளிர்ந்த காற்று வீசலாம்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் மணப்பூண்டியில் 7 செ.மீ. மழை பெய்திருக்கிறது. மதுரை மாவட்டம் தல்லாகுளம், கரூர் மாவட்டம் மாயனூரில் தலா 6 செ.மீ. மழையும், காஞ்சீபுரத்தில் 5 செ.மீ. மழையும், தர்மபுரியில் 4 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர். #Rain






