என் மலர்
நீங்கள் தேடியது "stories"
- பொய் என தெரிந்தும் சிலவற்றை நம்புவது கற்பனை உலகம் தரும் இன்பத்திற்காக
- டச்சு கலாச்சாரத்தில் 'சிண்டெர்கிலாஸ்' (Sinterklaas) என்று அழைக்கப்பட்ட இவர், அமெரிக்க கலாச்சாரத்தில் 'சாண்டா கிளாஸ்' ஆக மாறினார்.
உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ மக்கள் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்திருப்பர். பண்டிகை முடிந்தாலும், இனி வர இருப்பதாக இருந்தாலும் கிறிஸ்துமஸ் என்றாலே அதிகம் பேசப்படுபவர் கிறிஸ்துமஸ் தாத்தா. அதாவது சாண்டா கிலாஸ். கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது சாண்டா தாத்தா மான்பூட்டிய வண்டியில் வானத்தில் இருந்து இறங்கிவந்து நமக்கு பிடித்தவற்றை பரிசாக வழங்குவார் என்று நீண்டகாலம் பேசிவருகிறோம்.
சிறுவயதாக இருக்கும்போது மட்டுமில்லை, பரிசு கிடைக்காவிட்டாலும் பெரியவர்களாக ஆனாலும் நாம் அதை நம்பிக் கொண்டிருக்கிறோம். ஏன்? கிறிஸ்துமஸ் தாத்தா வரமாட்டார் என தெரிந்தும் அதை நாம் நம்புவது கற்பனை உலகம் தரும் இன்பம் மற்றும் நிஜ வாழ்க்கையின் அழுத்தத்திலிருந்து கிடைக்கும் விடுதலை.
அதாவது சுற்றி இருப்பவர்களே நம் தேவையை, ஆசையை உணராதபோது சாண்டா கிலாஸ் அதனை அறிந்து அதனை நிறைவேற்றும்போது ஒரு மகிழ்ச்சி. பொய்மையும் வாய்மையுடைத்து புரை தீர்க்கும் நன்மை பயக்கும் எனில், அந்தப் பொய் நன்மையை விளைவிப்பதாக இருந்தால் அதைக் கண்டு மகிழலாம் என வள்ளுவர் கூறுவது போல, சில கற்பனைகள் மனதிற்கு நிம்மதியைத் தருகின்றன. அதுபோலத்தான் இதுவும்.
சரி கதைக்கு வருவோம். உண்மையில் சாண்டா கிலாஸ் இருக்கிறாரா? ஆம். இப்போது இருக்கிறாரா என்றால் இருக்கிறார், இருந்தார். செயிண்ட் நிக்கோலஸ், இன்றைய துருக்கி நாட்டில் வாழ்ந்த ஒரு கிறித்தவ ஆயர். நிக்கோலஸ் இரக்கம், நல்லுணர்வு மற்றும் குழந்தைகளிடம் அதிக அன்பு காட்டும் குணம் நிறைந்தவர். மேலும் ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் ரகசியமாக பரிசுகளை வழங்கும் குணம் கொண்டவர். இவர் இறந்தபின் இவர்குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. அதில் ஒன்றுதான் கிறிஸ்துமஸ் அன்று குழந்தைகளுக்கு பரிசுகொடுப்பது.
காலப்போக்கில், டச்சு கலாச்சாரத்தில் 'சிண்டெர்கிலாஸ்' (Sinterklaas) என்று அழைக்கப்பட்ட இவர், அமெரிக்க கலாச்சாரத்தில் 'சாண்டா கிளாஸ்' ஆக மாறினார். இப்போதும் அப்படியே தொடர்கிறார். ஆக சாண்டா கிளாஸ் இருந்தார். மேலே குறிப்பிட்டவாறு இப்போதும் இருக்கிறார். நம் தேவைகளை, நினைப்பவகளை பூர்த்தி செய்யும் அனைவரும் சாண்டா கிலாஸ்தான். பெண்களுக்கு அவரது தந்தை சாண்டா கிலாஸாக இருப்பதுபோல அனைவருக்கும் அவரவர்களது தாய் அல்லது அன்புக்குரியவர்கள் எப்போதும் சாண்டா கிலாஸ்தான்.
