என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெட் அலர்ட் எச்சரிக்கை"

    • புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

    இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல் காரணமாக தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.

    இந்நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாகை மாவட்டத்திலும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நாகை நடத்தக்கூடாது என்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே, 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    • பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வறட்சியால் வறண்டு கிடந்த நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக பெங்களூரு மாநகராட்சி பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    இந்த நிலையில் நேற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இந்த நிலையில் உத்தரகன்னடா, தார்வாட், ஹாவேரி மற்றும் உடுப்பி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் பெல்காம் மற்றும் குடகு மாவட்டத்தில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இந்த 2 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இதேபோல் பாகல்கோட், கொப்பல், ஷிமோகா மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் சில பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் அதிக காற்று வீச வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பெங்களூரு மாநகரில் வானம் மேககூட்டத்துடன் காணப்படும். வருகிற 12-ந் தேதி வரை கர்நாடகாவில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், நாகை மீன்வளத்துறை மூலம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆறுக்காட்டு துறை, கோடியக்கரை ஆகிய கிராமங்களில் இருந்து நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்ற விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் அவசர, அவசரமாக இன்று காலை கரை திரும்பி வருகின்றனர்.

    சுமார் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் அவசர, அவசரமாக கரை திரும்பியதால் மீன்கள் எதுவும் இன்றி ஏமாற்றத்துடன் வந்தடைந்தனர்.

    மேலும், இதன் எதிரொலியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வில்லை. இதனால் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ×