search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special bus"

    • வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட பிற பகுதிகளிலும் சிறப்பு பஸ்கள் நாளை பிற்பகல் முதல் இயக்கப்பட உள்ளன.
    • சிறப்பு ரெயில்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக நேற்று அரசு பொது விடுமுறை அறிவித்து இருந்தது. தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு கட்டாயம் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தததால் சொந்த ஊர்களுக்கு 17, 18 ஆகிய தேதிகளில் புறப்பட்டு சென்றனர்.

    சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வேலை செய்து வந்த கூலி தொழிலாளர்கள், ஊழியர்கள் ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதற்காக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கின. தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கியது.

    இந்த நிலையில் ஓட்டு போட சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக கூடுதலாக பஸ் வசதியை அரசு போக்குவரத்து கழகங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் செய்துள்ளது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு சனி, ஞாயிறு தொடர் விடுமுறை கிடைப்பதால் 22-ந்தேதி (திங்கட்கிழமை) வேலைக்கு செல்ல வசதியாக பெரும்பாலும் நாளை பயணத்தை தொடர்வார்கள்.

    அதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோவை, சேலம், ஓசூர், திருப்பூர், சிதம்பரம், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட பிற பகுதிகளிலும் சிறப்பு பஸ்கள் நாளை பிற்பகல் முதல் இயக்கப்பட உள்ளன.

    தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் விடப்பட்டு உள்ளது. இந்த ரெயில் தூத்துக்குடியில் இன்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு நாளை அதிகாலை 3.50 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் 4.45 மணிக்கு சென்ட்ரல் நிலையம் சென்றடைகிறது.

    இந்த சிறப்பு ரெயிலில் உள்ள அனைத்து பெட்டிகளும் முன்பதிவு செய்யப்படாதவை. இந்த ரெயில் மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது.

    மற்றொரு சிறப்பு ரெயில் திருச்சியில் இருந்து எழும்பூருக்கு இன்று இயக்கப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்ட ரெயில் பகல் 1.20 மணிக்கு எழும்பூர் வந்து சேர்ந்தது.

    இதே போல் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரத்தில் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து நாளை பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. சிறப்பு ரெயில்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இது குறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் கூறும்போது நாளை (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்ய 34 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மொத்தம் 1.25 லட்சம் இடங்கள் உள்ளன. பொதுமக்கள் நெரிசலை தவிர்க்க அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றார்.

    • அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
    • ஓட்டுப்போட சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் முன் கூட்டியே முன்பதிவு செய்து பயண திட்டத்தை வகுத்து கொள்ளுமாறு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி 19-ந்தேதி பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.

    பொது மக்கள் அனைவரும் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் விடுமுறை விட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் சென்னையில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள், தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளன.

    தேர்தல் நடைபெறும் நாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அதனை தொடர்ந்து வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    அதனால் தேர்தலையொட்டி 17,18 ஆகிய தேதிகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் பிற போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து 7 ஆயிரம் சிறப்பு பஸ்களும் பிற நகரங்களில் இருந்து 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

    அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அரசு பஸ்களில் மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 728 இடங்கள் முன்பதிவு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 18-ந் தேதி பயணம் செய்ய 13,800 பேரும், 17-ந்தேதி 3,075 பேரும், 16-ந்தேதி பயணத்திற்கு 633 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.

    ஓட்டுப்போட சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் முன் கூட்டியே முன்பதிவு செய்து பயண திட்டத்தை வகுத்து கொள்ளுமாறு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கடைசி நேரத்தில் கூட்டமாக வந்தால் பஸ் வசதி ஏற்பாடு செய்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது என்றும் அதனால் முன்பதிவு செய்து பயணத்தை தொடர்ந்தால் உதவியாக இருக்கும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோளாக வைக்கப்படுகிறது.

