என் மலர்
நீங்கள் தேடியது "chhattisgarh"
- தந்தேவாடாவுக்கு அருகிலுள்ள ககல்லூர் வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) அன்று பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 12 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
தந்தேவாடாவுக்கு அருகிலுள்ள ககல்லூர் வனப்பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
இந்தச் சண்டையில், மாவட்ட ரிசர்வ் கார்டை சேர்ந்த மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு வீரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது. உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றபட்டன.
- அவர்களில் 27 பேருக்கு மொத்தம் ரூ. 65 லட்சம் வெகுமதி அளிக்கப்பட்டது.
- தண்டேவாடா மாவட்டத்தில் தலை க்கு விலை வைக்கப்பட்ட 165 மாவோயிஸ்டுகள் உட்பட மொத்தம் 508 பேர் சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் தண்டேவாடா மாவட்டத்தில் 37 மாவோயிஸ்டுகள் இன்று சரணடைந்தனர். அவர்களில் 12 பேர் பெண்கள் ஆவர்.
தண்டேவாடாவில் உள்ள டிஆர்ஜி அலுவலகத்தில் மூத்த காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் முன்னிலையில் அவர்கள் சரணடைந்தனர்.
அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களில் 27 பேருக்கு மொத்தம் ரூ. 65 லட்சம் வெகுமதி அளிக்கப்பட்டது.
கடந்த 20 மாதங்களில் தண்டேவாடா மாவட்டத்தில் தலை க்கு விலை வைக்கப்பட்ட 165 மாவோயிஸ்டுகள் உட்பட மொத்தம் 508 பேர் சரணடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசின் மறுவாழ்வு திட்டத்தின்படி, சரணடைபவர்களுக்கு ரூ. 50,000 நிதி உதவியும், திறன் மேம்பாடு மற்றும் விவசாய நிலத்தில் பயிற்சி போன்ற சலுகைகளும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
- அவர்கள் அனைவரின் தலைக்கும் மொத்தம் ரூ. 89 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்திருந்தது.
- நாராயண்பூர் எஸ்பி ராபின்சன் குடியா தெரிவித்தார்.
சத்தீஸ்கரின் மாவோயிட் ஆதிக்கம் நிறைந்த பஸ்தர் பகுதியில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் இன்று 19 பெண்கள் உட்பட 28 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர்.
அவர்கள் அனைவரின் தலைக்கும் மொத்தம் ரூ. 89 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
SLR, INSAS மற்றும் .303 ரைபிள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.

2025 ஆம் ஆண்டில் இதுவரை நாராயண்பூர் மாவட்டத்தில் மொத்தம் 287 மாவோயிஸ்ட் போராளிகள் சரணடைந்துள்ளனர் என்று நாராயண்பூர் எஸ்பி ராபின்சன் குடியா தெரிவித்தார்.
பஸ்தர் பகுதியில் கடந்த 50 நாட்களில் 512 மாவோயிஸ்ட் போராளிகள் வன்முறையைக் கைவிட்டு, மைய நீரோட்டத்தில் இணைந்துள்ளதாக பஸ்தார் ரேஞ்ச் ஐஜி சுந்தர்ராஜ் பதிலிங்கம் தெரிவித்தார்.
- பள்ளி நிர்வாகம் தவறை ஒப்புக்கொண்டுள்ளது
- குழந்தை உடல் ரீதியாக காயமடையவில்லை என்றாலும், உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சத்தீஸ்கரில், வீட்டுப்பாடம் முடிக்காததால் 4 வயது மாணவன் மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் சூரஜ்பூர் நகரில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில், தனியார் பள்ளி ஒன்றில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து பெரும் சீற்றத்தை தூண்டியுள்ளது. நர்சரி முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஹான்ஸ் வாஹினி வித்யா மந்திர் பள்ளி திங்கள்கிழமை காலை வழக்கம்போல திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளிக்கு வந்தநிலையில், நர்சரி வகுப்பில் ஆசிரியர் காஜல் சாஹு வீட்டுப்பாடங்களை சரிப்பார்த்துள்ளார்.
