search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rain warning"

    பேரிடர் காலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட கூடிய பகுதிகள் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள துணை கலெக்டர்நிலையில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து அனைத்துறைகளும் இணைந்து பருவமழை தொடர்பாக பணியாற்றி வருகிறார்கள்.

     கடலூர்:

    வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் புயல் உருவானதால் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி, சிதம்பரம் நகராட்சி, மற்றும் பெருமாள் ஏரி, வீராணம் ஏரி ஆகிய பகுதிகளில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது கடலூர் கார்த்திகேயன் நகர் மற்றும் முதுநகர் நாராயணசாமி நகர் ஆகிய பகுதிகளில் மோட்டார் பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதையும், ஏணிக்காரன் தோட்டம் பகுதியில் உள்ள அங்கன் வாடி மையத்தில் பருவ மழையையொட்டி முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்ற காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாமினையும், குடிகாடு ஊராட்சியில் மழைநீர் வடிய ஏதுவாக புலிக்குத்தி கிளை வாய்க்கா ல் தூர்வாரும் பணிகள், பெருமாள் ஏரியை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது ஏரிக்கு நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றுதல் குறித்து ஆய்வு செய்ததோடு, ஏரியை தொடர்ந்து கண்கா ணிக்க நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு, உழவர் சந்தை எதிரே உள்ள வடிகால் தூர்வாரும் பணிகளையும் மற்றும் பஸ் நிலையம், மணிக்கூண்டு அருகே உள்ள வடிகால் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்குட்பட்ட வீராணம் ஏரியை பார்வை யிட்டு, ஏரியின் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றுதல் குறித்து தொடர்ந்து கண்கா ணிக்க நீர்வளத்துறை அலுவலர்க ளுக்கு உத்தரவி ட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-மேலும் பேரிடர் காலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட கூடிய பகுதிகள் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள துணை கலெக்டர்நிலையில் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ந்து அனைத்துறைகளும் இணைந்து பருவமழை தொடர்பாக பணியாற்றி வருகிறார்கள். தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தற்போது 255 ஹெக்டர் விலை நிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் வடிவதற்கேற்ப போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் .இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஷ்ரா, கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகர மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர்ராஜசேகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கூடுதல் நகராட்சி நிர்வாக இயக்குநர் விஜயகுமார் , கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரண்யா, சப்-கலெக்டர் சுவேத்தா சுமன் , வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, நீர்வளத்துறை செயற் பொறியாளர் காந்த ருபன் , மாநகராட்சி ஆணையர் காந்திராஜ் , சிதம்பரம் நகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன், மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் விஜய சுந்தரம், தனஞ்செயன், மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக் , கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், கவிதா ரகுராமன், ஆராமுது, பாலசுந்தர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • மரக்கிளைகளை வெட்டி சீரமைக்கலாம்.
    • மாணவ, மாணவிகள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது.

    திருப்பூர்:

    தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், திருப்பூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மழைக்காலம் என்பதால், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், கலெக்டர் வினீத், பள்ளி வளாக பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசியதாவது:-

    பள்ளி வளாகத்தில் உள்ள மின் இணைப்புகளை சரிபார்த்து, முறைப்படுத்திக் கொள்வதுடன் வளாகத்தில் உள்ள மரக்கிளைகளை வெட்டி சீரமைக்கலாம். கட்டடத்தின் மேற்கூரையை சுத்தம் செய்து, மழைநீர் உடனுக்குடன் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.மாடிப்படிகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்து, மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் மழைநீர் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும்.

    வளாகத்தில் உள்ள பழுதான மற்றும் ஆபத்தான கட்டடங்களை இடிக்க ஆவண செய்ய வேண்டும். மழைக் காலங்களில் ஆபத்தான கட்டடங்கள் அருகே மாணவர்கள் செல்வதை தடுக்க வேண்டும்.பள்ளி மைதானம், வளாகத்திலுள்ள குழிகள், முட்புதர்களை சீரமைக்க வேண்டும். கிணறுகள் இருந்தால், கம்பிவலை அமைத்து பாதுகாப்பை உருவாக்க வேண்டும்.

