என் மலர்
நீங்கள் தேடியது "மெட்ரோ"
- தமிழ்நாட்டில் மும்முனைப் போட்டி.
- பீகாருக்கு அறிவிக்கப்படும் நிதிகள் அனைத்தும் விடுவிக்கப்படுகிறதா?.
சிவகங்கையில் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம் எம்.பி,
"நிதிஷ்குமார் எவ்வளவு நாள் முதலமைச்சராக இருப்பார் என்பது கேள்விக்குறியே. பாஜக நிதிஷ்குமாரை எவ்வளவு நாட்கள் விட்டுவைப்பார்கள் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். தவெக ஒவ்வொரு விஷயத்திலும் தங்கள் கொள்கையை விளக்குவார்கள் என நம்புகிறேன். பொதுவாக 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' எனக்கூறுவது கொள்கை கிடையாது.
குறுகிய காலத்தில் எஸ்ஐஆர் பணிகளை செய்திருக்கக்கூடாது. தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே இப்பணிகளை தொடங்கியிருக்க வேண்டும். பணியாளர்களுக்கும் இதனால் அழுத்தம் கூடுகிறது. வெளிப்படைத்தன்மையோடு தேர்தல் ஆணையம் செயல்படவேண்டும். அடுத்த 5 மாதத்திற்கு பிரதமருக்கு கேரளா, தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி சாப்பாடுதான் பிடிக்கும். இந்த மாநிலங்களின் நடனம், கலாச்சாரம்தான் பிடிக்கும். இவற்றின் மொழி, ஆடைதான் பிடிக்கும்.
எல்லா ஊர்களுக்கும் மெட்ரோ தேவையில்லை. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டில், சென்னையைத்தவிர வேறு எந்த நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் தேவையில்லை. இந்தூர், ஆக்ராவில் போடப்பட்ட மெட்ரோக்கள் அனைத்தும் நட்டத்தில்தான் செல்கின்றன. பெரிய நகரங்களுக்கு மட்டுமே மெட்ரோ தேவை. மற்ற ஊர்களுக்கு நகர்ப்புற போக்குவரத்து போதுமானது. நான் மத்திய அரசை நியாயப்படுத்தவில்லை. என்னுடைய புரிதல்தான் இது.
தமிழ்நாட்டிற்கு, தமிழ் மொழிக்கு குறைந்தளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் பீகாருக்கு ஒதுக்கப்படும் ரூ.50 ஆயிரம் கோடி நிதி அவர்களுக்கு விடுவிக்கப்படுகிறதா? தேர்தல் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் வரத்தான் செய்யும். நடைமுறையில் எதுவும் இருக்காது. பீகார் தேர்தலுக்கும், தமிழ்நாடு தேர்தலுக்கும் இருக்கும் தொடர்பு அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் இருக்கும் சம்மந்தம் போன்றதுதான். மாநில கூட்டணிகளின்படிதான் வெற்றி இருக்கும். என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டில் மும்முனை போட்டி வந்தால், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் அமோக வெற்றிப் பெரும்" என தெரிவித்தார்.
- 32 மெட்ரோ பங்கேற்ற ஆய்வில் 6,500 வாடிக்கையாளர்களிடம் இருந்து பதில் பெறப்பட்டுள்ளது.
