search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Buses"

    • 585 பஸ்களும் இயக்கப் பட உள்ளன.
    • நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 260 பஸ்களும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) 585 பஸ்களும் இயக்கப் பட உள்ளன.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 45 பஸ்கள் என 90 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    மேலும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    இதுமட்டுமன்றி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இருக்கை, படுக்கை மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட 50 பஸ்கள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், வார இறுதி நாள்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை 15 பஸ்களும், நாளை மறுநாள் பவுா்ணமி தினத்தை முன்னிட்டு 15 பஸ்களும் என 30 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பவுர்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை மறுநாள் 30 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 1,245 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதல் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    வார இறுதி நாளான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னை-புறநகர் பகுதியில் இருந்து வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கி வருகின்றன.

    வார விடுமுறை தினங்களான நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னையில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதல் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 265 பஸ்கள், (சனிக்கிழமை) 325 பஸ்கள் இயக்கப்படும்.

    இதுபோல, கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 65 பஸ்கள், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 15 என மொத்தம் 945 பஸ்கள் இயக்கப்படும்.

    இதுதவிர ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்தார்.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை திரும்ப 9-ந்தேதி 705 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பயணம் செய்ய 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    சுபமுகூர்த்தம், வார இறுதி நாட்களையொட்டி 7,8 மற்றும் 9-ந்தேதிகளில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 7-ந்தேதி 835 பஸ்களும் 8-ந்தேதி 570 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.

    கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருக்கு இந்த இரு நாட்களும் 160 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    10-ந்தேதி பள்ளிக்கூடம் திறக்க இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை திரும்ப 9-ந்தேதி 705 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த நிலையில் வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பயணம் செய்ய 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். நீண்ட தூரம் பயணம் செல்லக்கூடியவர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    • 4, 5-ந்தேதிகளில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பயணம் அதிகரிக்க கூடும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் ஜூன் மாதம் தொடக்கத்தில் வருகின்றன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஜூன் 6-ந்தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படுவதால் வெளியூர்களுக்கு சென்ற மாணவர்கள் பெற்றோர்களுடன் சென்னை திரும்பி வருகிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.

    கூலி வேலை, வியாபாரம், அலுவலக பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் கோடை விடுமுறையில் தங்கள் குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்கு சென்றனர். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விட்டு விட்டு தங்கள் பணியை தொடர்ந்து செய்து வரும் அவர்கள் பள்ளிக்கூடம் திறக்கப்படுவதால் குழந்தைகளை அழைத்து வருகின்றனர்.

    இந்த வாரம் இறுதிக்குள் பெரும்பாலானவர்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு திரும்பி விடுவார்கள் என்றாலும் சிலர் அடுத்த வாரம் பயணத்தை தொடங்கலாம். 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

    எனவே 4, 5-ந்தேதிகளில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பயணம் அதிகரிக்க கூடும் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு பயணம் அதிகரிக்க கூடும் என்பதால் கூடுதலாக பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கூறியதாவது:-

    வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் ஜூன் மாதம் தொடக்கத்தில் வருகின்றன. அதனால் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம்.

    அடுத்த வாரம் தேர்தல் முடிவு வருவதால் 4-ந்தேதி மாலையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும் 5-ந் தேதி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிக்க முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஜூன் 15-ந்தேதி வரை முகூர்த்த நாட்கள் வருவதால் தேவைக்கேற்ப பஸ் வசதி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 130 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    கோடை விடுமுறை, முகூர்த்த தினம் மற்றும் வார இறுதி நாளையொட்டி அரசு விரைவு போக்குவரத்து கழகம் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.

    நாளை, நாளை மறுநாள் முகூர்த்த தினம் என்பதால் சென்னையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 1,130 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.

    கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 130 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 1,460 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த பஸ்களில் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். வெளியூர்களுக்கு செல்ல இன்றும், நாளையும் 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    • நேற்று இரவு வெளியூர் செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • நள்ளிரவு 2 மணிவரை பயணிகள் காத்திருந்து பயணம் செய்தனர்.

    வண்டலூர்:

    சுபமுகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாளை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பயணிகள் சிரமமின்றி செல்லும் வகையில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி நேற்று முன்தினம் (வெள்ளிக் கிழமை) 1,618 பஸ்களில் 84 ஆயிரத்து 936 பயணிகளும் நேற்று (சனிக்கிழமை) 1,753 பஸ்களில் 91 ஆயிரத்து 156 பயணிகள் என மொத்தம் 3,771 பஸ்களில் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து உள்ளனர்.

    குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம் பகுதிகளுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    நேற்று இரவு கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் வெளியூர் செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதியது. நள்ளிரவு 2 மணிவரை பயணிகள் காத்திருந்து பயணம் செய்தனர். பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.

