என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ila Ganesan"

    • பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
    • முதல்வர் ஸ்டாலின் உட்பட முக்கிய அரசியல் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நாகாலாந்து ஆளுநராக இருந்தவர் இல.கணேசன். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இல.கணேசன் (80), கடந்த மாதம் சென்னை வந்தார்.

    கடந்த 8-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் அவருக்கு தலைச்சுற்றல் வந்து விழுந்ததில் காயம் ஏற்பட்டது. எனவே அவரை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

    இதையடுத்து அவரது உடல், ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி உள்ளிட்ட முக்கிய  தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில் இன்று பிற்பகலில் அவரது உடல் இறுதி ஊர்வலத்துடன் கொண்டு செல்லப்பட்டு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மற்றும் ராணுவ  மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

    இல கணேசன் மறைவுக்கு நாகாலாந்து மாநிலம் 7 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.  

    • டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
    • தமிழக ஆளுநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல.கணேசன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    நாகாலாந்து ஆளுநராக இருந்தவர் இல.கணேசன். நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த இல.கணேசன் (80), கடந்த மாதம் சென்னை வந்தார். கால் பாதத்தில் ஏற்பட்ட புண் காரணமாக சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றார். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வீடு திரும்பினார்.

    கடந்த 5-ந்தேதி, கால் மரத்துப்போன நிலையில் வீட்டில் மயங்கி விழுந்த இல.கணேசனை, அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். தொடர்ந்து கடந்த 8-ந் தேதி அதிகாலை 3 மணியளவில் அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. எனவே அவரை சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் தலையில் ரத்தக்கட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இல.கணேசன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

    இதையடுத்து அவரது உடல், ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் அறிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல.கணேசன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    • தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார் இல.கணேசன்.
    • அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    சென்னை:

    நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80. தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். கடந்த 2021-ம் ஆண்டில் மணிப்பூர் ஆளுநராக பதவி வகித்தார்.

    இல.கணேசன் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பா.ஜ.க. உள்பட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இல கணேசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில் கூறியுள்ளதாவது:

    நாகாலாந்து மாநில ஆளுநரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான இல.கணேசன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

    தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காகவும் கடுமையாக உழைத்தவர். அனைத்துத் தரப்பு மக்களிடமும் பரவலாக அறியப்பட்டவர். எளிமையான மனிதர். ஆழ்ந்த சிந்தனைவாதியாகத் திகழ்ந்தவர்.

    இல.கணேசன் மறைவு தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி! என பதிவிட்டுள்ளார்.

    • நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன்.
    • அவரது மறைவு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

    தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து, பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.

    இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    தற்போது தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் அங்கு குழுமியுள்ளனர்.

    முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    மேலும் ஆளுநர் ரவி வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன்.

    இளம் வயதிலிருந்தே, எளிமையுடனும் பணிவுடனும், தன்னலமற்ற சேவைகளுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

    அவரது மறைவு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் நாகாலாந்து மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" என்று தெரிவித்துள்ளார்.

    • தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது
    • அரசியல் வாழ்க்கைக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்.

    நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

    தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து, பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார். 

    இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    தற்போது தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் அங்கு குழுமியுள்ளனர்.

    இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டியவர். மாண்புடன் நடந்து கொண்டு அரசியல் நாகரீகம் பேணிக்காத்தவர்.

    அரசியல் வாழ்க்கைக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்" என முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.
    • மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.

    சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்த இவர், தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

    பாஜக மாநில தலைவராகவும் இவர் இருந்துள்ளார். இதன்பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார்.

    சென்னை தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் அவருக்கு வீடு உள்ளது. அண்மையில் சென்னைக்கு வந்திருந்த அவர் தனது வீட்டில் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. 

    • உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவைகளை செய்தார்.
    • கோவிலின் சார்பாக கவர்னருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நாகாலாந்து கவர்னர் இலா. கணேசன் நேற்று மாலை சுவாமி தரிசனம் செய்தார். மேலும், உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவைகளை செய்தார்.

    கோவிலுக்கு வந்த இலா.கணேசனுக்கு அழிஞ்சிவாக்கம் பாஸ்கர் தலைமையில் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.கோவிலின் சார்பாக கவர்னருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
    • இல.கோபாலனின் உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நாகாலாந்து மாநில ஆளுநராகப் பணியாற்றி வருகிறார் இல.கணேசன்.

    இதற்கு முன்பு இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார்.

    பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இல கணேசன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

    இந்நிலையில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலன் (83) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார்.

    இல.கோபாலனின் உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    • ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • இருதயத்துறை மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருகிறது.

    மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காளஆளுநர் இல.கணேசன் தமிழகம் வந்துள்ளார். இன்று காலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையை சேர்ந்த இருதய சிகிச்சை மருத்துவர் குழுவினர் இல.கணேசனுக்கு சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் சிறுபான்மையினரின் ஓட்டுக்களை கமல் “பொறுக்குவதற்காகவே” இந்து தீவிரவாதி என பேசியுள்ளார் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    பாரதிய ஜனதாவின் தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

    அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் பேசும்போது மகாத்மா காந்தியை நல்ல இந்து என்று பேசியிருக்கலாம், ஆனால் கோட்சேவை பற்றி பேசுவதற்காக இந்து தீவிரவாதி என சொல்லவில்லை. அவர் இந்துக்களை இழிவுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை கூறியுள்ளார்.