- சென்னை மெட்ரோவுக்கான வாடிக்கையாளர் திருப்தி மதிப்பெண் 5க்கு 4.3 என அறிக்கையில் தகவல்
உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "COMET (Community of Metros)" என்பது உலகம் முழுவதும் உள்ள நகர்ப்புற மெட்ரோ இரயில் சேவைகளின் செயல்பாடுகளை ஒப்பிட்டு, தரநிலைகளை (benchmarks) நிர்ணயிக்கும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் ஒரு புதிய உறுப்பினராகச் சேர்ந்தது. உலகத் தரத்திலான செயல்பாடுகளை அடைவதற்கும், முன்னேற்றங்களை மேற்கொள்வதற்கும் இது முக்கிய கவனம் செலுத்துகிறது. இந்தக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஆண்டுதோறும் முக்கியச் செயல்பாட்டுக் குறிகாட்டிகள் (Key Performance Indicators) குறித்த தரவுகளைச் சேகரிக்கின்றனர். இதன் மூலம் செயல்பாடுகள் அளவிடப்பட்டு, சர்வதேசத் தரநிலைகளுடன் ஒப்பிடப்படுகின்றன. இந்த ஒப்பீடு, உறுப்பினர்களாக உள்ள மெட்ரோ இரயில் நிறுவனங்கள் ஒருவருக்கொருவர் அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், சிறந்த நடைமுறைகளை (best practices)அடையாளம் காணவும் உதவுகிறது. மேலும், முடிவெடுக்கும் செயல்பாட்டிற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும்.
COMET நிறுவனம் ஆகஸ்ட் 2025-இல், ஆன்லைன் வாடிக்கையாளர் கருத்துப் பதிவு இணையதளம் மூலம் நடத்திய வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பில் (Customer Satisfaction Survey) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பங்கேற்றது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் இந்தக் கணக்கெடுப்பு பற்றிய விளம்பரம் சுவரொட்டிகள், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் செய்யப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு, சேவைத் தரம் (Service quality),அணுகல் (accessibility), கிடைக்கும்தன்மை (availability),நம்பகத்தன்மை (reliability), பாதுகாப்பு (security),பயன்படுத்துவதற்கான எளிமை (ease of use) மற்றும் சௌகரியம் (comfort) ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
உலகெங்கிலும் உள்ள 32 மெட்ரோ இரயில் நிறுவனங்கள் பங்கேற்ற இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், அதிக எண்ணிக்கையிலான பங்கேற்புகள் மற்றும் சுமார் 6500 வாடிக்கையாளர்களிடம் இருந்து பதில்களைப் பெற்று, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் சேவைகளுக்கான ஒட்டுமொத்த வாடிக்கையாளர் திருப்தி மதிப்பெண் 5-க்கு 4.3 இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
● பெரும்பாலான சென்னை மெட்ரோ இரயில் பயணிகள் பணி நிமித்தமாக மெட்ரோவைப் பயன்படுத்துகின்றனர்.
● இந்த ஆய்வுக்குப் பதிலளித்தவர்களில் சுமார் 64% பேர் ஆண்கள், 33% பேர் பெண்கள் மற்றும் 3% பேர் மற்றவர்கள் ஆவர்.
● பதிலளித்தவர்களில் பெரும்பாலான பயணிகள் இளம் வயதினர் (30 வயதுக்குட்பட்டவர்கள்).
● பயணிகள், கட்டணம் செலுத்தும் முறைகள், கூடுதல் இட வசதி, மெட்ரோ நிலையங்களுக்கிடையேயான இணைப்பு வசதி (Interchange facility) மற்றும் நிலையங்களை எளிதாக அணுகும் வசதி (Station accessibility)ஆகியவற்றில் மேம்பாடுகளை எதிர்பார்க்கின்றனர்.
பயணிகளின் மதிப்புமிக்க கருத்துக்களுக்கு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய, தொடர்ச்சியான மேம்பாடுகளைச் செய்ய சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உறுதியளிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரைக்கு மெட்ரோ ரெயில் திட்டம் வரவேற்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் கருத்து தெரிவித்துள்ளார்.
- சிங்கார சென்னை போல எழில்மிகு மதுரையாக மேம்படுத்த மாமதுரை என்ற தொழில் வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருப்பதும் நல்லது என்றார்.
