என் மலர்
நீங்கள் தேடியது "சட்டமன்ற கூட்டத்தொடர்"
- புதுச்சேரியில் 657 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சட்டமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி
- தமிழ்நாட்டில் ஜன.20-ல் தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது
15-வது புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடர் பிப்ரவரி 12 தொடங்கும் என சபாநாயகர் ஆர். செல்வம் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி கோரும் துணை மானியக் கோரிக்கைகளும் இந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.
மேலும் புதுச்சேரியில் 657 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சட்டமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜன.20-ல் தொடங்கி 24ஆம் தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
- ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு உரையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
- கேரள சட்டமன்றத்திலும் அரசுக்கும் ஆளுநருக்கும் உரையில் வேறுபாடு எழுந்தது
முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடக மாநிலத்தில் இன்று (ஜனவரி 22) சட்டமன்றத் கூட்டத் தொடர் தொடங்கியது. வரும் 31 ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெறும்.
கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று மரபுப்படி அம்மாநில ஆளுநர் தவார்சந்த் கெலாட் உரையுடன் அவை தொடங்க இருந்தது.
தனது உரையில் 2 வரிகளை மட்டுமே வாசித்த ஆளுநர் கெலாட், சட்டென உரையை நிறுத்தி அவையை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்.
வழக்கமாக ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையை மாநில அரசு தயாரிக்கும். அந்த வகையில் கர்நாடக அரசு தயாரித்த உரையில் 11 பத்திகளில் ஆளுநர் கெலாட்டுக்கு உடன்பாடு இல்லையாம்.
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கம் செய்து மத்திய அரசு கொண்டு வந்த விபி ஜி ராம் ஜி சட்டத்திற்கு எதிர்ப்பு உட்பட மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்கள் அந்த உரையில் இடம்பெற்றுள்ளதால் அதை வாசிக்க மறுத்து கெலாட் அவையை விட்டு வெளியேறி உள்ளார்.
முன்னதாக நேற்று முன் தின் தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடினார்கள், தேசிய கீதம் பாடவில்லை என கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் 4 வது ஆண்டாக வெளியேறினார்.
அதேபோல் கேரள சட்டமன்றத்திலும் அரசுக்கும் ஆளுநருக்கும் உரையில் வேறுபாடு எழுந்தது. இந்த நிலையில் கர்நாடகாவிலும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளியேறி உள்ளார்.
இதன் மூலம் தென் மாநிலங்களில் ஆளும் அரசுகளுடன் ஆளுநர்களை வைத்து மத்திய அரசு அரசியல் செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.
- மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத்திட்டத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது காலை உணவுத்திட்டத்தில் பொங்கல் வழங்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத்திட்டத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டத்தில் அரிசி உப்புமாவுக்கு பதிலாக பொங்கல், சாம்பார் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது காலை உணவுத்திட்டத்தில் பொங்கல் வழங்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக பள்ளிகளில் சத்துணவு குழந்தைகளுக்கான உணவூட்டு மானியத்தொகையை ரூ.61.61 கோடியாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
- சட்டமன்ற கூட்டத்தொடரில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பேச்சு
- போளூர் ஜவ்வாது மலை சாலையில் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் போளூர் தொகுதி எம்.எல்.ஏ. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கேள்வி நேரத்தின் போது பேசியதாவது:-
ஆன்மீக நகரமான திருவண்ணாமலை நகருக்கு மாதந்தோறும் லட்சக்கண க்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக வருகிறார்கள் அவர்களின் நலனை முன்னிட்டு தற்போது வேலூர் சாலையில் இருந்து செங்கம் செல்லும் சாலை வரை அமைக்கப்பட்டு இருக்கிற சுற்றுவட்டப் பாதையை மேலும் நீடித்து செங்கம் சாலையில் இருந்து வேலூர் சாலை வரை சுற்று வட்டப் பாதை அமைப்பதற்கு அரசு ஆவணம் செய்யுமா என்றும்
அதேபோல் போளூர் நகரத்தில் ஏற்பட்டிருக்கிற போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போளூர் நகர் வசூரில் இருந்து ஜவ்வாது மலை செல்லுகின்ற அரசு மருத்துவமனை வரை பைபாஸ் சாலை அமைப்பதற்கு அரசு ஆவணம் செய்யுமா என பேசினார். இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பதில் அளித்து பேசுகையில்:-
சட்டமன்ற உறுப்பினர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொல்லுகின்ற சாலையை நான் அறிவேன் வேலூர், திருவண்ணாமலை சாலை என்பது தேசிய நெடுஞ்சாலை ஆகும் அதேபோன்று திருவண்ணாமலை செங்கம் சாலையும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.
மாநில அரசின் சார்பாக புறவழி சாலை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அரசின் சார்பாக நிலங்களை எல்லாம் கையகப்படுத்தப்பட்டு திட்ட மதிப்பீடுகள் எல்லாம் தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் அதற்குரிய நிதியை ஒதுக்கிவிட்டார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இப்போது புதியதாக நான் மத்திய மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து பேசியபோது ஒரு தேசிய நெடுஞ்சாலையை இன்னொரு தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் போது அதற்கான புறவழி சாலைக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நிதி வழங்குகிறோம் என்று தெரிவித்ததன் அடிப்படையில் தற்போது அதற்கான கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.
நிதி பெறப்பட்ட உடன் அதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலையுடன் செங்கம் சாலையும் வேலூர் சாலையும் இணை க்கப்படும்.
அடுத்து போளூர் சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அங்கே ஒரு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்திருக்கிறார்.
சென்ற முறை சட்டம ன்றத்தில் அவர் பேசுகின்ற போது இதை குறிப்பிட்டு இருந்தார்கள் அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு முதலமைச்சர் அனுமதியோடு அதற்கான டி.பி.ஆர் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணி முடிந்ததும் அந்த புறவழிச் சாலை கட்டாயம் அமைகப்படும் என அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.