    முன்பதிவு செய்யும் போது சிறப்பு பஸ்கள் திட்டமிட்டு இயக்குவதற்கு உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    • வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
    • பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூா்:

    பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு சார்பில் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே பஸ்சில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையத்தை வந்தடையும் வகையில் நவக்கிரக சிறப்பு சுற்றுலா பஸ் இயக்கம் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து வயதானவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க குளிர்சாதன வசதியுடன் (ஏ.சி.வசதி) கூடிய மேலும் கூடுதலாக ஒரு சிறப்பு சுற்றுலா பஸ் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 25-ந் தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    இந்த பஸ்சில் நபர் ஒருவருக்கு ரூ.1350 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு நவகிரக தலங்களுக்கு சென்று இரவு 8 மணியளவில் மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையம் வந்தடையும்.

    எனவே, இந்த பஸ்சில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும். நேரடியாக பஸ்சில் பயணச் சீட்டு பெற்றுக்கொள்ள முடியாது. மேற்கண்ட தகவல் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • சென்னையில் இருந்து 10,750 பஸ்கள் விடப்படுகிறது.
    • பல்வேறு நகரங்களுக்கு செல்ல 17, 18, 19-ந்தேதிகளில் சுமார் 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட பொதுமக்கள் செல்ல வசதியாக ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த வருடம் 15-ந்தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை அதனை தொடர்ந்து மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகிய 3 விடுமுறை நாட்களுடன் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை சேர்ந்து வருவதால் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

    இதனால் வெளியூர் பயணம் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி 14-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்துகிறார்.

    சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் இந்த கூட்டத்தில் போக்குவரத்து முதன்மை செயலாளர் கோபால், அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து பிற பகுதிகளுக்கும் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும் எத்தனை சிறப்பு பஸ்கள் இயக்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக சிறப்பு பஸ்கள் விட திட்டமிடப்படுகிறது.

    தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சுமார் 17 ஆயிரம் பஸ்களும் சென்னையில் இருந்து 11 ஆயிரம் பஸ்களும் இயக்க முடிவு செய்யப்படுகிறது.

    இதே போல பொங்கல் பண்டிகை முடிந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல 17, 18, 19-ந்தேதிகளில் சுமார் 16 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்படுகி றது.

    இந்த ஆண்டு அரசு விரைவு பஸ்கள் பெரும்பாலும் கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். குறிப்பாக தென் மாவட்டங்கள் சேலம், கோவை நகரங்களுக்கு அங்கிருந்து புறப்பட்டு செல் லும். மற்ற நகரங்களுக்கு கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்படுகிறது.

    • கூட்டம் இருந்தால் 18, 19-ந் தேதிகளில் பஸ்களை இயக்கவும் தயாராக உள்ளனர்.
    • வெளியூர் சென்றவர்கள் நேற்று முதல் திருப்பூர் திரும்ப தொடங்கியுள்ளனர்.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட திருப்பூரில் இருந்து தொழிலாளர்கள் சொந்த ஊர் நோக்கி சென்றனர். குறிப்பாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்கள் மூலமாக தொழிலாளர்கள் புறப்பட்டனர். கடந்த 9-ந் தேதி முதல் கோவில்வழி, மத்திய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பகுதிகளில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 11-ந் தேதி இரவு கோவில்வழி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. 40 ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். புதிய பஸ் நிலையத்தில் இருந்து 30 ஆயிரம் பேர், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் என 80 ஆயிரம் பேர் புறப்பட்டனர். கடந்த 9,10,11-ந் தேதிகளில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளதாக அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வெளியூர் சென்றவர்கள் நேற்று முதல் திருப்பூர் திரும்ப தொடங்கியுள்ளனர். இதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது. நாளை (புதன்கிழமை) வரை பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கூட்டம் இருந்தால் 18, 19-ந் தேதிகளில் பஸ்களை இயக்கவும் தயாராக உள்ளனர்.

    • பஸ் நிலையம் முழுவதும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மற்ற பஸ்கள் வெளியே புறப்பட்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
    • இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1415 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து மக்கள் நேற்று சாரை சாரையாக புறப்பட்டு சென்றனர்.

    பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.

    கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் சிறப்பு பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பொதுவாக பண்டிகை காலங்களில் மாலை 5 மணி முதல் படிப்படியாக கூட்டம் அதிகரிக்கும். இரவு 8 மணிக்கெல்லாம் பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கும்.

    ஆனால் நேற்று இரவு 9.30 மணிக்கு மேல்தான் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு மக்கள் கூட்டம் வந்தது. இதனால் அனைத்து நடைமேடையிலும் பயணிகள் நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு புற்றீசல் போல் வந்து கொண்டே இருந்தனர். ஒரே நேரத்தில் பயணிகள் குவிந்ததால் பஸ்கள் இல்லை.

    சேலம், திருச்சி, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி பகுதிகளுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. சிலர் இது தெரியாமல் அங்கு வந்தனர்.

    மயிலாடுதுறை, சிதம்பரம், நெய்வேலி பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் தவறுதலாக கோயம்பேட்டிற்கு வந்ததால் பயணிகள் அங்கிருந்து பஸ்களை இயக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    தாம்பரத்திற்கு சென்று தான் பயணம் செய்ய வேண்டும், இங்கிருந்து இயக்க இயலாது என்று அதிகாரிகள் கூறியதால் பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களது கோரிக்கையை ஏற்று வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்களை மாற்றி சிதம்பரம் மார்க்கத்திற்கு இயக்கப்பட்டது.

    இதற்கிடையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்யாமல் பயணம் மேற்கொள்ள கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்கள் உட்பட பயணிகள் அதிகளவில் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

    இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12.30மணி வரை காத்திருந்தும் பஸ் வராததால் ஆத்திரமடைந்த பயணிகள் பஸ்களை வெளியே செல்ல விடாமல் மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்னதாக மாலை 5 மணியில் இருந்து பஸ் நிலையத்தில் நெரிசல் ஏற்படத் தொடங்கியது. திருச்சி, சேலம், திருநெல்வேலி போக்குவரத்து கழக பஸ்களை சி.எம்.டி.ஏ. பகுதியில் நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால் அவர்கள் அனைத்து பஸ்களையும் பஸ் நிலையத்திற்குள் ஒரே நேரத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

    பஸ் நிலையம் முழுவதும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் மற்ற பஸ்கள் வெளியே புறப்பட்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட வேண்டிய பஸ்கள் புறப்பட முடியாமல் சிக்கிக் கொண்டன. பயணிகள் பல மணி நேரம் பஸ்சிற்குள் காத்து இருந்தனர்.

    திருச்சி, சேலம், திருநெல்வேலி போக்குவரத்து கழக டிரைவர், கண்டக்டர்களுக்கு முறையான தகவல் கொடுக்காததால் இந்த பிரச்சனை ஏற்பட்டது. இதனால் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 6 மணி நேரம் பஸ் நிலையத்திற்குள் கடும் நெரிசல் ஏற்பட்டு பஸ்கள் வெளியே செல்ல முடியவில்லை.

    பஸ் நிலையத்தை விட்டு ஒவ்வொரு பஸ்களும் ஊர்ந்துதான் சென்றன. பஸ் நிலையத்திற்குள் நெரிசல் ஏற்பட பஸ் டிரைவர்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க அதிகாரிகள் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும்.

    நேற்று முன்தினம் தொடங்கி நேற்று நள்ளிரவு 12மணி வரை தினசரி வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் என மொத்த 6656 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 80 பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இன்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 1415 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆம்னி பஸ்களைப் பொறுத்தவரை, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிலையங்கள் வாயிலாக பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இயக்கப்பட்ட வழக்கமான ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் 1.50 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை:

    நாளை மறுநாள் (12-ந்தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு பயணமாகும் வகையில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயங்கத் தொடங்கின. சென்னையை பொறுத்தவரை பிற்பகல் முதலே போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    இதற்கு அவ்வப்போது பெய்து வரும் மழையும் காரணமாக இருந்தது. அதே நேரம், மாதவரம் பஸ் நிலையம், கே.கே.நகர் பஸ் நிலையம், தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையம், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ் (மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை), கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரவர் செல்லும் ஊர்களுக்கு ஏற்ப பஸ் நிலையங்களுக்குச் சென்று பயணத்தைத் தொடர்ந்தனர்.