    நீர்நிலைகளுக்கு அருகே மாணவ, மாணவிகள் செல்வதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி நேரத்தில், மழை பெய்தால், வகுப்பறைகளில் இருந்து மாணவ, மாணவிகள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    கஜா புயல் தீவிரம் அடைந்து உள்ளதால் 6 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Gajastorm #storm #rain
    சென்னை:

    தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமானது நேற்று காலை வலுப்பெற்று புயலாக மாறியது. இதற்கு கஜா (யானை) என பெயரிடப்பட்டுள்ளது.

    அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 8.15 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 740 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு கிழக்கு வடகிழக்கில் 840 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    இந்த புயலானது மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் தென் மேற்கு திசையில் வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து இன்று மதியம் தீவிர புயலாக உருவெடுத்தது.

    இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபரிடம் கூறியதாவது:-

    தென்கிழக்கு வங்க கடலில் உருவான கஜா புயல் வருகிற 15-ந்தேதி முற்பகலில் சென்னைக்கும், நாகப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கும்.

    இதன் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுவை-காரைக்கால் ஆகிய 6 மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், சில சமயம் 100 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

    தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம், புதுவை-காரைக்கால் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை வரை பெய்யும்.

    கடல் கொந்தளிப்புடன் காணப்படும். நாகை, கடலூர், காரைக்காலில் வழக்கத்தை விட கடலில் ஒரு மீட்டர் அளவுக்கு நீர் மட்டம் உயரும். எனவே மீனவர்கள் 16-ந்தேதி வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

    14-ந்தேதி இரவு முதல் 15-ந்தேதி இரவு வரை பலத்த காற்றுடன் கன மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கஜா புயல் முதலில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி செல்லும் என்றும் கடலூருக்கும் ஸ்ரீஹரி கோட்டாவுக்கும் இடையே 15-ந்தேதி கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தற்போது காற்று வீசும் திசையை வைத்து தெற்கு திசையில் வடதமிழகத்தை தாக்கும் என்று தெரிய வந்துள்ளது.



    15-ந்தேதி அதிகாலையில் இருந்தே புயல் கரையை நெருங்கத் தொடங்கும். பகல் 12 மணி அளவில் சென்னைக்கும் நாகைக்கும் இடையே கரையை கடக்கும்.

    தொடர்ந்து தமிழகத்தின் உள்மாவட்டங்கள் வழியாக வலு இழந்த புயலாகவே செல்லும், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கும் பரவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    புயல் நெருங்கும் போது 14-ந்தேதி இரவு முதல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யத் தொடங்கும். ஒருசில இடங்களில் கன மழை பெய்யும்.

    15-ந்தேதி அதிகாலை முதல் கன மழை மற்றும் மிக கன மழை பெய்யும். மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் பலமான காற்றும் வீசக் கூடும். காற்றுடன் மழை கொட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தீவிர புயலாக மாறிய ‘கஜா புயல்’ மேலும் தீவிரம் அடைந்து அதி தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. புயல் கரையை நெருங்க நெருங்கத்தான் அதன் வேகத்தை கணிக்க முடியும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    வலு இழந்த புயலாக உள் மாவட்டங்கள் வழியாகவும், தென் மாவட்டங்கள் வழியாகவும் அரபிக் கடலுக்கு செல்லும் எனவே 15-ந்தேதி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் மிக பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இப்போதைக்கு 15-ந்தேதி காலை 8.30 மணி முதல் 16-ந்தேதி காலை 8.30 மணி முடிய வட தமிழகத்தில் மித மிஞ்சிய வகையில் மழை பெய்யும் என்று வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

    இதே போல் தென் மாவட்டங்களுக்கும் பலத்த மற்றும் மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மித மிஞ்சிய மழை என்பது சில இடங்களில் குறைந்த நேரத்தில் 20 செ. மீ. மழை கொட்டும் வாய்ப்பு உள்ளதை எச்சரிப்பதாகும்.

    புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் பலத்த மழைபெய்யும்.

    தற்போது புயல் தெற்கு திசை நோக்கி நகர்வதால் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Gajastorm #storm #rain
    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை, ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #NortheastMonsoon #Rain
    சென்னை:

    தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக தமிழகம் மற்றும் கேரளாவின் இதர பகுதிகளுக்கு பரவி மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.

