search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தருமபுரியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
    X

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தருமபுரியில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    • தருமபுரியில் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் சிறப்பு பேருந்துகளில் பயணித்த வண்ணம் உள்ளனர்.
    • தருமபுரியில் மட்டும் 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

    தருமபுரி,

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.

    அதேபோல், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு உள்ள கிரிவலப் பாதையில் கிரிவலம் சுற்றி வந்து அண்ணாமலையாரை வழிபட்டு செல்கின்றனர்.

    ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியை விட சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக அண்ணாமலையார் கோவிலுக்கு சித்ரா பவுர்ணமியான இன்றும், நாளையும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் செல்கின்றனர்.

    அதன்படி, சேலம் கோட்டம் தருமபுரி மண்டலம் சார்பில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று காலை முதல் இன்று இரவு 12 மணி வரை 188 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    தருமபுரியில் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் சிறப்பு பேருந்துகளில் பயணித்த வண்ணம் உள்ளனர்.

    தருமபுரியில் மட்டும் 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் இன்று தருமபுரி பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    Next Story
    ×