என் மலர்
நீங்கள் தேடியது "Metro Rail"
- இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் ரூ.9,857.85 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும்
- இதற்கு மகாராஷ்டிரா அரசு மற்றும் பன்முக நிதி நிறுவனங்கள் இணைந்து நிதியளிக்கும்
புனே மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் ரூ.9,857.85 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும், இதற்கு மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு மற்றும் பன்முக நிதி நிறுவனங்கள் இணைந்து நிதியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
புனே மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட விரிவாக்கம் மொத்தம் 31.636 கிலோமீட்டர் நீளத்திற்கு 28 உயர்த்தப்பட்ட நிலையங்களுடன் அமைக்கப்படவுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்து ஆவணங்களை தமிழக அரசுக்கு, மத்திய அரசு திருப்பி அனுப்பி இருந்தது பெரும் சர்ச்சையான நிலையில் தற்போது புனே மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை பாஜக அரசு வழங்கியுள்ளது.
- தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை பாஜக அரசு நிராகரித்திருக்கிறது.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள பெரிய நகரங்களான மதுரை , கோயம்புத்தூர் ஆகியவற்றுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குமாறு விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு சமர்ப்பித்திருந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த இரண்டு நகரங்களை விட சிறிய ஊர்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்கியிருக்கும் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை நிராகரித்திருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்ததும் ஒன்றிய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார் அதற்கு விளக்கமளித்திருக்கிறார். அதாவது, " 2011 -ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகராட்சியின் மக்கள் தொகை (257 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட சி.எம்.சி) 15.85 இலட்சம் கொண்டுள்ளது மற்றும் உள்ளூர் திட்டமிடல் பகுதி (1287 சதுர கி.மீ கொண்ட எல்.பி.ஏ)
7.7 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. ஆனால், பயணிகள் எண்ணிக்கை கணிப்புகள் அதிகமாக செய்யப்பட்டுள்ளன. அதனைத் தமிழ்நாடு அரசு நிரூபிக்க வேண்டும்" என்பதாக அவர் கூறியிருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையாக வைத்து இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை என்ற காரணத்தை ஒன்றிய அரசு கூறி இருப்பது வியப்பளிக்கிறது. 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படாததால் அந்தப் புள்ளி விவரங்களை வைத்து இந்த திட்டங்களை நிராகரித்திருப்பது சரியானது அல்ல. இடைப்பட்ட 14 ஆண்டுகளில் இந்த இரு நகரங்களிலும் மக்கள் தொகை பல மடங்கு கூடியிருக்கிறது. இதை ஒன்றிய அரசு தெரிந்திருந்தோம் கவனத்தில் கொள்ளாதது அவர்களுடைய பாரபட்சமான அணுகுமுறையையே காட்டுகிறது.
மதுரை, கோயம்புத்தூர் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படாதது பாஜகவின் தமிழ்நாடு விரோத நிலைப்பாடே காரணம். இதை மூடி மறைப்பது போல் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த திட்ட அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக பொய் செய்தியை பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.
கூட்டாட்சி முறையை சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து தமிழ்நாட்டைப் புறக்கணித்து வருகின்ற ஒன்றிய பாஜக அரசு, தனது போக்கைத் திருத்திக் கொள்ள வேண்டுமென்றும்; இல்லையேல் தமிழ்நாடு மக்களின் கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- தமிழக அரசின் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.
- மாநகர் பகுதியில் 20 லட்சத்திற்கும் குறைவாகவே மக்கள் தொகை இருப்பதாக தகவல்.
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் தொகையை காரணம் காட்டி திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களுக்கு மெட்ரோ திட்டம் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இரண்டு மாநகர் பகுதிகளிலும் 20 லட்சத்திற்கும் குறைவாகவே மக்கள் தொகை இருப்பதாக விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- 32 மெட்ரோ பங்கேற்ற ஆய்வில் 6,500 வாடிக்கையாளர்களிடம் இருந்து பதில் பெறப்பட்டுள்ளது.