அப்படி சாண்டா கிலாஸ் மாற்று உருவத்தில் இல்லையென்றாலும், நம் தேவைகளை நாமே பூர்த்தி செய்துகொள்ளும் நாமும் நமக்கான சாண்டாதான்.
- மனிதன் உருவான நாளில் இருந்து கதைகளும் உருவாகிவிட்டன.
- கதைகளை சுமக்காத மனிதர்கள் யாருமே இல்லை.
குழந்தையாக இருந்தபோது பாட்டியிடம் கதை கேட்டு தூங்கிய அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் அந்த அனுபவத்தை நமது அடுத்த தலைமுறைக்கு கொடுத்திட நம்மில் எத்தனை பேர் தயாராக இருக்கிறோம். அதற்கு பெற்றோராகிய உங்களை தயார்படுத்தும் சிறிய முயற்சி இது.
மனிதன் உருவான நாளில் இருந்து கதைகளும் உருவாகிவிட்டன. கதைகளை சுமக்காத மனிதர்கள் யாருமே இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கு பின்னும் ஒரு கதை இருக்கும். அந்த கதை வலி நிறைந்ததாகவும், மகிழ்ச்சியானதாகவும், மறக்க நினைப்பதாகவும், மறக்க முடியாதாகவும் இருக்கலாம்.

தனது கதைகளை மற்றொருவருக்கு சொல்வதன் மூலம் தனது கருத்தை, எண்ண ஓட்டத்தை மற்றவரிடம் பகிர்கிறார்கள். இதன் மூலம் தங்களது மனக்கவலை நீங்குகிறது என்றும் நம்புகிறார்கள். கதைகள் என்பவை கற்பனையாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்கிற வரைமுறை இல்லை. நாம் பார்த்தவை, நமக்குள் நடப்பவை, சில சமயம் நமக்குள் எழுகிற கனவுகள்கூட கதைகளாக மாறுகின்றன.
எனவே கதைகள் என்பவை எங்கோ தூரத்தில் இல்லை, நம்மோடுதான் இருக்கின்றன. அவற்றை கவனிக்க வேண்டும். பதிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றித்தான் பல கதைகள் எழுதப்பட்டு இருக்கின்றன. அவற்றை வாசிக்க வேண்டும். வாசித்தபின் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்.
ஏன் குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்? அவர்களையே அந்த புத்தகத்தை படிக்க வைத்துவிடலாமே என்ற கேள்வி பலருக்கு எழலாம். கதைகள் குழந்தைகளை அவர்கள் பார்த்திராத புதியதோர் உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அவர்களின் கற்பனைத்திறனையும், கேட்கும் திறனையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்கும். அடுத்தவரை பற்றி புரிந்து கொள்ள வழிவகை செய்யும்.
தான் வாழும் சமூகத்தையும், தான் வாழ உதவி செய்யும் எல்லா உயிர்களையும் நேசிக்க கதைகள் கற்றுக் கொடுக்கின்றன. எத்தனை கதைகளை குழந்தைகள் கேட்டாலும் ஒரு சில கதைகள் அவர்களோடு ஐக்கியமாகிவிடுகின்றன.
அவர்களது வாழ்க்கையை ஆக்கப்பூர்வமாய் மாற்றுகின்ற வேலையையும் கதைகள் செய்கின்றன. எனவே குழந்தைகளுக்கு கதைகளை சொல்லுங்கள். ஒவ்வொரு கதைக்கு பின்னும் ஒரு கருத்து நிச்சயம் இருக்கும். அதில் எந்த கருத்து உங்கள் குழந்தைக்கு தேவையோ அந்த கதையை சொல்லுங்கள்.

உதாரணமாக உங்கள் குழந்தை பயப்படுகிறது என்றால் தைரியத்தை முன்நிறுத்தும் கதையை சொல்லுங்கள். அந்த கதை உங்கள் குழந்தையின் உள்ளத்துக்குள் சென்று நம்பிக்கையை கொடுக்கும். அதனால் பெற்றோர் கதைகளை வாசிப்பதற்கு ஆர்வம் காண்பிக்க வேண்டும்.
அதில் வாழ்வியல் போதனைகளை வழங்கும் கதைகளை குழந்தைகள் ரசிக்கும் விதத்தில் சொல்லலாம். கதைகள் உங்களையும், உங்கள் குழந்தைகளையும் பக்குவமிக்க மனிதர்களாக மாற்றும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.






