என் மலர்
நீங்கள் தேடியது "ilaiyaraja"
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற இளமை இதோ, இதோ, ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி பாடல்களை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்," அனுமதியின்றி பாடல் பயன்படுத்துவதை தடுக்க, பாடலை உருமாற்றம் செய்வதை தடுக்க இளையராஜாவுக்கு உரிமை உண்டு.
இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை" என்று நீதிபதி தெரிவித்தார்.
இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம் பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த 2024ம ஆண்டு ஜனவரி 25ம் தேதி புற்றுநோய் பாதிப்பால் இலங்கையில் காலமானார்.
பவதாரணியின் மறைவை தொடர்ந்து, மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் இளையராஜா பவதாரிணியின் பெயரில் ஆர்கெஸ்ட்ரா குழு தொடங்க உள்ளதாக அறவித்திருந்தார்.
அதாவது, 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் அடங்கிய ஆர்கெஸ்ட்ரா குழுவைத் தொடங்க இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இளையராஜா தன் மகள் நினைவாக பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா (Bhavatha Girls orchestra) ஒன்றை தொடங்கியுள்ளார்.
திறமையுள்ள பாடகர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக இளையராஜா பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா-வில் இணைய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பான போஸ்டரில்," நீங்கள் ஒரு ஆர்வமுள்ள பாடகர் அல்லது இசைக்கலைஞராக இருந்தால், இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள், இது உங்களை பிரகாசிக்கும் மேடை...
அதனால், உங்கள் திறமைகள் மற்றும் உங்கள் சுயவிவரம், தொடர்பு விவரங்களுடன் allgirlsorchestra@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள், விரைவில் உங்களைத் தொடர்புகொள்வேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- லண்டனில் தனது முதல் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றி இருந்தார்.
- அண்மையில் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். வரவிருக்கும் புதிய படங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகின.
இந்த நிலையில், ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துடன் அடுத்த சிம்பொனி குறித்த அறிவிப்பை இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இசையராஜா கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் இனிய தீபாவாளி வாழ்த்துகள். அடுத்த சிம்பொனிக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளேன். Symphonic Dances என்ற புதிய இசைக் கோர்வையையும் எழுத உள்ளேன் என்றார்.
முன்னதாக, லண்டனில் தனது முதல் சிம்பொனியை இளையராஜா அரங்கேற்றி இருந்தார். இதனை தொடர்ந்து, அண்மையில் இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- மைத்திரி மூவி மேக்கர்ஸ் நீதிமன்றத்திற்கு எச்சரிக்கை விடுத்து இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற தனது பாடலை நீக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இசைஞானி இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மைத்திரி மூவி மேக்கர்ஸ் நீறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்து இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இளையராஜா நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் விடுத்துள்ளார்.
- தமிழக அரசின் பாராட்டு ஒட்டுமொத்த இசை கலைஞருக்கான அங்கீகாரம் என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.
- ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமையை செய்ய ஊக்கமளிக்கிறது.
திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் 'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
இந்நிலையில், இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கிடையே இருந்த வேறுபாடுகளை தன் இசையின் வழியே களைந்த இசை மேதை இளையராஜா.
திரையிசையை கடந்து முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசையில் அவர் நிகழ்த்தியிருக்கும் சிம்பொனி என்ற சாதனை, ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமையை செய்ய ஊக்கமளிக்கிறது.
இசை உலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் இசைஞானி இளையராஜா.
இமாலய சாதனை, எளிமை ஒருங்கிணைந்த மாமனிதர். தமிழக அரசின் பாராட்டு விழாவை இளையராஜாவிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இசை கலைஞருக்கான அங்கீகாரமாக பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இளையராஜாவின் பொன்விழா ஆண்டு பாராட்டு விழா நேற்று நடந்தது.
- பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை.
திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடந்தது.
இந்த விழா சிறப்பாக முடிந்த நிலையில், இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வௌியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு பாராட்டு விழா நேற்று நடந்தது.
நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை.
இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இசையமைப்பாளர் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது.
- சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.
இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.
சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இன்று இளையராஜாவுக்கு பொன்விழா கொண்டாடம் தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன் எம்.பி மற்றும் ரஜினிகாந்த் இருவரும் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர். திரையுலக பிரபலங்கள் விழாவில் பங்கேற்று இசைஞானி இளையராஜாவை வாழ்த்தி உரையாற்ற உள்ளனர்.
- இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
- பாராட்டு விழாவில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.
இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.
சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மாலை இளையராஜாவுக்கு பொன்விழா கொண்டாடப்படுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பாராட்டு விழாவில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், இசைஞானிக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
- இசைஞானி இளையராஜாவின் பாராட்டு விழாவில் 3500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள்.
- நிகழ்ச்சியை காண்பதற்காக சென்னையின் சில பகுதிகளில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி கூட்ட அரங்கில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சமூக பங்களிப்பு நிதியின் மூலம் நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஆண்டுதோறும் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களைச் சேர்ந்த கலை பண்பாட்டு துறையில் பதிவு பெற்றுள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த 80 கிராமிய கலைஞர்களுக்கு ரூபாய் 20 லட்சம் மதிப்பில் விலையில்லா இசைக்கருவிகள், கலைப்பொருட்கள் வழங்கப்பட்டது.
நையாண்டி மேளக்கலைஞர்களுக்கு நாதஸ்வரம், சுருதி பெட்டி, சீவாளி மற்றும் தவில், கட்டைக் கூத்து, தெருக்கூத்து, தோல்பாவைக்கூத்து ஆகிய கலைப்பிரிவை சேர்ந்த கலைஞர்களுக்கு கூத்து ஆடை உபகரணங்கள், மத்தளம், ஆர்மோனியம் போன்றவையும், வில்லு, கரகம், காவடி உள்ளிட்டவைகளையும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விலையில்லாமல் இலவசமாக வழங்கினார்.
பின்னர் அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள நலிவடைந்த கலைஞர்களை தேர்வு செய்து கலை பண்பாட்டு துறை மூலமாக 80 கலைஞர்களுக்கு தவில், நாதஸ்வரம் கிரீடம் உள்ளிட்டவைகளை வழங்கி உள்ளதாகவும் இந்த கருவிகள் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படும் என்று கூறிய அவர் கடைக்கோடியில் உள்ள கலைஞர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும் என்றார்.
நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறும் இசைஞானி இளையராஜாவின் பாராட்டு விழாவில் 3500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அந்த அளவில்தான் இருக்கைகள் அங்கு உள்ளது. நிகழ்ச்சியை காண்பதற்காக சென்னையின் சில பகுதிகளில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் வேலு எம்.எல்.ஏ., அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை) கே.மணிவாசன், கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் (பொ) கவிதா ராமு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் தா.கிருஸ்துராஜ், சென்னை அரசு இசை கல்லூரி முதல்வர் கலைமாமணி ஆண்டான் கோயில் சிவக்குமார் மற்றும் அலுவலர்கள், கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
- இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.
- பாராட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.
இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.
சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா சினிமா உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இன்று மாலை இளையராஜாவுக்கு பொன்விழா கொண்டாடப்படுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என்ற பெயரில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பாராட்டு விழாவில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பாராட்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்துகிறார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன் எம்.பி மற்றும் ரஜினிகாந்த் இருவரும் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர். திரையுலக பிரபலங்கள் விழாவில் பங்கேற்று இசைஞானி இளையராஜாவை வாழ்த்தி உரையாற்ற உள்ளனர்.
இளையராஜா பொன்விழாவுக்கு வரும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களை அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசின் சார்பில் பிரத்யேக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திகழ்ந்து வருகிறார்.
இசைக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் பல்வேறு விருதுகளை அளித்த மத்திய அரசு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவரை நியமனம் செய்துள்ளது.
சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா சாதனை படைத்துள்ளார்.
இளையராஜா பொன்விழா கொண்டாட்ட விழா, தமிழக அரசு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 13-ம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்த விழா நடக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தப் பாராட்டு விழா நடக்கிறது. இதில் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், இளையராஜா பொன் விழாவுக்கு வரும் வெளிநாட்டு இசைக் கலைஞர்களை அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசின் சார்பில் பிரத்யேக பேருந்து தயாராக உள்ளது.
- வருகிற 13-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா.
- வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிக்கரமாக நடத்தினார். அவருக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
சிம்பொனி இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை கொண்டாடும் விதமாக தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இசைஞானி இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக வருகிற 13-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்கின்றனர். மேலும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இசைஞானி இளையராஜா கூறுகையில் "அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுவது இது முதல்முறை. உங்களுக்கு எவ்வளவு சந்தோஷமோ, அதே அளவுக்கு எனக்கு சந்தோஷம்" என்றார்.
இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
"ராஜாவைத் தாலாட்டும் தென்றல்" - நம் பாராட்டு விழா!
இது இசையின் அரசனுக்கு மட்டுமல்ல; அவரை வியக்கும் உலகில் உள்ள அத்தனை இசை இரசிகர்களுக்குமான பாராட்டு விழா!
இவ்வாறு அவர் கூறினார்.






