என் மலர்
நீங்கள் தேடியது "Pudhucherry"
- சர்வதேச மாநாட்டு மையத்தையும், தேசியக் கொடிக்கான 100 அடி உயர கொடிக்கம்பத்தையும் திறந்து வைக்கிறார்.
- 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் 73,527 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படும்.
டிச.29ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 2021, 2022, 2023 & 2024 ஆம் ஆண்டுகளுக்கான 30வது ஆண்டு பட்டமளிப்பு விழா, டிசம்பர் 29, 2025 திங்கட்கிழமை அன்று, புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.
இந்திய துணைக் குடியரசுத் தலைவரும், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சி.பி. ராதாகிருஷ்ணன், தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு உரையை நிகழ்த்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும், 2500 பேர் அமரக்கூடிய சர்வதேச மாநாட்டு மையத்தையும், தேசியக் கொடிக்கான 100 அடி உயர கொடிக்கம்பத்தையும் திறந்து வைக்கிறார்.
இந்த 30வது பட்டமளிப்பு விழாவில், 746 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்படும். 2021 ஆம் ஆண்டு முதல் முதலிடம் பிடித்த 191 பேருக்கும், 2022 ஆம் ஆண்டு முதல் 191 பேருக்கும், 2023 ஆம் ஆண்டு முதல் 192 பேருக்கும், 2024 ஆம் ஆண்டு முதல் 186 பேருக்கும் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் உட்பட பல்வேறு துறைகளில் பட்டம் மற்றும் தங்கப் பதக்கங்கள் நேரில் வழங்கப்படும். மொத்தம், 30வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் 73,527 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுச்சேரி பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- பரப்புரை வாகனத்தில் நின்றபடி த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார்.
கரூர் துயர சம்பவத்துக்கு பிறகு 2 மாதமாக த.வெ.க. தலைவர் விஜய் நேரடியாக பொதுமக்களை சந்திக்ககவில்லை. இந்த நிலையில், காவல்துறையின் அனுமதியுடன் புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நாளை த.வெ.க. பொதுக்கூட்டம் நடக்கிறது.
புதுச்சேரி பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க த.வெ.க. தலைவர் விஜய் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு பனையூரில் உள்ள வீட்டில் இருந்து காரில் புறப்படுகிறார். அங்கிருந்து சாலை வழியாக காலை 10.30 மணிக்கு உப்பளம் துறைமுக வளாகத்துக்கு வருகிறார். அவரை த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்கிறார்.
முன்னதாக விஜயின் பிரச்சார வாகனம் இன்று மாலையே புதுச்சேரிக்கு புறப்பட்டது. அந்த வாகனத்தில் நின்றபடி த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார். கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு இருக்கை கிடையாது. அவர்களும் நின்றபடியே விஜய் உரையை கேட்கின்றனர்.
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜயின் பரப்புரை வாகனம் வெளியே வந்தது. அதன்படி, இன்று மாலையே பரப்புரை வாகனம் புறப்பட்டுள்ளது.
அந்த வாகனத்தில் நின்றபடி த.வெ.க. தலைவர் விஜய் பேசுகிறார். கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு இருக்கை கிடையாது. அவர்களும் நின்றபடியே விஜய் உரையை கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- புதுச்சேரியில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
- பா.ஜ.கவோடு கூட்டணியில் இருந்தால் தான் புதுச்சேரிக்கு வேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் என்.ஆர். காங்கிரசோடு இணைந்து புதுச்சேரியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும் புதுச்சேரி முதலமைச்சருமான ராங்கசாமியோடு பேச்சுவார்த்தை நடத்த த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் முயற்சித்து வருகிறார்.
இந்தநிலையில் புதுவையில் செயல்படுத்த வேண்டிய பல திட்டங்கள் கிடப்பில் உள்ளதால் பா.ஜ.கவோடு கூட்டணியில் இருந்தால் தான் புதுச்சேரிக்கு வேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.
அதற்கு பா.ஜ.க கூட்டணியில் நீடித்தால் தான் சரியாக இருக்கும் என முதலமைச்சர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் புதுச்சேரியில் தனித்து போட்டியிட த.வெ.க. தயாராகி வருகிறது.
இங்கு ஏற்கனவே என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.கவின் என்.டி.ஏ. கூட்டணி, காங்கிரஸ்- தி.மு.க.வின் இந்தியா கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை ஏற்கனவே களத்தில் உள்ள நிலையில் சார்லஸ் மார்டினும் புதிய கட்சி தொடங்கி போட்டியிட உள்ளார்.
இதனால், புதுச்சேரியில் 5 முனை போட்டி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.
- புதுச்சேரி அரசும் ரோடு ஷோ தொடர்பான ஐகோர்ட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறது.
