search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "university"

    • போட்டி முடிவுகளை வெளியிடுவதில் நடுவர்களாக இருந்த சிலர் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது.
    • சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கண்டோன்மெண்ட போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் இளைஞர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அணி அணியாக கலந்து கொண்டனர். இதில் போட்டி முடிவுகளை வெளியிடுவதில் நடுவர்களாக இருந்த சிலர் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இதன் காரணமாக பல போட்டிகள் நிறுத்தப்பட்டன.

    தொடர்ந்து நடுவர்களின் போன்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் நீதிபதி ஷாஜி என்பவரது போனுக்கு இடைத்தரகர்கள் தொடர்பு கொண்டிருப்பது தெரிவயவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கண்டோன் மெண்ட போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், லஞ்சம் புகாரை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து மார்க்கம்களி நீதிபதி ஷாஜி (வயது52), காசர்கோடு ஜோமெட் (33), மலப்புரம் சூரஜ் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து பதுங்கி வருகின்றனர்.
    • ஹமாஸ் அமைப்பின் இந்த சுரங்கங்கள் இஸ்ரேலுக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது.

    டெல் அவிவ்:

    காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    காசா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் 10 கி.மீ. நீளத்திற்கு ஒரு பெரிய சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.

    காசா முனையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய வகையில், பூமிக்கடியில் பயங்கரவாத நெட்வொர்க் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, அந்த சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதிகளை இஸ்ரேல் படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்பின் அதனை ஆய்வு செய்து, நெட்வொர்க்கின் பெரும் பகுதியையும் அழித்தனர்.

    காசாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இயங்குவதற்காக இந்த சுரங்க நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த அமைப்பு, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கோடிக்கணக்கான மதிப்பிலான நிதியை செலவிட்டு உள்ளது.

    இதன்படி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் கீழே சுரங்க நெட்வொர்க் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

    • தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
    • தமிழக அரசோ இதை பல்கலைக்கழகத்தின் பிரச்சினையாகக் கருதி, எந்த உதவியும் செய்யாமல் ஒதுங்கி நிற்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ரூ.500 கோடி வரை உபரி நிதி இருந்தது. ஆனால், பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு தமிழக அரசு போதிய நிதி, மானியத்தை வழங்கத் தவறியது தான் நிதிநிலை மோசமடைந்ததற்கு காரணம் ஆகும். அதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இந்நிலையிலிருந்து பல்கலைக்கழகம் மீளவும் அரசு தான் உதவ வேண்டும். ஆனால், தமிழக அரசோ இதை பல்கலைக்கழகத்தின் பிரச்சினையாகக் கருதி, எந்த உதவியும் செய்யாமல் ஒதுங்கி நிற்கிறது. இது பெரும் தவறு.

    தமிழ்நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம். பெருந்தலைவர் காமராசரால் உருவாக்கப்பட்டு, பின்னாளில் அவரது பெயரையே தாங்கி நிற்கும் கல்வி நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம். தமிழ்நாட்டின் அடையாளங்களாக திகழும் இந்த இரு பல்கலைக்கழகங்களும் முடங்கி விடாமல் காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

    எனவே, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியிலிருந்து மீட்கவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தனது ஆய்வறிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிரியா சமர்ப்பித்தார்.
    • தகுந்த முடிவை எடுத்ததற்காக கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் செம்புக்கா அழகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜன்-மெர்சி தம்மதியின் மகள் பிரியா. இவரது கணவர் பியூஸ் பால். பிரியாவுக்கு ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது.

    ஆகவே அவர் திருமணமான பிறகும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அவர் திருச்சூர் மாவட்டம் இருஞ்சாலக்குடா கிறிஸ்து கல்லூரியின் விலங்கியல் துறையில் ஆராய்ச்சி மாணவியாக இருந்து வந்தார். அவரது ஆய்வு 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை நீடித்தது.

    தனது ஆய்வறிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிரியா சமர்ப்பித்தார். அவரது ஆய்வறிக்கைக்கு அதே ஆண்டு ஜூலை மாதம் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து முனைவர் பட்டம் பெற பிரியா தகுதியானார்.

