என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special buses"

    • பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
    • ஞாயிறு அன்று 7 ஆயிரத்து 563 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 340 பஸ்களும், நாளை மறுநாள் 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 55 பஸ்களும், நாளை மறுநாள் 55 பஸ்களும், இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுதவிர, மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 20 பஸ்களும், சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேலும் வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களில் பயணிக்க நாளை 7ஆயிரத்து 227 பயணிகளும், நாளை மறுநாள் 2 ஆயிரத்து 975 பயணிகளும், ஞாயிறு அன்று 7 ஆயிரத்து 563 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
    • ஞாயிற்றுக்கிழமை 5,041 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் பயணிகள் பலர் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

    அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 340 பஸ்களும், நாளை மறுநாள் 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அதேபோல், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 55 பஸ்களும், நாளை மறுநாள் 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், வருகிற ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த வார விடுமுறையில் நாளை சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 5 ஆயிரம் பயணிகளும், நாளை மறுநாள் 4,982 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 5,041 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கார்த்திகை தீபத் திருவிழா அன்று 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைய உள்ளன.
    • திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 70 மினி பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பஸ்கள் இயக்கம் குறித்து அனைத்து மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர்களுடன் ஆலோ சனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தர்பகராஜ் தலைமை வகித்து பேசியதாவது:-

    கார்த்திகை தீபத் திருவிழா அன்று நகருக்கு வெளியில் மார்க்கெட்டிங் கமிட்டி (திண்டிவனம் சாலை), சர்வேயர் நகர் (வேட்டவலம் சாலை), நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் (திருக்கோவிலூர் சாலை), மணலூர்பேட்டை சாலை, விட்டோ டிஜிட்டல் இடம், அத்தியந்தல் (செங்கம் சாலை), டான்போஸ்கோ பள்ளி (காஞ்சி சாலை), அண்ணா நுழைவு வாயில் (வேலூர் சாலை), கிளியாப்பட்டு சந்திப்பு (அவலூர் பேட்டை சாலை) ஆகிய 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைய உள்ளன.

    மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 4,764 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 70 மினி பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நிகழாண்டு பக்தா்கள் கூடுதலாக பயணம் செய்வாா்கள் எதிா்பாா்க்கப்படுகிறது.
    • குழுவாக செல்லும் பக்தா்களுக்கு வாடகை அடிப்படையிலும் பஸ் வசதி செய்து தரப்படும்.

    அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாவுக்கு, தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தா்கள் சென்று வர ஏதுவாக, முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பஸ்கள் ஆண்டுதோறும் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதன்படி, இந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி முதல் 2026 ஜன.16-ந்தேதி வரையில், (சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூா் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவைப் பஸ்கள், குளிா்சாதன பஸ்கள் மற்றும் குளிா் சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள சிறப்புப் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

    சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிச.27 முதல் டிச.30-ந்தேதி வரை மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் டிச.26-ந்தேதி முதல் டிச.29-ந் தேதி வரை இந்த சிறப்புப் பஸ்கள் இயக்கப்படமாட்டாது.

    நிகழாண்டு பக்தா்கள் கூடுதலாக பயணம் செய்வாா்கள் எதிா்பாா்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தா்களுக்கு வாடகை அடிப்படையிலும் பஸ் வசதி செய்து தரப்படும்.

    60 நாள்களுக்கு முன்னதாக இந்த சிறப்புப் பஸ்களுக்கு இணையதளம் மூலமாக, மற்றும் டி.என்.எஸ்.டி.சி. எனப்படும் செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கைப்பேசி: 9445014452, 9445014424, 9445014463 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் நாளை 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    சென்னை:

