search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vacation"

    • நான் தந்தையானதும் விடுமுறைகளை குறித்த பார்வை மாறியது என்றார் பில் கேட்ஸ்
    • வேலையை கடந்து ஒரு உலகம் உள்ளது என்றார் பில் கேட்ஸ்

    கணினிகளுக்கான ஆபரேடிங் சிஸ்டம் எனப்படும் "இயங்கு முறைமை" தயாரிப்பதில் முன்னணியில் உள்ள அமெரிக்க நிறுவனம், மைக்ரோசாஃப்ட் (Microsoft). இதன் நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates), உலகின் முன்னணி கோடீசுவரர்களில் ஒருவர்.

    தனது சிறு வயது வாழ்க்கை குறித்து பல விஷயங்களை மனம் திறந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் பில் கேட்ஸ்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எனது சிறு வயதில் வார இறுதி விடுமுறைகளை குறித்து எனக்கு பெரிய எண்ணம் இருந்ததில்லை. ஆனால், வயது அதிகரித்த போது அவற்றின் மகத்துவத்தை நான் உணர்ந்து கொண்டேன். குறிப்பாக, நானும் ஒரு தந்தையானதும் விடுமுறைகளை குறித்த எனது பார்வையில் மாற்றம் ஏற்பட்டது. எனது குழந்தைகளின் வளர்ச்சியை காணும் பொழுது வேலையை கடந்தும் ஒரு உலகம் உள்ளது என்பதை முழுவதுமாக உணர தொடங்கினேன். வரவிருக்கும் ஆண்டிலிருந்து விடுமுறை நாட்களை அனுபவிக்க துவங்குங்கள். வேலையை கடந்து வாழ்க்கையின் செழுமையை உணர்ந்து கொள்ள அது உதவும். அது அடுத்து வரும் காலங்களில் வரும் சவால்களை எதிர்கொள்ள மிகவும் பயனுடையதாக அமையும்.

    இவ்வாறு பில் பதிவிட்டுள்ளார்.

    சில மாதங்களுக்கு முன் இன்போசிஸ்-சின் (Infosys) நிறுவனர் என் ஆர் நாராயண மூர்த்தி (Narayana Murthy) இந்திய இளைஞர்கள், வார விடுமுறைகளை குறைத்து கொண்டு ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க தயாராக வேண்டும் என கருத்து தெரிவித்தார்.

    அவரது கருத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

    மத்திய, மாநில அரசுத்துறை அலுவலகங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை, 5 நாட்கள்(40 மணி நேரம்) மட்டுமே ஊழியர்களுக்கு வேலை நாட்கள். ஒரு சில தனியார் நிறுவனங்களில் மட்டுமே இதே நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

    பிற தனியார் நிறுவனங்களில் திங்கள் முதல் சனி வரை, 6 நாட்கள் (48 மணி நேரம்), ஊழியர்கள் பணி செய்ய வேண்டும். எனவே நாராயண மூர்த்தி தெரிவித்த "70-மணி-நேர வார வேலை நாட்கள்" என்பது வேலை-வாழ்க்கை சமநிலையை (work-life balance) நலிவடைய செய்யும் என்பதே பல உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

    இப்பின்னணியில், பில் கேட்ஸின் விடுமுறை செய்தியை சமூக வலைதளங்களில் ஒப்பிட்டு பயனர்கள் விமர்சிக்கின்றனர்.

    • இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • இது குறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிப்பாளையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் இன்று காலை 7.30 மணியளவில் ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். வண்டிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்ருந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அஜித் குமார் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி ஆனார். இது குறித்து திருநாவலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் அசோகன், சப் - இன்ஸ்பெக்டர் ராம தாஸ் தனிபிரிவு போலீஸ் காரர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாகனம் மோதி பலியான அஜித்குமார் உடலை மீட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்து வக்கல் லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துபாய்க்கு வழக்கமான கட்டணம் ரூ.10,558, நாளைய கட்டணம் ரூ. 21,509, 29 -ந்தேதி கட்டணம் ரூ. 20,808.
    • சென்னை-கோவா வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு அதிகரித்து இருக்கிறது.

    ஆலந்தூர்:

    மிலாது நபியையொட்டி நாளை அரசு விடுமுறை ஆகும். இதைத்தொடர்ந்து சனி, ஞாயிறு மற்றும் வருகிற 2-ந்தேதி காந்தி ஜெயந்தி என்று தொடர்ச்சியாக விடுமுறை தினங்கள் வருகின்றன. மேலும் பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு விடுமுறை தொடங்கி விட்டதால் சென்னையில் வசிக்கும் பலர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா பயணத்தை திட்டமிட்டு விமான பயணங்களாக ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

    தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் பண்டிகை காலங்களில் தான் பெரும்பாலும் தமிழகத்தில் இருந்து செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது இந்த தொடர் விடுமுறையில், சுற்றுலா தளங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானங்களில், பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் விமானங்களில், பயணிகளின் டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளன.

