search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "metro rail"

    • மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தொக்கன் சாஹூ பதிலளித்தார்.
    • ஜூலை 23ஆம் தேதி 2024-25 நிதி அண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. ஜூலை 23ஆம் தேதி 2024-25 நிதி அண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி, கோவை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தொக்கன் சாஹூ பதிலளித்தார்.

    அதில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என்று விளக்கமளித்தார்.

    அதைத் தொடர்ந்து நாட்டில் கவாச் அமைப்பை நிறுவுவதற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்த விவரங்களை கனிமொழி எம்பி கோரி இருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கவாச் பணிகளுக்கு இதுவரை ஆயிரத்து 216 கோடியே 77 லட்ச ரூபாய் நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நடப்பு 2024-25 நிதி ஆண்டில் ஆயிரத்து 112 கோடியே 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறினார்.

    • நியூ காரியாவில் இருந்து கிளம்பி தக்ஷிணேஷ்வர் நோக்கி வடக்கு- தெற்கு காரிடாரில் இன்று காலை சென்றுகொண்டிருந்தது
    • மகாநாயக் உத்தம்குமார் [டாலிகுங்கே] மெட்ரோ நிலையத்தில் ஏற்பட்ட பவர் கட்-ஆல் அங்கேயே ஓடாமல் நின்றுவிட்டது.

    இந்தியாவின் பெரு நகரங்களின் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. மற்றொரு புறம்  நகரங்கள் மற்றும் ஊர்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவது என்பது மக்களுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் பவர் கட்- ஆல் மெட்ரோ ரெயிலே நின்றுள்ள சம்பவம் கல்கத்தாவில் நடந்துள்ளது.

    மேற்கு வங்காள தலைநகர் கல்கத்தாவில் நியூ காரியாவில் இருந்து கிளம்பி  தக்ஷிணேஷ்வர் நோக்கி வடக்கு- தெற்கு காரிடாரில் இன்று காலை சென்றுகொண்டிருந்த மெட்ரோ ரெயிலானது 10.38 மணியளவில் மகாநாயக் உத்தம்குமார் [டாலிகுங்கே] மெட்ரோ நிலையத்தில் ஏற்பட்ட பவர் கட்-ஆல் அங்கேயே ஓடாமல் நின்றுவிட்டது.

    பணியாளர்களின் துரிதமான நடவடிக்கையால் சுமார் 14 நிமிடங்கள் கழிந்து மீண்டும் கரண்ட் வந்த நிலையில் 10.52 மணிக்கு மீண்டும் ரெயில் பயணத்தை தொடர்ந்தது. கரண்ட் கட்- ஆல் மெட்ரோ ரெயில் நிற்பது என்பது வழக்கத்துக்கு மாறானதாக பார்க்கப்படுகிறது. 

    • ஜூலை 12 காலை 10 மணி முதல் ஜூலை 13 மாலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
    • கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் பைப்லைனில் பாதிப்பு.

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் காரணமாக, 5, 6, 8, 9, மற்றும் 10 ஆகிய மண்டலங்களில் 2024 ஜூலை 12 காலை 10 மணி முதல் ஜூலை 13 மாலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மண்டலம் 5ல் உள்ள புரசைவாக்கம் மெயின் ரோட்டில் மெட்ரோ லைன் அமைப்பதற்கான இணைப்பு பணிகளால், கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் கொண்டு செல்லும் பைப்லைனில் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதனால், திருவிக நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

    இதேபோல், புரசைவாக்கம், பெரியமேட், சவுகார்பேட்டை, ஜார்ஜ் டவுன், முத்தியால்பேட்டை, வால்டாக்ஸ் சாலை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, சேப்பாக்கம், கொண்டித்தோப்பு, ஓட்டேரி ஆகிய இடங்களில் சப்ளை நிறுத்தப்படும்.

    மண்டலம் 6ல் அயனாவரம், செம்பியம், பெரம்பூர், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், மண்டலம் 8ல் கெல்லிஸ், மண்டலம் 9ல் திருவல்லிக்கேணி, மண்டலம் 10ல் உள்ள தி.நகர், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் குடிநீர் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

    சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம், பொதுமக்கள் போதிய குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளவும், அவசர தேவைகளுக்கு நீர் விநியோகம் செய்ய https://cmwssb.tn.gov.in என்ற மெட்ரோ வாட்டர் ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டு முகவரியை பதிவு செய்து கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு வழக்கம் போல் குடிநீர் தடையின்றி தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    • இயந்திர கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் அவசரமாக நிறுத்தம்.
    • பசுமை நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை.

    சென்னை மெட்ரோ ரெயிலில் திடீரென தீர்பொறி பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் மத்தியில் கூச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து ரெயில் அவரசாமக நிறுத்தப்பட்டுள்ளது.

    விம்கோ நகர்- விமான நிலையம் வரை செல்லக்கூடிய மெட்ரோ ரெயிலில், உயர்நீதிமன்ற நிறுத்தத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.

    இயந்திர கோளாறு காரணமாக மெட்ரோ ரெயில் அவசரமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ரெயில் நிறுத்தியதை தொடர்ந்து ரெயிலில் பயணித்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீல நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்கள் 10 நிமிடம் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பசுமை நிறப் பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை என மெட்ரோ ரெயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    • பக்ரீத் பண்டிகையை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    • சென்னையில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை 6 நிமிட இடைவெளியிலும், காலை 5 மணி முதல் 8 மணி மற்றும் பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தினமும் 2 லட்சம் முதல் 2.45 லட்சம் பேர் வரை பயணம் செய்கிறார்கள்.
    • விளம்பரம் செய்யும் உரிமைகளுக்கான ஒப்பந்தத்தை விரைவில் வெளியிடப்படும்

    சென்னை:

    சென்னையில் தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரையும் 2 வழித்தடங்களில் மொத்தம் 54 கி.மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    விரைவான மற்றும் சொகுசு பயணம் என்பதால் மெட்ரோ ரெயிலை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் 2 லட்சம் முதல் 2.45 லட்சம் பேர் வரை பயணம் செய்கிறார்கள்.

    இந்த 2 ரெயில் வழித்தடங்களும் சென்னை சென்ட்ரல் மற்றும் ஆலந்தூர் ரெயில் நிலையங்களை சந்திக்கும் இடங்களாக உள்ளது. சென்ட்ரலில் இருந்து பிற மாவட்டங்கள் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் பயணிகள் அதிக அளவு வருவதால் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும்.

    இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் வழித்தட தூண்களில் விளம்பர பலகை வைத்து மாற்று வருவாய் ஈட்ட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை மெட்ரோ நிறுவனம் கூறியிருப்பதாவது,

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், நிலையான தன்மை மற்றும் மாற்று வருவாய் ஈட்டுதல் (மெட்ரோ இரயில் சேவை வருவாய் கட்டணம் அல்லாத) செயல்பாடுகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக, மீனம்பாக்கம் மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ வரை, அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் சின்னமலை மெட்ரோ மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ முதல் கோயம்பேடு மெட்ரோ வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்வதற்கான உரிமைகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னையை சேர்ந்த Mudra Ventures நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

    இது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் முக்கிய மாற்று வருவாய்களான விளம்பரம், சில்லறை வணிகம் மற்றும் அலுவலக பணி இடங்கள் வழங்குவதன் மூலமாகவும் இயக்க செலவுகளை ஈடு செய்ய மேலும்உதவுகிறது.

    மேலும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் விம்கோநகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் வரை உள்ள வழித்தட தூண்களில் விளம்பரம் செய்யும் உரிமைகளுக்கான ஒப்பந்தத்தை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துக் கொள்கிறது என கூறப்பட்டுள்ளது.

    • கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் சேவையும் இயக்கப்படுகிறது.
    • 6 பெட்டிகள் கொண்ட 28 ரெயில்கள் தேவை என்று பரிந்துரைத்தது.

    சென்னை:

    சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 55 கி.மீ. தூரத்திற்கு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தினமும் 3 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கிறார்கள். காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் சேவையும் இயக்கப்படுகிறது.

