என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Relief fund"

    • தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.

    கரூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க. பரப்புரைக் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயரிழிந்தனர். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் இழப்பீடு வழங்கியது.

    அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.

    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று சென்றார்.
    • தலைநகர் டேராடூன் செல்லும் அவர், ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.

    உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் கடந்த 5ம் தேதி திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் அதிதீவிர மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    இதற்கிடையே சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மேகவெடிப்பு மற்றும் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று சென்றார். மாலையில் தலைநகர் டேராடூன் செல்லும் அவர், ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். அதன்பின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக தலைநகர் டேராடூனுக்கு பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார். அப்போது, பேரிடர் பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக அம்மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    இத்துடன், வெள்ளம் மற்றும் பேரிடரால் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் மறுவாழ்வுக்கு, சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவது, தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைப்பது, பள்ளிகளை புனரமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

    • உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
    • ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (06.07.2025) காலை சுமார் 8.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், திருத்தங்கல், பனையடிபட்டி தெருவைச் சேர்ந்த பாலகுருசாமி (50 வயது) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிவகாசி வட்டம், தாயில்பட்டி, லட்சுமி நகரைச் சேர்ந்த கண்ணன் (50 வயது) மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் சாத்தூர் வட்டம், படந்தால், நடுத்தெருவைச் சேர்ந்த ராஜபாண்டி (37 வயது), சிவகாசி வட்டம், தாயில்பட்டி, பசும்பொன் நகரைச் சேர்ந்த ராஜசேகர் (29 வயது), ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் ராம் (28 வயது) மற்றும் ரமேஷ் (20 வயது) ஆகிய ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
    • பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (01.07.2025) காலை சுமார் 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், மீனம்பட்டியைச் சேர்ந்த திரு.மகாலிங்கம் (வயது 55) த/பெ.ராமசாமி, அனுப்பன்குளத்தைச் சேர்ந்த திரு.செல்லப்பாண்டியன் த/பெ.சின்னையா, மத்தியசேனையைச் சேர்ந்த திருமதி.லட்சுமி க/பெ.கருப்பசாமி, விருதுநகர் வட்டம், ஒ.கோவில்பட்டியைச் சேர்ந்த திரு.ராமமூர்த்தி (வயது 38) த/பெ.ராம்ராஜ், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த திரு.ராமஜெயம் (வயது 27) த/பெ.கந்தசாமி மற்றும் சூலக்கரையை சேர்ந்த திரு. வைரமணி (வயது 32) த/பெ. காந்தி ஆகிய ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை வரும் திரு.லிங்குசாமி (வயது 45), திரு.மணிகண்டன் (வயது 40), திரு.கருப்பசாமி (வயது 27), திருமதி.முருகலட்சுமி (வயது 48) மற்றும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரு.அழகுராஜா (வயது 28) ஆகிய ஐந்து நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    • ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
    • அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும்.

    திருச்சி மாவட்டம் கடியாக்குறிச்சி அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா உயிரிழந்தார். இதவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவரது குடும்பத்தினருக்கு அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.1 கோடி பெற்று வழங்கப்படும் எனவும், பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம், குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராமம், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா அவர்கள் இன்று (19.06.2025) காலை 11.45 மணியளவில் TN 45 G 1798 என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மோதியதில் முசிறி வருவாய் கோட்டாட்சியரின் நான்குசக்கர வாகனம் நிலைதடுமாறி அருகில் பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது எதிர்பாதாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானதில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.

    முசிறி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஆரமுத தேவசேனா அவர்களின் உயிரிழப்பு வருவாய்த் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    ஆரமுத தேவசேனா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆரமுத தேவசேனா அவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்த அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும்.

    மேலும், அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 300 வீடுகளை அதிகாரிகள் இடித்தனர்.
    • அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை.

    தெற்கு டெல்லியின் கல்காஜி விரிவாக்கத்தில் உள்ள பூமிஹீன் முகாமில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் மூன்று நாட்களுக்குள் தாமாக முன்வந்து காலி செய்ய வேண்டும் என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் (DDA) அறிவித்திருந்தது.

    கடந்த ஜூன் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று நாட்களுக்குள் குடியிருப்பாளர்கள் காலி செய்ய வேண்டும் என்றும், தவறினால் குடியிருப்புகளுக்குள் உள்ள பொருட்களுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும், திட்டமிட்டபடி இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

    இதனால், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் இந்த அறிவிப்பை அடுத்து, குடியிருப்புவாசிகள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இருப்பினும், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இன்று புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளன. பூமைதின் பகுதியில் குஹி-ஹொப்ரி என்ற பகுதியில் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுமார் 300 வீடுகளை அதிகாரிகள் இடித்தனர்.

