search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Buses"

    • பொங்கலை தொடர்ந்து, இன்று மாட்டு பொங்கலும், திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டது.
    • நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நேற்று தைத் திருநாளான பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

    பொங்கலை தொடர்ந்து, இன்று மாட்டு பொங்கலும், திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டது.

    இதையடுத்து, நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், காணும் பொங்கலை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் பல்வேறு சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல இருக்கின்றனர்.

    இதனால், பொது மக்களின் வசதிக்காக காணும் பொங்கலை முன்னிட்டு நாளை சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மெரினா கடற்கரை, மாமல்லபுரம், கோவளம், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதலமைச்சர் உத்தரவின் பேரில் 21,904 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன.
    • சென்னையின் நான்கு பேருந்து முனையங்களில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் 44,580 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படஉள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சிரமமின்றி பயணிக்க முதலமைச்சர் உத்தரவின் பேரில் 21,904 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதேபோல பொங்கலை கொண்டாடி விட்டு திரும்பும் மக்களின் வசதிக்காக 22,676 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. ஆக மொத்தம் இந்த பொங்கல் பாண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் வசதிக்காக 44,580 பேருந்துகள் இயக்கபட உள்ளன.

    ஜனவரி 10 முதல் 13-ஆம் தேதி வரை சென்னையிலிருந்து வெளி ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக வழக்கமாக தினமும் இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்புப் பேருந்துகள் இயக்கபடுகின்றன.

    நான்கு நாட்களும் சேர்த்து 14,104 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல பிற ஊர்களிலிருந்து ஜனவரி 10 முதல் 13 ஆம் தேதி வரை 7,800 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 21,904 பேருந்துகள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட முடிவு செய்து இயக்கபட்டு வருகின்றன.

    பொங்கல் பண்டிகையை கொண்டாடி முடித்துவிட்டு பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு திரும்பும் பயணிகளின் வசதிக்காக ஜன. 15 முதல் 19-ஆம் தேதி வரை, தினமும் இயக்கக்கூடிய 10,460 பேருந்துகளுடன் கூடுதலாக 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,926 என மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. இதன்படி, பொங்கலுக்கு மொத்தம் 44,580 பேருந்துகளை இயக்க முதலமைச்சர் உத்தரவின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பொது மக்கள் வசதிக்காக சென்னையின் நான்கு பேருந்து முனையங்களில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    1. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம் மஃப்சல் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    2. கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன..

    3. கோயம்பேடு பேருந்து நிலையம்த்தில் இருந்து கிழக்கு கடற்கரை (இசிஆர்) சாலை வழியாக காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    4. மாதவரம் புதிய பேருந்து நிலையம்த்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு சென்னை மாநகரின் பல்வேறு பகுதியிலிருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் செல்வதற்காக ஜன. 10 முதல் 13-ஆம் தேதி வரை கூடுதலாக 320 இணைப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

    பயணிகள் சிரமமின்றி முன் பதிவு செய்யும் வகையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 9 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும். மேலும், டிஎன்எஸ்டிசி செயலி மூலமும் www.tnstc.in எனும் இணையதளம் மூலமாகவும் பயணச்சீட்டை முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி தமிழ்நாட்டு மக்கள் சிறப்பான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ, எந்தவித இடையூறும் இன்றி பயணிக்கும் வகையில் சிறப்பான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • அறிவிப்பு நாளை (6-ந்தேதி) வெளியாக உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. 15-ந்தேதி மாட்டுப் பொங்கல், 16-ந்தேதி காணும் பொங்கல் ஆகும்.

    சென்னை மற்றும் பல்வேறு நகரங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜனவரி 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையும், 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,706 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 11,006 பஸ்களும், மற்ற நகரங்களில் இருந்து ஜனவரி 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 3 நாட்களுக்கு 8,478 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 19,484 பஸ்கள் இயக்கப்பட்டன.

    பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,830 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 11,130 பஸ்களும், மற்ற ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,459 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 17,589 பஸ்கள் இயக்கப்பட்டன.

    சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பஸ்கள் திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம் ஆகிய வழித்தடங்களிலும், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேசுவரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் ஆகிய வழித்தடங்களிலும் இயக்கப்பட்டன.

    மேலும் திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி, திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் , பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், காட்டுமன்னார்கோவில், விக்கிரவாண்டி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி ஆகிய இடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன.

    சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர், பெங்களூர் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்கள், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம். திருவாரூர், திருத்துறைப்பூண்டி செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன.

    சென்னை மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பஸ்கள் மற்றும் திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

    20 ஆயிரம் பஸ்கள்இந்த நிலையில் கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சுமார் 20 ஆயிரம் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பஸ்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும்.

    இந்த ஆண்டு வருகிற 14-ந்தேதி முதல் 19 -ந்தேதி வரை 6 நாட்கள் அரசு சார்பில் விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு ஏராளமான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவர்களின் வசதிக்கு ஏற்ப சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பஸ்களை இயக்குவது தொடர்பான அறிவிப்பு நாளை (6-ந்தேதி) வெளியாக உள்ளது.

    • பொங்கல் பண்டிகையை யொட்டி சிறப்பு பஸ்கள்.
    • முன்பதிவு டிக்கெட் முழுவதும் விற்றுத்தீர்ந்து விட்டன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை யொட்டி சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வழக்கமான ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் முழுவதும் விற்றுத்தீர்ந்து விட்டன. இந்த நிலையில் பொதுமக்கள் பலர் ஆம்னி பஸ்களை நாடுவது வழக்கம்.

    பொங்கல் பண்டிகையை யொட்டி பயணிகள் நெரி சலை கருத்தில் கொண்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படு வதை தடுக்கவும், விதிமீ றல்களில் ஈடுபடும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், 30 சிறப்பு குழுக்களை போக்குவரத்து ஆணையரகம் அமைத்து உள்ளது.இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:-

    தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆம்னி பஸ்கள் அதிகமாக இயக்கப்படும். பொங்கல் பண்டிகை நெருங்க உள்ள தால் ஆம்னி பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட உள்ளது. மேலும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். வரி நிலுவை, அதிக சுமை, பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களும் காணப்படும்.

    இதுகுறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவி லும் 3 பேர் இருப்பார்கள். அடுத்த வாரம் முதல் இந்த சிறப்பு குழுக்கள் செயல்படும்.

    இந்த குழுவினர் நெடுஞ் சாலை மற்றும் முக்கிய பஸ் நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவார்கள். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ, விதிமீறல்கள் காணப்பட் டாலோ அபராதம் விதிக்கப் படும். மேலும் பஸ்களின் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சென்னையில் இருந்து 12-ந் தேதி 269, 13-ந்தேதி 643, 14-ந்தேதி 801, 15-ந்தேதி 269 பஸ்கள் திருவண்ணாமலைக்கு விடப்பட்டு உள்ளது.
    • இணைய தளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமியையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    கார்த்திகை தீபம் 12-ந்தேதியும் பவுர்ணமி 14-ந்தேதியும் கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 4 நாட்கள் இயக்கப்படுகிறது.

    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 1982 பஸ்களும், சேலம், வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கும்பகோணம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற இடங்களில் இருந்து 8127 பஸ்களும் என மொத்தம் 10,109 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னையில் இருந்து 12-ந் தேதி 269, 13-ந்தேதி 643, 14-ந்தேதி 801, 15-ந்தேதி 269 பஸ்கள் திருவண்ணாமலைக்கு விடப்பட்டு உள்ளது.

    தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in மற்றும் tnstcofficial app. ஆகிய இணைய தளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    எனவே திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பஸ் வசதியினை பயன்படுத்தி கொள்ளும்படி அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • அருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது.
    • தீபத் திருவிழாவை முன்னிட்டு சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது.

    அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    தீபத் திருவிழாவை முன்னிட்டு சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

    இந்நிலையில், தீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் இருந்து, வரும் 15ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 பேருந்துகள் கட்டணமின்றி இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    • இன்று மாலை விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது.
    • 7 டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்க ஏற்பாடு.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவில்.