- த.வெ.க. அளித்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.
புதுச்சேரியில் வருகிற 5-ந் தேதி ரோடு ஷோ நடத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். புதுச்சேரி காலாப்பட்டில் தொடங்கி, கன்னியக்கோவில் வரையிலும் சுமார் 30 கி.மீ. வரை ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே மைக்கில் பேசவும் அனுமதி கேட்டு 4 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி த.வெ.க. நிர்வாகிகள் டி.ஜி.பி.யிடம் மனு அளித்தனர்.
தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமியையும் சந்தித்து, ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கும்படி கோரினர். ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு பிறகு தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
சென்னை ஐகோர்ட்டு ரோடு ஷோ நடத்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சிகளின் பரிந்துரைகளை வழங்கும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதன்படி தமிழக அரசின் வழிகாட்டுதல்கள், அரசியல் கட்சிகளின் பரிந்துரைகள் ஐகோர்ட்டில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு, இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டு கட்டுப்பாட்டின் கீழ் புதுச்சேரி மாநிலம் இடம் பெற்றுள்ளது. இதனால் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுகள் அனைத்தும் புதுச்சேசரிக்கும் பொருந்தும். இதனால் புதுச்சேரி அரசும் ரோடு ஷோ தொடர்பான ஐகோர்ட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறது. இதனால் த.வெ.க. தலைவர் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்துவது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்து த.வெ.க. சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனு குறித்து விசாரிக்க புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் டி.ஜி.பி. ஷாலினி சிங்கை சந்திக்க வந்தார்.
ஆனால் டி.ஜி.பி. அலுவலகத்தில் இல்லை. அவர் டெல்லி சென்றிருப்பதாக கூறப்பட்டது. அவர் நாளை புதுச்சேரி திரும்புவதால் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மீண்டும் நாளை (திங்கட்கிழமை) புதுச்சேரி டி.ஜி.பி.யை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.
ஆனால் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது த.வெ.க. அளித்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என விளக்கமளித்தனர்.
இந்தநிலையில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கப்படுமா? என்று முதலமைச்சர் ரங்கசாமியிடம் கேட்டபோது புதுச்சேரி தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
- புதுச்சேரிக்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல் காரணமாக தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 'டிட்வா' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிட்வா புயல் எச்சரிக்கை எதிரொலியாக புதுச்சேரியில் நாளை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1 யூனிட்டுக்கு ரூ.2.70ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.2.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80 லிருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரை, 1 யூனிட்டுக்கு ரூ.2.70ஆக இருந்த மின் கட்டணம் தற்போது ரூ.2.90ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
101 முதல் 200 யூனிட் வரை ரூ.3.25 லிருந்து ரூ.4 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை ரூ.5.40 லிருந்து ரூ.6 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.80 லிருந்து ரூ.7.50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
- பாலத்தின் மீது வந்த கார் ஒன்று எதிரே வந்த பைக்குகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
- விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வலம் வருகிறது.
புதுச்சேரியில் உள்ள நோணாங்குப்பம் பாலத்தில் மீது வாகனங்கள் சென்றுக் கொண்டிருந்தது. அப்பேது, பாலத்தின் மீது வந்த கார் ஒன்று எதிரே வந்த பைக்குகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில், பைக்கில் இருந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு ஆற்றில் விழுந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், ஆற்றில் விழுந்த இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இளைஞர் ஆற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி இணையத்தில் வலம் வருகிறது.
- புதிய அமைச்சர், புதிய நியமன எம்.எல்.ஏ.க்க ளுக்கு வாழ்த்துரை வழங்கும் விழா நடக்கிறது.
- கவர்னர் கைலாஷ்நாதன் ஜான்குமாருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
கூட்டணி அமைச்சரவையில் பா.ஜனதா சார்பில் அங்கம் வகித்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார் நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக புதிய அமைச்சராக ஜான் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களுக்கு பதிலாக செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், காரைக்கால் ராஜசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கான பரிந்துரை கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று மாலை கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து அளித்தார். இதனை கவர்னர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். இதற்கு மத்திய உள்துறை அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பா ஜனதா மாநில தலைவர் பதவிக்கு வி.பி.ராமலிங்கம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் வி.பி. ராமலிங்கம் பா.ஜனதா மாநில தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான அறிவிப்பு நாளை முறையாக அறிவிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவரும் நாளை (திங்கட்கிழமை) மாலை பதவி ஏற்க உள்ளனர். மாலை 4 மணிக்கு ஜான்குமார் அமைச்சராக பதவி ஏற்கும் விழா கவர்னர் மாளிகையில் நடக்கிறது. அங்கு கவர்னர் கைலாஷ்நாதன் ஜான்குமாருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
தொடர்ந்து சட்டசபையில் சபாநாயகர் அறையில் 3 புதிய நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
தொடர்ந்து, முதலியார் பேட்டை சுகன்யா கன்வென்சன் சென்டரில் பா.ஜனதா புதிய மாநில தலைவர் பதவி ஏற்பு மற்றும் புதிய அமைச்சர், புதிய நியமன எம்.எல்.ஏ.க்க ளுக்கு வாழ்த்துரை வழங்கும் விழா நடக்கிறது.
