கேரள சட்டசபை நாளை தொடக்கம்

கேரள சட்டசபை நாளை தொடங்கி ஜூன் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது என சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #KeralaAssembly
கேரள சட்டசபை நாளை தொடக்கம்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் செங்கனூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராமச்சந்திரன். சிபிஐ (எம்) கட்சியை சேர்ந்த இவர் கடந்த ஜனவரி மாதம் காலமானார். இதை தொடர்ந்து செங்கனூர் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட சிபிஐ எம்.மின் சஜி செரியன் சுமார் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், கேரள சட்டசபை கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஜூன் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது என சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், கேரள சட்டசபை நாளை தொடங்க உள்ளது. கேள்வி நேரம் முடிந்ததும் புதிதாக தேர்வு செய்யபட்டுள்ள சஜி செரியன் எம் எல் ஏவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும். ஜூன் 21ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறவுள்ளது என குறிப்பிட்டுள்ளார். #KeralaAssembly

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com