என் மலர்
நீங்கள் தேடியது "udhayanithi stalin"
- பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்.
- இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026-ம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்
மதுரை:
மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்களும் துணை முதலமைச்சரின் மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களும் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
இந்நிலையில் துணை முதலச்சரின் மகனின் நண்பர்களுக்காக மாவட்ட ஆட்சியரை அவமானப்படுத்துவதா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
துணை முதலமைச்சர் மகனின் நண்பர்களுக்காக, பெண் மாவட்ட ஆட்சியரை நாற்காலியை விட்டு எழுந்திருக்க செய்வது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்.
முதலமைச்சர் குடும்பத்துக்குச் சேவகம் செய்வதற்காகவே இருக்கும் அமைச்சர்கள் மேடையில் இருக்கையில், பெண் அரசு அதிகாரியை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?
துணை முதலமைச்சர் உதயநிதிக்கு, 2011 தேர்தல் முடிவுகளும், அதற்குப் பின் வந்த பத்து ஆண்டுகளும் நினைவிருக்கட்டும். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள் வரும் 2026-ம் ஆண்டு முடிவு கட்டுவார்கள்.
என்று அண்ணாமலை கூறினார்.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைக் காண, தனது மகன் இன்பநிதி மற்றும் அவரது நண்பர்களுடன் சென்றிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி. சங்கீதா… pic.twitter.com/bQWecdmRiD
— K.Annamalai (@annamalai_k) January 16, 2025
- புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார்.
- உணவு, அரிசி, பாய், பெட்சீட், பால், பிரட் உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.
புயல் மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் இன்று காைல 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
புயலால், புதுச்சேரி, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் அதிகனமழை பெய்தது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாமல்லபுரத்திற்கு நேரில் சென்ற துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
அதன்படி, மாமல்லபுரம் கோவளம் சாலையில் உள்ள முத்தமிழ் அரங்கத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 120 பேர் கொண்ட, 65 இருளர் குடும்பங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அவர்களுக்கு, உணவு, அரிசி, பாய், பெட்சீட், பால், பிரட் உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக வழங்கினார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வாயலூர் கிழக்கு கடற்கரை சாலை பகுதிக்கு சென்ற அவர், விழுப்புரம் மாவட்டம் மயிலம் சென்றார். அங்கு புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார்.
அப்போது குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், போலீஸ் எஸ்.பி சாய்பிரனீத், காஞ்சிபுரம் எம்.பி செல்வம், திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி, ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், இதயவர்மன், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் விசுவநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் (நேற்று) நடத்தினோம்.
சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்த உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது, தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதலமைச்சரின் உத்தரவின்பேரில், வடகிழக்கு பருவமழைத் தொடர்பாக சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் குறித்த உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் (நேற்று) நடத்தினோம்.
வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னையில் மழை பெய்யக்கூடும் என்பதால், அதனை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் - அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்தோம்.
குறிப்பாக கடந்த அக்டோபர் 14,15,16-ஆம் தேதிகளில் பெய்த மழையின் போது, மண்டல அளவில் நியமிக்கப்பட்டு பணியாற்றிய கண்காணிப்பு அலுவலர்கள், களத்தில் அவர்கள் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளில் 105 தங்கம் வென்று சென்னை முதலிடம் பெற்றது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுச் சின்னம் வழங்கினார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 21 நாட்களாக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு இன்று பரிசு வழங்கப்படுகிறது.
முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளில் 105 தங்கம், 80 வெள்ளி, 69 வெண்கலப் பதக்கங்கள் வென்று சென்னை முதலிடம் பெற்றது.
இதில், 31 தங்கத்துடன் செங்கல்பட்டு 2ம் இடமும், 23 தங்கத்துடன் கோவை 3ம் இடமும், 21 தங்கத்துடன் சேலம் 4வது இடமும் பிடித்துள்ளன.
இந்த விழாவிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுச் சின்னம் வழங்கினார்.
பின்னர், 'முதலமைச்சர் கோப்பை' பரிசு வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் ஒலிம்பிக் என சொல்லும் அளவிற்கு முதலமைச்சர் கோப்பை உயர்ந்துள்ளது. அந்த அளவிற்கு போட்டிகளை பிரமாண்டமாக நடத்திக் காட்டியுள்ளோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டை Extra curricular ஆக்டிவிட்டியாகவோ, Co curricular ஆக்டிவிட்டியாகவோ பார்க்கவில்லை. அவர் விளையாட்டை Main curricular ஆக்டிவிட்டியாகவே பார்க்கிறார்.
