என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weekends"

    • தினாரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருத்துகள் இயக்கிட திட்டம்.

    வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    12/09/2025 (வெள்ளிக்கிழமை) 13/09/2025 (சனிக்கிழமை) மற்றும் 14/09/2025 (ஞாயிறுக் கிழமை முகூர்த்தம்) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினாரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி நாகர்கோவில் கன்னியாகுமரி தூத்துக்குடி, கோயம்புத்தூர். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 12/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 355 பேருந்துகளும், 13/09/2025 (சணிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளங்கண்ணி ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 12/09/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 13/09/2025 சனிக்கிழமை அன்று 55 பேருத்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாதாவரத்திலிருத்து 12/09/2025 மற்றும் 13/09/2025 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருத்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 5,230 பயணிகளும் சனிக்கிழமை 3.276 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9,040 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நான் தந்தையானதும் விடுமுறைகளை குறித்த பார்வை மாறியது என்றார் பில் கேட்ஸ்
    • வேலையை கடந்து ஒரு உலகம் உள்ளது என்றார் பில் கேட்ஸ்

    கணினிகளுக்கான ஆபரேடிங் சிஸ்டம் எனப்படும் "இயங்கு முறைமை" தயாரிப்பதில் முன்னணியில் உள்ள அமெரிக்க நிறுவனம், மைக்ரோசாஃப்ட் (Microsoft). இதன் நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates), உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவர்.

    தனது சிறு வயது வாழ்க்கை குறித்து பல விஷயங்களை மனம் திறந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் பில் கேட்ஸ்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எனது சிறு வயதில் வார இறுதி விடுமுறைகளை குறித்து எனக்கு பெரிய எண்ணம் இருந்ததில்லை. ஆனால், வயது அதிகரித்த போது அவற்றின் மகத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். குறிப்பாக, நானும் ஒரு தந்தையானதும் விடுமுறைகளை குறித்த எனது பார்வையில் மாற்றம் ஏற்பட்டது. எனது குழந்தைகளின் வளர்ச்சியை காணும் பொழுது வேலையை கடந்தும் ஒரு உலகம் உள்ளது என்பதை முழுவதுமாக உணர தொடங்கினேன். வரவிருக்கும் ஆண்டிலிருந்து விடுமுறை நாட்களை அனுபவிக்க துவங்குங்கள். வேலையை கடந்து வாழ்க்கையின் செழுமையை உணர்ந்து கொள்ள அது உதவும். அது அடுத்து வரும் காலங்களில் வரும் சவால்களை எதிர்கொள்ள மிகவும் பயனுடையதாக அமையும்.

    இவ்வாறு பில் பதிவிட்டுள்ளார்.

    சில மாதங்களுக்கு முன் இன்போசிஸ்-சின் (Infosys) நிறுவனர் என் ஆர் நாராயண மூர்த்தி (Narayana Murthy) இந்திய இளைஞர்கள், வார விடுமுறைகளை குறைத்து கொண்டு ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க தயாராக வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

    அவரது கருத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

    மத்திய, மாநில அரசுத்துறை அலுவலகங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை, 5 நாட்கள்(40 மணி நேரம்) மட்டுமே ஊழியர்களுக்கு வேலை நாட்கள். ஒரு சில தனியார் நிறுவனங்களில் மட்டுமே இதே நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

    பிற தனியார் நிறுவனங்களில் திங்கள் முதல் சனி வரை, 6 நாட்கள் (48 மணி நேரம்), ஊழியர்கள் பணி செய்ய வேண்டும். எனவே நாராயண மூர்த்தி தெரிவித்த "70-மணி-நேர வார வேலை நாட்கள்" என்பது வேலை-வாழ்க்கை சமநிலையை (work-life balance) நலிவடைய செய்யும் என்பதே பல உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

    இப்பின்னணியில், பில் கேட்ஸின் விடுமுறை செய்தியை சமூக வலைதளங்களில் ஒப்பிட்டு பயனர்கள் விமர்சிக்கின்றனர்.

    • வார விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
    • காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.தொடா் விடுமுறை, வார விடுமுறை நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும்.

    இந்த நிலையில் தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவுற்று பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு வரும் 2-வது ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து இருந்தது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 700 கன அடியாக குறைவாக வந்திருந்த போதிலும் சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

    காவிரி ஆற்றில் பரிசல் பயணம்தனியார் ஒப்பந்தம் முடிந்த நிலையில் தமிழக அரசே படகு சவாரி இயக்கி வருகிறது.

    இந்த படகு சவாரி பயணம் மேற்கொள்வதற்காக மாமரத்து கடவு பரிசல் துறையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து தொம்பச்சி கல் வழியாக பெரிய பாணி, மணல் மேடு வரை காவிரி ஆற்றின் பாறைகளுக்கு இடையே உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா். ஒரு சில படகோட்டிகள் பாதுகாப்பு உடை இல்லாமலேயே ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

    சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான நடைபாதை, மீன் விற்பனை நிலையம், முதலைப்பண்ணை, வண்ண மீன்கள் காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் அதிகரித்தது.

    மீன் விற்பனை நிலையத்தில் கட்லா, ரோகு, கெளுத்தி, வாளை, அரஞ்சான் , பாப்புலேட் உள்ளிட்ட வகை மீன்களின் விலை ரூ.200 முதல் ரூ.1,500 வரை விலை கொடுத்து வாங்கி சமைத்து குடும்பத்துடன் ருசித்து ரசித்து உணவருந்தினர்.

    ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை போலீஸ் நிலையம், பஸ் நிலைய வாகனம் நிறுத்துமிடம், தமிழ்நாடு ஓட்டல் வாகன நிற்கும் இடம், சத்திரம் முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தியிருந்தனா்.

    அதிக கூட்டம் நெரிசலால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×