என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச பேருந்து சேவை"

    • ரக்‌ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • இதையொட்டி, அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

    லக்னோ:

    நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் ரக்ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, உத்தர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் விழாவை ஒட்டி உத்தர பிரதேச அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கட்டணமின்றி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

    ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.

    • விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.
    • 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும்.

    2024- 25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டு பட்ஜெட்டில் மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இந்த திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி அளித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த திட்டம் முதற்கட்டமாக உதகையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை அமைச்சர்கள் சிவசங்கர், ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி., ஆகியோர் விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.

    மேலும், நீலகிரி மாவட்டத்தில் மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தில் இயக்கப்பட்ட 11 அரசுப் பேருந்துகள் 99ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இனி, இத்திட்டத்தின் மூலம் 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும்.

    • பெண்கள் பேருந்துகளில் இலவசமாகவும், ஆண்கள் மெட்ரோக்களில் ₹35 கொடுத்தும் பயணிக்கின்றனர்.
    • 2023 நவம்பரில் ஒரு நாளைக்கு 5.5 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு நாளைக்கு 4.6 லட்சம் பேராக குறைந்துள்ளது.

    ஹைதராபாத்தில் 2026-க்கு பிறகு நடைபெறவுள்ள மெட்ரோ திட்ட பணிகளில் இருந்து எல்&டி நிறுவனம் விலகுவதாக அதன் இயக்குநர் ஷங்கர் ராமன் அறிவித்துள்ளார்.

    தெலுங்கானாவில் உள்ள மெட்ரோ திட்டத்தில் 90 சதவீத பங்குகள் எல்&டி நிறுவனத்திடம் தான் உள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் தான் தெலுங்கானா அரசிடம் உள்ளது. மெட்ரோ ரயில்களை இன்னும் 65 ஆண்டுகள் இயக்குவதற்கான உரிமை எல்&டி நிறுவனத்திடம் உள்ளது.

    பிசினஸ் டுடே பத்திரிகைக்கு பேட்டியளித்த எல்&டி நிறுவன இயக்குநர் ஷங்கர் ராமன், "தெலுங்கானாவில் பேருந்துகளின் எண்ணிக்கை உயரவில்லை என்ற போதும், பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்குவதால், மெட்ரோ பயணங்களின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. பாலின பாகுபாடு ஏற்படுகிறது. பெண்கள் பேருந்துகளில் இலவசமாகவும், ஆண்கள் மெட்ரோக்களில் ₹35 கொடுத்தும் பயணிக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

    2023 நவம்பரில் ஒரு நாளைக்கு 5.5 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு நாளைக்கு 4.6 லட்சம் பேராக குறைந்துள்ளது. மெட்ரோ திட்டம் லாபகரமானதாக இயங்க ஒரு நாளைக்கு 5 லட்சம் மெட்ரோ பயணிகள் பயணிக்க வேண்டும்.

    பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியது.

    தெலுங்கானாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாலக்ஷ்மி திட்டத்தின் மாநிலத்தில் அரசால் இயக்கப்படும் ஏசி அல்லாத பேருந்துகளில் பெண்களும் திருநங்கைகளும் இலவசமாக பயணிக்கமுடியும்.

    • மூத்த குடிமக்கள் தங்கள் இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று சமர்ப்பிக்க வேண்டும்.
    • அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை பேருந்துகளில் மூத்தோர்கள் இலவசமாக பயணிக்க டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

    இச்சேவைகளை பெற விரும்பும் மூத்த குடிமக்கள் தங்கள் இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் 2 வண்ண புகைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்நிலையில் மாநகர போக்குவரத்துக்கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணிக்க வரும் 21-ந்தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்படும்.

    அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை பேருந்துகளில் மூத்தோர்கள் இலவசமாக பயணிக்க டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.

    ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×