    இந்த பஸ் நிலையங்களை இணைக்கும் வகையில் கோயம்பேட்டில் இருந்து மாநகர பஸ்கள் இயக்கப்பட்டன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் தென் மாவட்டம் உள்ளிட்ட சில ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் மட்டுமே வருகை தந்தனர்.

    ஆம்னி பஸ்களைப் பொறுத்தவரை, கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிலையங்கள் வாயிலாக பயணிகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தனர்.

    பஸ் இயக்கம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் 643 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 2,734 பஸ்களில் 1 லட்சத்து 36 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர்.

    அதே நேரம், சென்னையில் இருந்து பயணிக்க 19,858 பேர் முன்பதிவு செய்திருந்தனர். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பஸ்கள் மட்டும் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிவட்டச் சாலை வழியாக வண்டலூர் சென்றடையும் வகையில் இயக்கப்பட்டன.

    இந்த பஸ்களில் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகள் கிளாம்பாக்கம் தற்காலிக பஸ் நிறுத்தத்தில் ஏறிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

    ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

    அரசு போக்குவரத்துக் கழக பஸ் இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க 1800 599 1500 என்ற கட்டணமில்லா உதவி எண் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை எளிதில் நினைவில் வைத்து கொள்ள இயலவில்லை என்று பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், 149 எனும் புதிய உதவி எண் மூலமாக மக்கள் மற்றும் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

    இதே போல சென்னையில் இருந்து 1,320 ஆம்னி பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. இதில் 51 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று 1,680 பஸ்கள் இயக்கப்படுகிறது. அதில் 67 ஆயிரம் பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

    மேலும் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இயக்கப்பட்ட வழக்கமான ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் 1.50 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் ரெயில்களில் நேற்று ஒரே நாளில் சுமார் 3.50 லட்சம் பேர் வரை பயணம் செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    • சென்னையில் இருந்து மதுரை-ராமநாதபுரத்திற்கு 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    காரைக்குடி

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) மண்டல மேலாளர் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தீபாவளி பண்டியையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம், பொது மக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சென்னையிலிருந்து மதுரை, ராமநாதபுரம், காரைக்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங் கொண்டம், கருர், புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு வருகிற 9-ந் தேதி அன்று 250 கூடுதல் பஸ்களும், 10-ந் தேதி அன்று 750 கூடுதல் பஸ்களும், 11-ந் தேதி அன்று 520 கூடுதல் பஸ்களும், மேலும் திருச்சியிலிருந்து மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 9-ந் தேதி அன்று 100 கூடுதல் பஸ்களும், 10 மற்றும் 11-ந் தேதிகளில் 250 கூடுதல் பஸ்களும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.மேலும் 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தீபாவளி முடிந்து மீண்டும் அவரவர் ஊர்களுக்கு செல்ல 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மேற்குறிப்பிட்டவாறு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தீபாவளி பண்டிகையை யொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தீபாவளி பண்டிகையையொட்டி 16 ஆயிரத்து 895 பஸ்கள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார்.
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 5.90 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,675 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10 ஆயிரத்து 975 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 5,920 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 16 ஆயிரத்து 895 பஸ்கள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார்.

    சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், சொந்த ஊர் செல்ல அரசு பஸ்களில் இதுவரை 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு மட்டும் 46 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு 5.90 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சேலம் கோட்ட போக்கு வரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
    • வருகிற 30-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்ப தாவது:-

    சேலம் கோட்ட போக்கு வரத்து கழகம் சார்பில் சேலம் மண்டலத்தில் 1047 பஸ்களும், தர்மபுரி மண்டலத்தில் 853 பஸ்களும் சேர்த்து மொத்தமாக 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் நாளை (27-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 150 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. மேலும் வழிதடப் பஸ்கள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருவுக்கும், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும் இயக்கப்பட உள்ளது.

