search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "governor"

    • தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.
    • மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவு

    கொலை வழக்கில் ஆயுள் தண்டணை கைதியாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.

    அதில், முன்கூட்டியே விடுவிக்கும் அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துள்ளார் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அப்போது, "அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர். ஆளுநர் அதனை மீற முடியாது" உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பட்டுள்ளது.

    மேலும், மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது
    • துணை நிலை கவர்னருக்கு 5 எம்.எல்.ஏ.க்களை நியமிக்க அதிகாரம் உள்ளது.

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பே துணை நிலை ஆளுநர் மூலம் 5 எம்.எல்.ஏக்களை நியமனம் செய்ய பாஜக தலைமையிலான அரசு முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகின. இது ஜனநாயகத்தை மீறும் செயல் என்று காங்கிரஸ்- என்.சி.பி, மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டங்களைத் தெரிவித்து வருகிறன.

    அதிகாரம் 

    ஜம்மு காஷ்மீரில் துணை நிலை ஆளுநருக்கு சமீபத்தில் மத்திய அமைச்சகத்தால் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டது. அதன்படி துணை நிலை கவர்னருக்கு 5 எம்.எல்.ஏ.க்களை நியமிக்க அதிகாரம் உள்ளது. இவர்களில் இரு பெண்கள், மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர், காஷ்மீர் பண்டிட்டுகள் ஆகியோர் இட ஒதுக்கீடு படி நியமனம் செய்யப்படுகின்றனர்.

    இந்த 5 நியமன எம்.எல்.ஏ.க்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நிகராக அதே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நிகரான அதிகாரத்தை பெரும் இவர்கள் சட்டசபையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுகின்றனர்.

    புதிதாக இயற்றப்படும் மசோதாக்களுக்கு வாக்களிக்கலாம்.எனவே இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அந்த சூழலை பயன்படுத்தி துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நியமிக்கும் இந்த 5 எம்.எல்..க்களை கைவசம் வைத்துக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்ற முடியும். ஆளுநரின் இந்த அதிகாரத்துக்கு முன்பே எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

    பெரும்பான்மை 

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் - என்சிபி கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் என்ற முடிவுகளும் வெளியாகியுள்ளது சுயேட்ச்சைகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் காங்கிரஸ் அவர்களை தங்கள் பக்கம் இழுத்து மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவையான 46 தொகுதிகளைப் பிடித்துவிடக்கூடும்.

    இதைத் தடுப்பதற்காகவே துணை நிலை ஆளுநரின் அதிகாரத்தைக் கையில் எடுத்துள்ளது பாஜக. ஆளுநர் 5 எம்.எல்.ஏக்களை நியமிக்கும் பட்சத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 46 இல் இருந்து 48 ஆக அதிகரிக்கும் இது தொங்கு சட்டசபை ஏற்பட வழிவகை செய்து பாஜகவுக்கு ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை வழங்கலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • கேரள கவர்னரின் துண்டில் பட்டு எரிந்த தீயை அருகிலிருந்தவர் உடனடியாக அணைத்தனர்.

    கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள சபரி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் அம்மாநில கவர்னர் ஆரிஃப் முகமது கான் கலந்து கொண்டார்.

    ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு கவர்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது புகைப்படத்திற்கு அருகில் இருந்த விளக்கில் இருந்து கவர்னரின் துண்டில் தீப்பிடித்தது. இதை உடனடியாக கவனித்த அதிகாரிகள் தீயை அணைத்தனர்.

    பின்னர் பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து கவர்னரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இச்சம்பத்தால் கவர்னருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் நிகழ்வின் நிறைவு விழாவை அவர் தொடங்கி வைத்தார்.

    • குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.
    • கேள்வித்தாளில் 96வதாக இடம்பெற்ற ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப்-2 தேர்வு நடைபெற்றது. குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 38 மாவட்டங்களில் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் எழுதினர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    கேள்வித்தாளில் 96வதாக இடம்பெற்ற ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    அதாவது, ஆளுநர் அரசின் தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி என 2 வித பணிகளை செய்கிறார் என கூற்றாகவும், காரணமாக ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அரசு, ஆளுநர் இடையே தொடரும் மோதல் போக்கிற்கு மத்தியில், குரூப் 2 தேர்வில் சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    சனாதானம் குறித்து பேசியவர்கள் தற்போது அமைதியாகிவிட்டார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதியை இன்று மறைமுகமாக சீண்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மம்தா வங்கத்தின் பெண் மாக்பெத், அவருடன் நான் இனி ஒன்றாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன்.
    • மாக்பெத் என்பது நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபலமான நாடகம் ஆகும்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு மருத்துவர்கள் போராடி வருகின்றனர். கொல்கத்தாவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சகத்தின் முன் போராடி வரும் மருத்துவர்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா நேரடி பேசுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் பேசுவார்த்தயை நேரலையில் ஒளிபரப்பினால் மட்டுமே தாங்கள் வருவோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் இதனை ஏற்க மருத்த மம்தா, யாரும் வராததால் 2 மணி நேரம் காலி இருக்கைகளுக்கு மத்தியில் மம்தா காத்துக்கிடந்தார். மேலும், இந்த விவகாரத்தால் தான் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் தாயாராக உள்ளதாகத் தெரிவித்த மம்தா போராடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று தெரிவித்தார். ஆனால் இந்த விஷயத்தில் சிலர் நீதியை விரும்பவில்லை தனது நாற்காலியையே விரும்புகின்றனர் என்று மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

     

    இந்நிலையில் மம்தா குறித்து மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் விமர்சித்துள்ளார். 'மம்தா பானர்ஜி வங்கத்தின் பெண் மாக்பெத், அவருடன் நான் இனி ஒன்றாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன். பொதுவெளியில் அவரை புறக்கணிப்பேன். மம்தா உள்துறை அமைச்சர் பொறுப்பையும் அதே சமயம் சுகாதர அமைச்சர் பொறுப்பையும் தன்வசம் வைத்துள்ளது இந்த நேரத்தில் நகை முரணாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் லேடி மாக்பெத், ஹூக்லி நீரை கையில் வைத்திருந்தும் தனது கரை படிந்த கரங்களை கழுவ முடியாமல் விழிக்கிறார். மாநிலத்தின் முதல்வர் பாதுகாப்பதற்குப் பதிலாகப் போராடுகிறார். நகரங்களிலும், தெருக்களிலும், மருத்துவமனைகளிலும் என அனைத்து இடங்களிலும் வன்முறை தான் மலிந்துள்ளது என்று ஆனந்தா போஸ் விமர்சித்துள்ளார்.

    மாக்பெத் என்பது நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபலமான நாடகம் ஆகும். ஸ்காட்லாந்தை சேர்ந்த மாக்பெத் என்ற படைத் தலைவன் தனது மனைவியின் பேச்சைக் கேட்டு மன்னரைக் கொலை செய்து அரியணையைக் கைப்பற்றுவான். இதனால் ஏற்பட்ட குற்ற உணர்வாலும், தனக்கு ஆபத்து வரும் என்ற அச்சத்தாலும் மேலும் பலரை கொன்று குவிப்பான். இதனால் நாட்டு மக்களிடையே கலவரம் வெடித்து உள்நாட்டு போர் உருவாகும்.

    தற்போது மாக்பெத்தின் சூழலில் மம்தா உள்ளதாக ஆளுநர் விமர்சித்துள்ளதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் பொறுப்பில் உள்ள ஒருவர் அரசியல்வாதி போல் பேசி வருவதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஒருவர் புகார் அளித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

    • வரம்பு மீறாமல், தவறு செய்யாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும்.
    • ஒருமித்த கருத்துடன், அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும்.

    கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் அல்லது, அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை, ஒருமித்த கருத்துடன் நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

    கடந்த வாரம் தெலுங்கானாவில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அபிஷேக் மனு சிங்வி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தபோது இவ்வாறு தெரிவித்தார்.

    அப்போது பேசிய அவர், "இந்த அரசாங்கத்தின் மிகப் பெரிய தோல்வி என்னவென்றால், அது ஒவ்வொரு நிறுவனத்தையும் இழிவுபடுத்தி, மதிப்பை குறைத்துள்ளது.

