search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும்
    X

    வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும்

    • குழந்தைகளால் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாது.
    • கோடை விடுமுறையில் இயங்கும் சில தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு. சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

    இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதியடைந்து வருகின்றனர்.

    குழந்தைகளால் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாது.

    எனவே மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும்.

    மேலும் கல்வி துறையின் அறிவுறுத்தலை மீறி சட்ட விரோதமாக கோடை விடுமுறையில் இயங்கும் சில தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×