திருப்பரங்குன்றம்
மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோரெயில் திட்டம் கொண்டு வந்தது நகரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று சமூக ஆர்வலரும், பாண்டியன் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவருமான சண்முகசுந்தரம் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்தியாவிற்கே வழிகாட்டு கிற கலங்கரை விளக்கமாக அமைந்தி ருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான மாநில அரசு நிதி பற்றாக்குறையை ரூ.62கோடியில் இருந்து ரூ.30கோடியாக குறைத்தி ருப்பது மு.க.ஸ்டாலினின் நிர்வாக திறமைக்கும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நிதி மேலாண்மைக்கும் சான்றாக அமைந்துள்ளது.
மதுரை மாநகரை சிங்கார சென்னை போல எழில்மிகு மதுரையாக மேம்படுத்த மாமதுரை என்ற தொழில் வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருப்பதும், அதன் முதல்கட்டமாக மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருப்பதும் மதுரை மக்களிடம் கோடை மழையை போன்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோன்று ஏழை, எளிய மக்கள் நிலம் வாங்குவதற்கு ஏதுவாக பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைத்திருப்பதன் மூலமாக ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற கனவு நனவாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மற்ற நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.
- மெட்ரோவில் தினமும் காலை 5 மணிக்கு ரெயில் சேவை தொடங்கி இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது.
சென்னை:
சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் இடைேய, மெட்ரோ தடத்தில், அலுவலக நேரத்தில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலும், மற்ற நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலும் இயக்கப்படுகிறது.
அதே போல் பரங்கிமலை - சென்ட்ரல் இடையே அலுவலக நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயில், மற்ற நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. மெட்ரோவில் தினமும் காலை 5 மணிக்கு ரெயில் சேவை தொடங்கி இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது.
ஆனால் சென்னை விமான நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன. எனவே தற்போது உள்ள மெட்ரோ ரெயில் சேவையை நள்ளிரவு 12 மணிவரை நீடித்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறுகையில், பயணிகளின் தேவைக்கு ஏற்ப இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இச்சேவையை நள்ளிரவு வரை நீட்டித்து இயக்குவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.
- பொது இடங்களில் பயணிகள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்.
- ஒரு பயனர், நாளை நான் எனது தாடி டிரிம்மரை எடுத்து வருவேன் என பதிவு செய்துள்ளார்.
டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகளின் அத்துமீறல் வீடியோக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வலைதளங்களில் வைரலாகி இருந்தன. ரெயிலுக்குள் கட்டிப்பிடித்து முத்தமிட்ட ஜோடி, கவர்ச்சி உடையில் வந்த இளம்பெண், ஆபாச சேட்டையில் ஈடுபட்ட வாலிபர் போன்ற வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மெட்ரோ ரெயில் நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது.
அதில், பொது இடங்களில் பயணிகள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயிலுக்குள் ஒரு இளம்பெண் தனது தலைமுடியை நேராக்குவதை போன்ற காட்சிகள் உள்ளது.
மெட்ரோ ரெயிலில் பயணிகள் தங்களது செல்போன்களை சார்ஜ் செய்வதற்கு வசதியாக மின் இணைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அதில் அந்த இளம்பெண் ஒரு கருவியை பொருத்தி அதன் மூலம் தனது தலை முடியை நேராக்குவது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அந்த இளம்பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், நாளை நான் எனது தாடி டிரிம்மரை எடுத்து வருவேன் என பதிவு செய்துள்ளார்.
- நாளை முதல் ரெயில் சேவை நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.
- இரவு 10 மணி முதல் 11 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில் மெட்ரோ ரெயிலில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதால் நாளை முதல் ரெயில் சேவை நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் எனவும், காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதியம் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இரவு 10 மணி முதல் 11 மணி வரையில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
- ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார்
- இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர்.