    இந்நிலையில் பிரசவத்துக்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது பிரியா பரிதாபமாக இறந்தார். இதனால் அவர் டாக்டர் பட்டத்தை பெற முடியாமல் போனது. டாக்டர் பட்டம் பெறுவது பிரியாவின் நீண்டநாள் கனவாக இருந்ததால், அவருக்கான பட்டத்தை, அவருடைய மகளிடம் வழங்கவேண்டும் என்று பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஆய்வறிக்கை சமர்ப்பித்த வர் இல்லாதநிலையில், பிரியாவின் பட்டத்தை யூ.கே.ஜி.படிக்கும் அவரது மகளிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்கலைக்கழக சிண்டிகேட் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து பிரியாவின் டாக்டர் பட்டம், யூ.கே.ஜி. படித்துவரும் அவரது மகள் ஆன்ரியா பெற உள்ளார்.

    இந்த தகவலை கேரள மாநில உயர்கல்வித்துறை மந்திரி பிந்து தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஆராய்ச்சி தாயின் நீண்ட நாள் கனவை அவரது மகள் ஆன்ரியா பெறப்போகிறார் என்பது நமக்கு என்றென்றும் மறக்க முடியாக நினைவாக இருக்கும். பிரியா இல்லாத நேரத்தில் அவரது முயற்சிகள் மற்றும் அற்புதமான சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துவோம். இந்த விவகாரத்தில் தகுந்த முடிவை எடுத்ததற்காக கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கொச்சி அருகே களமசேரி பகுதியில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.
    • பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது.

    கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொச்சி அருகே களமசேரி பகுதியில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.

    இங்கு நடைபெற்ற விழாவில் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது. மேலும், மாணவர்கள் அல்லாதோரும் ஏராளமானோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அரங்கம் நிரம்பி வழிந்த நிலையில், அரங்கிற்கு வெளியேயும் அதிக அளவிலானோர் நின்று கொண்டிருந்தனர்.

    திடீரென மழை பெய்ததால் அரங்கத்திற்கு வெளியே இருந்தவர்கள், உள்ளே நுழைந்ததால் கூட்ட நெரிசலால் விபத்து ஏற்பட்டுள்ளது.

    கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • பசும்பொன் தேவர் பெயரில் பல்கலை கழகம் அமைக்க வேண்டும்.
    • பாரதிய ஜனதா ஓ.பி.சி. அணி கோரிக்கை வைத்துள்ளனர்.

    பரமக்குடி

    பாரதீய ஜனதா கட்சி ஓ.பி.சி. அணி மாநில பொறுப்பாளர் சி.எம்.டி ராஜா சேதுபதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசியமும் தெய்வீகமும் கொள்கை எனக் கொண்டு மத்தியில் ஆட்சி செய்கின்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின்படி பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலை மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் தென் மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழக மெங்கும் வாழக்கூடிய முக்குலத்தோர் சமுதாய மக்கள் அவர் பின்னால் நிற்கிறார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் தென் மாவட் டங்களில் பெருவாரியான இடங்களில் அண்ணாமலை தலைமையில் வெற்றி பெறுவார்கள். அதற்கு உறு துணையாக, பாதுகாப்பு அரணாக முக்குலத்து சமுதாய மக்கள் இருப் பார்கள்.

    முக்குலத்து மக்களின் கோரிக்கைகளை மாநில தலைவர் அண்ணாமலை நிறைவேற்றி தர வேண்டும். நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு தேசிய தலைவர் பசும் பொன் முத்துராம லிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும். டி.என்.டி ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும். கள்ளர், மறவர், அகமுடையார் மூன்று பேரையும் சேர்த்து தேவர் இனம் என்று அறிவித்து அரசு ஆணையை அமல் படுத்த வேண்டும். தேவர்

    பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் இங்கே வாழக்கூடிய ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மாணவர்கள் பயன்பெறும் வகையில் தேவர் பெயரில் பல்கலை கழகம் அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சி.டி.சி டீன் - 1, தொழில் நுட்ப அலுவலர் - 1, ஆராய்ச்சி உதவியாளர் -4. உள்ளிட்ட 28 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
    • ஆன்லைன் மூலம் வருகிற 7-ந் தேதி வரை தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக் கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

    உடற்கல்வி இயக்குனர், சிஸ்டம் மேலாளர், வேலைவாய்ப்பு அலுவலர், மக்கள் தொடர்பு அலுவலர், தணிக்கை அலுவலர், தோட்டக்கலை நிபுணர் ஆகிய தலா ஒரு பதவியும், மருத்துவ அதிகாரி-2, டேட்டா என்டரி ஆப்ரேட்டர்- 5, டிரைவர் 14, எம்.டி.எஸ் ஊழியர்கள் 49 உட்பட மொத்தம் 109 பணிகள் நேரடி ஆட்சேர்ப்பு முறையில் நிரப்பப்பட உள்ளன. சி.டி.சி டீன் - 1, தொழில் நுட்ப அலுவலர் - 1, ஆராய்ச்சி உதவியாளர் -4. உள்ளிட்ட 28 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த காலி பணியிடங்கள் குறித்த விபரம் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆன்லைன் மூலம் வருகிற 7-ந் தேதி வரை தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை இணையதளத்தில் பார்வையிடலாம் என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

    • மாணவ-மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    • பதக்கம் வென்ற 6 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் அடுத்த பி ள்ளையார் குப்பம் ஸ்ரீபாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலை கழகத்தில் மருத்துவ மாணவ-மாணவி களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல் கலைக்கழக வேந்தர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். பாட்னா எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி இயக்குனர் கோபால் கிருஷ்ணபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பதக்கம் வென்ற 40 மாணவர்கள், சென்னை ஸ்ரீசத்யா சாய் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பதக்கம் வென்ற 6 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.

    மேலும் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ராஜகோபாலன், 804 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 554 பேர், ஸ்ரீசத்யா சாய் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 250 பே ர் அடங்குவர்.

    2-வது நாளாக நடை பெற்ற பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில், புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர் அஜய் லோகினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திராகாந்தி பல் மருத்துவக்கல்லூரியின் பதக்கம் வென்ற 27 மாணவர்கள், கஸ்தூரிபா காந்தி செவிலியர் கல்லூரியின் பதக்கம் வென்ற 26 மாணவர்களுக்கும் பதக்கங்களை வழங்கினார்.

    தொடர்ந்து ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக வேந்த ர், இந்திராகாந்தி பல் மருத்துவக்கல்லூரியின் 163 பேருக்கும், கஸ்தூரிபா காந்தி செவிலியர் கல்லூரியை சேர்ந்த 264 பே ருக்கும் பட்டங்களை வழங்கினார்.

    விழாவில் முன்னதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நிகர் ரஞ்சன் பிஸ்வாஸ் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

    • 9 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்த சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.
    • எவ்வித பாதிப்பும் இன்றி கற்றல், கற்பித்தல் பணிகள் நடக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

    திருப்பூர்:

    பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் அங்கீகாரம் பெற்று செயல்படும் தனியார் கல்லூரிகளில் 9 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்த சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.

    கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை அதிகம் உள்ள பாடப்பிரிவுகளை துவங்க அனுமதி கோருவதை போன்று சேர்க்கை இல்லாத பாடப்பிரிவுகளை நிறுத்தவும் அனுமதி கோருவது வழக்கம். அதன்படி 9 கல்லூரிகளில் இருந்து சில பாடப்பிரிவுகளை நிறுத்த அனுமதி கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி உரிய ஆய்வுகள் மேற்கொண்டு 21 பாடப்பிரிவுகளை நிறுத்த பல்கலைக்கழக சிண்டிகேட் அனுமதி வழங்கியுள்ளது.

    இதுகுறித்து, பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், தனியார் கல்லூரிகளில், 9 கல்லூரிகளில் இருந்து 21 பாடப்பிரிவுகள் நிறுத்த அனுமதி கோரியிருந்தனர்.கணிதம், பி.காம்., ஆங்கிலம், எலக்ட்ரானிக்ஸ், வரலாறு, கேட்டரிங் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெற்று இருந்தன.