    சென்னையில் 4 நாட்களாக மழை பெய்ததால் இதமான குளிர் நிலவுகிறது. இந்த மழையால் நிலத்தடி நீர் மட்டமும் ஓரளவுக்கு உயர்ந்து இருக்கிறது. இன்று சென்னையில் மழை இல்லை. வெயில் தலை காட்டியது.

    அதே சமயம் கடலோர மாவட்டங்களிலும் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மழை நீடிக்கிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையையொட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த பகுதி நீடிக்கிறது. தென் தமிழகத்திலும் அதனை யொட்டியுள்ள பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள கடலோர கர்நாடகாவில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் கேரளா, தெற்கு உள் கர்நாடகா, ஆந்திராவின் ராயலசீமா பகுதிகளிலும் தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.



    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும், ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை அடுத்து வரும் 3 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #NortheastMonsoon #Rain

    வத்தலக்குண்டு அருகே கனமழையால் வீடு இடிந்த நிலையில், அந்த வீட்டில் இருந்த 4 பேர் தங்களது வளர்ப்பு பூனையால் உயிர் தப்பியுள்ளனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர்தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    மேலகோவில்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது48). இவரது மனைவி ராஜாத்தி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் வீட்டில் பூனை ஒன்றை பாசமாக வளர்த்து வருகின்றனர். சம்பத்தன்று குடும்பத்துடன் கோவிந்தன் வீட்டில் தூங்கிக்கொண்டிந்தார்.

    அப்போது அதிகாலை 5 மணியளவில் வளர்ப்பு பூனை வழக்கத்திற்கு மாறாக சத்தம்போட்டது. இதனால் கோவிந்தன் குடும்பத்தினர் என்னவோ ஏதோ என்று பதறியபடி வீட்டை விட்டு வெளியே வந்தனர்.

    ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

    பூனை சத்தம் போட்டு வெளியே வந்ததால் 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். அதிர்ச்சியில் இருந்து மீளாத 4 பேரும் வளர்ப்பு பூனையை கண்டு கண்கலங்கினர். இதுகுறித்து கால்நடை டாக்டர்கள் தெரிவிக்கையில், பூனை, நாய் போன்ற விலங்குகளுக்கு மனிதர்களின் நியூரான்களை விட ஒலி அளவுகளை விரைவாக உணரும் தன்மை உடையது.

    இதனாலேயே பூனைக்கு ஆபத்து ஏற்படும் உணர்வு ஏற்பட்டதால் அதிக சத்தம்போட்டு தன்னை வளர்த்த குடும்பத்தை காப்பாற்றியுள்ளது என்றனர்.

    மழை எச்சரிக்கை காரணமாக தனுஷ்கோடிக்கு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. #TNRain #KeralaRain

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் ராமநாதபுரம், திருவாடானை, தொண்டி, பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் விவசாய பணிகள் தீவிர மடைந்துள்ளன.

    நேற்று மாலையில் மாவட்டத்தில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    ராமேசுவரம் பகுதியில் இன்று மழை இல்லை. ஆனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    ரெட் அலர்ட் மற்றும் காற்று காரணமாக சாலைகள் மணலால் மூடப்பட்டு உள்ளதாலும் தனுஷ்கோடிக்கு பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் முகுந்தராயர் சத்திரம் வரை அனுமதிக்கப்பட்டனர். தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மழை இல்லை. சில இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்தது. இன்று காலை சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, காளையார் கோவில், கல்லல், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் மட்டுமே மழை பெய்தது. சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மழை இல்லை.

    ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில் நேற்று சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. நகரில் மழை இல்லை. இன்று காலை மதுரை, மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம், வாடிப்பட்டி சோழவந்தான் ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. #TNRain #KeralaRain

    பலத்த மழை எச்சரிக்கையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதியில் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர், கமி‌ஷனர் ஆய்வு செய்தனர்.
    வேலூர்:

    பலத்த மழை எச்சரிக்கையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடக்கிறது.