2016 ஆம் ஆண்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் ஷிரிஷ், பாபி சிம்ஹா , சென்ராயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெட்ரோ. சென்னையில் நடக்கும் செயின் ஸ்னாட்சிங் பற்றியும், இளைஞர்கள் எப்படி இந்த தொழிலுக்கு வருகிறார்கள் எதற்காக இப்படி செய்கின்றனர் என்று பேசிய திரைப்படம், படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத்தொடர்ந்து ஆனந்த கிருஷ்ணன் அடுத்ததாக ராபர் என்ற திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். . படத்தை சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா எஸ் தயாரித்துள்ளார். தயாரிப்பில் அவருடன் மெட்ரோ ப்ரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணனும் இணைந்துள்ளார்.
'ராபர்' படத்துக்கான படப்பிடிப்பு சென்னைக்குள் இருக்கும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற இடங்களிலும் சென்னையைச் சுற்றியுள்ள செம்மஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளிலும் நடைபெற்றுள்ளது.
இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள சத்யா ஏற்கெனவே 'மெட்ரோ' படத்தில் நடித்து அனைவராலும் கவனிக்க பட்டவர். இவர்களுடன் தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்ராயன், டேனி போப் மற்றும் பலர் படத்தில் போட்டி போட்டு நடித்துள்ளனர். இப்படத்திற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜோகன் சிவனேஷ் இசை அமைத்துள்ளார்.
இந்த' ராபர்' திரைப்படம் படத்தின்' டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் 'எனப்படும் தலைப்பின் முதல் தோற்றத்தை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இப்படம் மே மாதம் இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பெண்கள் பேருந்துகளில் இலவசமாகவும், ஆண்கள் மெட்ரோக்களில் ₹35 கொடுத்தும் பயணிக்கின்றனர்.
- 2023 நவம்பரில் ஒரு நாளைக்கு 5.5 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு நாளைக்கு 4.6 லட்சம் பேராக குறைந்துள்ளது.
ஹைதராபாத்தில் 2026-க்கு பிறகு நடைபெறவுள்ள மெட்ரோ திட்ட பணிகளில் இருந்து எல்&டி நிறுவனம் விலகுவதாக அதன் இயக்குநர் ஷங்கர் ராமன் அறிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் உள்ள மெட்ரோ திட்டத்தில் 90 சதவீத பங்குகள் எல்&டி நிறுவனத்திடம் தான் உள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் தான் தெலுங்கானா அரசிடம் உள்ளது. மெட்ரோ ரயில்களை இன்னும் 65 ஆண்டுகள் இயக்குவதற்கான உரிமை எல்&டி நிறுவனத்திடம் உள்ளது.
பிசினஸ் டுடே பத்திரிகைக்கு பேட்டியளித்த எல்&டி நிறுவன இயக்குநர் ஷங்கர் ராமன், "தெலுங்கானாவில் பேருந்துகளின் எண்ணிக்கை உயரவில்லை என்ற போதும், பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்குவதால், மெட்ரோ பயணங்களின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. பாலின பாகுபாடு ஏற்படுகிறது. பெண்கள் பேருந்துகளில் இலவசமாகவும், ஆண்கள் மெட்ரோக்களில் ₹35 கொடுத்தும் பயணிக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.
2023 நவம்பரில் ஒரு நாளைக்கு 5.5 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு நாளைக்கு 4.6 லட்சம் பேராக குறைந்துள்ளது. மெட்ரோ திட்டம் லாபகரமானதாக இயங்க ஒரு நாளைக்கு 5 லட்சம் மெட்ரோ பயணிகள் பயணிக்க வேண்டும்.
பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியது.
தெலுங்கானாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாலக்ஷ்மி திட்டத்தின் மாநிலத்தில் அரசால் இயக்கப்படும் ஏசி அல்லாத பேருந்துகளில் பெண்களும் திருநங்கைகளும் இலவசமாக பயணிக்கமுடியும்.
- சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
- ஆனால் அவ்வப்போது பயணிகள் பாதுகாப்பிற்காகவும் ரயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்.
சென்னையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மின்சார ரெயில்கள் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டாலோ ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோது வழக்கம்.