அப்போது அதில் ஒரு மாணவன் மட்டும் வீட்டுப்பாடத்தை முடிக்காநிலையில், அவரை வகுப்பிலிருந்து வெளியேற்றியுள்ளார். பின்னர் மற்றொரு ஆசிரியரின் உதவியோடு மாணவனின் சட்டையில் கயிற்றால் கட்டி, பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மரத்தில் அவனை தொங்கவிட்டுள்ளார். நான்கு வயது சிறுவன் மணிக்கணக்கில் மரத்தில் தொங்கிய நிலையில், அழுது, கூச்சலிட்டுள்ளான். குழந்தையின் அழுகுரலை அலட்சியப்படுத்திய ஆசிரியர் அங்கேயே நின்றுள்ளார். இதனை அருகில் இருந்த வீடியோ எடுத்துள்ளார். அதனை தடுக்க முயன்றுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற தனியார் பள்ளி
இருப்பினும் அவர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலானதை தொடர்ந்து வட்டார கல்வி அதிகாரி (BEO) டி.எஸ். லக்ரா உடனடியாக பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக மூத்த அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார். இந்த சம்பவம் தனது கவனத்திற்கு வந்துள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரி (DEO) அஜய் மிஸ்ரா உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும்நிலையில், பள்ளி நிர்வாகம் தவறை ஒப்புக்கொண்டுள்ளது. பள்ளி நிர்வாகி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். குழந்தை உடல் ரீதியாக காயமடையவில்லை என்றாலும், உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்கு உள்ளூர்வாசிகளும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
- 2025 இல் மட்டும் 357 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான், "மாவோயிஸ்டுகள் இருப்பது குறித்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அடர்ந்த காட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. துப்பாக்கிச் சண்டையில் இதுவரை மூன்று மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர்" என்றார்.
2025 இல் மட்டும் 357 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளை அழிக்க 2026 மார்ச் மாதத்தை இலக்காக த்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்ணயித்துள்ளார்.
- ருஷோத்தமின் இறப்பு செய்தியைக் கேள்விப்பட்டு உறவினர்கள் அங்கு வந்தனர்.
- தனது மகன் உயிருடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்.
சத்தீஸ்கரில் நவம்பர் 1 ஆம் தேதி சூரஜ்பூர் மாவட்டத்தின் மன்பூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து ஒரு உடல் மீட்கப்பட்டது.
அருகில் உள்ள சந்தர்பூர் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான புருஷோத்தமின் குடும்பத்தினர், இரண்டு நாட்களாக அவரை காணவில்லை என காவல்துறையை அணுகியிருந்த நிலையில் அவர்களுக்கு அந்த உடல் காண்பிக்கப்பட்டது.
குடும்பத்தினர், இறந்தவர் புருஷோத்தம் என அடையாளம் காட்டிய நிலையில் காவல்துறையினர் விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீசார் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
குடும்பத்தினர் உடலை அடக்கம் செய்து இறுதிச் சடங்கு செய்தனர். பின்னர், புருஷோத்தமின் இறப்பு செய்தியைக் கேள்விப்பட்டு அங்கு வந்த உறவினர்கள், புருஷோதமை சந்தர்பூரில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள அம்பிகாபூரில் பார்த்ததாக குடும்பத்தினருக்குத் தெரிவித்தனர்.
இறுதியில் புருஷோத்தம் அங்கு ஒரு உறவினரின் வீட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு நவம்பர் 4 ஆம் தேதி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். புருஷோத்தமின் தாய் மான்குன்வர், தனது மகன் உயிருடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறார்.
புருஷோத்தமின் குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்ட நபரின் டி.என்.ஏ மாதிரிகள், கைரேகைகள், உடைகள் மற்றும் பிற உடைமைகள் பாதுகாக்கப்பட்டு உடலின் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை வைத்து உடலை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது.
பிரேத பரிசோதனை அறிக்கை அந்த நபர் நீரில் மூழ்கி இறந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதய நோயக்கு இலவச அறுவை சிகிச்சை பெற்ற சுமார் 2,500 குழந்தைகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
- கல்வி மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து மோடி அன்புடன் விசாரித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் உருவானதன் 25-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூரில் நடைபெற்ற 'சத்தீஸ்கர் ரஜத் மஹோத்சவ்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அவர் 14,260 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக நவ ராய்ப்பூரில் அடல் நகரில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மருத்துவமனையில், வாழ்க்கை பரிசு என்ற திட்டத்தின் கீழ் பிறவியிலிருந்து உள்ள இதய நோயக்கு இலவச அறுவை சிகிச்சை பெற்ற சுமார் 2,500 குழந்தைகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
அவர்களிடம் அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து மோடி அன்புடன் விசாரித்தார். அவருடன் பேசிய குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அளித்து அவர்களுக்கு மறுபிறவி அளிக்கும் மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பிரதமர் மனதார பாராட்டினார்.
- கடந்த 22 மாதங்களில் சத்தீஸ்கரில் 477 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
- அபுஜ்மத்தின் பெரும்பகுதி நக்சலைட்டுகள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் மார்ச் 2026க்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
நக்சலைட்டுகள் அதிக நடமாட்டம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தில் சமீபகாலமாக அவர்களின் தாக்குதலை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். உயர்மட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையடுத்து தலைமறைவாக இருக்கும் நக்சலைட்டுகள் போலீசில் சரண் அடைந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று சத்தீஸ்கர் மாநிலம் ஜத்தல்பூரில் நக்சலைட்டுகள் 208 பேர் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.