    திருச்செந்தூரில் வருகிற 27-ந்தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் இருந்து வருகிற 27-ந்தேதி சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    இன்று (வெள்ளிக்கிழமை) முகூர்த்த நாள் மற்றும் வார விடுமுறையையொட்டி பொதுமக்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். எனவே, தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 365 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 445 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று மற்றும் நாளை திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 120 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களுக்கும் 200 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் நாளை 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும், வருகிற 26-ந்தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று அதிகமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து கூடுதலாக 2165 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தனிஅறை வைக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு நேற்று முதல் சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நேற்று வழக்கமாக தினசரி இயக்கப்படும் 2092 பஸ்களுடன் 760 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று அதிகமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து கூடுதலாக 2165 சிறப்பு பஸ்களும், நாளை (18-ந்தேதி) 1935 சிறப்பு பஸ்கள், 19-ந்தேதி 1040 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் வரும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் நடைமேடை விபரங்கள் போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    1-வது நடைமேடை: நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை.

    2-வது நடைமேடை: திருநெல்வேலி, பாபநாசம், நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர், மதுரை(டி.என்.எஸ்.டி.சி), திருநெல்வேலி(டி.என்.எஸ்.டி.சி).

    3-வது நடைமேடை: மதுரை, மதுரை கோட்டம், உசிலம்பட்டி, கீழக்கரை, திருமயம், காரைக்குடி, புதுக்கோட்டை, தேவகோட்டை, அறந்தாங்கி, ராமேஸ்வரம், ஏர்வாடி, கீரமங்கலம், தொண்டி, பொன் அமராவதி, வீரசோழன், சிவகங்கை, பரமக்குடி, ஒப்பிலான்.

    4-வது நடைமேடை: திருச்சி, அன்னவாசல், ஊரணிபுரம், புள்ளம்பாடி, கரூர்,பொள்ளாச்சி, பள்ளப்பட்டி, திண்டுக்கல், தேனி, பழனி, கொடைக் கானல், போடி, மூணாறு, கம்பம், குமிழி, திண்டுக்கல்(டி.என்.எஸ்.டி.சி), தேனி(டி.என்.எஸ்.டி.சி), கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி.

    5-வது நடைமேடை: திருச்சி, பெரம்பலூர், துறையூர், அரியலூர், புதுக்கோட்டை, காரைக்குடி.

    6-வது நடைமேடை: சேலம், எர்ணாகுளம், குருவாயூர், ஊட்டி, ஓசூர், பெங்களூரு, கோயம்புத்தூர், நாமக்கல், மேட்டுப்பாளையம், திருப்பூர், பொள்ளாச்சி, சேலம்(டி.என்.எஸ்.டி.சி), ஈரோடு(டி.என்.எஸ்.டி.சி), கோயம்புத்தூர்(டி.என்.எஸ்.டி.சி).

    7-வது நடைமேடை: கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம்.

    8-வது நடைமேடை: திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ஜெயங்கொண்டம், அரியலூர்.

    9-வது நடைமேடை: புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், வடலூர், விருத்தாச்சலம், திட்டக்குடி.

    மேலும் பஸ் நிறுத்தம் பகுதியில் எல்லா இடங்களிலும் வழிகளை அறிந்து கொள்ள பெயர் பலகை, பாதுகாப்புக்காக சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தனிஅறை வைக்கப்பட்டு உள்ளது. பயணிகள் காத்திருப்பு அமருமிடம், உணவகங்கள், கடைகள், அவசர மருத்துவ பிரிவு, பிரீபெய்டு ஆட்டோ, கார் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே நேற்று இரவு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டு உள்ள வசதிகள் மற்றும் சிறப்பு பஸ்கள் குறித்து அமைச்சர் சிவசங்கரன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பஸ் டிரைவர், கண்டக்டர்கள், பயணிகளிடம் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது கிளாம்பாக்கம் பஸ் நிலைய தலைமைச் செயலர் பிரின்ஸ்லி ராஜ்குமார், போக்குவரத்து தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • வெளியூர் செல்லும் பேருந்துகள் மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு.
    • மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து செல்ல இப்பேருந்துகள் இயக்கப்படும்.