    இந்த கோவிலில் கடைசியாக கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடந்து வந்தன.

    தற்போது திருப்பணிகள் நிறைவு பெற்று வர்ணங்கள் தீட்டப்பட்டு கோவில் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. இதைத்தொடர்ந்து வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான விழா இன்று மாலை தொடங்குகிறது.

    இன்று மாலை விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து விழா நாட்களில் யாக சாலை பூஜைகள், நவக்கிரக ஹோமம், திருமுறை பாராயணம், பூர்ணாகுதி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் 12-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் நடக்கிறது. அன்று 9.15 மணிக்கு மாசாணியம்மன் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. 9.30 மணிக்கு மாசாணியம்மன் மூல ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு மகாதீபாராதனை நடக்கிறது.


    கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவிலில் யாக சாலை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலை சுற்றி மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    12-ந்தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகம் முடிந்ததும் 7 டிரோன்கள் மூலம் பக்தர்கள் புனித நீர் தெளிக்கப்பட உள்ளது.

    பக்தர்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. 3 தீயணைப்பு வாகனங்கள், 3 ஆம்புலன்சுகள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

    மேலும் பக்தர்கள் கோவிலுக்கு வர வசதியாக இன்று முதலே ஆனைமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள் கோவை, பொள்ளாச்சி, உடுமலை உளளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது.

    பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்கிறார்கள்.
    • போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    சென்னை:

    பராமரிப்புகள் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் 28 மின்சார ரெயில்கள் இன்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிகாலையில் இருந்து சேவை ரத்து செய்யப்பட்டாலும் அதனை ஈடு செய்வதற்காக புதிய கால அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது.

    காலை மற்றும் மாலை பீக் அவர்சில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் ரெயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இயக்கப்பட்டுகின்றன.

    சென்னை மாநகரத்தோடு புறநகர் பகுதியை இணைக்கும் பாலமாக விளங்கும் மின்சார ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் பயணம் செய்கிறார்கள்.

    அரசு, தனியார் அலுவகங்களில் பணிபுரிவோர் நீண்ட தூரத்தில் இருந்து வருவதற்கு மின்சார ரெயில் சேவை மிகவும் பயன் உள்ளதாக இருப்பதால் பராமரிப்பு பணிக்காக ரத்துசெய்யும் போது சிரமங்கள் ஏற்படுகின்றன.

    இன்று தொடங்கி உள்ள பராமரிப்பு பணிகள் நாள் குறிப்பிடாமல் நடைபெறுவதால் கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு அதன்படி ரெயில்கள் இயக்கப்பட்டன.

    பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகயில் 200-க்கும் மேற்பட்ட ரெயில் சேவை இந்த மார்க்கத்தில் இயக்கப்படுவதாகவும் குறிப்பாக நெரிசல் மிகுந்த வேளையில் சேவை குறைக்கப்படாமல் இயக்கப்படுகிறது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனாலும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 10 பஸ்களும், பாரிமுனைக்கும் பஸ்களும் இயக்கப்பட்டன.

    ஏற்கனவே கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு போதுமான பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பயணிகளின் தேவை அறிந்து பஸ்கள் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மின்சார ரெயில் ரத்தால் தாம்பரம், எழும்பூர், பூங்காநகர், கோட்டை ரெயில் நிலையங்களில் சிறிது கூட்டம் காணப்பட்டது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கடற்கரை ரெயில் நிலையத்தில் 5 ரெயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை இயக்கப்படும் என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டிருந்தது.

    மெட்ரோ ரெயிலை பொறுத்தவரையில் பீக் அவர்சில் அதிகபட்க அளவில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இன்னும் தேவைப்பட்டால் இயக்கவும் தயாராக இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள்.
    • குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, இந்த ஆண்டும் வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி வரை சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, கடலூர், மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவை பஸ்கள் மற்றும் ஏ.சி. இல்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2024 முதல் 30.12.2024 மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2024 முதல் 29.12.2024 வரை இச்சிறப்புப் பஸ்கள் இயக்கப்படமாட்டாது.