    கவர்னர்கள் இரண்டாவது தலைமை நிர்வாகியாக அல்லது ஒரே உறையில் இரண்டு கத்தியாக செயல்படும் நிகழ்வுகள் பல நடந்துள்ளன. கவர்னர் பதவியை அகற்ற வேண்டும் அல்லது ஒருமித்த கருத்துடன், அற்ப அரசியலில் ஈடுபடாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும். வரம்பு மீறாமல், தவறு செய்யாத ஒருவரை கவர்னராக நியமிக்க வேண்டும். அல்லது ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்.

    கவர்னராக இருப்பவர் முதலமைச்சருக்கு சவாலாகவோ, அச்சுறுத்தலாகவோ இருந்தால் கீழே இறங்க வேண்டியது கவர்னர்தான் . ஏனென்றால், முதலமைச்சர் யார்? என்பதற்குத்தான் தேர்தல் நடக்கிறது. கவர்னர் யார்? என்பதற்கு அல்ல

    இறுதியில் நீதிமன்றத்திற்குச் சென்று மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் கூறும்போது, அதை ஜனாதிபதிக்கு அனுப்புங்கள் என கவர்னர் கூறுகிறார். ஆட்சி பாதிக்கப்படுகிறது. முடிவுகளை எடுக்க முடியவில்லை. அதே கோவத்தில் ஒரே உறையில் இரண்டு கத்தியாக மற்றொரு தலைமை நிர்வாகி போல் கவர்னர் செயல்படுகிறார்" என்று தெரிவித்தார்.

    • கவர்னருக்கும், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
    • ஊர்வலத்தில் முதல்-மந்திரி மற்றும் அனைத்து மந்திரிகள், கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்பார்கள்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் முடா நில ஒதுக்கீட்டு வழக்கில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு எதிரான விசாரணைக்கு கவர்னர் அனுமதி வழங்கினார். இதையடுத்து கவர்னருக்கும், கர்நாடக காங்கிரஸ் அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மத்திய மந்திரி எச்.டி.குமாரசாமி, முன்னாள் மந்திரி முருகேஷ் நிராணி, எம்.எல்.ஏக்கள் சசிகலா ஜொல்லே, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் மீதான வழக்குகளை விசாரிக்க கவர்னர் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற 31-ந் தேதி கர்நாடக அரசு சார்பில் விதான்சவுதாவில் உள்ள காந்தி சிலையில் இருந்து கவர்னர் மாளிகைக்கு ஊர்வலமாக செல்லப்போவதாக காங்கிரஸ் மாநில தலைவரும், கர்நாடக துணை முதல்-மந்திரியுமான டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

    மேலும் இந்த ஊர்வலத்தில் முதல்-மந்திரி மற்றும் அனைத்து மந்திரிகள், கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் பங்கேற்பார்கள் என்று அறிவித்து உள்ளார். கவர்னருக்கு எதிராக முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள், போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் பரபரப்பு நிலவி வருகிறது.

    • கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது.
    • 11 மணிக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை முடிக்க திட்டம்.

    புதுச்சேரி:

    தெலுங்கானா கவர்ன ராகவும், புதுச்சேரியில் பொறுப்பு கவர்னராக பதவி வகித்து வந்த தமி ழிசை சவுந்தரராஜன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால், கவர்னர் பதவியை கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார்.

    அவருக்கு பதிலாக ஜார்க்கண்ட் மாநில கவர்னராக பதவி வகித்து வந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதல் பொறுப்பாக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் பதவி வழங்கப்பட்டது.

    தற்போது அவர் மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 27-ந் தேதி புதுச்சேரியின் புதிய கவர்னராக கே.கைலாசநாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார்.

    புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதன் 7-ந் தேதி (புதன்கிழமை) பதவியேற்கிறார். 6-ந் தேதி மாலை புதுச்சேரி வருகிறார். 7-ந் தேதி காலை 11.15 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடக்கிறது.

    இதில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ண குமார் புதிய கவர்னராக நிமியக்கப்பட்டுள்ள கைலாசநாதனுக்கு பதவி பிரமானமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்து வைக்கிறார்.

    விழாவில் முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர திகாரிகள் கலந்து கொண்டு கவர்னருக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கவர்னர் மாளிகை செய்து வருகிறது.

