என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "university"
- கொச்சி அருகே களமசேரி பகுதியில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.
- பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சி அருகே களமசேரி பகுதியில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.
இங்கு நடைபெற்ற விழாவில் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது. மேலும், மாணவர்கள் அல்லாதோரும் ஏராளமானோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரங்கம் நிரம்பி வழிந்த நிலையில், அரங்கிற்கு வெளியேயும் அதிக அளவிலானோர் நின்று கொண்டிருந்தனர்.
திடீரென மழை பெய்ததால் அரங்கத்திற்கு வெளியே இருந்தவர்கள், உள்ளே நுழைந்ததால் கூட்ட நெரிசலால் விபத்து ஏற்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- பசும்பொன் தேவர் பெயரில் பல்கலை கழகம் அமைக்க வேண்டும்.
- பாரதிய ஜனதா ஓ.பி.சி. அணி கோரிக்கை வைத்துள்ளனர்.
பரமக்குடி
பாரதீய ஜனதா கட்சி ஓ.பி.சி. அணி மாநில பொறுப்பாளர் சி.எம்.டி ராஜா சேதுபதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேசியமும் தெய்வீகமும் கொள்கை எனக் கொண்டு மத்தியில் ஆட்சி செய்கின்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின்படி பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலை மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழக மெங்கும் வாழக்கூடிய முக்குலத்தோர் சமுதாய மக்கள் அவர் பின்னால் நிற்கிறார்கள்.
வருகிற பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தென் மாவட் டங்களில் பெருவாரியான இடங்களில் அண்ணாமலை தலைமையில் வெற்றி பெறுவார்கள். அதற்கு உறு துணையாக, பாதுகாப்பு அரணாக முக்குலத்து சமுதாய மக்கள் இருப் பார்கள்.
முக்குலத்து மக்களின் கோரிக்கைகளை மாநில தலைவர் அண்ணாமலை நிறைவேற்றி தர வேண்டும். நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு தேசிய தலைவர் பசும் பொன் முத்துராம லிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும். டி.என்.டி ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும். கள்ளர், மறவர், அகமுடையார் மூன்று பேரையும் சேர்த்து தேவர் இனம் என்று அறிவித்து அரசு ஆணையை அமல் படுத்த வேண்டும். தேவர்
பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் இங்கே வாழக்கூடிய ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தேவர் பெயரில் பல்கலை கழகம் அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சி.டி.சி டீன் - 1, தொழில் நுட்ப அலுவலர் - 1, ஆராய்ச்சி உதவியாளர் -4. உள்ளிட்ட 28 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
- ஆன்லைன் மூலம் வருகிற 7-ந் தேதி வரை தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக் கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
உடற்கல்வி இயக்குனர், சிஸ்டம் மேலாளர், வேலைவாய்ப்பு அலுவலர், மக்கள் தொடர்பு அலுவலர், தணிக்கை அலுவலர், தோட்டக்கலை நிபுணர் ஆகிய தலா ஒரு பதவியும், மருத்துவ அதிகாரி-2, டேட்டா என்டரி ஆப்ரேட்டர்- 5, டிரைவர் 14, எம்.டி.எஸ் ஊழியர்கள் 49 உட்பட மொத்தம் 109 பணிகள் நேரடி ஆட்சேர்ப்பு முறையில் நிரப்பப்பட உள்ளன. சி.டி.சி டீன் - 1, தொழில் நுட்ப அலுவலர் - 1, ஆராய்ச்சி உதவியாளர் -4. உள்ளிட்ட 28 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த காலி பணியிடங்கள் குறித்த விபரம் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் வருகிற 7-ந் தேதி வரை தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை இணையதளத்தில் பார்வையிடலாம் என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
- மாணவ-மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
- பதக்கம் வென்ற 6 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அடுத்த பி ள்ளையார் குப்பம் ஸ்ரீபாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலை கழகத்தில் மருத்துவ மாணவ-மாணவி களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல் கலைக்கழக வேந்தர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். பாட்னா எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி இயக்குனர் கோபால் கிருஷ்ணபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பதக்கம் வென்ற 40 மாணவர்கள், சென்னை ஸ்ரீசத்யா சாய் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பதக்கம் வென்ற 6 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.
மேலும் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ராஜகோபாலன், 804 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 554 பேர், ஸ்ரீசத்யா சாய் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 250 பே ர் அடங்குவர்.