    இந்த வருடம் பக்தர்கள் கூடுதலாக பயணம் செய்ய முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றினை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்படும்.

    60 நாட்களுக்கு முன்னதாக, சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ செயலி (ஆப்) ஆகியவற்றின் வழியாக முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும், பஸ்களின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 9445014452, 9445014424 மற்றும் 9445014463 ஆகிய செல்போன் எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பயண கட்டணம் முன்பதிவு உள்பட ரூ.700 ஆகும்.
    • திருச்செந்தூரில் இருந்து காரைக்காலுக்கு மறுநாள் 7-ந் தேதி இரவு 9.30 மணிக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் இருந்து புதுச்சேரி அரசின் பி.ஆர். டி.சி., சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவையொட்டி புதுச்சேரியில் இருந்து திருச்செந்துாருக்கு 6-ந் தேதி இரவு 7 மணிக்கு பி.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. பயண கட்டணம் முன்பதிவு உள்பட ரூ.700 ஆகும்.

    இதேபோல் மறுநாள் 7-ந் தேதி திருச்செந்தூரில் இருந்து புதுச்சேரிக்கு பி.ஆர்.டி.சி., பஸ் இரவு 9:30 மணிக்கு புறப்படுகிறது. பயண கட்டணம், முன்பதிவுடன் ரூ.700 ஆகும். இந்த பஸ் விழுப்புரம், திருச்சி மதுரை, தூத்துக்குடி வழித்தடத்தில் செல்லும். காரைக்காலில் இருந்தும் திருச்செந்தூருக்கு 6-ந் தேதி இரவு 9 மணிக்கு பி.ஆர்.டி.சி., பஸ் இயக்கப்படுகிறது.

    பயண கட்டணம், முன்பதிவு ரூ.500 ஆகும். இதே போல் திருச்செந்தூரில் இருந்து காரைக்காலுக்கு மறுநாள் 7-ந் தேதி இரவு 9.30 மணிக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ் பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி வழியாக இயக்கப்படும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பஸ் நிலையத்தில் உள்ள பி.ஆர்.டி.சி., பயண சீட்டு முன் பதிவு மையம் மற்றும் பஸ் இந்தியா செயலி வழியாக பக்தர்கள் திருச்செந்தூர் மட்டும் செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம் என பி.ஆர்.டி.சி., நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 5.76 லட்சம் பேர் பயணம்.
    • அவர்கள் சென்னை திரும்பும் வசதியாக 12846 பேருந்துகள் 4-ந்தேதி வரை இயக்கப்படுகிறது.

    தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் (அக்டோபர் 31-ந்தேதி) கொண்டாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று ஒருநாள் அரசு விடுமுறை அளித்தது. இன்று மற்றும் நாளை சனி, ஞாயிறு என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை ஆகும்.

    வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் திங்கட்கிழமையில் இருந்து சொந்த ஊர் செல்ல ஆரம்பித்தனர். இவர்களுக்கு வசதியாக கடந்த 28-ந்தேதியில் இருந்து 30-ம் தேதிவரை 10,784 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகள் மூலம் 5.76 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

    இவர்கள் தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு இன்று முதல் ஞாயிறு வரை சென்னை திரும்புவார்கள். இதனை கருத்தில் கொண்டு இன்று முதல் 4-ந்தேதி வரை (சனி, ஞாயிறு மற்றும் திங்கள்) 12,846 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

    • சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு பேருந்து இயக்கம்.
    • திருச்செந்தூருக்கு செல்ல இருப்பவர்கள் இணையதளம், ஆப் மூலம் முன்பதிவு செய்ய ஏற்பாடு.

    திருச்செந்தூரில் வரும் 7ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு வரும் 6ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    அதன்படி, வரும் 6ம் தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூருவில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    இதேபால், வரும் 7ம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூருவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    மேலும், திருச்செந்தூருக்கு செல்ல இருப்பவர்கள் www.tnstc.in இணையதளம் மற்றும் tnstc official ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×