விழாவில் பா.ஜனதா அகில இந்திய பொது செயலாளர் தருண் சுக், மேலிட பொருப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
- பஞ்சபூதங்களின் ஆதிக்கத்தினை உணர்த்தும் வகையில் அருள்பாலித்து வரும் திருத்தலங்கள் சிறப்பானதாகும்.
- பக்தர்களால் “அஷ்டமா சித்திகள் அனைத்தும் தரும் காளத்தி” என்று போற்றி வணங்கிய திருத்தலம்.
புதுவை நகரின் இதயமாக விளங்கக்கூடிய மைய பகுதியில், கிழக்கில் மாதா கோவில் தெரு என்று அழைக்கப்படும் முற்கால நெசவாளர் தெருவுக்கும், மேற்கில் அம்பலத்தாடும் ஐயன் திருமடத்துக்கும், வடக்கே கோவில் பெயர் விளங்கும் காளத்தீஸ்வரன் கோவில் தெருவுக்கும், தெற்கே கொசக்கடை தெரு என்று கூறப்படும் அம்பலத்தடையார் மடம் தெருவுக்கும் இடையில் மிஷன் வீதியில் சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் காளத்தீசுவரர் கோவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக இக்கோவில் திகழ்கிறது.
இப்பூவுலகம் "நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று" ஆகிய பஞ்சபூதங்களின் ஆளுமைக்கு உட்பட்டே இயங்குகிறது என்பது யாவரும் அறிந்ததே.
பஞ்சபூதங்களின் ஆதிக்கத்தினை உணர்த்தும் வகையில் அருள்பாலித்து வரும் திருத்தலங்கள் சிறப்பானதாகும்.
அவற்றுள் தென்கயிலாயம் என்றும், வாயுதலம் (காற்றுத்தலம்) என்றும் "ராகு-கேது தலம்" என்றும் அழைக்கப்படுவது செட்டிக்கோவில் எனப்படும் காளத்தீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில்.
இது பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார், கண்ணப்ப நாயனார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றதும், 'கயிலை பாதி காளத்தி பாதி" என்று நக்கீரரால் போற்றி துதிக்கப்பட்ட திருத்தலமும் ஆகும்.
மூவர் பாடல் பெற்ற திருத்தலம்.
பக்தர்களால் "அஷ்டமா சித்திகள் அனைத்தும் தரும் காளத்தி" என்று போற்றி வணங்கிய திருத்தலம்.
- செட்டிமார்கள் இந்த இறைவியையும், ஈசனையும் தங்களது இதயத்துள் வைத்து பூஜித்து வந்தனர்.
- காலப்போக்கில் எல்லோராலும் அன்புடன் “செட்டிக்கோவில்” என்றே அழைக்கப்படுகின்றது.
இவ்வாறு பலவகையினாலும் சிறப்புற்று, தன்னை நாடிவந்தோருக்கு எண்ணியதை எல்லாம் நிறைவேற்றி அருள்பாலித்து வரும் இத்திருத்தலத்தில் உறையும் ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர பெருமானின் திருவருளால் ஈர்க்கப்பட்ட புதுச்சேரி வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பே இந்த இறைவியையும், ஈசனையும் தங்களது இதயத்துள் வைத்து "திருமூலர்" கூறியவாறு (இதயக்கோவில்) பூஜித்து வந்தனர்.
இவ்வாறு பூஜிக்கப் பெற்று வந்த தெய்வங்களுக்கு திருக்கோவில் கட்டிட எண்ணம் கொண்ட புதுச்சேரி வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் மனம் உருகி இறைவன் திருவருளை வேண்டிட இறைவனும் அவர்களின் மேலான அன்புக்கு கட்டுப்பட்டவனாக திருவருள் வழங்கினார்.
இறையருள் கிடைக்கப் பெற்ற அவர்கள் நகரின் நடுவில் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் பெருங்கோவில் எழுப்பி அதில் ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர பெருமானுடன் பரிவார மூர்த்திகளையும் அமைத்தனர்.
அதுமட்டுமின்றி சிவபெருமானின் இடதுபுறம் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கும் விக்கிரகத்தினை அமைத்து பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தனர்.