    சென்னையில் இருந்து சுற்றுலா தளமான தாய்லாந்து நாட்டின் பாங்காக் செல்ல, வழக்கமான விமான கட்டணம் ரூ. 9,720 ஆகும். ஆனால் நாளை(28-ந் தேதி) கட்டணம், ரூ. 32,581 ஆகவும், 29-ந்தேதி ரூ. 28,816 ஆகவும் உள்ளது.

    துபாய்க்கு வழக்கமான கட்டணம் ரூ.10,558, நாளைய கட்டணம் ரூ. 21,509, 29 -ந்தேதி கட்டணம் ரூ. 20,808.

    இதேபோல் சிங்கப்பூர் செல்ல வழக்கமான கட்டணம் ரூ. 9,371. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ. 20,103, 29-ந் தேதி ரூ. 18,404 ஆக இருக்கிறது. மலேசியாவின் கோலாலம்பூர் செல்ல வழக்கமான கட்டணமான ரூ. 7,620யை தாண்டி நாளை ரூ.15,676, 29-ந்தேதி ரூ.14,230 கட்டணமாக உயர்ந்துள்ளது. இலங்கையின் கொழும்புக்கு ரூ.11234 (வழக்கமான கட்டணம் ரூ.6,698) ஆகும்.

    இந்தியாவுக்குள் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் விமான கட்டணமும் உயர்ந்துள்ளது. சென்னை- மைசூர் இடையே வழக்கமான விமான கட்டணம் ரூ.2,558. ஆனால் தற்போது இது ரூ.7,437 ஆக உயர்ந்து உள்ளது.

    சென்னை-கோவா வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு அதிகரித்து இருக்கிறது. நாளை ரூ.8,148, 29-ந்தேதி ரூ.9,771 ஆகும்.

    மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரிக்க வில்லை. ஆனால் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமான கட்டணம் மட்டும் அதிகரித்துள்ளது. சென்னை தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.3,853, ஆகும். நாளை ரூ.11,173, 29-ந் தேதி ரூ.9,975 ஆக உள்ளது.

    • வினித்குமார் நாமக்கல் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
    • சங்கராபுரம் காவல் சிறப்பு உதவியாளர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் மகன் வினித்குமார் (வயது19). இவர் நாமக்கல் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் இரவு சாப்பிட்டு விட்டு உறங்க சென்றார். அப்போது, நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியுள்ளார். உடன் அவரை, சங்கராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனசேகரன் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வினித்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் காவல் சிறப்பு உதவியாளர் கருப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படியும், மதுரை தொழிலாளர் கூடுதல் ஆணையர் ஜெயபாலன் மற்றும் மதுரை தொழிலாளர் இணை சுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டு தலின்படியும் விருதுநகர், ஆணையர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச் செல்வி தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தேசிய விடுமுறை தினமான

    15-ந்தேதி கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசியபண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958-ன்படி, சுதந்திர தினம் அன்று (ஆக.15) அன்று கடைகள், நிறுவ னங்கள், உணவகங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவேண்டும்.

    இந்த தினத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும். மேலும் தொழி லாளர்களிடம் உரிய படிவத்தில் கையொப்பம் பெற்று விடுமுறை தினத் திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு படிவம் அனுப்பாமலும், சட்ட விதிகளை முரணாகவும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 50 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 24 உணவகங்கள் மற்றும் 10 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆக மொத்தம் 84 நிறுவனங்களில் கூட்டாய் வின்போது முரண்பாடு கண்டறியப்பட்டது.

    இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் 1961 ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சுதந்திர தினத் தன்று பணிபுரிந்த தொழி லாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது 3 நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்கவேண்டும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பள பட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்புமனுதாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த தகவலை விருது நகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • குழந்தைகளால் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாது.
    • கோடை விடுமுறையில் இயங்கும் சில தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு. சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

    இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதியடைந்து வருகின்றனர்.

    குழந்தைகளால் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாது.

    எனவே மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும்.

    மேலும் கல்வி துறையின் அறிவுறுத்தலை மீறி சட்ட விரோதமாக கோடை விடுமுறையில் இயங்கும் சில தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    சிவகங்கை

    சென்னை முதன்மை செயலாளர்-தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் உத்தரவின்படி சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான மே தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    மேற்படி தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

    தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IVEE என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தன்று 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவ னங்களின் மீது சிவகங்கை மாவட்ட த்தில் 55 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • பண்ருட்டியில் தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் உதவியாளர் மாயமானார்.
    • ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சந்திரகுமார் இவரை கடத்தி யதாக கூறப்படுகிறது.