    இதையடுத்து, டெல்லி மதராஸி கேம்ப்பில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி அறிவித்தார்.

    பாதிக்கப்பட்ட 370 குடும்பங்களுக்கும் ஒரு முறை நிதியுதவியாக தலா ரூ.8 ஆயிரம் வழங்கவும், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்தார்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள மதராசி கேம்ப் குடியிருப்பு பகுதியில் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட 360 தமிழர் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ.8000 நிவாரணத் தொகை செலுத்தப்பட்டது.

    மேலும் ரூ.4000 மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை முதற்கட்டமாக 150 குடும்பங்களுக்கு அமைச்சர் ஆவடி நாசர் வழங்கினார்.

    • புதுவையில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வந்தது.
    • உயர்த்தப்பட்ட தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    கடலில் மீன் வளத்தை பெருக்க புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை விசை படகில் ஆழ் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

    இந்த தடைக்காலத்தில் மீன்வர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு மீனவர்களுக்கு நிவாரணம் அளித்து வருகிறது.

    அதன்படிபுதுவையில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வந்தது.

    அதேபோல் மழைக்கால நிவாரணமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    இந்த தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்று அரசிடம் மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதையடுத்து மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.8 ஆயிரமும், மழைக்கால நிவாரணமாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது.

    இந்தநிலையில் தற்போது தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமும், மழைக்கால நிவாரணம் ரூ.4 ஆயிரமும் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பணம் வழங்குவதற்காக அரசு சார்பில் ரூ.16 கோடியே 16 லட்சத்து 47 ஆயிரம் நிதி ஒதுக்கி வருவாய்த்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • நாளை முதல் ரேஷன் கடைகளில் ரூ.1000 பணம் வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் இரா.லலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10, 11 ஆகிய 2 நாட்கள் பெய்த கனமழையாக சீர்காழி தரங்கம்பாடி பகுதிகள் வெள்ளத்கதில் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

    இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 14ம் தேதி அங்கு நேரில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

    அன்றைய தினமே உடனடியாக சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள 145 ரேசன் கடைகளில் அடங்கிய 99,518 குடும்ப அட்டைதாரர்களும், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள 94 நியாய விலைக் கடைகளில் 62,129 குடும்ப அட்டைதாரர்களும் என மொத்தம் 239 ரேசன் கடைகளில் உள்ள 1 லட்சத்து 61 ஆயிரத்து 647 குடும்பங்கள் ரூ.1000 நிவாரண உதவி பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் என கண்டறியப்பட்டது.

    அதன்படி இவர்களுக்கு பணம் வழங்குவதற்காக அரசு சார்பில் ரூ.16 கோடியே 16 லட்சத்து 47 ஆயிரம் நிதி ஒதுக்கி வருவாய்த்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    எனவே சீர்காழி- தரங்கம்பாடி பகுதியில் வசிக்கும் மக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று குடும்ப அட்டையை காண்பித்து ரூ.1000 நிவாரண தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

    நாளை முதல் ரேஷன் கடைகளில் ரூ.1000 பணம் வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் இரா.லலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    • தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
    • விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    தென்காசி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவர் கண்ணையா தலைமையில் தென்காசி மாவட்ட தலைவர் புன்னைவனம் மற்றும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    வீரகேரளம்புதூர் தாலுகா வடபகுதி மற்றும் கீழ் பகுதியில் உள்ள புஞ்சை நிலங்களில் விவசாயிகள் அதிக அளவில் மானாவாரியாக உளுந்து பயிர் செய்துள்ளனர். இந்த ஆண்டில் பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் உளுந்து உள்ளிட்ட பயிர் வகைகள் மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்டவை வறட்சி காரணமாக காய்ந்து விட்டது. எனவே மாவட்ட கலெக்டர் வறட்சி பகுதிகளை நேரில் ஆய்வு செய்து வீரகேரளம்புதூர் தாலுகா கீழ்பகுதி, வடபகுதி மற்றும் சங்கரன்கோவில் தென்பகுதி விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    இதில் ஆலங்குளம் ஒன்றிய பொறுப்பாளர் ரவிவர்மன், செங்கோட்டை ஒன்றிய நிர்வாகி ராம்குமார், ஊத்துமலை கிளை தலைவர் நல்லபெருமாள் யாதவ், ஊத்துமலை விவசாயி முத்துப்பாண்டி, அண்ணாமலை புதூர் தங்கபாண்டி, ஊத்துமலை மாடசாமி, பரமையா தேவர் உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு

    புதுக்கோட்டை,

    துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக ஏராளமான மக்கள் பலியான நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உலக நாடுகள் உதவி செய்து வருகின்றன. இந்த நிலையில் துருக்கி மக்களுக்கு நிவாரணமாக தாங்கள் உண்டியலில் சேமித்த பணத்தை அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் தனது தந்தையுடன் வந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர். இது பற்றிய விவரம் வருமாறு:- புதுக்கோட்டை காமராஜபுரம் 25-ம் வீதியை சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 43). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பைரோஸ். இவர்களுக்கு அப்துல் மாலிக் (12), அப்துல் ரகுமான் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் அப்துல் மாலிக் 6-ம் வகுப்பும், அப்துல் ரகுமான் 4-ம் வகுப்பும் புதுக்கோட்டையில் அரசு உயர் தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் பெற்றோர் கொடுக்கும் சிறு, சிறு பணத்தை உண்டியலில் சேமித்து வைப்பதை பழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் துருக்கியில் நில நடுக்கத்தால் மக்கள் பாதிப்படைந்த நிலையில் அவர்களுக்கு நிவாரணமாக தங்களால் முடிந்த உதவியை செய்ய அவர்கள் எண்ணினர். இதற்காக உண்டியலில் அவர்கள் சேமித்த பணத்தை நிவாரணமாக கொடுக்க முன்வந்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளனர். இருவரும் தனித்தனியாக வைத்திருந்த உண்டியலில் சேமித்த பணத்தை எடுத்துள்ளனர். இதில் அப்துல் மாலிக் ரூ.600-ம், அப்துல்ரகுமான் ரூ.700-ம் சேமித்திருக்கின்றனர். இந்த பணத்தோடு தனது தந்தையின் பங்களிப்பு ரூ.800 உடன் சேர்த்து ரூ.2,100-ஐ கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அதிகாரி செல்வியிடம் துருக்கி மக்களுக்காக நிவாரண நிதியாக வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட அவர், அரசு மூலம் அந்த பணத்தை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் மாணவர்களின் இந்த செயலை கண்டு அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.

    • மாநில தலைவர் டாக்டர் சேம நாராயணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
    • 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    நெல்லை:

    மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை வழங்காமல் தாமதப்படுத்துவதை கண்டித்து நெல்லை மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கத்தினர் இன்று வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க மாவட்ட தலைவர் முருகானந்த வேளார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அய்யப்பன், பொருளாளர் பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில தலைவர் டாக்டர் சேம நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் தலையில் மண் பானையை சுமந்தபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    கடந்த 2022-ம் ஆண்டு மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய மழைக்கால நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரம் இன்று வரை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. இந்த மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். மழைக்காலம் முடிந்தும் இன்று வரை அவர்களுக்கு பணம் வந்து சேரவில்லை. அதனை உடனடியாக வழங்கி எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

    மின்சாரத்தால் இயங்கக்கூடிய மின்விசை சக்கரம் வழங்கிட வேண்டும். நாங்கள் மண்பாண்டங்கள் செய்வதற்கு களிமண் விரைவாக கிடைக்கவும், சூளை வைக்கும் இடத்திற்கு அடிமனை பட்டா வழங்கிடவும், தயார் செய்த சுட்ட மண்பாண்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு 150 சதுர அடி அளவுள்ள சிறிய இடத்தினை ஒதுக்கீடு செய்து தரவும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

    மேலும் வீட்டு வசதி திட்டத்தின் மூலமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சம் மானியம் வழங்கியது போல மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் ரூ.4 லட்சம் மானியம் வழங்க வேண்டும். மண்பாண்ட தொழிலை மேம்படுத்த தொழிற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர்கள் மந்திரமூர்த்தி, அய்யப்பன், ஆறுமுகம், கவுரவ தலைவர் கணேசன், துணைச் செயலாளர்கள் மாரியப்பன், ஆறுமுகம், துரை, மாநகர செயலாளர் பேராட்சி செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகன், மணி, இளைஞரணி கார்த்தீசன் மற்றும் நிர்வாகிகள் முனியசாமி, கிருஷ்ணன் ராஜ், ஆனந்தராஜ், முத்துராமன், கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து அவர்கள் தலையில் மண்பானையை சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு அளித்தனர்.

    • சாலை வசதி,குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 383 மனுக்களை பெறப்பட்டது.
    • வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சர்பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும்முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி,குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 383 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.

    தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த 5நபர்களின் வாரிசுதாரர்களுக்கு வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சர்பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.5 லட்சம்மதிப்பீட்டில் காசோலைகளை கலெக்டர் வினீத் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன்,மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ், மாவட்ட ஆதிதிராவிடர்நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்துஅரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×