    தமிழகத்தில் பலத்த மழை செய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவிப்பு விடுத்துள்ளது. இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தபட்டு தயார் நிலையில் இருக்குமாறு வலியுறுத்தபட்டுள்ளது.

    இதையடுத்து வேலூர் மாநகராட்சி பகுதியில் பணிகள் முன்னேற்பாடு துரிதபடுத்தபட்டுள்ளது. சாலைகளில் தேங்கிய மழைநீரை வாகனங்கள் மூலம் அகற்றி வருகின்றனர்.

    பலத்த மழை பெய்தால் நிக்கல்சான் கால்வாயில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதில் அடைப்பு ஏற்பட்டால் முள்ளிப்பாளையம், இந்திராநகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் வரும். இதனை தவிர்க்க நிக்கல்சன் கால்வாய் தூர்வாரப்பட்டது.

    பெங்களூர் ரோட்டில் மங்காய் மண்டி அருகே கால்வாயில் இருந்த அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். பொக்லைன் எந்திரம் கொண்டு தூர்வாரப்பட்டது.

    பழைய பைபாஸ் ரோடு பகுதிகளில் உள்ள கால்வாய்களும் தூர்வாரப்பட்டன. பணிகளை கலெக்டர் ராமன், சப்-கலெக்டர் மெகராஜ், கமி‌ஷனர் விஜயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். உதவி கமி‌ஷனர் மதிவாணன், மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இதேபோல காட்பாடி, சத்துவாச்சாரி, தொரப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. #tamilnews
    2015-ம் ஆண்டு பெய்த பேய் மழை போல் மீண்டும் பெய்யும் என மக்கள் அச்சப்பட வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். #TamilNaduWeatherman #Rain
    சென்னை:

    தமிழகத்தில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இதுகுறித்து ‘தமிழ்நாடு வெதர்மேன்’ தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 7-ந் தேதி அதிதீவிர கனமழை பெய்யும் என ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. உண்மையில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 204.5 மி.மீட்டர் மழைப்பொழிவு இருக்க வாய்ப்பு இல்லை. மேலும் சென்னையில் மிக கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    தமிழகத்தின் கடலோர பகுதியில் இருந்து வெகு தொலைவில் அரபிக்கடலில் புயல் சின்னம் உருவானால் அது கிழக்கு பகுதியில் இருந்து வரும் காற்றை வலுப்படுத்தும். அதனால் மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



    2009-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கேத்தி மலைப்பகுதியில் ஒரே நாளில் 820 மி.மீட்டர் மழை பெய்தது. தற்போது உருவாக உள்ள புயல் சின்னம் 2009-ம் ஆண்டு போல் இல்லாமல் வெகு தொலைவில் தான் உருவாக இருக்கிறது. அது ஓமன் நாட்டை நோக்கி நகரும் என்பதால் கேரளா, தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. எனினும் தமிழகத்தில் மலைப்பிரதேச பகுதிகளில் தீவிர கண்காணிப்பு அவசியம்.

    இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை தமிழகம் முழுவதும் தேவை இல்லை. குறிப்பாக சென்னைக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. எனவே 2015-ம் ஆண்டு பெய்த பேய் மழை போல் மீண்டும் பெய்யும் என மக்கள் அச்சப்பட வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduWeatherman #Rain
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கும், கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கும் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #TNRain #KeralaRain
    சென்னை:

    கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை கேரளாவில் பலமாக கொட்டி நாடு முழுவதும் பரவலாக பெய்தது.

    தற்போது பருவ மழையானது கிழக்கு உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், வடக்கு மராட்டியம், குஜராத் மாநிலங்களில் நின்று போனது. அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகம், மற்றும் அரபிக்கடல் பகுதியிலும் பருவ மழை முடிவுக்கு வருகிறது. கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டும் லேசாக மழை பெய்து வருகிறது

    இந்த நிலையில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் (5-ந்தேதி) குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக கேரளாவில் இன்று காலை முதல் 7-ந்தேதி காலை 4 மணி வரை 4 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் 8-ந்தேதி மழை குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.



    இதேபோல் தென்மேற்கு வங்க கடலில் மற்றும் அதனையொட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. #TNRain #KeralaRain
    ×