    இதேபோல் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப இன்று அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, வருகிற 10-ந்தேதி (நாளை), 11-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10-ந்தேதி (நாளை) 425 பஸ்களும், 11-ந்தேதி (சனிக்கிழமை) 505 பஸ்களும் மற்றும் சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 10-ந்தேதி மற்றும் 11-ந்தேதி 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதே போன்று, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை பயணம் செய்ய 10 ஆயிரத்து 985 பயணிகளும், சனிக்கிழமை பயணம் செய்ய 6 ஆயிரத்து 482 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்ய 10 ஆயிரத்து 237 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக இன்று 280 பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக இன்று (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம், நாளை (சனிக்கிழமை) மற்றும் 28-ந்தேதி (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 280 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 355 பஸ்களும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 55 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக இன்று 280 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 355 பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து 55 பஸ்களும் இந்த இடங்களில் இருந்தும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 527 பஸ்களும், நாளை 628 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
    • www.tnstc.in மற்றும் செயலி மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

    மாதவரம்:

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 527 பஸ்களும், நாளை (23-ந்தேதி) 628 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியையொட்டி சென்னை மாதவரத்தில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாதவரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் கூடுதலாக தலா 30 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் www.tnstc.in மற்றும் செயலி மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • 6 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • கோவில் வளாகத்திற்குள் 3 மருத்துவ குழுக்கள் , 85 நிலையான மருத்துவ குழுக்களும், 108 அவசர ஊர்தி 20 வாகனங்களும், 15 மொபைல் அவசர ஊர்தியும் நிறுத்தப்படும்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் சித்ரா பவுர்ணமி முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

    சித்ரா பவுர்ணமி நாளை (செவ்வாய்ழமை) அதிகாலையில் தொடங்கி, மறுநாள் (புதன்கிழமை) அதிகாலையில் நிறைவடைகிறது.

    இந்த ஆண்டு திருவண்ணாமலைக்கு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

    சித்ரா பவுர்ணமி நாளில் நகரினை இணைக்கும் 9 முக்கிய சாலைகளில் 13 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு அதில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதே போல் நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகள் என 55 இடங்களில் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த விழுப்புரம் மற்றும் வேலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து கிரிவலப்பாதைக்கு செல்ல குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்து தனியார் பஸ்கள் 20 மற்றும் 81 பள்ளி வாகனங்கள் இயக்கப்பட உள்ளன. இலவச பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    6 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    கோவில் வளாகத்திற்குள் 3 மருத்துவ குழுக்கள் , 85 நிலையான மருத்துவ குழுக்களும், 108 அவசர ஊர்தி 20 வாகனங்களும், 15 மொபைல் அவசர ஊர்தியும் நிறுத்தப்படும்.

    2 டி.ஐ.ஜி. தலைமையில் 10 போலீஸ் சூப்பிரண்டுகள், 25 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் என 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவில் வளாகத்திற்குள் 140 கண்காணிப்பு கேமராக்களும், கிரிவல ப்பாதையில் 97 கண்காணிப்பு கேமராக்களும், 24 இடங்களில் காவல் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

    மேலும் கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தீயணைப்பு மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலகம் ஆகிய 4 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் 1,800 தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட உள்ளனர். இணைய வழியில் அனுமதி பெற்ற 105 இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்கப்படும்.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நகரில் மற்றும் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும். கிரிவலப்பாதையில் குடிநீர் வசதிகளும், 106 இடங்களில் தற்காலிக கழிப்பறை வசதிகளும், 425 இடங்களில் நிரந்தர கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 19-ந்தேதி நடக்கும் வாக்குப்பதிவை முன்னிட்டு இன்றும், நாளையும் 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்பதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் வாக்களிக்க சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பஸ்களை இயக்குகிறது. பயணிகள் முறையாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

    சென்னையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு ஊர்களுக்கு புறப்பட உள்ள 2 ஆயிரத்து 92 வழக்கமான சேவைகள் மற்றும் 1,785 சிறப்பு சேவைகளில் கிட்டத்தட்ட 95 சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    தொடர்ந்து இன்று (புதன்கிழமை) புறப்படும் பஸ்களிலும் போதுமான இருக்கைகள் காலியாக இருக்கின்றன. நாளை (வியாழக்கிழமை) சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள், கூட்ட நெரிசலை தவிர்க்க, தங்கள் பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    19-ந்தேதி நடக்கும் வாக்குப்பதிவை முன்னிட்டு இன்றும், நாளையும் 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த 2 நாட்களில் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 60 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதேபோல், தேர்தல் முடிந்து, வருகிற 20 மற்றும் 21-ந் தேதிகளில் 8 ஆயிரத்து 304 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. டெல்டா மற்றும் தென் மாவட்டங்களுக்கு, திருவண்ணாமலை, அரியலூர், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

    சென்னையில் இருந்து 6 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செல்வதாக இருந்தால் போதுமான பஸ்களை இயக்க போக்குவரத்து துறை தயாராக இருக்கிறது. தற்போது நெல்லை, நாகர்கோவிலுக்கு அதிக போட்டி ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2 நாட்களுக்கு 3 ஆயிரத்து 60 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • 17-ந் தேதிக்கான 31 ஆயிரத்து 308 முன்பதிவு இருக்கைகளில் 6 ஆயிரத்து 475 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன், 2 ஆயிரத்து 970 சிறப்பு பஸ்கள் என 2 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7 ஆயிரத்து 154 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 2 நாட்களுக்கு 3 ஆயிரத்து 60 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மேற்படி சிறப்பு இயக்க தினங்களில் வருகிற 18-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு பெரும்பான்மையான தடங்களில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. தற்போதைய (நேற்றைய) நிலவரப்படி 16-ந் தேதிக்கான (இன்று) 30 ஆயிரத்து 630 முன்பதிவு இருக்கைகளில், ஆயிரத்து 22 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, 29 ஆயிரத்து 608 இருக்கைகள் காலியாக உள்ளன.

    இதே போன்று, 17-ந் தேதிக்கான 31 ஆயிரத்து 308 முன்பதிவு இருக்கைகளில் 6 ஆயிரத்து 475 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 ஆயிரத்து 833 இருக்கைகள் காலியாக உள்ளன. எனவே, 18-ந் தேதி கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து 16, 17-ந் தேதிகளில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×