- சென்னை மெட்ரோவுக்கான வாடிக்கையாளர் திருப்தி மதிப்பெண் 5க்கு 4.3 என அறிக்கையில் தகவல்
உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "COMET (Community of Metros)" என்பது உலகம் முழுவதும் உள்ள நகர்ப்புற மெட்ரோ இரயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, தரநிலைகளை (benchmarks) நிர்ணயிக்கும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் ஒரு புதிய உறுப்பினராகச் சேர்ந்தது. உலகத் தரத்திலான செயல்பாடுகளை அடைவதற்கும், முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கும் இது முக்கிய கவனம் செலுத்துகிறது. இந்தக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆண்டுதோறும் முக்கியச் செயல்பாட்டுக் குறிகாட்டிகள் (Key Performance Indicators) குறித்த தரவுகளைச் சேகரிக்கின்றனர். இதன் மூலம் செயல்பாடுகள் அளவிடப்பட்டு, சர்வதேசத் தரநிலைகளுடன் ஒப்பிடப்படுகின்றன. இந்த ஒப்பீடு, உறுப்பினர்களாக உள்ள மெட்ரோ இரயில் நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், சிறந்த நடைமுறைகளை (best practices)அடையாளம் காணவும் உதவுகிறது. மேலும், முடிவெடுக்கும் செயல்பாட்டிற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும்.
COMET நிறுவனம் ஆகஸ்ட் 2025-இல், ஆன்லைன் வாடிக்கையாளர் கருத்துப் பதிவு இணையதளம் மூலம் நடத்திய வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் (Customer Satisfaction Survey) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பங்கேற்றது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் இந்தக் கணக்கெடுப்பு பற்றிய விளம்பரம் சுவரொட்டிகள், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் செய்யப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு, சேவைத் தரம் (Service quality),அணுகல் (accessibility), கிடைக்கும்தன்மை (availability),நம்பகத்தன்மை (reliability), பாதுகாப்பு (security),பயன்படுத்துவதற்கான எளிமை (ease of use) மற்றும் சௌகரியம் (comfort) ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
உலகெங்கிலும் உள்ள 32 மெட்ரோ இரயில் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அதிக எண்ணிக்கையிலான பங்கேற்புகள் மற்றும் சுமார் 6500 வாடிக்கையாளர்களிடம் இருந்து பதில்களைப் பெற்று, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் சேவைகளுக்கான ஒட்டுமொத்த வாடிக்கையாளர் திருப்தி மதிப்பெண் 5-க்கு 4.3 இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
● பெரும்பாலான சென்னை மெட்ரோ இரயில் பயணிகள் பணி நிமித்தமாக மெட்ரோவைப் பயன்படுத்துகின்றனர்.
● இந்த ஆய்வுக்குப் பதிலளித்தவர்களில் சுமார் 64% பேர் ஆண்கள், 33% பேர் பெண்கள் மற்றும் 3% பேர் மற்றவர்கள் ஆவர்.
● பதிலளித்தவர்களில் பெரும்பாலான பயணிகள் இளம் வயதினர் (30 வயதுக்குட்பட்டவர்கள்).
● பயணிகள், கட்டணம் செலுத்தும் முறைகள், கூடுதல் இட வசதி, மெட்ரோ நிலையங்களுக்கிடையேயான இணைப்பு வசதி (Interchange facility) மற்றும் நிலையங்களை எளிதாக அணுகும் வசதி (Station accessibility)ஆகியவற்றில் மேம்பாடுகளை எதிர்பார்க்கின்றனர்.
பயணிகளின் மதிப்புமிக்க கருத்துக்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய, தொடர்ச்சியான மேம்பாடுகளைச் செய்ய சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உறுதியளிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு சான்றிதழ் சோதனைகள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதைக் குறிக்கிறது.
