செங்கம் சாலையில் இருந்து வேலூர் ரோடு வரை சுற்று வட்டப் பாதை அமைக்க வேண்டும்

சட்டமன்ற கூட்டத்தொடரில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பேச்சு போளூர் ஜவ்வாது மலை சாலையில் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தல்
செங்கம் சாலையில் இருந்து வேலூர் ரோடு வரை சுற்று வட்டப் பாதை அமைக்க வேண்டும்
Published on

திருவண்ணாமலை:

நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் போளூர் தொகுதி எம்.எல்.ஏ. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கேள்வி நேரத்தின் போது பேசியதாவது:-

ஆன்மீக நகரமான திருவண்ணாமலை நகருக்கு மாதந்தோறும் லட்சக்கண க்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக வருகிறார்கள் அவர்களின் நலனை முன்னிட்டு தற்போது வேலூர் சாலையில் இருந்து செங்கம் செல்லும் சாலை வரை அமைக்கப்பட்டு இருக்கிற சுற்றுவட்டப் பாதையை மேலும் நீடித்து செங்கம் சாலையில் இருந்து வேலூர் சாலை வரை சுற்று வட்டப் பாதை அமைப்பதற்கு அரசு ஆவணம் செய்யுமா என்றும்

அதேபோல் போளூர் நகரத்தில் ஏற்பட்டிருக்கிற போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போளூர் நகர் வசூரில் இருந்து ஜவ்வாது மலை செல்லுகின்ற அரசு மருத்துவமனை வரை பைபாஸ் சாலை அமைப்பதற்கு அரசு ஆவணம் செய்யுமா என பேசினார். இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பதில் அளித்து பேசுகையில்:-

சட்டமன்ற உறுப்பினர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொல்லுகின்ற சாலையை நான் அறிவேன் வேலூர், திருவண்ணாமலை சாலை என்பது தேசிய நெடுஞ்சாலை ஆகும் அதேபோன்று திருவண்ணாமலை செங்கம் சாலையும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.

மாநில அரசின் சார்பாக புறவழி சாலை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அரசின் சார்பாக நிலங்களை எல்லாம் கையகப்படுத்தப்பட்டு திட்ட மதிப்பீடுகள் எல்லாம் தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் அதற்குரிய நிதியை ஒதுக்கிவிட்டார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இப்போது புதியதாக நான் மத்திய மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து பேசியபோது ஒரு தேசிய நெடுஞ்சாலையை இன்னொரு தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் போது அதற்கான புறவழி சாலைக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நிதி வழங்குகிறோம் என்று தெரிவித்ததன் அடிப்படையில் தற்போது அதற்கான கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

நிதி பெறப்பட்ட உடன் அதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலையுடன் செங்கம் சாலையும் வேலூர் சாலையும் இணை க்கப்படும்.

அடுத்து போளூர் சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அங்கே ஒரு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

சென்ற முறை சட்டம ன்றத்தில் அவர் பேசுகின்ற போது இதை குறிப்பிட்டு இருந்தார்கள் அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு முதலமைச்சர் அனுமதியோடு அதற்கான டி.பி.ஆர் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணி முடிந்ததும் அந்த புறவழிச் சாலை கட்டாயம் அமைகப்படும் என அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com