search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assembly session"

    • பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் பின்தங்கிய வன்னிய சமுதாய மக்களுக்கு கல்வி வேலைவாய்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
    • புதுவையில் கோரிக்கை பேரணி நடத்தி சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்தினோம்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ம.க,மாநில அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிரு ப்பதாவது:-

    பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் பொருளாதாரத்திலும், சமுதாயத்திலும் பின்தங்கிய வன்னிய சமுதாய மக்களுக்கு கல்வி வேலைவாய்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல கட்ட போராட்டங்கள் நடத்தினார்.

    அதன் விளைவாக புதுவை மாநிலத்தில் வன்னியர், மீனவ சாதிகளை உள்ளடக்கிய 11 சமுதாயங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் இனத்தினர் (எம்.பி.சி.) என பிரிவு உருவாக்கி கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை போராடி பெற்றுக் கொடுத்தார்.

    ஆனால் சமீப காலமாக வெளியான அரசு பணிகளில் இந்த எம்.பி.சி. இட ஒதுக்கீடு விதிமுறை பின்பற்ற படவில்லை.

    இதனை கண்டித்து பா.ம.க. அறிக்கைகள் வாயிலாகவும், முதல்- அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

    கட்சியின் மாநில பொதுக்குழுவிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, புதுவையில் கோரிக்கை பேரணி நடத்தி சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்தினோம்.

    அப்போது முதல்-அமைச்சரும், உள்துறை அமைச்சரும் பா.ம.க.வினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களுடைய கோரிக்கையை விரைவில் வழங்குவதாக உறுதி அளித்தார்.

    இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிர்வாகிகள் மீது பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஜாமீனில் வர முடியாத பிரிவுகளில் வழக்குகள் தொடுக்கப்பட்டது. ஆனால் இத்தனை மாதங்கள் ஆகியும் இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. எனவே வருகின்ற சட்ட மன்ற கூட்ட தொடரில் இட ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சட்டமன்ற கூட்டத்தொடரில் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பேச்சு
    • போளூர் ஜவ்வாது மலை சாலையில் புறவழிச்சாலை அமைக்க வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் போளூர் தொகுதி எம்.எல்.ஏ. அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கேள்வி நேரத்தின் போது பேசியதாவது:-

    ஆன்மீக நகரமான திருவண்ணாமலை நகருக்கு மாதந்தோறும் லட்சக்கண க்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக வருகிறார்கள் அவர்களின் நலனை முன்னிட்டு தற்போது வேலூர் சாலையில் இருந்து செங்கம் செல்லும் சாலை வரை அமைக்கப்பட்டு இருக்கிற சுற்றுவட்டப் பாதையை மேலும் நீடித்து செங்கம் சாலையில் இருந்து வேலூர் சாலை வரை சுற்று வட்டப் பாதை அமைப்பதற்கு அரசு ஆவணம் செய்யுமா என்றும்

    அதேபோல் போளூர் நகரத்தில் ஏற்பட்டிருக்கிற போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக போளூர் நகர் வசூரில் இருந்து ஜவ்வாது மலை செல்லுகின்ற அரசு மருத்துவமனை வரை பைபாஸ் சாலை அமைப்பதற்கு அரசு ஆவணம் செய்யுமா என பேசினார். இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பதில் அளித்து பேசுகையில்:-

    சட்டமன்ற உறுப்பினர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொல்லுகின்ற சாலையை நான் அறிவேன் வேலூர், திருவண்ணாமலை சாலை என்பது தேசிய நெடுஞ்சாலை ஆகும் அதேபோன்று திருவண்ணாமலை செங்கம் சாலையும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.

    மாநில அரசின் சார்பாக புறவழி சாலை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அரசின் சார்பாக நிலங்களை எல்லாம் கையகப்படுத்தப்பட்டு திட்ட மதிப்பீடுகள் எல்லாம் தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் அதற்குரிய நிதியை ஒதுக்கிவிட்டார்கள்.

    இப்படிப்பட்ட நிலையில் இப்போது புதியதாக நான் மத்திய மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து பேசியபோது ஒரு தேசிய நெடுஞ்சாலையை இன்னொரு தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் போது அதற்கான புறவழி சாலைக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நிதி வழங்குகிறோம் என்று தெரிவித்ததன் அடிப்படையில் தற்போது அதற்கான கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

    நிதி பெறப்பட்ட உடன் அதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு தேசிய நெடுஞ்சாலையுடன் செங்கம் சாலையும் வேலூர் சாலையும் இணை க்கப்படும்.

    அடுத்து போளூர் சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அங்கே ஒரு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை வைத்திருக்கிறார்.

    சென்ற முறை சட்டம ன்றத்தில் அவர் பேசுகின்ற போது இதை குறிப்பிட்டு இருந்தார்கள் அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு முதலமைச்சர் அனுமதியோடு அதற்கான டி.பி.ஆர் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணி முடிந்ததும் அந்த புறவழிச் சாலை கட்டாயம் அமைகப்படும் என அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

    தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். #TNAssemblySession
    சென்னை:

    மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கடந்த 6-ம் தேதி கூடியது. இக்கூட்டத்தில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டம், பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து அந்த கூட்டத்தொடரை முடித்து வைப்பதாக கடந்த 18-ம் தேதி ஆளுநர் அறிவித்தார்.



    இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத் தொடர் ஜனவரி 2-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கும் என சட்டப்பேரவை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இக்கூட்டத் தொடரில் ஆளுநர் உரை மீது விவாதங்கள் நடைபெறும். அதன்பின்னர், விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுவார். #TNAssemblySession

    கேரள சட்டசபை நாளை தொடங்கி ஜூன் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது என சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #KeralaAssembly
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் செங்கனூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராமச்சந்திரன். சிபிஐ (எம்) கட்சியை சேர்ந்த இவர் கடந்த ஜனவரி மாதம் காலமானார். இதை தொடர்ந்து செங்கனூர் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட சிபிஐ எம்.மின் சஜி செரியன் சுமார் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், கேரள சட்டசபை கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஜூன் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது என சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், கேரள சட்டசபை நாளை தொடங்க உள்ளது. கேள்வி நேரம் முடிந்ததும் புதிதாக தேர்வு செய்யபட்டுள்ள சஜி செரியன் எம் எல் ஏவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும். ஜூன் 21ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறவுள்ளது என குறிப்பிட்டுள்ளார். #KeralaAssembly
    அரசு துறைகளுக்கு மானிய கோரிக்கைகளை ஒதுக்குவதற்காக தமிழக அரசின் சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 18-ந் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #TNAssembly
    சென்னை

    அரசு துறைகளுக்கு மானிய கோரிக்கைகளை ஒதுக்குவதற்காக தமிழக அரசின் சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 18-ந் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதியன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது. 22-ந் தேதியன்று எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பதிலுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து சட்டசபையின் நிகழ்ச்சிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

    சட்டசபையில் பட்ஜெட் நிறைவேறிய பின்பு, அரசின் ஒவ்வொரு துறைகளும் அவற்றின் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தேவையான நிதியைப் பெறவேண்டும். இதற்கு சட்டசபையில் விவாதிக்கப்பட்டு, அவையின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

    அதற்காக துறை வாரியான நிதி ஒதுக்கம் தொடர்பான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட வேண்டும். எனவே சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

    அரசு துறைகளின் மானிய கோரிக்கைகளுக்கான சட்டசபை கூட்டத்தொடரை வரும் ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபை வட்டாரம் தெரிவித்தது. ஜூன் 18-ந் தேதியன்று சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. #TNAssembly
    ×