என் மலர்
நீங்கள் தேடியது "udhayanithi stalin"
- அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் தொடரும் மழை
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது.
இந்தப் புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டது. இந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த டிட்வா புயல் அடுத்து இரண்டு நாட்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை பாதிப்புகள் குறித்தும், மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சென்னை ரிப்பன் மாளிகையில் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 2,500 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
- போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 4,000 பேர் பங்கேற்றனர்.
இந்திய மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனம் சார்பில் 23-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. வருகிற 9-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.
35 வயதுக்கும் மேற்பட்டவருக்கான இந்த போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த 4,000 பேர் பங்கேற்றனர்.
உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு நடத்தப்படும் இந்தப்போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா போட்டிக்கான தூதர் நடிகர் ஆர்யா, இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் பொதுச் செயலாளர் டேவிட் பிரேம்நாத், துணைத்தலைவர் எம்.செண்பகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப்போட்டி முதலில் இந்தோனேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் இந்தியாவுக்கு மாற்றப்பட்டது. 3-வது தடவையாக ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 2000, 2006ம் ஆண்டுகளில் பெங்களூருவில் நடைபெற்றது.
கடைசியாக 2023-ம் ஆண்டு பிலிப்பைன்சில் நடந்த ஆசிய மாஸ்டர்ஸ் தடகளபோட்டியில் இந்தியா 264 பதக்கங்களை பெற்றது. சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 2,500 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது.
ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நடிகர் ஆர்யா, இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்க துணைத்தலைவர் செண்பகமூர்த்தி அருகில் உள்ளனர்.
- இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
- பாராட்டு விழாவில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.
இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.
சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மாலை இளையராஜாவுக்கு பொன்விழா கொண்டாடப்படுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பாராட்டு விழாவில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், இசைஞானிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
- அட்டவணையை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலி்ன வெளியிட்டுள்ளார்.
- சென்னை, மதுரையிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, வரும் நவம்பர் மாதம் 28ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை ஆக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பைக்கான போட்டி நடைபெறுகிறது.
மேலும், இப்பபோட்டி சென்னை, மதுரையிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணையை வெளியிட்ட பிறகு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்," ஜூனியர் ஆக்கி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்களுக்கு வாழ்த்துகள். 2026-ல் நடைபெறவுள்ள ஆக்கி உலகக்கோப்பை இந்தியா வெல்லும்" என தெரிவித்துள்ளார்.
- குப்பைகளை விதிகளின்படி அகற்றுவதற்கு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
- கடந்த 2 நாட்களில் மட்டும் 300 டன் அளவிற்கு குப்பைகள் அகற்றப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த தூய்மை மிஷன் திட்ட ஆய்வுக் கூட்டத்தை அடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அரசு அலுவலகங்களில் முதற்கட்டமாக தொடங்கும் இத்திட்டம் படிப்படியாக வீடுதோறும் விரிவாக்கம் செய்யப்படும்.
தூய்மை மிஷன் திட்டம் அடுத்தகட்டமாக அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விரிவுபடுத்தப்படும்
அனைத்து மாவட்டங்களிலும் தூய்மைப் பணிகளை கண்காணிக்க சென்னையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.
குப்பைகளை விதிகளின்படி அகற்றுவதற்கு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2 நாட்களில் மட்டும் 300 டன் அளவிற்கு குப்பைகள் அகற்றப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை தூய்மையான மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மறுசுழற்சிக்காக தனித்தனியாக குப்பைகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ‘தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
- மத்திய அரசின் குலக்கல்வி திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய தேசிய கல்விக் கொள்கை- 2020 எனும் மதயானை புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எழுதிய 'தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை' புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
எல்லாவற்றிலும் சாதக பாதகம் இருக்கும். ஆனால், புதிய கல்விக் கொள்கையில் பாதகம் மட்டுமே உள்ளது.
கல்விக் கொள்கைக்கு மதம் பிடித்தால் நாடு, மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும்.
புதிய கல்விக் கொள்கை எனும் மதயானையை வீழ்த்த வேண்டும்.
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.
மத்திய அரசின் குலக்கல்வி திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
யாரெல்லாம் படிக்கக்கூடாது என்று கூறுவதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்.
தேசிய கல்விக்கொள்கை நமது மாணவர்களின் படிப்பை சீரழிக்கும் திட்டம்.
எத்தனையோ சூழ்ச்சிகளை எதிர்த்துப் போராடி தமிழ்நாடு வென்றுள்ளது. அந்த வரிசையில் புதிய கல்விக் கொள்கையையும் எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ரூ.82.14 கோடி மதிப்பில் 132 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
- ரூ.29.99 கோடி மதிப்பிலான 54 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அங்கு அவருக்கு, கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் நா. கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் மற்றும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் திரண்டு வந்து வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து உதயநிதி காரில் புறப்பட்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு வந்தடைந்தார்.
அங்கு அவரை கலெக்டர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். அதனை தொடர்ந்து மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.9.67 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் புல்வெளி தளத்துடன் அமைய உள்ள ஹாக்கி மைதானத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அங்கு நடந்து வரும் விழாவில் ரூ.82.14 கோடி மதிப்பில் 132 புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, ரூ.29.99 கோடி மதிப்பிலான 54 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து ரூ.239.41 கோடி மதிப்பில் 25 ஆயிரத்து 24 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
- திருநர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் - நன்றியையும் தெரிவித்தனர்.
- திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கை 2025-26-ல் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம், உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தோருக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தமைக்காக, திருநர்கள் இன்று நம்மை நேரில் சந்தித்து அன்பையும் - நன்றியையும் தெரிவித்தனர்.
கழக அரசு என்றும் திருநர் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு துணை நிற்கும் என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’.
- ‘கலகத் தலைவன்’ இன்று திரையரங்குகளில் வெளியானது.
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