முதலமைச்சர் கோப்பை 2024 போட்டிகளுக்கு ரூ.83 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.37 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.
இந்தியாவிலேயே ஒரு மாநில அரசால் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டியில் அதிக வீரர்கள் கலந்து கொள்வதிலும், அதிக பரிசுத் தொகை வழங்கப்படுவதிலும் தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
- முதல் அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் சில புதிய அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.
இதையடுத்து, அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு முதல் அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ததுணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
- செந்தில் பாலாஜி இன்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.
- முதல்வர் ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி, காலில் விழுந்து வணங்கினார்.
471 நாட்கள் சிறையில் இருந்து ஜாமினில் நேற்று வெளியே வந்த செந்தில் பாலாஜி இன்று மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார்.
தொடர்ந்து, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, செந்தில் பாலாஜி சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த செந்தில் பாலாஜி, காலில் விழுந்து வணங்கினார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்தும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் செந்தில் பாலாஜி உருக்கமாக பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன்தலைவரே.! தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்..உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்! pic.twitter.com/wtwJCYvg0R
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) September 27, 2024
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.
ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.!
தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்..
உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்!" என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "காலமெல்லாம் நிலைத்திருக்கும் கருப்பு சிவப்பின் எதிர்காலம்..
காலமெல்லாம் நிலைத்திருக்கும் கருப்பு சிவப்பின் எதிர்காலம்..தமிழ் கூறு நல்லுலகின் நம்பிக்கை.. தமிழர்களின் நம்பிக்கை...என்னைதோளோடு தோளாக அணைத்துக் கொண்ட இளஞ்சூரியனுக்குவாழ்நாளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்..@Udhaystalin pic.twitter.com/37p3mPX1sI
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) September 27, 2024
தமிழ் கூறு நல்லுலகின் நம்பிக்கை.. தமிழர்களின் நம்பிக்கை...
என்னை தோளோடு தோளாக அணைத்துக் கொண்ட இளஞ்சூரியனுக்கு வாழ்நாளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்.." என குறிப்பிட்டுள்ளார்.
- வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63-வது இடத்தில் உள்ளது.
இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.
இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
இந்த நிலையில் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வினேஷ் போகத், நீங்கள் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருப்பீர்கள். ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கம் உங்களின் வலிமையையும், திறமையையும் குறைக்காது.
சில கூடுதல் கிராம்கள் உங்கள் நட்சத்திர பயணம் மற்றும் சாதனைகளை மறைக்க முடியாது.
நீங்கள் எப்பொழுதும் நம் தேசத்தின் பெருமைமிக்க மகளாக இருப்பீர்கள்.
இந்த ஏமாற்றத்தின் தருணத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம். நீங்கள் ஒரு போர்வீரரைப் போல் எழுந்து முன்புபோல் வெற்றி பெறுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார்.
- மகளிருக்கான செஸ் பிரிவில் கிளாசிக்கல் ஆட்டத்தில் வைஷாலி வென்றார்.
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.
தொடர்ந்து, மகளிருக்கான செஸ் பிரிவில் கிளாசிக்கல் ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை ஹம்பியை முதல் முறையாக வீழ்த்தி அசத்தினார் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி.
இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் வைஷாலி முதலிடத்தில் இருக்கிறார்.
நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தாவுக்கும், அவரது சகோதரி வைஷாலிக்கும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நார்வே செஸ் தொடரில் கலக்கியுள்ள கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கிளாசிக்கல் செஸ்ஸில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தாவும், மகளிர் நார்வே செஸ் அறிமுகப் போட்டியிலேயே ஹம்பி கோனேருவை வீழ்த்தி வைஷாலியும் புதிய சாதனை படைத்துள்ளனர்.
அக்கா - தம்பியின் வெற்றிப் பயணம் தொடரட்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
- படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் தற்பொழுது ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இளன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் முக்கிய ரோலில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் எனப் பலர் நடித்துள்ளார். நேற்று ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துவிட்டது.
நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் ஒருவன் நடிகராக ஆகவேண்டும் என ஆசைப்படுகிறான். அவன் கல்லூரி பருவத்ஹின் முதல் வயது முதிர்ந்த காலம் வரை டிரெயிலரில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவன் நடிகராக முயற்சிக்கும் பயணத்தில் அவன் படும் அவமானங்கள் , துக்கங்கள், காதல் இழப்பு, நடிபு பிறிவு, சமூகத்தில் மதிக்காமல் போவது, பணமில்லாமல் சுற்றுவது என பல காட்சிகள் டிரெயிலரில் இடம் பெற்றுள்ளது.