அவர்கள் துப்பாக்கிகள் உள்ளிட்ட 153 ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதன் மூலம் அபுஜ்மத்தின் பெரும்பகுதி நக்சலைட்டுகள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 22 மாதங்களில் சத்தீஸ்கரில் 477 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். 2,110 பேர் சரணடைந்தனர். 1,785 பேர் கைது செய்யப்பட்டனர் என்று முதலமைச்சர் எடுத்துரைத்தார்.
என்று பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மகாராஷ்டிராவில், நேற்று 61 பேர் மீண்டும் மைய நீரோட்டத்திற்கு திரும்பினர்.
- மார்ச் 31, 2026 க்கு முன்பு நக்சலிசத்தை வேரோடு அகற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நக்சலைட்டுகளுக்கு எதிரான நமது போராட்டத்தில் ஒரு முக்கிய நாள்.
இன்று, சத்தீஸ்கரில் 170 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர். நேற்று சத்தீஸ்கரில் 27 பேர் ஆயுதங்களை கீழே போட்டனர். மகாராஷ்டிராவில், நேற்று 61 பேர் மீண்டும் மைய நீரோட்டத்திற்கு திரும்பினர்.
மொத்தத்தில், கடந்த இரண்டு நாட்களில் 258 இடதுசாரி பயங்கரவாதிகள் வன்முறையை கைவிட்டனர்.
இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்து, வன்முறையை கைவிடுவதற்கான அவர்களின் முடிவை நான் பாராட்டுகிறேன்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் இடைவிடாத முயற்சிகளால் நக்சலைட்டு அதன் இறுதி மூச்சை இழுத்துக் கொண்டிருக்கிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
எங்கள் கொள்கை தெளிவாக உள்ளது: சரணடைய விரும்புவோர் வரவேற்கப்படுகிறார்கள், மேலும் துப்பாக்கியை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் எங்கள் படைகளின் கோபத்தை சந்திப்பார்கள்.
நக்சலைட் பாதையில் இன்னும் இருப்பவர்கள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மைய நீரோட்டத்தில் சேருமாறு நான் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
மார்ச் 31, 2026 க்கு முன்பு நக்சலிசத்தை வேரோடு அகற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
- சரணடைந்தவர்களில் 21 பெண்கள், ஒரு 17 வயதுச் சிறுவன், மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஆகியோரும் அடங்குவர்
- சரணடைந்த மாவோயிஸ்டுகள் அனைவருக்கும் ஆரம்ப நிதியுதவியாக தலா ரூ. 50,000 வழங்கப்பட்டது.
சத்தீஸ்கரின் தாந்தேவாடா மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 71 மாவோயிஸ்டுகள் காவல்துறை அதிகாரிகளிடம் சரணடைந்தனர்.
இதில், 30 மாவோயிஸ்டுகள் மொத்தமாக ரூ. 64 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நபர்கள் ஆவர்.
சரணடைந்தவர்களில் 21 பெண்கள், ஒரு 17 வயதுச் சிறுவன், மற்றும் 16, 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஆகியோரும் அடங்குவர்.
பஸ்தர் சரக காவல்துறை அறிமுகப்படுத்திய மறுவாழ்வுத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு இவர்கள் சரணடைந்துள்ளதாக தாந்தேவாடா காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் ராய் தெரிவித்தார்.
சரணடைந்த மாவோயிஸ்டுகள் அனைவருக்கும் ஆரம்ப நிதியுதவியாக தலா ரூ. 50,000 வழங்கப்பட்டது.
நாராயண்பூர் மாவட்டத்தில் திங்களன்று நடந்த மோதலில், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர்களான ராஜு தாதா மற்றும் கோசா தாதா இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சிறப்பு அதிரடிப்படை, கோப்ரா வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- அடர்ந்த காட்டில் நடைபெற்ற சண்டையில் 8 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் இன்று நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
சிறப்பு அதிரடிப்படை (SIT) கோப்ரா (CoBRA) படை வீரர்களுடன் உள்ளூர் போலீஸ் குழுவினர் சேர்ந்து மெய்ன்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நக்சலைட்டுகளுக்கும்- வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் குறைந்தது 8 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராய்ப்பூர் சரக ஐஜி தெரிவித்துள்ளார்.
- தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள்.
- பல மாவோயிஸ்டுகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா-நாராயண்பூர் எல்லையில் அபுஜ்மத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
பாதுகாப்பு படை வீரர்களின் தாக்குதலில் 5 முதல் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தேடுதல் வேட்டையின்போது பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள். பாதுகாப்பு படையின் பதிலடி தாக்குதலில் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். பல மாவோயிஸ்டுகளின் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.






