search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Christmas"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
    • கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் கிறிஸ்துமஸ் கேக்காக தயாரிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் பீச் ரிசார்ட் ஓட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் செய்யும் திருவிழா நடந்தது.

    40 கிலோ அளவில் முந்திரி, திராட்சை, பாதாம் மற்றும் பல்வேறு உலர் பழங்கள், ஒயின் வகைகள் மற்றும் வெளிநாட்டு உயர் ரக மதுபானங்களை கொண்டு கலவையாக கேக் தயாரிக்க ஊற வைக்கப்பட்டது.

    இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். ரிசார்ட் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.

    ஊறவைத்த கலவை 40 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன் கிறிஸ்துமஸ் கேக்காக தயாரிக்கப்படும்.

    அந்த கேக் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு வரை பரிமாறப்பட உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அபுதாபிக்கான விமான கட்டணம் ரூ10,284ல் இருந்து ரூ28,647 ஆக உயர்ந்துள்ளது.
    • வரும் நாட்களில் டிக்கெட் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து ரூ1 லட்சத்தை தாண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு பணிபுரியக்கூடிய அவர்கள், விடுமுறை கிடைக்கும் போதும், பண்டிகை காலங்களிலும் தங்களது சொந்த ஊருக்கு வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களின் போது பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வந்து செல்வார்கள். இந்த ஆண்டும் கிறிஸ்துமல் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளின் போது பலர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை சீசன் தொடங்க உள்ளதை முன்னிட்டு தற்போதே கேரள விமானங்களில் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து வளைகுடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையங்களை கேரள மாநி லத்தினர் மட்டுமின்றி, தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் பயன்படுத்துகின்றனர்.

    இதனால் இந்த விமான நிலையங்கள் எப்போதுமே பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் தான், தற்போது விமான கட்டணங்கள் கடுமையாக உயர்ந்திருக்கிறது. பயண ஏஜென்சிகள் பண்டிகை கால விமான டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்துள்ளன. இதனால் முன்பதிவு தளத்தில் கிடைக்கும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.

    இதன் காரணமாக ஒட்டுமொத்த விமான கட்டணமும் உயர்ந் துள்ள தாக கூறப்படுகிறது. கோழிக்கோட்டில் இருந்து துபாய் செல்லும் விமான கட்டணம் தற்போது ரூ11 ஆயிரமாக உள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் இது ரூ.27ஆயிரத்திற்கும் மேல் அதிகரிக்கும் என தெரிகிறது.

    துபாயில் இருந்து கேரளா திரும்புவதற்கான டிக்கெட்டுகள் விடுமுறை நாட்களில் ரூ7 ஆயிரம் முதல் ரூ17 ஆயிரம் வரை இருக்கும். இது 90 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அபுதாபிக்கான விமான கட்டணம் ரூ10,284ல் இருந்து ரூ28,647 ஆக உயர்ந்துள்ளது.

    இதேபோன்று ஷர்ஜாவில் இருந்து கேரளாவிற்கு திரும்புவதற்கான டிக்கெட் கட்டணமும் மிகவும் உயர்ந்திருக்கிறது. வரும் நாட்களில் டிக்கெட் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து ரூ1 லட்சத்தை தாண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த கட்டண உயர்வால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். இதுபோன்ற கட்டண உயர்வை தவிர்க்க பண்டிகை காலங்களில் விமான சேவைகள் மற்றும் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விமான கட்டணத்தை விமான நிறுவனங்கள் பலமடங்கு உயர்த்தியிருப்பது வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மாநில மக்களை கடும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
    • எரிபொருள் விலை உயர்வே விமான கட்டணத்தை உயர்த்த காரணம் என்று விமான நிறுவனங்கள் கூறியிருக்கின்றன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். வளைகுடா நாடுகளில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட கேரள மாநிலத்தினர் இருப்பதாகவும், அவற்றில் சவுதியில் மட்டும் 4.5 லட்சம் பேர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    வளைகுடா நாடுகளில் வசித்துவரும் அவர்கள், குடும்பத்தினரை பார்ப்பதற்காக அவ்வப்போது விடுமுறை எடுத்து ஊருக்கு வருவார்கள். மேலும் ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊருக்கு வந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    பண்டிகை காலங்களின் போது அதிகமானோர் தங்களது நாடுகளுக்கு செல்லும் நேரத்தில் விமான கட்டணத்தை உயர்த்துவது வாடிக்கையாக நடந்துவருகிறது. விமான நிறுவனங்களின் இந்த செயல்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் பயணிப்பதற்கான விமான கட்டணத்தை விமான நிறுவனங்கள் 4 மடங்கு உயர்த்தியுள்ளது. வழக்கமான நாட்களில் துபாயில் இருந்து கேரளாவுக்கு வர விமான கட்டணம் 10ஆயிரம் ரூபாய். ஆனால் கிறிஸ்துமஸ் காலத்தில் இந்த கட்டணத்தை 40ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு விமான கட்டணத்தை விமான நிறுவனங்கள் பலமடங்கு உயர்த்தியிருப்பது வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மாநில மக்களை கடும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. எரிபொருள் விலை உயர்வே விமான கட்டணத்தை உயர்த்த காரணம் என்று விமான நிறுவனங்கள் கூறியிருக்கின்றன.