    அலுவலகப் பணியில் ஈடுபடுவோர், தொழில் சார்ந்தவர்கள் என அனைவரும் தற்போது மெட்ரோ ரெயில் பயணத்தை விரும்பி மேற்கொள்கிறார்கள்.

    வண்ணாரப்பேட்டை - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில்கள் 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. மற்ற வழித்தடங்களில் இயக்கப் படும் ரெயில்கள் 6 முதல் 12 நிமிடங்கள் இடைவெளியில் செல்கின்றன. மெட்ரோ ரெயில் சேவையை இன்னும் அதிகரித்தால்தான் `பீக்' அவர்சில் நெரிசல் இல்லாமல் பயணிக்க முடியும்.

    அதற்கு கூடுதல் ரெயில்கள் வேண்டும் என்பதை மெட்ரோ ரெயில் நிர்வாகம் உறுதி செய்தது. இதற்காக மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஒரு ஆலோசகரை கொண்டு ஆய்வு நடத்தியது. அதில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக முதல் கட்ட திட்டத்திற்கு 6 பெட்டிகள் கொண்ட 28 ரெயில்கள் தேவை என்று பரிந்துரைத்தது.

    புதிதாக ரெயில்களும், ரெயில் நிலைய வசதிகளையும் மேம்படுத்த ரூ.2,820 கோடி செலவாகும் என திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு திட்ட முன்மொழிவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த திட்டத்துக்கு நிதி அளிக்க சர்வதேச வங்கி ஏற்கனவே வட்டி விகிதத்தை தெரிவித்து உள்ளன.

    இப்போது நிதி ஆயோக் அனுமதி அளித்துள்ளதில் நிதித்துறை மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அடுத்த மாதம் அனுமதி அளிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய ரெயில்கள் தயாரித்து வருவதற்கு 2 ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

    • நம்பகத்தன்மையான பாதுகாப்பான வசதியையும் வழங்கி வருகிறது.
    • மெட்ரோ ரெயில்களில் 84,21,072 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    சென்னையின் பொதுப் போக்குவரத்தில் மெட்ரோ ரெயில் முக்கியப் பங்காற்றி வருகிறது. கார், ஆட்டோ கட்டணத்தை ஒப்பிடுகையில், குறைந்த கட்டணத்தில், விரைவாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல மெட்ரோ ரெயில் பெரிதும் உதவுகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகத்தன்மையான பாதுகாப்பான வசதியையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயில்களில் 84,21,072 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    அதிகபட்சமாக 10.05.2024 அன்று 3,03,109 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    மே மாதத்தில் மட்டும் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 36,97,773 பயணிகள் பலன் அடைந்துள்ளனர்.

    மேலும் பயண அட்டைகளை பயன்படுத்தி 32,10,776 பயணிகளும், டோக்கன்களை பயன்படுத்தி 52,055 பயணிகளும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,307 பயணிகளும் மற்றும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 14,55,161 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு கியூஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.

    மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மெட்ரோ இரயில்களில் பயணிக்காமல் வாகன நிறுத்தும் வசதியை மட்டும் பயன்படுத்துபவர்களின் தேவை அதிகரித்துள்ளது
    • சில மெட்ரோ நிலையங்களில் வாகன நிறுத்தும் இட வசதி இல்லாத காரணத்தினால் மாதாந்திர பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

    நாளை (மே 1) முதல் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்காமல், வாகன நிறுத்தத்தை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களின் பயன்பாட்டின் அடிப்படையில் பின்வரும் மாற்றங்களை செய்துள்ளது.

