என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாண்டா கிலாஸ்"

    • பொய் என தெரிந்தும் சிலவற்றை நம்புவது கற்பனை உலகம் தரும் இன்பத்திற்காக
    • டச்சு கலாச்சாரத்தில் 'சிண்டெர்கிலாஸ்' (Sinterklaas) என்று அழைக்கப்பட்ட இவர், அமெரிக்க கலாச்சாரத்தில் 'சாண்டா கிளாஸ்' ஆக மாறினார்.

    உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்திருப்பர். பண்டிகை முடிந்தாலும், இனி வர இருப்பதாக இருந்தாலும் கிறிஸ்துமஸ் என்றாலே அதிகம் பேசப்படுபவர் கிறிஸ்துமஸ் தாத்தா. அதாவது சாண்டா கிலாஸ். கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது சாண்டா தாத்தா மான்பூட்டிய வண்டியில் வானத்தில் இருந்து இறங்கிவந்து நமக்கு பிடித்தவற்றை பரிசாக வழங்குவார் என்று நீண்டகாலம் பேசிவருகிறோம்.

    சிறுவயதாக இருக்கும்போது மட்டுமில்லை, பரிசு கிடைக்காவிட்டாலும் பெரியவர்களாக ஆனாலும் நாம் அதை நம்பிக் கொண்டிருக்கிறோம். ஏன்? கிறிஸ்துமஸ் தாத்தா வரமாட்டார் என தெரிந்தும் அதை நாம் நம்புவது கற்பனை உலகம் தரும் இன்பம் மற்றும் நிஜ வாழ்க்கையின் அழுத்தத்திலிருந்து கிடைக்கும் விடுதலை.

    அதாவது சுற்றி இருப்பவர்களே நம் தேவையை, ஆசையை உணராதபோது சாண்டா கிலாஸ் அதனை அறிந்து அதனை நிறைவேற்றும்போது ஒரு மகிழ்ச்சி. பொய்மையும் வாய்மையுடைத்து புரை தீர்க்கும் நன்மை பயக்கும் எனில், அந்தப் பொய் நன்மையை விளைவிப்பதாக இருந்தால் அதைக் கண்டு மகிழலாம் என வள்ளுவர் கூறுவது போல, சில கற்பனைகள் மனதிற்கு நிம்மதியைத் தருகின்றன. அதுபோலத்தான் இதுவும்.

    சரி கதைக்கு வருவோம். உண்மையில் சாண்டா கிலாஸ் இருக்கிறாரா? ஆம். இப்போது இருக்கிறாரா என்றால் இருக்கிறார், இருந்தார். செயிண்ட் நிக்கோலஸ், இன்றைய துருக்கி நாட்டில் வாழ்ந்த ஒரு கிறித்தவ ஆயர். நிக்கோலஸ் இரக்கம், நல்லுணர்வு மற்றும் குழந்தைகளிடம் அதிக அன்பு காட்டும் குணம் நிறைந்தவர். மேலும் ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் ரகசியமாக பரிசுகளை வழங்கும் குணம் கொண்டவர். இவர் இறந்தபின் இவர்குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. அதில் ஒன்றுதான் கிறிஸ்துமஸ் அன்று குழந்தைகளுக்கு பரிசுகொடுப்பது. 

    காலப்போக்கில், டச்சு கலாச்சாரத்தில் 'சிண்டெர்கிலாஸ்' (Sinterklaas) என்று அழைக்கப்பட்ட இவர், அமெரிக்க கலாச்சாரத்தில் 'சாண்டா கிளாஸ்' ஆக மாறினார். இப்போதும் அப்படியே தொடர்கிறார். ஆக சாண்டா கிளாஸ் இருந்தார். மேலே குறிப்பிட்டவாறு இப்போதும் இருக்கிறார். நம் தேவைகளை, நினைப்பவகளை பூர்த்தி செய்யும் அனைவரும் சாண்டா கிலாஸ்தான். பெண்களுக்கு அவரது தந்தை சாண்டா கிலாஸாக இருப்பதுபோல அனைவருக்கும் அவரவர்களது தாய் அல்லது அன்புக்குரியவர்கள் எப்போதும் சாண்டா கிலாஸ்தான். 

    அப்படி சாண்டா கிலாஸ் மாற்று உருவத்தில் இல்லையென்றாலும், நம் தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ளும் நாமும் நமக்கான சாண்டாதான்.

    ×