    அதாவது கடந்த ஜூன் மாதம் முதல் எரிபொருள் விலை உயர்வு 32 சதவீதத்தை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக விமான நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. சட்டப்படி விமான கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் விமான நிறுவனங்களுக்கு இருக்கிறது.

    இருந்தபோதிலும் அதில் தலையிட மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்பதால், தற்போது விமானகட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள நிகழ்வு தற்போது புதுவையிலும் 10 ஆண்டுகளாக நடக்கிறது.
    • 150 கிலோ அளவிலான பழ வகைகள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் பயன்படுத்தப்பட்டன.

    புதுச்சேரி:

    புதுவை நட்சத்திர ஓட்டல்களில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கேக் தயாரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வழங்கப்படும்.

    இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய முறையில் கேக் தயாரிக்கும் பணி நட்சத்திர ஓட்டல்களில் தொடங்கியது. பழ வகைகளை மதுபானங்களில் ஊற்றி ஊறல் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    150 கிலோ அளவிலான பழ வகைகள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் இதற்கு பயன்படுத்தப்பட்டன. இதனுடன் 25 லிட்டர் மதுபானங்களும் கலந்து ஊற வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வடன் பங்கேற்றனர்.

    வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்வு தற்போது புதுவையிலும் 10 ஆண்டுகளாக நடக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமையில் மீண்டும் சென்னை திரும்புவார்கள்.
    • அனைத்து போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதலாக பஸ்கள் சென்னைக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாளையுடன் முடிகிறது. 2-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

    பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் இன்று இரவு புத்தாண்டை கொண்டாடி விட்டு நாளை (1-ந்தேதி) வெளியூர்களில் இருந்து சென்னை திரும்புகிறார்கள். 9 நாட்கள் விடுமுறை முடிந்து பெரும்பாலானவர்கள் நாளை சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு பயணம் செய்வார்கள்.

    இதனால் பஸ், ரெயில்களில் இடங்கள் நிரம்பி விட்டன. குறிப்பாக தென் மாவட்டப் பகுதியில் இருந்து வரும் ரெயில்களில் எல்லா வகுப்புகளும் நிரம்பி விட்டன.

    மக்களின் தேவை அதிகரித்ததால் ஆம்னி பஸ்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான ஆம்னி பஸ்கள் நிரம்பி விட்டன. இதையடுத்து அரசு சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.

    திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு நாளை 500 சிறப்பு பஸ்களும், திங்கட்கிழமை 300 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    வெளியூர்களில் இருந்து வழக்கமாக சென்னைக்கு 2,100 பஸ்கள் இயக்கப்படும். பொதுமக்கள் தேவையைக் கருதி கூடுதலாக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமையில் மீண்டும் சென்னை திரும்புவார்கள். அதன் அடிப்படையில் அனைத்து போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதலாக பஸ்கள் சென்னைக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அரசு விரைவு பஸ்களில் இருக்கைகள் முழுவதும் நிரம்பி விட்டதால் இன்று முதல் திங்கட்கிழமை வரை பயணம் செய்ய 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

    இன்று பயணம் செய்ய 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப மட்டும் 12 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.

    நாளைய பயணத்திற்கு 22 ஆயிரம் பேரும், 2-ந்தேதிக்கு 10 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    வெளியூர்களில் இருந்து சென்னைக்கு திரும்புவது போல இங்கிருந்தும் பலர் வெளியூர் புறப்பட்டு செல்கின்றனர். அதனால் இன்று முதல் 3 நாட்கள் பஸ், ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுவர்கள் நடனமாடி அன்பை பரிமாறிக் கொண்டார்கள்.
    • வயலூரில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட கிறித்தவ பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். கிறிஸ்து இயேசு பிறப்பு விழாவை முன்னிட்டு கெத்சமனே காஸ்பல் மிஷன் சபை சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. விழாவிற்கு அகரம்சீகூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வன், செல்வமுருகன் மானிய நடுநிலைப்பள்ளி நிர்வாகி ராஜசேகர், மற்றும் கோவையிலிருந்து சகோதரர்கள் கர்ணன், தமிழ்ச்செல்வன், ராஜன், சாமுவேல் ஆகியோர் கிறிஸ்துவின் பிறப்புவிழாவை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி சிறப்பு ஆராதனையும் திருப்பலியும் நடைபெற்றது.இவ்விழாவில் சிறுவர்களின் நடனமாடியும் நடித்துக் காட்டியும் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். இவ்விழாவில் போதகர் ஆண்ட்ரூஸ் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்துவின் அன்பினை கூறி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார் நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தையும் போதகர் கார்த்திகை ராஜா ஒருங்கிணைத்து நடத்தினார்.