    இந்த பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதற்காக, 7-ந் தேதி காலை 11 மணிக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • வயநாட்டிற்கு தமிழகம் சார்பாக உதவி.
    • முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சார்பாக அனைத்து உதவிகளையும் செய்வதாக சொல்லி உள்ளோம். இதற்காக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி உள்ளோம். அது மட்டுமின்றி தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடியை அனுப்பி வைத்துள்ளோம். இன்னும் தேவைப்பட்டால் உதவி செய்வதாக கூறி உள்ளோம்.

    கேள்வி:- பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி மீது ஜாதி ரீதியான தாக்குதல்கள் செய்யப்பட்டுள்ளது?

    பதில்:- இது கேட்க வேண்டிய கேள்வியே இல்லை.

    கேள்வி:- கவர்னர் ஆர்.என்.ரவி பதவி காலம் முடிகிறதே. அவரது பதவி நீட்டிக்கப்படும் என தெரிகிறதே?

    பதில்:- நான் ஜனாதிபதியும் அல்ல, பிரதமரும் அல்ல இவ்வாறு கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    • சி.வி. ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
    • ' ஆளுநர் மாளிகை செல்வதற்குப் பெண்கள் பயப்படுகின்றனர்' என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.

    மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் மீது ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார். இதனையடுத்து, 'ஆளுநர் மாளிகை செல்வதற்குப் பெண்கள் பயப்படுகின்றனர்' என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.

    மேலும், அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பதிவு பிரமாணம் செய்து வைக்காமல் கவர்னர் இழுத்தடித்து வந்தார். அதனால் அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரை விமர்சித்தனர்.

     

    இந்நிலையில், மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜூலை 17 ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆளுநருக்கு எதிராக அரசியல் ரீதியாக எந்த கருத்தையும் மம்தாவும் அவரது கட்சியினரும் தெரிவிக்கக் கூடாது என்று நீதிபதி கிருஷ்ண ராவ் உத்தரவிட்டார். இந்த உத்தரவானது அடுத்த மாதம் ஆகஸ்ட் 14 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

     

    இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில்தான் நேற்று அந்த கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிஸ்வரூப் சவுத்ரி மற்றும் ஐ.பி.முகர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்துச் சுதந்திரத்தை மதித்து சட்டத்திற்கு உட்பட்டு முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநரை விமர்சிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் விமர்சிக்கக்கூடாது என்ற முந்தைய தீர்ப்பு செயலிழந்துள்ளது.

    • ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
    • கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர்' என்று மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.

    மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார்.

    இதனையடுத்து, 'கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர்' என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.

    மேலும், அண்மையில் நடைபெற்ற இடை தேர்தலில் வெற்றி பெற்ற 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பதிவு பிரமாணம் செய்து வைக்காமல் கவர்னர் இழுத்தடித்து வந்தார். அதனால் அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் இந்த விவகாரம் தொடர்பாக கவர்னரை விமர்சித்தனர்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, கவர்னருக்கு எதிராக அவதூறாக எந்த கருத்தையும் மம்தாவும் அவரது கட்சியினரும் தெரிவிக்க கூடாது என்று நீதிபதி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார். 

    • வோரோநெஷ் பகுதிகளில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் தெரிவித்துள்ளார்.
    • நாளை மறுநாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷியா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ரஷிய பகுதிகளில் உக்ரைன் நேற்று நாளிரவு நடத்தியுள்ள டிரோன் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள ரஷியாவின் வடக்கு பகுதியான வோரோநெஷ் [voronezh] பிராந்தியத்தில் நடந்த இந்த டிரோன் தாக்குதலால் சேமிப்பு கிடங்கு ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமானது. இந்நிலையில் வோரோநெஷ் பகுதிகளில் அவசர நிலையை அமல்படுத்துவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சில பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் உக்ரைன் டிரோன்களளில் இருந்து வீசப்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் பணி நடந்துவருகிறது.

    கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வரும் ரஷிய- உக்ரைன் போரில் இதுவரை சாதகமான தீர்வு எதுவும் எட்டப்படாத நிலையில் மேற்கு நாடுகளில் உதவியுடன் உக்ரைன் ரஷியாவை எதிர்கொண்டு வருகிறது. மறுபுறம் வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு ஆதரவு அளித்து வருகிறது. நாளை மறுநாள் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷியா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×