2-வது நாளாக நடை பெற்ற பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில், புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர் அஜய் லோகினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திராகாந்தி பல் மருத்துவக்கல்லூரியின் பதக்கம் வென்ற 27 மாணவர்கள், கஸ்தூரிபா காந்தி செவிலியர் கல்லூரியின் பதக்கம் வென்ற 26 மாணவர்களுக்கும் பதக்கங்களை வழங்கினார்.
தொடர்ந்து ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக வேந்த ர், இந்திராகாந்தி பல் மருத்துவக்கல்லூரியின் 163 பேருக்கும், கஸ்தூரிபா காந்தி செவிலியர் கல்லூரியை சேர்ந்த 264 பே ருக்கும் பட்டங்களை வழங்கினார்.
விழாவில் முன்னதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நிகர் ரஞ்சன் பிஸ்வாஸ் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
- 9 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்த சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.
- எவ்வித பாதிப்பும் இன்றி கற்றல், கற்பித்தல் பணிகள் நடக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது
திருப்பூர்:
பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்று செயல்படும் தனியார் கல்லூரிகளில் 9 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்த சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.
கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை அதிகம் உள்ள பாடப்பிரிவுகளை துவங்க அனுமதி கோருவதை போன்று சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்தவும் அனுமதி கோருவது வழக்கம். அதன்படி 9 கல்லூரிகளில் இருந்து சில பாடப்பிரிவுகளை நிறுத்த அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி உரிய ஆய்வுகள் மேற்கொண்டு 21 பாடப்பிரிவுகளை நிறுத்த பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், தனியார் கல்லூரிகளில், 9 கல்லூரிகளில் இருந்து 21 பாடப்பிரிவுகள் நிறுத்த அனுமதி கோரியிருந்தனர்.கணிதம், பி.காம்., ஆங்கிலம், எலக்ட்ரானிக்ஸ், வரலாறு, கேட்டரிங் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெற்று இருந்தன.
மாணவர்கள் சேர்க்கை இல்லை என்பதால் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தற்போது படிக்கும் மாணவர்கள் முடிக்கும் வரை எவ்வித பாதிப்பும் இன்றி கற்றல், கற்பித்தல் பணிகள் நடக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
- அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
- பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வளாக இயக்குநர் புஷ்பராணி நட்டு வைத்தார்.
மதுரை
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் மதுரை கீழக்குயில்குடி மையத்தில், 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
"தேச விழா முதன்மை விழா" என்ற கருப்பொருளில், "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" -ன் ஒருங்கிணைந்த பகுதியாக விழா கொண்டாடப்பட்டது. மதுரை வளாக இயக்குநர் பேராசிரியர் புஷ்பராணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் வளர்ச்சியும், கடமையும் என்ற தலைப்பில் பேசினார். விழாவில் மாணவிகள் பேச்சு, பாட்டு, கட்டுரை மற்றும் குழுப் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் தேசப்பற்றையும் அனைவரையும் அதில் தமக்குள்ள ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி உற்சாகப்படுத்தினர்.
மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கணினியியல் துறை மாணவி நிலாபாரதி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வளாக இயக்குநர் புஷ்பராணி நட்டு வைத்தார்.
- உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு தர வேண்டுமென்று பல்கலைக் கழகம் கேட்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது.
- தற்போது தமிழ்நாட்டின் ஆளுநர், பல்கலைக்கழகத்தின் அனைத்து செயல்பாட்டிலும் தலையிட தொடங்கி உள்ளார்.
சென்னை:
தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தொன்மையும், பாரம்பரியமும் மிக்க "சென்னை பல்கலைக்கழகத்தின்" கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இப்பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் முதுநிலை சமூகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடமிருந்து, எந்தவொரு அமைப்புகளிலும் உறுப்பினர்களாக இணைந்து செயல்படமாட்டேன் என்றும், எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடமாட்டேன் என்றும் உறுதி மொழி படிவத்தில் கையொப்பமிட்டு தர வேண்டுமென்று பல்கலைக் கழகம் கேட்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது.