- 9 நிமிடங்களில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்குவதற்கு முன்னதாக, பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
இந்தச் சோதனைகள், ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ரெயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு (RDSO- Research Designs and Standards Organisation) மூலம் நடத்தப்படுகின்றன. மெட்ரோ ரெயில் பெட்டிகளுக்கான சான்றிதழைப் பெறுவதற்குப் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி இந்தச் சோதனைகள் நடைபெறுகின்றன. இந்த நடைமுறையின்படி, இந்திய அரசாங்கத்தின் ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் RDSO அமைப்பானது தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் வழங்குகிறது.
ஆகஸ்ட் 16, 2025 முதல் இந்த சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் அவை சுமார் இரண்டு வாரங்களுக்குத் தொடரும். இக்காலகட்டத்தில், மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்படுகிறது.
அத்துடன், வழித்தடத்தில் ரெயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல்திறன் (verification of traction and braking performance) பற்றிய விரிவான சரிபார்ப்பும் செய்யப்படுகிறது. இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால், புதிய வழித்தடம் மற்றும் மெட்ரோ ரெயில்கள் பாதுகாப்பு தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்யும், மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பு பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் முன்னிலையில் பாதுகாப்புச் சான்றிதழ் சோதனைகள் நடைபெற்றன.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், கூறியதாவது:-
இரண்டாம் கட்ட திட்டத்தின் முன்னேற்றத்தில், பாதுகாப்பு சான்றிதழ் சோதனைகள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதைக் குறிக்கிறது. பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து போரூர் சந்திப்பு வரையிலான இந்த வழித்தட பகுதி 1ஏ (viaduct Section 1A), 9 நிமிடங்களில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையின் மிக உயர்ந்த தரங்களை பூர்த்தி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். நிலையான முன்னேற்றத்துடன், பொதுமக்களின் நலனுக்காக இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு சித்திக் கூறினார்.
- ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
- ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மஞ்சள் நிற மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
கர்நாடகாவில் புதிதாக 3 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இன்று காலை 10.30 மணியளவில் தனி விமானத்தில் பெங்களூரு வந்திறங்கிய பிரதமர் பெங்களூரு சிட்டி ரெயில் நிலயத்தில் ரெயில்களை தொடங்கி வைத்தார்.
இந்த வந்தே பாரத் ரெயில்கள் பெங்களூரூ - பெலகாவி, அம்ரிஸ்தர் - ஸ்ரீ மாதா வைஷ்ணோ கத்ரா, நாக்பூர் (அஜ்னி) - புனே வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
இதேபோல் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அதில் பயணம் செய்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் உடன் இருந்தார்.
பெங்களூருவில் 76 கிலோ மீட்டர் தூரத்துக்கு, சல்லகட்டா முதல் ஒயிட்பீல்டு வரை ஊதா நிறப்பாதை, சில்க் நிறுவனத்தில் இருந்து மாதவரா வரை பசுமை நிறப்பாதை ஆகியவற்றில் மெட்ரோ இயங்கி வருகிறது.
இந்நிலையில் ஆர்.வி.ரோடு முதல் பொம்மசந்திரா வரை 19.15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக மஞ்சள் நிற மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த பாதையில் பிரதமர் மோடி பச்சை கொடி அசைக்க இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது.
இதை தொடர்ந்து ஜே.பி.நகர் 4-வது பிளாக் முதல் கடபுகெரே வரையிலான 3ஆம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் மோடி, மதியம் 3 மணியளவில் மீண்டும் டெல்லிக்கு தனது தனி விமானத்தில் திரும்புவார்.
- சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட்டில் ஆகஸ்ட் 31 வரை ஊபர் 50% அறிமுக தள்ளுபடியை வழங்குகிறது.
- ஆட்டோ, கார் முன்பதிவு செய்யும் ஊபர் செயலிலேயே மெட்ரோ ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ பயணச்சீட்டுகளை தற்போது Uber App மூலம் எளிதாகபெரும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், UBER மற்றும் ONDC நெட்வொர்க் உடன் இணைந்து, UBER செயலி மூலம் மெட்ரோ இரயில் பயணத்திற்கான பயணச்சீட்டு பெரும் வசதியை, சென்னை மெட்ரோஇரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில் இன்று (07.08.2025) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. மு.அ.சித்திக், இ.ஆ.ப., அறிமுகப்படுத்தினார்.