    சென்னையில் தீபாவளியை ஒட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை முதல் வரும் 19ம் தேதி வரை 4 நாட்களுக்கு கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து முனையம் மற்றும் மாதாவரம் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து செல்ல இப்பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    20.10.2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் எதிர்வரும் 16.10.2025 முதல் 19.10.2025 ஆகிய 4 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    1. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

    2. கோயம்பேடு பேருந்து நிலையம்

    3. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்

    சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட மூன்று பேருந்து நிலையங்கள்/பகுதிக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன.

    எனினும், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக்கழகம் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 16.10.2025 முதல் 19.10.2025 ஆகிய 4 நாட்களில் இயக்கபட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு போக்குவரத்துக்கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    வார விடுமுறை நாட்களையொட்டி சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக்கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 315 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 310 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பஸ்களும் நாளை 55 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 100 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

    மாதவரத்தில் இருந்து இன்றும், நாளையும் 20 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    • திருப்பதி சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்து.
    • தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசைக்கு சிறப்பு பேருந்து.

    திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகை, செங்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

    அதேபோல், தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசைக்கு அக்டோபர் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    http://tnstc.in என்ற இணையதளத்தில் சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    • நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்குவது தொடர்பாக நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 4,253 சிறப்பு பஸ்கள் உள்பட 10,529 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது, 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

    இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அடுத்த மாதம் முதல் வாரத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிடுவார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மிலாடி நபி விழா வரும் 5ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
    • பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 875 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    முகமது நபியின் பிறந்த நாளான மிலாடி நபி விழா வரும் 5ம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், தொடர் விடுமுறை, முகூர்த்தம், மிலாடி நபி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    03/09/2025 (புதன்கிழமை) 04/09/2025 (வியாழக்கிழமை முகூர்த்தம்). 05/09/2025 (வெள்ளிக்கிழமை மீலாடி நபி) மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 06/09/2025 (சனிக்கிழமை) மற்றும் 07/09/2025 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம். ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 03/09/2025 (புதன்கிழமை) அன்று 360 பேருந்துகளும்.

    04/09/2025 (வியாழக்கிழமை) அன்று 710 பேருந்துகளும், 05/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 405 பேருந்துகளும் மற்றும் 07/09/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 875 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 03/09/2025 (புதன்கிழமை) அன்று 80 பேருந்துகளும், 04/09/2025 (வியாழக்கிழமை) மற்றும் 05/09/2025 (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் 105 பேருந்துகளும் மாதாவரத்திலிருந்து 03/09/2025 மற்றும் 04/09/2025 ஆகிய நாட்களில் 25 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்திலையில், 03/09/2025 அன்று 17,832 பயணிகளும், 04/09/2025 அன்று 23,032 பயணிகளும் இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 10,271 பயணிகளும் சனிக்கிழமை அன்று 7,317 பயணிகளும் ஞாயிறு அன்று 20,740 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.trstein மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கிளாம்பாக்கத்தில் இருந்து வியாழக்கிழமை 570 பேருந்துகள் இயக்கம்.
    • புதன் மற்றும் வெள்ளிக்கிழமை தலா 375 பேருந்துகள் இயக்கம்.

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    15/08/2025 அன்று சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 13/08/2025 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/08/2025 (புதன்கிழமை) அன்று 375 பேருந்துகளும் 14/08/2025 (வியாழக்கிழமை) அன்று 570 பேருந்துகளும், 15/08/2025 (வெள்ளிக் கிழமை) மற்றும் 16/08/2025 (சனிக்கிழமை) 375 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 14/08/2025 வியாழக்கிழமை அன்று 100 பேருந்துகளும் மற்றும் 15/08/2025 வெள்ளிக் கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர். ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 14/08/2025 மற்றும் 15/08/2025 ஆகிய இரு நாட்களுக்கு 24 சிறப்பு பேருத்துகளும் இயக்கப்படுகிறது.

    மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருத்தும் 17/08/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 715 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வார இறுதியில் புதன் கிழமை அன்று 8,145 பயணிகளும், வியாழக்கிழமை அன்று 26,534 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 5,004 பயணிகளும், சனிக்கிழமை 3,678 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 23,266 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு முன்பாகவே தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×