என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு பேருந்துகள் இயக்கம்"

    • வெளியூர் செல்லும் பேருந்துகள் மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு.
    • மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து செல்ல இப்பேருந்துகள் இயக்கப்படும்.

    சென்னையில் தீபாவளியை ஒட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை முதல் வரும் 19ம் தேதி வரை 4 நாட்களுக்கு கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து முனையம் மற்றும் மாதாவரம் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து செல்ல இப்பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    20.10.2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் எதிர்வரும் 16.10.2025 முதல் 19.10.2025 ஆகிய 4 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    1. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

    2. கோயம்பேடு பேருந்து நிலையம்

    3. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்

    சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட மூன்று பேருந்து நிலையங்கள்/பகுதிக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.

    எனினும், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக்கழகம் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 16.10.2025 முதல் 19.10.2025 ஆகிய 4 நாட்களில் இயக்கபட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தினாரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருத்துகள் இயக்கிட திட்டம்.

    வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    12/09/2025 (வெள்ளிக்கிழமை) 13/09/2025 (சனிக்கிழமை) மற்றும் 14/09/2025 (ஞாயிறுக் கிழமை முகூர்த்தம்) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினாரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி நாகர்கோவில் கன்னியாகுமரி தூத்துக்குடி, கோயம்புத்தூர். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 12/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 355 பேருந்துகளும், 13/09/2025 (சணிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளங்கண்ணி ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 12/09/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 13/09/2025 சனிக்கிழமை அன்று 55 பேருத்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாதாவரத்திலிருத்து 12/09/2025 மற்றும் 13/09/2025 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருத்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 5,230 பயணிகளும் சனிக்கிழமை 3.276 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9,040 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மிலாடி நபி விழா வரும் 5ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
    • பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 875 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    முகமது நபியின் பிறந்த நாளான மிலாடி நபி விழா வரும் 5ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், தொடர் விடுமுறை, முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    03/09/2025 (புதன்கிழமை) 04/09/2025 (வியாழக்கிழமை முகூர்த்தம்). 05/09/2025 (வெள்ளிக்கிழமை மீலாடி நபி) மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 06/09/2025 (சனிக்கிழமை) மற்றும் 07/09/2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம். ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 03/09/2025 (புதன்கிழமை) அன்று 360 பேருந்துகளும்.

    04/09/2025 (வியாழக்கிழமை) அன்று 710 பேருந்துகளும், 05/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 405 பேருந்துகளும் மற்றும் 07/09/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 875 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 03/09/2025 (புதன்கிழமை) அன்று 80 பேருந்துகளும், 04/09/2025 (வியாழக்கிழமை) மற்றும் 05/09/2025 (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் 105 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 03/09/2025 மற்றும் 04/09/2025 ஆகிய நாட்களில் 25 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்திலையில், 03/09/2025 அன்று 17,832 பயணிகளும், 04/09/2025 அன்று 23,032 பயணிகளும் இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 10,271 பயணிகளும் சனிக்கிழமை அன்று 7,317 பயணிகளும் ஞாயிறு அன்று 20,740 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.trstein மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஆடி அமாவசையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு.
    • பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திட அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

    ஆடி அமாவாசையை ஒட்டி பல்வேறு ஊர்களில் இருந்து மேல்மலையனூருக்கு 425 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வருகின்ற 24. 07.2025 (வியாழக்கிழமை) அன்று ஆடி அமாவசையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழும்புரம்) விழுப்புரம் சார்பாக மேல்மலையனூருக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், பயணிகள் அடர்வு குறைவும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

    எனவே பொதுமக்கள் 24.7.2025 அன்று இந்த சிறப்பு பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • மாதாவரத்திலிருந்து 13/06/2025 மற்றும் 14/08/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
    • பயணத்திற்கு www.tristc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    13/06/2025 (வெள்ளிக்கிழமை) 14/06/2025 (சனிக்கிழமை) 15/06/2025 (ஞாயிறு) விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/06/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 385 பேருத்துகளும், 14/06/2025(சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒருர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 13/06/2025 வெள்ளிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் 14/06/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு உங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 13/06/2025 மற்றும் 14/08/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருத்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,158 பயணிகளும் சனிக்கிழமை 2,652 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,469 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tristc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொது தேர்வு முடிந்த நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பெற்றோருடன் ஊர் திரும்புகின்றனர்
    • அனைத்து பள்ளிகள் வழியாக சென்று வரும் அனைத்து அரசு பஸ்களும் பள்ளி அருகே நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்திலிருந்து கோடை விடுமுறை மற்றும் பொது தேர்வுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினம் கூறியதாவது:-