மேலும், மாணவர்கள் இந்த விதிமுறைகளை மீறினால், துறையின் தலைவரால், உடனே மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கப்படுவர் என்று அப்படிவத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியா எனும் மாபெரும் ஜனநாயக நாட்டில் அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கும் உரிமைகளை அறிந்தவர்களாய், புரிந்தவர்களாய் நியாயமான முறையில், ஜனநாயக வழிமுறைகளை கடைபிடித்து கேட்டுப் பெறக்கூடிய நிலையை இளைய தலைமுறையினருக்கு வழங்க வேண்டிய கடமை பல்கலைக்கழகங்களுக்கு உண்டு.
ஆனால் தற்போது தமிழ்நாட்டின் ஆளுநர், பல்கலைக்கழகத்தின் அனைத்து செயல்பாட்டிலும் தலையிட தொடங்கி உள்ளார். தேசிய கல்விக் கொள்கையையும், சனாதன சித்தாந்தங்களையும், தமிழ்நாட்டில் புகுத்திடும் பெரும் முயற்சியில் பல்கலைக் கழகத்திற்கெல்லாம் கட்டளையிட்டு, செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
- தேசிய தேர்வு முகமை அதன் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.
- கல்விதகுதிகள், விண்ணப்பித்தல் குறித்த குறிப்பேடுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மத்திய பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத்தேர்வு கடந்த மே 21-ந் தேதி நடந்தது. தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை அதன் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.
பொது நுழைவுத்தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் புதுவை பல்கலைக்கழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கு 5 ஆண்டு ஒருங்கிணைந்த மேற்படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்விதகுதிகள், விண்ணப்பித்தல் குறித்த குறிப்பேடுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- கலசலிங்கம் பல்கலை கழகத்தில் முப்பெரும் விழா நடந்தது.
- ‘‘சைபா் செக்யூரிட்டி’’ என்ற தலைப்பில் கருத்தரங்கில் மும்பை கல்மேஷ் ஜோஷி பேசினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை கழகத்தில் 2 நாட்கள் தேசியக் கலைவிழா –''ஸ்பார்க்ஸ்-23'', தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் பெற்றோர்-ஆசிரியா் கழக கலந்துரையாடல் மற்றும் சைபா் செக்யூரிட்டி என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கு நடந்தது. துணைத்தலைவா் சசிஆனந்த் தலைமை தாங்கினார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். மாணவா் நலஇயக்குநா் முத்துகண்ணன், துறைத்தலைவா் தனசேகரன் வரவேற்றனா். கலைவிழாவில் பல்வேறு கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா். டிவி புகழ் இசைக் கலைஞா் கார்த்திக் தேவராஜ் இன்னிசை நிகழ்ச்சி நடத்தினார். ''மிஸ்.திருச்சி" ஷாலினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பி.பேப் குழுவினர் நடன நிகழ்ச்சி நடத்தினா். விளம்பர நடிகர் தனவிஷால், டி.ஜெ. புகழ் பிரஷ்பி நிகழ்ச்சியை நடத்தினா். ''சைபா் செக்யூரிட்டி'' என்ற தலைப்பில் கருத்தரங்கில் மும்பை கல்மேஷ் ஜோஷி பேசினார்.
பெற்றோர்-ஆசிரியா் கழக கூட்டத்தில் பெற்றோர்கள் கலந்துரையாடினர். விழா ஏற்பாடுகளை பேராசிரியா்கள் கபிலன், பிரியா, பாலகண்ணன், சுரேந்திரன் மற்றும் ஆசிரியர் குழு, மாணவா்கள் குழுவினர் செய்திருந்தனர்.
- கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களுக்கு பல்திறன் போட்டிகள் நடந்தது.
- பங்கேற்றோருக்கு சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத்துறை சார்பில் 2 நாள் கருத்தரங்கு தொடக்கவிழா நடந்தது. சினாப்டிக் 2023 என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை எம்.பி.ஏ.படிக்கும் மாணவர்கள் நடத்தினர். கருத்தரங்கை துறை தலைவர் சாருமதி தொடங்கி வைத்தார்.
கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களுக்கு பல்திறன் போட்டிகள் நடந்தது. போட்டிகளில் பங்கேற்றோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் உயர் பதவிகளில் உள்ள நிர்வாகிகள், கம்யூடேஷனல் இன்டலிஜென்ஸ் தலைப்பில் விவாதம் நடத்தினர்.
தரணிக்கரசு சிறப்புரை யாற்றனார். கருத்தரங்கை ஒருங்கிணைப்பாளர்கள் சித்ரா வசுப்பிரமணியம், நிஷாந்த் புடோடா ஆகியோர் தொகுத்து வழங்குகினர்.