ஆனால் அவ்வப்போது பயணிகள் பாதுகாப்பிற்காகவும் ரெயிலை பாதுகாப்பாக இயக்கவும் தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும். இது குறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுவதுடன் பயணிகளுக்கு பெரிய சிரமத்தை தவிர்க்கும் வகையில் பெரும்பாலும் இரவு நேரங்களில் இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படும் சேவைகள் குறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விடுவதும் வழக்கம்.
இந்நிலையில் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் இடையே இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார ரெயில் சேவை இயங்காது. சென்னை கடற்கரையில் இருந்து நண்பகல் 12.40- க்கு புறப்படும் மின்சார ரெயில் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் இதனை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக தங்களது பயணத்தை திட்டமிடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- எதிரே மெட்ரோ ரெயில் வந்துகொண்டுருக்கும்போது அதை நோக்கி ரெயில்வே டிராக்கில் இளம்பெண் ஒருவர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- துகாப்பு அதிகாரிகள் மீட்டு துண்டுகட்டாக தூக்கிக்கொண்டு பிளாட்பார்முக்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் எதிர் திசையில் மெட்ரோ ரெயில் வந்துகொண்டுருக்கும்போது அதை நோக்கி ரெயில்வே டிராக்கில் இளம்பெண் ஒருவர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த புதன்கிழமை மதியம் ராஜேந்திர நகர் மெட்ரோ ஸ்டேஷன் அருகே நடந்த இந்த சம்பவத்தில் ரெயில் தடத்தின் அருகே ஓடிக்கொண்டிருத்த பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு துண்டுகட்டாக தூக்கிக்கொண்டு பிளாட்பார்முக்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்பின் அந்த பெண் மெட்ரோ போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். பெண்ணுக்கு கவுன்சிலிங் வழங்கிய மெட்ரோ போலீஸ் பெற்றோரிடம் அவரை ஒப்படைத்துள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்காக அந்த பெண் முயற்சி செய்தாரா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.
- YouWeCan பவுண்டேசன் என்ற பெயரில் யுவராஜ் சிங் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.
- டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனம் [என்ஜிஓ] சர்சசை ஒன்றில் சிக்கியுள்ளது. YouWeCan பவுண்டேசன் என்ற பெயரில் யுவராஜ் சிங் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மூலம் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் மார்பக புற்றுநோய் குறித்த விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த விளம்பரத்தில் கையில் 2 ஆரஞ்சு பழங்களுடன் சேலை அணிந்த பெண் ஒருவர் பேருந்தில் நின்றுகொண்டிருக்கும் சித்திரம் உள்ளது. அவருக்கு அருகே கூடை நிறைய ஆரஞ்சு பழங்களுடன் முதிய பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார். 'மாதத்துக்கு ஒரு முறை உங்களின் ஆரஞ்சுகளை பரிசோதனை செய்யுங்கள்' என்று அந்த போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது. இங்கு பெண்களின் மார்பங்கள் ஆரஞ்சுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

பெண்கள் 25 வயதை எட்டியதில் இருந்து ஒவ்வொரு மாதமும் மார்பக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதே இந்த விளம்பரத்தின் நோக்கம் ஆகும். ஆனால் அதற்காக அவர்கள் கையாண்ட வழிமுறை தவறாக முடிந்துள்ளது.
இந்த போஸ்டர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் டெல்லி மெட்ரோ சேவை நிர்வாகம் இந்த போஸ்டர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது.
- பல்வேறு புதிய திட்டங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- தண்ணீர் தேங்காமல் இருக்க மெட்ரோ நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சென்னை:
சென்னை தரமணியில் ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'ஸ்டார்ட் அப் சென்னை (STARTUP CHENNAI) - செய்க புதுமை' திட்டம் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர்,
மழைக்காலங்களில் மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க மெட்ரோ நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க. யாரை அரசியல் எதிரியாக பார்க்கிறது? என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருப்பதாக தெரிவித்தார்.