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் பள்ளிகளில் வெளியூர்களிலிருந்து வந்து தங்கி படித்து வந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவியர் தற்போது பொது தேர்வு முடிந்த நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பெற்றோருடன் ஊர் திரும்புகின்றனர் . அவர்களின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் பயணிகள் வருகைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் விடுமுறையில் வெளி மாவட்டங்களில் இருந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்துக்கு வருபவர்களுக்காக தருமபுரி மண்டலத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது பொது தேர்வு உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் நடந்து வரும் தேர்வை ஒட்டி தேர்வு மையங்கள் மற்றும் அனைத்து பள்ளிகள் வழியாக சென்று வரும் அனைத்து அரசு பஸ்களும் பள்ளி அருகே நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தருமபுரியில் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் சிறப்பு பேருந்துகளில் பயணித்த வண்ணம் உள்ளனர்.
    • தருமபுரியில் மட்டும் 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

    தருமபுரி, 

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.

    அதேபோல், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு உள்ள கிரிவலப் பாதையில் கிரிவலம் சுற்றி வந்து அண்ணாமலையாரை வழிபட்டு செல்கின்றனர்.

    ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியை விட சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக அண்ணாமலையார் கோவிலுக்கு சித்ரா பவுர்ணமியான இன்றும், நாளையும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் செல்கின்றனர்.

    அதன்படி, சேலம் கோட்டம் தருமபுரி மண்டலம் சார்பில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று காலை முதல் இன்று இரவு 12 மணி வரை 188 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    தருமபுரியில் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் சிறப்பு பேருந்துகளில் பயணித்த வண்ணம் உள்ளனர்.

    தருமபுரியில் மட்டும் 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் இன்று தருமபுரி பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    • தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்.
    • ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

    தமிழகத்தில் வாரயிறுதி நாட்களையொட்டி, வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை இயக்கு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    17/05/2024 (வெள்ளிக்கிழமை) 18/05/2024 (சனிக்கிழமை) மற்றும் 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்தம் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில். கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 17/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 555 பேருந்துகளும் 18/05/2024 (சனிக்கிழமை) அன்று 645 பேருந்துகளும், 19/05/2024 (ஞாயிற்றுக் கிழமை) 280 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து நாகை. வேளாங்கண்ணி. ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/05/2024, 18/05/2024 மற்றும் 19/05/2024 ( வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) அன்று 195 திட்டமிடப்பட்டுள்ளது.

    பேருந்துகளும் இயக்க எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 17/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 555 பேருந்துகளும் 18/05/2024 (சனிக்கிழமை) அன்று 645 பேருந்துகளும், 19/05/2024 (ஞாயிற்றுக் கிழமை) 280 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/05/2024 வெள்ளிக் கிழமை அன்று 65 பேருந்துகளும் 18/05/2024 சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மற்றும் 19/05/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று 65 பேருந்துகளும், மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க

    திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க போதிய அலுவவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஆயுதபூஜை, விஜயதசமி உள்பட தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கடுவதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆயுத பூஜை பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 09/10/2024 மற்றும் 10/10/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிசாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 09/10/2024 (புதன்கிழமை) அன்று 225 பேருந்துகளும், 10/10/2024 (வியாழக்கிழமை) அன்று 880 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 09/10/2024 புதன்கிழமை அன்று 35 பேருத்துகளும் 10/10/2024 வியாழக்கிழமை) அன்று 265 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாதாரைத்திலிருந்து 09/10/204 மற்றும் 10/10/2024 ஆகிய நாட்களுக்கு 110 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார புதன் கிழமை அன்று 6,582 பயணிகளும் வியாழக்கிழமை அன்று 22.236 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 21,311 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது.
    • தீபத் திருவிழாவை முன்னிட்டு சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது.

    அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    தீபத் திருவிழாவை முன்னிட்டு சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    இந்நிலையில், தீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் இருந்து, வரும் 15ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 பேருந்துகள் கட்டணமின்றி இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    ×