நிதி அகர்வால்
இப்படத்தில் நடித்த நிதி அகர்வால் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, "மகிழ் சார் நல்ல டேக்கிற்கு ஓகே சொல்ல மாட்டார். சூப்பர் டேக்கிற்கு மட்டும் தான் ஓகே சொல்லுவார். அவர் எப்பவுமே கட் சொல்ல மாட்டார். ஏதாவது புதிதாக வரும் அதற்காக கீப்ஸ் ரோலிங் சொல்லிக் கொண்டே இருப்பார். சில சீன்ஸ் கஷ்டமாக தான் இருந்தது. நான் நடித்தது மருத்துவர் கதாபாத்திரம். ஸ்கிரிப்டில் கதாபாத்திரம் கிராஃப் மிகவும் அழகாக இருந்தது" என்று பேசினார்.
- மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’.
- ‘கலகத் தலைவன்’ நேற்று திரையரங்குகளில் வெளியானது.
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

கலகத் தலைவன்
இந்நிலையில் இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கலகத் தலைவன் படத்தை பார்த்த ரசிக்ரகள் பலரும் படத்தின் கதைகளத்தையும், திரைக்கதையும் மற்றும் உதயநிதி, நிதி அகர்வால், ஆரவ் உள்ளிட்ட பலரின் நடிப்பையும் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.
- மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கலகத் தலைவன்’.
- இப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தடம், மீகாமன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் 'கலகத் தலைவன்'. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.

கலகத் தலைவன்
இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கலகத் தலைவன் படத்தை பார்த்த ரசிக்ரகள் பலரும் படத்தின் கதைகளத்தையும், திரைக்கதையும் மற்றும் உதயநிதி, நிதி அகர்வால், ஆரவ் உள்ளிட்ட பலரின் நடிப்பையும் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.

கலகத் தலைவன்
இந்நிலையில் கலகத் தலைவன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தடம் பதித்து வருகிறது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் பதிவிட்டிருப்பது, பாக்ஸ் ஆபிஸில் கலகத் தலைவன் மீது காதல் தொடர்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
- உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
- இல்லம் தோறும் உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த 6 மாதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அண்ணாநகரில் நடைபெற்ற இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார்.
மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம். எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க.தலைவர் ஏற்கனவே புதிதாக 30 லட்சம் உறுப்பினர்களை இளைஞர் அணியினர் சேர்க்க வேண்டும் என்று கூறியதின் அடிப்படையில் தொகுதிக்கு 10 ஆயிரம் வீதம் 25 லட்ச உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2-ம் கட்டமாக இல்லம் தோறும் உறுப்பினர்கள் சேர்க்கை கடந்த 6 மாதமாக நடைபெற்று கொண்டி ருக்கிறது. ஏற்கனவே செய்த பணிகள் தான் வீடு தோறும் கொண்டு சேர்க்கிறோம் என வருடம் முழுவதும் இந்த பணியை செய்ய வேண்டும். ஒன்றரை ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். முழுமையாக நிறைவேற்றுவோம்.
கடந்த 2019, 21-ம் ஆண்டு தேர்தலில் நாம் பெற்ற வெற்றியை விட 2024-ல் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும். அதற்கு இளைஞர் அணி முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கும். உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். கடந்த காலத்தில் இளைஞர் அணி செயலாளராக இருந்த தலைவர் தான் தற்போது முதல்-அமைச்சராக உள்ளார். பணியை முழுமையாக செய்து மாவட்ட கழகத்திற்கு முழு ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
பின்னர் உறுப்பினராக சேர்த்த படிவத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலர் நேரில் வழங்கினர். தொடர்ந்து அண்ணாநகர் பகுதியில் நடந்து சென்று புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னதாக அமைச்சர் கீதாஜீவன் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன் நினைவு பரிசு ஆகியவற்றை வழங்கினார்கள்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மாநகர மகளிர் அணி செயலாளர் ஜெயக்குனி விஜயகுமார், இளைஞர் அணி முத்துராமன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர்,தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசுமதி அம்பாசங்கர், துணை சேர்மன், ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. செயலாளர் ஆஸ்கர், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் டி.டி.சி. ராஜேந்திரன், தூத்துக்குடி ஒன்றிய செயலாளரும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சர வணகுமார், கூட்டுடன்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாங்கனி ஹரி பாலகிருஷ்ணன்,ஒன்றிய துணை செயலாளர் அந்தோணி தனுஷ் பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






