search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி- ஒகேனக்கல்  சிறப்பு பேருந்துகள் இயக்கம்
    X

    தருமபுரி- ஒகேனக்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    • பொது தேர்வு முடிந்த நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பெற்றோருடன் ஊர் திரும்புகின்றனர்
    • அனைத்து பள்ளிகள் வழியாக சென்று வரும் அனைத்து அரசு பஸ்களும் பள்ளி அருகே நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்திலிருந்து கோடை விடுமுறை மற்றும் பொது தேர்வுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினம் கூறியதாவது:-

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் பள்ளிகளில் வெளியூர்களிலிருந்து வந்து தங்கி படித்து வந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவியர் தற்போது பொது தேர்வு முடிந்த நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பெற்றோருடன் ஊர் திரும்புகின்றனர் . அவர்களின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் பயணிகள் வருகைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் விடுமுறையில் வெளி மாவட்டங்களில் இருந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்துக்கு வருபவர்களுக்காக தருமபுரி மண்டலத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது பொது தேர்வு உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் நடந்து வரும் தேர்வை ஒட்டி தேர்வு மையங்கள் மற்றும் அனைத்து பள்ளிகள் வழியாக சென்று வரும் அனைத்து அரசு பஸ்களும் பள்ளி அருகே நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×