    மாணவர்கள் சேர்க்கை இல்லை என்பதால் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தற்போது படிக்கும் மாணவர்கள் முடிக்கும் வரை எவ்வித பாதிப்பும் இன்றி கற்றல், கற்பித்தல் பணிகள் நடக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    • அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வளாக இயக்குநர் புஷ்பராணி நட்டு வைத்தார்.

    மதுரை

    அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் மதுரை கீழக்குயில்குடி மையத்தில், 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    "தேச விழா முதன்மை விழா" என்ற கருப்பொருளில், "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" -ன் ஒருங்கிணைந்த பகுதியாக விழா கொண்டாடப்பட்டது. மதுரை வளாக இயக்குநர் பேராசிரியர் புஷ்பராணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் வளர்ச்சியும், கடமையும் என்ற தலைப்பில் பேசினார். விழாவில் மாணவிகள் பேச்சு, பாட்டு, கட்டுரை மற்றும் குழுப் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் தேசப்பற்றையும் அனைவரையும் அதில் தமக்குள்ள ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி உற்சாகப்படுத்தினர்.

    மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கணினியியல் துறை மாணவி நிலாபாரதி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வளாக இயக்குநர் புஷ்பராணி நட்டு வைத்தார்.

    • உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிட்டு தர வேண்டுமென்று பல்கலைக் கழகம் கேட்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது.
    • தற்போது தமிழ்நாட்டின் ஆளுநர், பல்கலைக்கழகத்தின் அனைத்து செயல்பாட்டிலும் தலையிட தொடங்கி உள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தொன்மையும், பாரம்பரியமும் மிக்க "சென்னை பல்கலைக்கழகத்தின்" கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இப்பெருமைமிகு பல்கலைக்கழகத்தில் முதுநிலை சமூகவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களிடமிருந்து, எந்தவொரு அமைப்புகளிலும் உறுப்பினர்களாக இணைந்து செயல்படமாட்டேன் என்றும், எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடமாட்டேன் என்றும் உறுதி மொழி படிவத்தில் கையொப்பமிட்டு தர வேண்டுமென்று பல்கலைக் கழகம் கேட்பது பெரும் அதிர்ச்சியை தருகிறது.

    மேலும், மாணவர்கள் இந்த விதிமுறைகளை மீறினால், துறையின் தலைவரால், உடனே மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு நீக்கப்படுவர் என்று அப்படிவத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

    இந்தியா எனும் மாபெரும் ஜனநாயக நாட்டில் அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கும் உரிமைகளை அறிந்தவர்களாய், புரிந்தவர்களாய் நியாயமான முறையில், ஜனநாயக வழிமுறைகளை கடைபிடித்து கேட்டுப் பெறக்கூடிய நிலையை இளைய தலைமுறையினருக்கு வழங்க வேண்டிய கடமை பல்கலைக்கழகங்களுக்கு உண்டு.

    ஆனால் தற்போது தமிழ்நாட்டின் ஆளுநர், பல்கலைக்கழகத்தின் அனைத்து செயல்பாட்டிலும் தலையிட தொடங்கி உள்ளார். தேசிய கல்விக் கொள்கையையும், சனாதன சித்தாந்தங்களையும், தமிழ்நாட்டில் புகுத்திடும் பெரும் முயற்சியில் பல்கலைக் கழகத்திற்கெல்லாம் கட்டளையிட்டு, செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

    • தேசிய தேர்வு முகமை அதன் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.
    • கல்விதகுதிகள், விண்ணப்பித்தல் குறித்த குறிப்பேடுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மத்திய பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத்தேர்வு கடந்த மே 21-ந் தேதி நடந்தது. தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை அதன் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

    பொது நுழைவுத்தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் புதுவை பல்கலைக்கழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கு 5 ஆண்டு ஒருங்கிணைந்த மேற்படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்விதகுதிகள், விண்ணப்பித்தல் குறித்த குறிப்பேடுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ×