என் மலர்
இந்தியா

மாலுக்குள் புகுந்து கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சேதப்படுத்திய விவகாரம்: 4 பேர் கைது
- கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
- ராய்ப்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தன.
ராய்ப்பூர்:
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டன.
அப்போது, மாலுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டது.
மாலில் வேலை பார்க்கும் ஊழியர்களையும் அந்த கும்பல் மிரட்டியது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story