    கடலூார்:

    சிதம்பரம் அருகே வையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்செந்தில்குமார். அவரது மகள் சுபத்திரா (வயது 21)இவர் பி.எஸ்.சி. விலங்கியல் படித்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் உதவியாளராக பணிபுரித்து வருகிறார். பொங்கல் விடுமு றைக்காக மருங்கூரில் உள்ள பெரியம்மா வளர்மதி வீட்டுக்கு வந்து தங்கி இருந்தவர் நேற்று அதிகாலை முதல் காணாமல் போனார்.

    இது குறித்து முத்தாண்டிகுப்பம்போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரில் ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சந்திரகுமார் இவரை கடத்தி யதாக கூறப்படுகிறது. இதுபற்றி காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தனியார் மருத்துவ கல்லூரி பெண் ஊழியரை தேடி வருகின்றனர். 

    • சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 54 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை வழக்குபதிவு செய்துள்ளது.
    • மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படியும், மதுரை கூடுதல் தொழி லாளர் ஆணையர் குமரன் ஆலோசனையின்படியும், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின்படியும் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று சிவகங்கை மாவட்டத்தில் கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

    தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டத்தின்படி தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று கடைகள் மற்றும் நிறு வனங்கள், உணவு நிறுவ னங்கள்,மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். இந்த தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்க வேண்டு மானால் அவர்களுக்கு வேலைய ளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொரு நாளில் சம்பளத்துடன் கூடிய மாற்று விடுப்பு அளிக்க வேண்டும்.

    மேற்கண்ட தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IV EE என்ற படிவத்திலும், மோட்டார். போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA என்ற படிவத்திலும் தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தன்று 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அவ்வாறு தேசிய விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விடுமுறை ஆய்வின் போது மேற்கண்ட சட்டவிதிகளை அனுசரிக்காமல் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய வகையில் சிவகங்கை மாவட்டத்தில் 54 நிறுவனங்களில் முரண்பா டுகள் கண்டறியப்பட்டன.

    இதையடுத்து அந்த சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவிஆணையர் (அமலாக்கம்) ராஜ்குமார் தெரிவித்தார்.

    • அரையாண்டு விடுமுறை முடிந்து மதுரை மாவட்டத்தில், இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது.
    • மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் 23-ந் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தன. இதைத் தொடர்ந்து 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை 9 நாட்கள் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டும் இந்த விடுமுறை நாட்களில் வந்ததால் மாணவர்கள் உறவினர்கள் வீடுக ளுக்கும், பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்தனர்.

    இந்த நிலையில் நேற்று புத்தாண்டு பிறந்ததை யடுத்து இன்று 2ந்தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தனியார் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பொறுத்த வரை 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.தொடக்கப்பள்ளி ஆசிரி யர்களுக்கு பயிற்சிகள் இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகிற 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டதால் காலை வழக்கமான நேரத்தில் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர். இதனால் சாலை களில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்பட்டது. பள்ளி பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மாணவ-மாணவிகள் சென்றதால் பள்ளி மற்றும் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    அரையாண்டு விடுமுறை முடிந்து திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டுமென அந்தந்த பள்ளிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து பள்ளிக்கு வந்தனர். இதில் ஒரு சில மாணவர்கள் முக கவசம் அணியாமல் பள்ளிக்கு வந்தனர். அவர்களையும் அணிந்து வரும்படி பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டது.

    • மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும்.
    • தேவர் ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் 115 -வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முக்குலத்து புலிகள் கட்சியின் சார்பாக மாநில நிறுவனத்தலைவர் ஆறு சரவணத்தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவர் கூறும்போது, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும். அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முன்பு இருந்தது போல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டவேண்டும் என்றார்.

    இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் பின்னலாடை துறையை சார்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
    • தீபாவளி அன்று திருப்பூர் பஜார்களில் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை துறையை சார்ந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பின்னலாடை சார்ந்த உப தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் என திருப்பூர் நகரத்தில் ஏராளமானோர் தினந்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் புறநகர் பகுதிகளில் இருந்து நகருக்கு வேலைக்கு வருவோர், பனியன் துணிகளை எடுத்துச்செல்லும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் என திருப்பூர் நகரில் உள்ள அனைத்து சாலைகளுமே எப்போதும் வாகனப் போக்குவரத்து இருந்தபடியே இருக்கும்.