இன்று முதல், சென்னையில் உள்ள UBER பயனாளர்கள், தங்களது மெட்ரோ பயணங்களை திட்டமிடவும், QR அடிப்படையிலான பயணச்சீட்டுகளை பெறவும், நேரடி மெட்ரோ பயண தகவல்களையும் UBER செயலியில் தெரிந்துக்கொள்ளலாம். இதன் அறிமுக சலுகையாக 2025-ல் ஆகஸ்ட் மாதம் முழுவதும் UBER செயலியை பயன்படுத்தி மெட்ரோ பயணச்சீட்டுகளை வாங்கும் பயணிகள் பயணச்சீட்டுகளில் 50% தள்ளுபடியை பெறலாம். இந்த சலுகை UBER செயலியில் மட்டுமே கிடைக்கும். இது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வழங்கும் பிற மெட்ரோ பயணச்சீட்டு சேவை தளங்களில் பொருந்தாது. UBER செயலியைபயன்படுத்தி மெட்ரோ பயணச்சீட்டு பெறுவதற்கு UPI முறையே பயன்படுத்தப்படும். இது டிஜிட்டல் பயன்பாட்டை மேம்படுத்துகிறது.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் திரு. மனோஜ் கோயல் (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தலைமை ஆலோசகர் திரு. கோபிநாத் மல்லையா, (இயக்கம் மற்றும்பராமரிப்பு), ஆலோசகர் திரு.கே.ஏ.மனோகரன் (தானியங்கி கட்டண வசூல் அமைப்பு மற்றும் தொழில்நுட்பம்), UBER நிறுவனத்தின் உயர் இயக்குநர் திரு. மணிகண்டன் தங்கரத்தினம், ONDC நிறுவனத்தின் உயர் துணைத் தலைவர் திரு.நிதின் நாயர், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் UBER நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், Digital SVP, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, Whatsapp - (+91 83000 86000), Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பூந்தமல்லி- போரூர் இடையே இரண்டு முறை சோதனை நடைபெற்றது.
- தற்போது போரூர்- பூந்தமல்லி இடையே சோதனை நடைபெற்றது.
போரூர்- பூந்தமல்லி இடையேயான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 3ஆம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்கு முன்பாக நடைபெற்ற இரண்டு கட்ட சோதனையும் UP Line-ல் (பூந்தமல்லி- போரூர்) நடைபெற்றது. தற்போது நடைபெற்ற மூன்றாம் கட்ட சோதனை Down line-ல் போரூரில் இருந்து பூந்தமல்லி வரை நடைபெற்றது.
Down line-ல் நடைபெறும் முதற்கட்ட சோதனை ஓட்டம் என்பதால் 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்திலேயே இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. மீண்டும் இதே வழியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடைபெறும். போரூர்- பூவிருந்தவல்லி இடையிலான தூரம் 9.5 கி.மீ. ஆகும். போரூர்- பூவிருந்தவல்லி இடையே 10 ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
போரூர்- பூந்தமல்லி மெட்ரோ பணிகளை அடுத்து போரூர்- பவர்ஹவுஸ், ஆலப்பாக்கம்- சென்னை வர்த்தக மையம் இடையிலான மெட்ரோ பணிகள் அடுத்தாண்டு ஜூலைக்கும் நிறைவு பெறும். கோடம்பாக்கம்- பனகல் பார்க் தடத்தில் சுரங்கம் தோண்டும் பணிகள் அடுத்த இரு மாதங்களில் நிறைவடையும் என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்தார்.
- ரூ.12 கோடி செலவில் புதிய SKY WALK நடைபாதை அமைய உள்ளது
- இந்த ஸ்கை வால்க் நடைபாதை 130 மீட்டர் நீளத்தில் 6-10 மீட்டர் அகலத்தில் அமைகிறது.