    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறப்பு திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்றன.
    • அரியலூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஏலக்குறிச்சி, வரதராசன்பேட்டை,தென்னூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பெருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன. இயேசு பிறப்பை கொண்டாடும் விதமாக கடந்த 10 நாள்களுக்கு முன்னரே கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களையும், குடில்களையும் அமைத்திருந்தனர். கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி அதிகாலை முதலே அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடைபெற்றன.அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிச்சியிலுள்ள புனித அடைக்கலமாதா அன்னை தேவாலயம், வரதராசன்பேட்டை தொன்போஸ்கோ தேவாலயம், அலங்கார அன்னை தேவாலயம், தென்னூர் புனித லூர்து அன்னை தேவாலயம், கூவத்தூர் புனித அந்தோனியார் ஆலயம், பட்டிணங்குறிச்சி புனித லூர்து அன்னை ஆலயம், அகினேஸ்புரம் புனித அகினேசம்மாள் ஆலயம், கீழநெடுவாய் புனித அன்னை ஆலயம், அரியலூர் சின்ன அரண்மனை தெருவிலுள்ள புனித லூர்து அன்னை தேவாலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம், பெந்தகோஸ்தே சபை உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள், வழிபாடுகள் நடைபெற்றன.மேலும், கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு உரையை அந்தந்த தேவாலயங்களின் பங்குதந்தைகள் வழங்கினர். கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டத்திற்கு நகர தலைவர் வில்லியம் தாமஸ் தலைமை தாங்கினார்.
    • முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு,ஆலடி சங்கரையா ஆகியோர் கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில், நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

    நகர தலைவர் வில்லியம் தாமஸ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்ட ராஜா, வக்கீல் பிரிவு மாநில துணைத் தலைவர் பால்ராஜ், காங்கிரஸ் வட்டார பொறுப்பாளர் ரூபன் தேவதாஸ், இளைஞரணித் தலைவர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெல்லை முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ராமசுப்பு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆலடி சங்கரையா ஆகியோர் கலந்துகொண்டு, இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதங்களை பின்பற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினர்.

    தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் நகரத் தலைவர் செல்லையா கவுரவிக்கப்பட்டார்.

    நிகழ்ச்சியில், முன்னாள் டி.எஸ்.பி. ஜெயராஜ், காங்கிரஸ் மூத்த தலைவர் வேல்குமார் ராமசாமி, மனித உரிமை துறை மாவட்ட தலைவர் ராஜாராம், நகரச் செயலாளர் லிவிங்ஸ்டன் விமல், யேசுதாசன், ஜோசப், மாடக்கண்ணு, ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத் தலைவர் பிரகாஷ், அரவிந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
    • மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடம் அணிந்தும், மாணவிகள் தேவ தூதர்கள் போன்று உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர். இசை இசைத்து பாட்டு பாடி கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவ-மாணவிகள் கேரல் ரவுண்ட் சென்றனர். கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த மாணவர் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினர்.

    பள்ளியில் இயேசு பிறந்தது போன்ற குடில் அமைக்கப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் தலைமை தாங்கினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேவாலய வளாகத்தில் இயேசு பிறப்பை பிரதிபலிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது.
    • கிறிஸ்துமஸ் மரம், உட்பட பல்வேறு புதுவகையான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    தேவாலய வளாகத்தில் இயேசு பிறப்பை பிரதிபலிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் கிறிஸ்துமஸ் மரம், உட்பட பல்வேறு புதுவகையான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    விதவிதமான வடிவங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் பாடல்களை ஒலித்தனர். 12 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.

    கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸால் உலகமே சிரமப்பட்டதால் பிறக்க இருக்கும் 2023 புத்தாண்டு முதல் இது போன்ற வைரஸ் தொற்றுகளால் உருவாக்கும் நோய்கள் வராமல் மக்கள் நலமுடன் வாழ இவ்வாலயத்தில் பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தம் புது ஆடை அணிந்து மிகவும் மகிழ்ச்சியுடன் முழு மனதுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதை அடுத்து அனைத்து கிறிஸ்தவ மக்களும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.