என் மலர்
நீங்கள் தேடியது "சிறப்பு அலங்காரங்கள்"
- இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- ராய்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், மாலுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மாலில் வேலைபார்க்கும் ஊழியர்களையும் அந்த கும்பல் மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவில் தெருவோரத்தில் கிறிஸ்தவப் பொருட்களை விற்பனை செய்து வந்த மக்களை மிரட்டிய மதவாத கும்பல், உடனடியாக அவர்களை காலி செய்ய சொன்ன வீடியோ இணையத்தில் வைரலானது.இந்த வீடியோவில், :இது இந்து ராஷ்டிரம்.. இங்க கிறிஸ்தவப் பொருட்களை விற்கக் கூடாது.." என்று அந்த கும்பல் மிரட்டியது குறிப்பிடத்தக்கது.
- ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
- மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி வீதி உலா செண்டை மேளங்கள் முழங்க நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கை நல்லூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பனுக்கு 10-ம்ஆண்டு உற்சவ விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட தேரில் ஐயப்பன், பிள்ளையார் ஆகிய சுவாமிகளுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஆலயத்தின் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா காட்சி செண்டை மேளங்கள் முழங்க நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பச்சைகாளி, சிவன், காத்தவராயன் உள்ளிட்ட வேடங்கள் அணிந்த நடனம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.