    மேலும் பெங்களுருவில் இருந்து சேலம், திருவண்ணா மலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களுரு வுக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவுக்கும் இயக்கப்பட உள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களில் பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து, பாதுகாப்பான பயணம் செய்தி டும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தொடர் விடுமுறை என்பதால் பலரும் வெளியூர் செல்வர் என்பதால் பயணிகள் வசதிக்காக திருப்பூர் மண்டலத்தில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், சிறப்பு பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்.

    திருப்பூர்,அக்.21-

    தொடர் விடுமுறை என்பதால் பலரும் வெளியூர் செல்வர் என்பதால் பயணிகள் வசதிக்காக திருப்பூர் மண்டலத்தில் இருந்து 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருப்பூர் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து, சிவகாசி, சிவகங்கை, மதுரை, தேனி, திருச்செந்தூர், திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், சங்கரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து,திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணத்துக்கு 40 சிறப்பு பஸ்கள், மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கு 30 பஸ்கள் என மொத்தம் 145 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், சிறப்பு பஸ்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும்.

    கூட்டத்துக்கு ஏற்ப இரவில் பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றனர்.

    • பயணிகள் வசதிக்காக சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • பயணிகள் சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல தென்னக ரெயில்வேயும் சிறப்பு ரெயில்களை இயக்கியது.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் இன்றும், நாளையும் வழக்கமான வார விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

    இதனால் ஆயுத பூஜையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் செல்வதற்கு பஸ், ரெயில்களில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தனர்.

    பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சுமார் 2,100 பஸ்கள் இயக்கப்படும். பயணிகள் முன்பதிவு அதிகரித்ததால் கூடுதலாக 2,265 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதுபோல மற்ற ஊர்களில் இருந்து 1,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பஸ்களில் பயணம் செய்வதற்காக நேற்று மக்கள் பஸ் நிலையங்களுக்கு படை எடுத்தனர். சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று மதியத்தில் இருந்து மக்கள் கூட்டம் அலைமோதியது.

    மாலை 6 மணிக்கு பிறகு பயணிகள் அலை அலையாக வரத் தொடங்கினார்கள். இதனால் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் நிரம்பி வழிந்தது.

    பயணிகள் வசதிக்காக சென்னை கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த 3 பஸ் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கோயம்பேட்டில் திரண்ட மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாத அளவுக்கு திணறல் ஏற்பட்டது.

    முன்பதிவு செய்திருந்தவர்கள் தங்களது பஸ் எங்கு நிற்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள். நள்ளிரவு வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதற்கு வசதியாக மெட்ரோ ரெயில்களும் கூடுதலாக விடப்பட்டு இருந்தது.

    பயணிகள் சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல தென்னக ரெயில்வேயும் சிறப்பு ரெயில்களை இயக்கியது. வடமாநிலங்களுக்கு அதிகளவு சிறப்பு ரெயில்கள் விடப்பட்டன. இதனால் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தொடர் விடுமுறை காரணமாக சொந்த வாகனங்களில் தங்களது ஊர்களுக்கு புறப்பட்டு செல்பவர்களின் எண்ணிக்கையும் நேற்று அதிகமாக இருந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து கடும் நெரிசலுடன் காணப்பட்டது.

    நேற்று மட்டும் ரெயில்கள் மூலம் சுமார் 1.5 லட்சம் பயணிகள் வெளியூர்களுக்கு சென்றனர். ஆம்னி பஸ்களிலும் சுமார் 1.5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சிறப்பு பஸ்கள் மூலம் சுமார் 1 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    சொந்த வாகனங்கள் மூலமாக சென்றவர்கள் எண்ணிக்கையும் 1 லட்சம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று மட்டும் 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாதவர்கள் இன்று காலை முதல் பஸ்களில் புறப்பட்டு சென்றனர்.

    இதனால் இன்றும் சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி பஸ் நிலையங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.

    ×