    குறிப்பாக அவிநாசி சாலை, பி.என் சாலை, ஊத்துக்குளி சாலை மூன்றும் இணையும் குமரன் சாலை எப்போதும் பரபரப்பாகவும், வாகன நெரிசலோடும் காணப்படும். முக்கிய வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால் மக்கள் கூட்டமும் இருக்கும். திருப்பூரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியை இணைக்கும் சாலையாக குமரன் சாலை இருப்பதால் இரவு நேரம் சில மணி நேரம் மட்டும் வாகனப் போக்குவரத்து இன்றி காணப்படும்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் விடுமுறை விடப்பட்டதால் திருப்பூர் நகரில் தற்போது சற்று போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்படுகிறது. பனியன் நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறையால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லாம வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் பஜார்களில் ஹாயாக உலா வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். தீபாவளி அன்று திருப்பூர் பஜார்களில் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது மாலை நேரங்களில் பஜார்களில் குவிந்து வருகின்றனர்.மேலும் மாநகராட்சி பூங்கா மற்றும் பொழுது போக்கு மையங்களில் குவிந்து வருகின்றனர்.

    வருகிற திங்கட்கிழமை முதல் பனியன் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் என்பதால் அதன்பிறகு திருப்பூர் மீண்டும் சுறுசுறுப்பாகும்.

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விசைத்தறி ஜவுளி தொழில் உள்ளது. சுமார் 2.5 லட்சம் விசைத்தறிகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.

    வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைக்கு வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

    அதேபோல், தீபாவளி, பொங்கல் மற்றும் கோவில் திருவிழாவுக்கு வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். கடந்த வாரம் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். ஆண்டு முழுவதும் ஓய்வில்லாமல் இயங்கி கொண்டிருக்கும் விசைத்தறிகள், தொழிலாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றதால் ஓய்வெடுத்து வருகின்றன.

    இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்கள் கூறுகையில்,சொந்த ஊர் சென்றுள்ள தொழிலாளர்கள் திரும்பி வந்த பிறகுதான் விசைத்தறிகளை இயக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    தீபாவளி பண்டிகையின் போது தீக்காய விபத்துகளை தடுக்க மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை மாவட்டத்தில் தயாராக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தியது.இதற்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒரு டாக்டர், 3 செவிலியர், ஊழியர் அடங்கிய பிரத்யேக குழு பண்டிகைக்கு முதல் நாள் இரவில் இருந்து மறுநாள் காலை வரை தயார் நிலையில் இருந்தது.

    தீக்காயம் ஏற்பட்டால் சிகிச்சையளிக்க தேவையான ஏற்பாடுகளுடன் மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ்களும் தயார்படுத்தப்பட்டன. இருப்பினும், குறிப்பிட்டு சொல்லும்படியான தீ விபத்து எதுவும் நடக்கவில்லை.சிறிய அளவிலான தொடர் சிகிச்சை அளிக்க அவசியமில்லாத வகையிலான தீ விபத்துகளே நடந்துள்ளது. இதனால் மருத்துவம், தீயணைப்பு அதிகாரிகள், 108 ஆம்புலன்ஸ் அலுவலர், பணியாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

    இது குறித்து திருப்பூர் மருத்துவ கல்லுாரி முதல்வர் முருகேசன் கூறுகையில், தீபாவளி நாளில் நான்கு ஆண், ஒரு பெண், ஒரு குழந்தை உட்பட 6 பேர், பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்தனர். அவர்களுக்கு சிகிச்சையளித்து, மருந்து, மாத்திரைகளை வழங்கி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெறும் வகையிலோ, உயர் சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் அளவில் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றார்.

    திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் காங்கேயபூபதி கூறுகையில், தக்க ஏற்பாடுகளுடன் தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.மாவட்டத்தில் பல்லடத்தில் 2,திருப்பூர் வடக்கு பகுதியில் 2 என மொத்தம் 4 சிறிய விபத்துக்கள் நடந்தது. உடனடியாக வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு தீ பரவாமல் தவிர்க்கப்பட்டது. காயம், சேதம் எதுவுமில்லை என்றார்.

    கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக பல்லடம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கோவை, திருச்சி, திருப்பூர், மதுரை, கொச்சி, உடுமலை, பொள்ளாச்சி, அவிநாசி செல்லும் மாநில நெடுஞ்சாலைகளும் பல்லடம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகின்றன.

    இதனால் பல்லடத்தில் எப்போதும், கட்டுக்கடங்காத வாகன நெரிசல் ஏற்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் வாகனங்களால் பல்லடம் தேசிய நெடுஞ்சாலை திக்குமுக்காடியது. அண்ணா நகர் முதல் தாராபுரம் ரோடு பிரிவு வரை வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்து சென்றன.

    ஆனால் தீபாவளி நாளன்றும், தற்போதும் பல்லடம் தேசிய நெடுஞ்சாலை குறைந்த அளவு வாகனங்களால் வெறிச்சோடி காணப்படுகிறது. பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற பெரும்பாலானவர்கள் இன்னும் 3 நாட்களில் திரும்ப வாய்ப்பு உள்ளதால் வரும் நாட்களில் மீண்டும் பழையபடி போக்குவரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    ×