வடபழனியில் புதிதாக அமையவுள்ள மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் பழைய மெட்ரோ நிலையத்தை இணைக்கும் வகையில், ரூ.12 கோடி செலவில் புதிய SKY WALK நடைபாதை அமைய உள்ளது
இந்த ஸ்கை வால்க் நடைபாதை 130 மீட்டர் நீளத்தில் 6-10 மீட்டர் அகலத்தில் கண்ணாடி மற்றும் இரும்பினால் அமைகிறது. இந்தாண்டு இறுதிக்குள் இதற்கான பணிகளை முடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், SKY WALK-ன் மாதிரி படங்களை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் ரெயில் நிலையம் என 54 கி.மீ தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 3 வழித்தடங்களில் வரவுள்ளது. 3 ஆவது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4 ஆவது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5 ஆவது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் பணிகள் நடந்து வருகின்றன.
- பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கு துறையில் (Accounts Dept) பணியாற்றி வந்துள்ளார்.
- அவர் வேலைக்கு மெட்ரோ ரெயிலில் செல்லும்போது இந்த வீடியோக்களை எடுத்துள்ளார்.
பெங்களூரு நகர மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட குற்றச்சாட்டில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு மெட்ரோ கிளிக்ஸ்' என்ற பெயரில் இயங்கும் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கில் மெட்ரோ ரயில்கள் மற்றும் நடைமேடைகளில் பெண்களின் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கணக்கை 5,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இருப்பினும், இந்தப் புகைப்படங்கள் அந்தப் பெண்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படுவது தெரியவந்தது.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 27 வயதான இளைஞரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் கர்நாடகாவின் ஹசான் நகரை சேர்ந்த திஹந்த் ஆவார். இந்த இளைஞர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கணக்கு துறையில் (Accounts Dept) பணியாற்றி வந்துள்ளார்.
அவர் வேலைக்கு மெட்ரோ ரெயிலில் செல்லும்போது அதில் பயணிக்கும் பெண் பயணிகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். கைது செய்யப்பட்ட திஹந்த் இடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அந்தக் கணக்கில் இருந்த அனைத்து புகைப்படங்களும் நீக்கப்பட்டன. பின்னர் அந்தக் கணக்கு இன்ஸ்டாகிராமிலிருந்தும் நீக்கப்பட்டது.
- இது தனியுரிமை மற்றும் கண்ணியத்தை அப்பட்டமாக மீறும் செயல்.
- பெங்களூரு மெட்ரோ கிளிக்ஸ் என்று பெயர் கொண்ட அந்த பக்கத்தில் 5000 க்கும் அதிகமாக பாலோயர்கள் உள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கும் நம்ம மெட்டோ ரெயில்களில் பெண்கள் ரகசியமாக படம்பிடிக்கப்பட்டு வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படுவதாக பாஜக எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பெங்களூரு எம்.பி. மோகன் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது,திவில், " இது தனியுரிமை மற்றும் கண்ணியத்தை அப்பட்டமாக மீறும் செயல். இவை கடுமையான குற்றம். பெங்களூரு நகர காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் அவர் பகிர்ந்தார். பெங்களூரு மெட்ரோ கிளிக்ஸ் என்று பெயர் கொண்ட அந்த பக்கத்தில் 5000 க்கும் அதிகமாக பாலோயர்கள் உள்ளனர். சம்மந்தபட்டவர்கள் மீது கால்வளத்துறை வழகுபதவு செய்து விசாரித்து வருகிறது.
- 21.76 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரெயில் விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல்.
- மத்திய அரசின் நிதி பங்களிப்பிற்கும், பன்னாட்டு நிதி உதவி கோரவும் அனுமதி.
சென்னை, கோயம்பேடு மற்றும் பட்டாபிராம் இடையே சென்னை வெளிவட்ட சாலையில் மெட்ரோ ரெயில் சேவைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, 21.76 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரெயில் விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.9928.33 கோடி மதிப்பீட்டில், 464 கோடியில் மூன்று மேம்பாலங்களுடன் கூடிய வழித்தடம் அமைக்கப்படுகிறது.
மேலும், மத்திய அரசின் நிதி பங்களிப்பிற்கும், பன்னாட்டு நிதி உதவி கோரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.






