search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "free bus service"

    • பெண்கள் பேருந்துகளில் இலவசமாகவும், ஆண்கள் மெட்ரோக்களில் ₹35 கொடுத்தும் பயணிக்கின்றனர்.
    • 2023 நவம்பரில் ஒரு நாளைக்கு 5.5 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு நாளைக்கு 4.6 லட்சம் பேராக குறைந்துள்ளது.

    ஹைதராபாத்தில் 2026-க்கு பிறகு நடைபெறவுள்ள மெட்ரோ திட்ட பணிகளில் இருந்து எல்&டி நிறுவனம் விலகுவதாக அதன் இயக்குநர் ஷங்கர் ராமன் அறிவித்துள்ளார்.

    தெலுங்கானாவில் உள்ள மெட்ரோ திட்டத்தில் 90 சதவீத பங்குகள் எல்&டி நிறுவனத்திடம் தான் உள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் தான் தெலுங்கானா அரசிடம் உள்ளது. மெட்ரோ ரயில்களை இன்னும் 65 ஆண்டுகள் இயக்குவதற்கான உரிமை எல்&டி நிறுவனத்திடம் உள்ளது.

    பிசினஸ் டுடே பத்திரிகைக்கு பேட்டியளித்த எல்&டி நிறுவன இயக்குநர் ஷங்கர் ராமன், "தெலுங்கானாவில் பேருந்துகளின் எண்ணிக்கை உயரவில்லை என்ற போதும், பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்குவதால், மெட்ரோ பயணங்களின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. பாலின பாகுபாடு ஏற்படுகிறது. பெண்கள் பேருந்துகளில் இலவசமாகவும், ஆண்கள் மெட்ரோக்களில் ₹35 கொடுத்தும் பயணிக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

    2023 நவம்பரில் ஒரு நாளைக்கு 5.5 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு நாளைக்கு 4.6 லட்சம் பேராக குறைந்துள்ளது. மெட்ரோ திட்டம் லாபகரமானதாக இயங்க ஒரு நாளைக்கு 5 லட்சம் மெட்ரோ பயணிகள் பயணிக்க வேண்டும்.

    பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியது.

    தெலுங்கானாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாலக்ஷ்மி திட்டத்தின் மாநிலத்தில் அரசால் இயக்கப்படும் ஏசி அல்லாத பேருந்துகளில் பெண்களும் திருநங்கைகளும் இலவசமாக பயணிக்கமுடியும்.

    • விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.
    • 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும்.

    2024- 25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டு பட்ஜெட்டில் மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இந்த திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி அளித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த திட்டம் முதற்கட்டமாக உதகையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை அமைச்சர்கள் சிவசங்கர், ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி., ஆகியோர் விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.

    மேலும், நீலகிரி மாவட்டத்தில் மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தில் இயக்கப்பட்ட 11 அரசுப் பேருந்துகள் 99ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இனி, இத்திட்டத்தின் மூலம் 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும், தெலுங்கானா மாநில எல்லைக்குள் இலவசமாக பயணிக்கலாம்.
    • தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள்.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அரசு பஸ்களில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 உரிமைத்தொகை உள்ளிட்ட 6 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

    தற்போது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ரேவேந்த் ரெட்டி முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். சோனியா காந்தி பிறந்தநாளான இன்று பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான மகாலட்சுமி இலவச பஸ் திட்டத்தை முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான இலவச பஸ் பயணம் உடனடியாக மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

    இலவச பயண திட்டத்திற்கான விதிமுறைகளும், நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சிட்டி ஆர்டினரி, எக்ஸ்பிரஸ், மெட்ரோ எக்ஸ்பிரஸ், பல்லே வெலுகு என அரசின் அனைத்து வகை பஸ்களிலும் இந்த பெண்களுக்கான இலவச பயண திட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும், தெலுங்கானா மாநில எல்லைக்குள் இலவசமாக பயணிக்கலாம். மாநிலங்களுக்கு இடையேயான பஸ்களில் பயணிக்கும்போது, தெலுங்கானா மாநில எல்லை வரை இலவசம், அதன் பிறகு உள்ள தொலைவுக்கு பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும், 3-ம் பாலினத்தவரும் வயது வித்தியாசம் இன்றி, இந்த திட்டத்தில் பயன் பெறலாம். தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள்.

    இலவச பயணம் மேற்கொள்ள விரும்பும் பெண்கள் தங்களுடைய வசிப்பிட முகவரியை உறுதிப்படுத்தும் வகையிலான அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு 'ஜீரோ டிக்கெட்' வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வடமாநிலத்தில் பெண்களுக்கு 48 மணிநேர இலவச பேருந்து பயணம்.
    • ஆகஸ்ட் 10 நள்ளிரவு தொடங்கி ஆகஸ்ட் 12 நள்ளிரவு வரை பெண்கள் 48 மணிநேரம் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

    ரக்‌ஷாபந்தன் பண்டிகை வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, வடமாநிலத்தில் பெண்களுக்கு 48 மணிநேர இலவச பேருந்து பயணத்தை உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சகோதரத்துவத்தை போற்றும் இந்த பண்டிகையை முன்னிட்டு அம்மாநில பெண்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த பரிசாக இலவச பேருந்து பயணம் கருதப்படுகிறது

    இதுகுறித்து அம்மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி உத்தரப்பிரதேச மாநிலப் போக்குவரத்துக் கழகம் மாநிலத்தின் அனைத்துப் பெண்களும் பாதுகாப்பான பயணத்திற்காக பேருந்துகளில் இலவச பயண வசதியை வழங்க வேண்டும். ஆகஸ்ட் 10 நள்ளிரவு தொடங்கி ஆகஸ்ட் 12 நள்ளிரவு வரை பெண்கள் 48 மணிநேரம் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×