    அரவக்குறிச்சி தேர்தலுக்கும், மகாத்மா காந்தி கொல்லப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரவக்குறிச்சியில் உள்ள இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அவர்களின் ஓட்டுக்களை “பொறுக்குவதற்காக” பேசியுள்ளார். எத்தனை பேர் மனம் புண்பட்டாலும் பரவாயில்லை என இவ்வாறு அவர் பேசியது கண்டிக்கத்தக்கது.

    எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. இந்து தீவிரவாதம் என்பது சூடான ஜஸ்கிரீம் சாப்பிடுவது போல.. பிரதமர் மோடிக்கு எதிராக யார் கருத்து கூறினாலும் அதனை வரவேற்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

    திருநாவுக்கரசர் கோட்சே ஆர்.எஸ்.எஸ். என கூறுவது அவர் வரலாறு தெரியாமல் பேசுவதையே காட்டுகிறது. கமல் எப்போதும் திருந்துவதாக தெரியவில்லை. அவர் ஒரு குழப்பவாதி. மக்கள் அவரது பேச்சை சகித்துக் கொண்டுதான் கேட்கிறார்கள். பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையை ஆளுனர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது. பா.ஜனதாவும் அதனை தான் வலியுறுத்தும்.

    பிரதமர் மோடி ஒரு நல்ல இந்து. அதனால் தான் கமல் பேச்சை கண்டித்துள்ளார். கோட்சேவை பயங்கரவாதி என்பதற்கு பதில் தீவிரவாதி என கமல் கூறிவிட்டதாகவே நினைக்கிறேன். ஆனாலும் அவர் அதை நல்ல அர்த்தத்தில் கூறவில்லை..

    கடற்கரை ஓரங்களில் எண்ணை வளம் இருப்பதை கடந்த ஆட்சியாளர்களே ஆய்வு நடத்தி பணிகள் நடந்து கொண்டுதான் இருந்தது. தற்போதைய அரசும் அதற்கான ஆராய்ச்சி பணியைதான் மேற்கொண்டு வருகின்றன. இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்பது ஏற்படாது. அவ்வாறு ஏற்பட்டாலும் அது சிறிதளவு பாதிப்பாகவே இருக்கும். அவ்வாறு ஏற்படும் குறுகிய பாதிப்புக்கும் விவசாயிகளை திருப்திபடுத்தும் விதத்தில் இழப்பீடு வழங்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் விவசாயிகளே அல்ல. அப்படியிருக்கும் போது அவர்களை எப்படி பிரதமர் சந்திக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பாராளுமன்ற தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என்று அரியாங்குப்பத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் இல.கணேசன் பேசியுள்ளார். #pmmodi #ilaganesan

    புதுச்சேரி:

    பா.ஜனதா கட்சியின் அரியாங்குப்பம் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் தவளக்குப்பத்தில் நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறுவது உறுதி. எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை. சிறைக்கு சென்றவர்கள், செல்லப்போகிறவர்கள் என இணைந்து கூட்டணி வைத்துள்ளனர்.

    சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். வேட்பாளரை கைது செய்ய முடியாது. தேர்தல் வரை அவர்கள் வெளியில் இருக்கலாம். எந்த மாகாணத்திலும் எதிர் கட்சியில் உள்ளவர்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்கவில்லை. அப்படியே சேர்ந்தாலும் ராகுல்தான் பிரதமர் என யாரும் கூற வில்லை.

    ஆனால், தமிழகத்தில் ஸ்டாலின் மட்டும் தான் ராகுல் காந்தி பிரதமர் என கூறுகிறார். விழிப்பாக இருந்து தப்பு செய்கிறவர்கள் யார் என்று பார்க்க வேண்டும். செல்லும் இடமெல்லால் மோடி, மோடி என்கின்றனர். மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி.

    இவ்வாறு அவர் பேசினார். #pmmodi #ilaganesan

    ராகுல் காந்தி வருகையால் தமிழகத்தில் பெரிய மாற்றம் உருவாகாது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். #ilaganesan #rahulgandhi #parliamentelection

    வாலாஜா:

    வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் 15ம் ஆண்டு ஸம்வத்சராபிஷேக விழா, 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாண மஹோத்சவ விழா மற்றும் முரளிதர ஸ்வாமிகள் 58வது ஜெயந்தி விழா முன்னிட்டு நேற்று 108சுமங்கலி பூஜை, கோ மாதா திருக்கல்யாணம், சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் காலை கணபதி ஹோமம், கோ பூஜை செய்து 108சுமங்கலிக்கு பூஜையும் கோமாதா திருகல்யாணம் நடைபெற்றது.

    இதில் பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், ரத்தனகிரி பாலமுருகனடிமை ஸ்வாமிகள், ஏர்வாடி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசிர்வதித்து சிறப்பித்தனர்.இதனைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ராகுல் வருகையால் எந்த ஒரு பெரிய மாற்றம் உருவாகாது. ராகுல் எங்கெல்லாம் பேசுகிறாரோ அங்கெல்லாம் மக்கள் நரேந்திர மோடிக்கு ஆதரவான மனநிலைக்கு மாறுகிறார்கள். மக்களிடத்தில் அபத்தமான கருத்துகளை முன்வைப்பார்கள். இவர்களுடைய சரக்கு இவ்வளவுதான் என மக்கள் நினைப்பார்கள்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. கடந்த முறை பா.ம.க. ஒன்று, பா.ஜ.க. ஒன்று, மற்ற அனைத்தும் அதிமுக கைப்பற்றியது. அப்போது யாருயெல்லாம் வெற்றி பெற்றார்களோ அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம் கூட்டணி வைத்திருக்கிறோம் மீண்டும் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ilaganesan #rahulgandhi #parliamentelection

    ×