பன்னெடுங்காலத்திற்கு முன்னரே சைவமும் வைணவமும் ஒன்று என்பதற்கு இலக்கணமாக புதுவை வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் சான்றாக இருந்துள்ளார்கள்.
இன்றளவும் இருந்து வருகிறார்கள்.
இவ்வாறு போற்றப்படும் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர சுவாமி ஸ்ரீதேவி -பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில் காலப்போக்கில் எல்லோராலும் அன்புடனும் பெருமிதத்துடனும் "செட்டிக்கோவில்" என்றே அழைக்கப்படுகின்றது.
- இது ‘சூட்சும லிங்கம்’ எனவும் வழங்கப்படும்.
- கொடிமரத்தின் உச்சியில் 2 கலசங்களும், நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் பலி பீடத்தின் மேற்கே மிக அருகில் வானத்தை தொட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஏறக் குறைய 36 அடி ஒரு அங்குல உயரமுள்ள உறுதிமிக்க கொடி மரம் கம்பீரமாக நிற்கின்றது.
அன்பர் மனத்தில் அண்டவெளி பராசக்தியை ஈர்த்துக் கொடுக்க வல்லது கொடி மரம் ஆகும்.
இது 'சூட்சும லிங்கம்' எனவும் வழங்கப்படும்.
கொடிமரத்தின் உச்சியில் 2 கலசங்களும், நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் கொடி மரத்தின் உச்சியில் அமைந்துள்ள மணிகள் காற்றில் கலகலத்து கொண்டு இருக்கின்றன.
கொடி மரத்தின் கிழக்கு பகுதியில் நர்த்தன விநாயகரும், தெற்கு வடக்கு முறையே பார்வதி பரமேசுவரனும், வள்ளி தெய்வானையுடன் முருகரும், மேற்கே சிவனை பார்த்தவாறு லிங்கோத்பவரும் செப்பு தகட்டில் பதிக்கப்பட்டு அமைந்துள்ளனர்.
பலிபீடத்தின் முன் தலை தாழ்த்தி வணங்கிய உடனே கொடி மர உச்சியை அண்ணாந்து நோக்கும் அமைப்பை எண்ணிப் பார்த்தால் "பணிவு உண்டாயின் உயர் பதவி உண்டாகும்.
புகழ் வானளாவ விரிந்து நிற்கும்" என்ற கருத்து நமக்கு மிக எளிதில் விளங்கி விடுகின்றது.
மண்ணையும், விண்ணையும் இணைக்கின்ற ஒரு சிறப்பு கொடி மரத்துக்கு உண்டு.
2 கோவில்களிலும் கொடி மரம், பலி பீடம், கோபுரம் என தனித் தனியாக இருப்பினும், ஒரு கோவிலின் சுற்றுப்பகுதியிலேயே அமைந்துள்ளது சிறப்பு கொண்டதாகும்.
- அங்குள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த திருவுருவமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
- அதுபோல லாட சின்ன அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாவதை காணலாம்.
காளத்தீஸ்வரர் கோவிலின் உபகோவிலாக லாட சின்னம்மன் கோவில் உள்ளது.
இந்தகோவிலின் வடகிழக்கு திசையில் மணக்குள விநாயகர் கோவில் அருகே உள்ள லல்லிதொல்லாந்தல் தெருவில் அமைந்துள்ளது.
வெளியில் இருந்து பார்த்தால் ஏதோ ஒரு மடம் போல் தோன்றும் இக்கோவில் உள்ளே சென்று பார்த்தால் ஆச்சரியப்படும்படி பழமை மாறாத வகையில் காட்சி அளிப்பது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
அங்குள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த திருவுருவமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
ராகு தலமான திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகு பகவான் சிலைக்கு பால் அபிஷேகம் செய்யும் போது பாலானது கண்டத்தின் கீழே வரும்போது நீலநிறமாக மாறுவதை பார்க்கலாம்.
அதுபோல லாட சின்ன அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாவதை காணலாம்.
செவ்வாய் தோஷம், நாகதோஷம் போன்ற எல்லா வித தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் பேரருள் வாய்ந்த அம்மனாக ஓடு வேய்ந்த சிறிய கட்டிடத்தில் வீற்றிருக்கிறார்.
மற்ற அம்மன் கோவில்களை போல் அல்லாமல் இங்கு பாம்பு மேல் அமர்ந்த நிலையில் லாட சின்னம்மன் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இங்கு 5 முதல் 10 வாரங்கள் வரை ராகுகாலத்தில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும்.
5 நெய் விளக்குகள் மற்றும் எலுமிச்சம் பழ விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.