    கடந்த 30 நாட்களில் குறைந்தது 15 பயணங்கள் செய்த மெட்ரோ பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் வசதி விம்கோ நகர் பணிமனை, ஸ்ரீ தியாகராய கல்லூரி, நேரு பூங்கா, கோயம்பேடு, அசோக் நகர் மற்றும் ஆலத்தூர் மெட்ரோ ஆகிய 6 மெட்ரோ இரயில் நிலையங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது

    புதிய வண்ணாரப்பேட்டை, நந்தனம், எழும்பூர் மற்றும் செனாய் நகர் மெட்ரோ ஆகிய 4 மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் இட வசதி இல்லாத காரணத்தினால் மாதாந்திர பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

    மெட்ரோ இரயில்களில் பயணிக்காமல் வாகன நிறுத்தும் வசதியை மட்டும் பயன்படுத்துபவர்களின் தேவை அதிகரித்துள்ளதால் திருவொற்றியூர், திருவொற்றியூர் தேரடி, காலடிப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, நந்தனம், கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம் விமான நிலையம், அசோக் நகர், திருமங்கலம் மற்றும் எழும்பூர் மெட்ரோ என 18 மெட்ரோ இரயில் நிலையங்களில் மெட்ரோ பயணிகள் அல்லாதவர்களின் வாகன நிறுத்தும் சுட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கடந்த 30 நாட்களில் மெட்ரோ இரயிலில் பயணம் செய்யாதவர்கள் அல்லது 15-க்கும் குறைவான பயணம் செய்பவர்களுக்கு அரும்பாக்கம் மெட்ரோ மற்றும் பரங்கி மலை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    மீதமுள்ள மற்ற மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் கட்டணத்தில் எவ்வித மாற்றம் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மெட்ரோ ரெயில் பயணிகளில் 38 லட்சம் பேர் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.
    • ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க இக்கார்டை பயன்படுத்தலாம்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அப்போது ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது, டோக்கன் முறையும் இருந்தது. மெட்ரோ ரெயில் பயணிகளில் 38 லட்சம் பேர் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டை மெட்ரோ ரெயில் நிர்வாகம் நிறுத்தியுள்ளது. அதிகமாக விரும்பி பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் பயண அட்டை இனி பயணிகளுக்கு வழங்கப்படாது.

    ஆனாலும் ஏற்கனவே கார்டு வைத்திருப்பவர்கள் அதை ரீசார்ஜ் செய்து தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மெட்ரோ ரெயில் தரப்பில் கூறியதாவது:-

    ஸ்மார்ட் கார்டு விற்பனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறுத்தப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை வழங்கி வருகிறோம். பொதுப் பயன்பாடு உள்ள அந்த கார்டை ஊக்குவிப்பதற்காக ஸ்மார்ட் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க இக்கார்டை பயன்படுத்தலாம். ஆனால் சில பயணிகளிடம் இது சென்றடையவில்லை. லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் ஸ்மார்ட் கார்டை தூக்கி எறியக்கூடாது என்று பயணிகள் தெரிவித்தனர்.

    • தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
    • சென்னையில் மெட்ரோ ரெயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் நாளை பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் மெட்ரோ ரெயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, காலை 8-11 மணி வரையும், மாலை 5-8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், இரவு 8-10 மணி வரையிலும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஹூக்ளி ஆற்றின் அடியில் 520 மீட்டர் தூரத்துக்கு இந்த வழித்தட பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது
    • ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் மோடிஅடிக்கல் நாட்டினார்


    மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் மெட்ரோ கிழக்கு -மேற்கு வழித்தடத்தின் ஒரு பகுதியானஹவுரா மைதானம் -எஸ்பிளனேட் மெட்ரோ பாதை பயணிகள் போக்குவரத்துக்கு தயாராகி உள்ளது.

    இந்த மெட்ரோ ரெயில் வழித்தட பாதை ஹூக்ளி ஆற்றின் அடியில் ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ வழித்தடம் 4.8 கி.மீ. நீளத்தில் ரூ.4,965 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. ஹூக்ளி ஆற்றின் அடியில் 520 மீட்டர் தூரத்துக்கு இந்த வழித்தட பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

    45 வினாடிகளில் இந்த பாதையை மெட்ரோ ரெயில் கடந்து செல்லும். இந்தியாவின் முதல் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை கொல்கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

    அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். அப்போது மெட்ரோ ரெயிலில் மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார். மேலும் கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    ×