கவின் டிரெயிலரில் வரும் காட்சிகளில் நடிப்பில் மிரட்டியுள்ளார். கோபம், இயலாமை, காதல் என நடிப்பை வேறுபடுத்தி காட்டியுள்ளார். சமீப காலத்தில் வெளிவந்த டிரெயிலர்களில் மிக சிறந்த டிரெயிலராக ஸ்டார் படத்தின் டிரெயிலர் அமைந்துள்ளது. அதனால் இப்படத்தின் மேல் ரசிகர்களுக்கு மிக்ப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
டிரெயிலரை பார்த்த இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் " ஸ்டார் படத்தின் டிரெயிலரை பார்க்கும்போதே உடனே படத்தை பார்க்க வேண்டும்போல் இருந்தது. காட்சிகள், தோற்றம் என அனைத்தும் ஈர்க்கிறது. இது ஒரு நல்ல படம் எனத் தோன்றுகிறது" என கூறியுள்ளார்.
படத்தை உதயநிதி பார்த்துவிட்டு, படம் நன்றாக இருக்கிறது என்று தெரிவித்தாக சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகோட்டுதல் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை.
- அவர் வெற்றி வாகை சூடிட என் அன்பும், வாழ்த்தும்.
பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகோட்டுதல் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணனுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனையான தங்கை நேத்ரா குமணன், #ParisOlympics2024-ல் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று, 2-ஆவது முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக் படகுப்போட்டியில் களம் காணவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் பாராட்டுகள்.
#TokyoOlympics-ல் பங்கேற்றதன் மூலம், இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் படகுப்போட்டிக்கு தேர்வான முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற தங்கை நேத்ரா, எதிர்வரும் ஒலிம்பிக் 2024-ல் வெற்றி வாகை சூடிட என் அன்பும், வாழ்த்தும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்தனமாக உள்ளார்.
- திமுகவும், அதிமுகவும் இணைந்து சண்டை மூட்டி விட்டார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில், விக்கிரவாண்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதிரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
திமுக, அதிமுக வேண்டாம். மாற்றம் வேண்டுமென மக்கள் நினைக்கின்றனர்.
தமிழகத்தில் போதைப் பொருளால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளும் கட்சி வேண்டாம். ஆண்ட கட்சி வேண்டாம் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
ரவிக்குமார் எம்.பி., தொகுதி மக்களுக்கு என்ன செய்தார் ? ரவிக்குமார் தொகுதிக்கு எதுவும் செய்யாமல் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்.
பாமக வேட்பாளர் முரளி சங்கரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
அதிமுக, திமுக என இருவரும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள். கல்வி, வேலை வாய்ப்பிற்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டுத்தனமாக உள்ளார்.
தேர்தல் வந்தால் தான் திமுகவிற்கு மக்கள் நியாபகம் வருகிறது. திமுகவில், விசிகவுக்கு பொது தொகுதி கொடுக்காதது ஏன் ?
சமூக நீதி வழங்கி கொண்டிருக்கும் ஒரே கட்சி பாமக. திமுகவும், அதிமுகவும் இணைந்து சண்டை மூட்டி விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?
- 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுகுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?
தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜாம் புயல்... என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வராதது ஏன்?
2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?
இந்தியாவை 2020-ல் வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்?
கருப்பு பணத்தை மீட்பேன் என்று கடுகு டப்பாவிலும், சுருக்குப் பையிலும் எங்கள் மக்கள் சேமித்து வைத்திருந்த 500, 1000-த்தை பிடுங்கினீர்களே, கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்?
ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த உங்களை CAG அறிக்கை அம்பலப்படுத்தியும் அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?
அடுக்கடுக்காய் வடக்கே 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் திறந்த நீங்கள், 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?
அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?
கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அடுக்கடுக்காக தன்னுடைய சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும்போது, நாட்டை 10 ஆண்டுகள் ஆண்டப் பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே நீங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன்?
வாழும் தமிழின் வளர்ச்சிக்கு பெரிதாக நிதி இல்லை, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.1074 கோடி எதற்கு?
நீங்கள் தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?
#பதில்_சொல்லுங்கள்_மோடி
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.