என் மலர்
நீங்கள் தேடியது "ஜனாதிபதி"
- ஜனாதிபதி குறித்த திரிணாமுல் காங்கிரஸ் மந்திரியின் கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.
- திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டம் நடத்தியது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் அவர் பேசுகையில், சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என பேசியுள்ளார். அவரது பேச்சைக் கேட்ட சுற்றியிருந்த மக்கள் ஆரவாரம் எழுப்பினர்.
இதற்கிடையே, மந்திரியின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி பயன்படுத்திய மொழி ஏற்றுக்கொள்ள முடியாதது என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். ஒடிசாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரி பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பா.ஜ.க. போராட்டம் எதிரொலியாக ஜனாதிபதி பற்றி சர்ச்சையாக பேசியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி மன்னிப்பு கோரினார்.
திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மந்திரியின் அந்தக் கருத்து பொறுப்பற்ற தன்மையில் உள்ளது. அது திரிணமுல்லின் கருத்து இல்லை. ஜனாதிபதி மீது எப்போதும் தங்கள் கட்சி மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளது என தெரிவித்தது.
- ஜனாதிபதி குறித்த திரிணாமுல் காங்கிரஸ் மந்திரியின் கருத்துக்கு திரிணாமுல் கண்டனம் தெரிவித்தது.
- திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டம் நடத்தியது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் மந்திரியாக இருப்பவர் அகில் கிரி. பா.ஜ.க.வைச் சேர்ந்த சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் கூடியிருந்த பொதுமக்களின் முன்னால் அவர் பேசுகையில், சுவேந்து அதிகாரி எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். அவர் எவ்வளவு அழகாக இருக்கிறார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மக்களின் தோற்றத்தின் அடிப்படையில் அவர்களை எடை போடாது. உங்களது ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்? என பேசியுள்ளார். அவரது பேச்சைக் கேட்ட சுற்றியிருந்த மக்கள் ஆரவாரம் எழுப்பினர்.
மந்திரியின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி பதவி விலகக் கோரியும் பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடந்தது.
இதற்கிடையே, பா.ஜ.க. போராட்டத்தின் எதிரொலியாக ஜனாதிபதி பற்றி சர்ச்சையாக பேசியதற்கு திரிணாமுல் காங்கிரஸ் மந்திரி அகில் கிரி மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றிய அகில் கிரியின் கருத்தை முதல் மந்திரி மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பற்றிய அகில் கிரியின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அகில் செய்தது தவறு. அத்தகைய கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவர் எனது கட்சி சகா என்பதால் எனது கட்சி சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கட்சி ஏற்கனவே அகில் கிரியை எச்சரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
- தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
- ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்துகொண்ட விதம் குறித்து புகார் அளிப்பார்கள்.
சென்னை:
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்து கொடுத்த உரையின் ஒரு சில பகுதிகளை கவர்னர் ஆர்.என். ரவி படிக்காமல் தவிர்த்தார்.
இதையடுத்து கவர்னருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அவர் தீர்மானத்தை வாசித்து கொண்டிருந்த போது கவர்னர் ஆர்.என். ரவி அவையைவிட்டு வெளியேறினார்.
தேசியகீதம் பாடப்பட்டு அவை முடிவடைவதற்குள் கவர்னர் வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்னரின் செயலுக்கு தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கவர்னர் நடந்துகொண்ட சபை மீறிய செயலை ஜனாதிபதியிடம் புகார் தெரிவிக்க தி.மு.க. எம்.பி.க்.கள் முடிவு செய்தனர். அதற்காக நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க கடிதம் கொடுத்துள்ளார்.
தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஜனாதிபதியை சந்திக்க நேற்று இரவு அவர்கள் டெல்லி சென்றனர். கூட்டணி கட்சி எம்.பி.க்களும் உடன் உள்ளனர்.
இதற்கிடையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் முகாமிட்டுள்ள தி.மு.க. எம்.பி.க்கள்., ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். ஆனால் இதுவரையில் நேரம் ஒதுக்கப்படவில்லை.
ஜனாதிபதியை சந்திக்க வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் குறித்து புகார் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
- தமிழக கவர்னரை திரும்பப்பெறக்கோரி மனு அளிக்க உள்ளனர்.
சென்னை :
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த 9-ந் தேதி அன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்தார்.
இதையடுத்து அவருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து பேசியபோது, கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சட்டசபை உரையில் சில பகுதிகளை தவிர்த்தது ஏன் என்பது குறித்து கவர்னர் மாளிகை வட்டாரம் சார்பில் 6 அம்சங்களை சுட்டிக்காட்டி விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக, கவர்னர் மாளிகை வட்டார தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தமிழக அரசு சார்பில் 6 பக்க தகவல் வெளியானது.
இதற்கிடையே சட்டசபையில் கவர்னர் நடந்துகொண்ட விதத்தை கண்டித்து அவர் மீது ஜனாதிபதியிடம் புகார் அளிக்க தி.மு.க. எம்.பி.க்கள் முடிவு செய்திருந்தனர். அதன்படி ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க தி.மு.க. எம்.பி.க்களுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 11.45 மணியளவில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க. எம்.பி.க்களுடன் ஜனாதிபதியை சந்திப்பதற்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் டெல்லியில் முகாமிட்டுள்ளார். தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்களும் இந்த சந்திப்பில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் ஜனாதிபதியிடம், தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்துகொண்டவிதம் குறித்தும், அவரை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மனு அளிக்க உள்ளனர்.
- தட்சிண கைலாயம் என புகழப்படும் வெள்ளியங்கிரி மலையடி–வாரத்தில் ஆதியோகியை தரிசிக்கிறேன்.
- மக்களிடம் ஆன்மீகத்தை கொண்டு சேர்க்கும் யோகியாக இருக்கிறார்.
கோவை,
கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சிவனை நினைக்கும் போதே நமக்குள் சக்தி ஊற்ெறடுக்கும். தட்சிண கைலாயம் என புகழப்படும் வெள்ளியங்கிரி மலையடி–வாரத்தில் ஆதியோகியை தரிசிக்கிறேன்.
பார்வதி தேவிக்கு தனது உடலில் பாதியை தந்து அர்த்தநாரீஸ்வரராக விளங்கும் சிவன் பாலின சமத்துவத்தை உணர்த்தும் கடவுளாக இருக்கிறார். ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் ஆண்மை, பெண்மையின் சமத்துவ பக்கத்தை அவர் உணர்த்துகிறார். உலகின் பல்வேறு கலாசாரங்களும், பக்தி, ஞானம் யோகத்தின் பாதை பற்றி பேசுகின்றன. சிவன் மட்டுமே இவை அனைத்துக்கும் மூர்த்தியாக உள்ளார்.
சிவன் நம்மைப் போல குடும்பஸ்தனாகவும், அதே சமயம் சன்னியாசியாகவும் உள்ளார். அவரே முதல் ஞானி, அவரே முதல் யோகி, கருணாமூர்த்தியாக விளங்கும் அவரே ஆக்ரோ–ஷமான ருத்ரனாகவும் இருக்கிறார்.
மகா சிவராத்திரியானது அறியாமை எனும் இருளின் முடிவாகவும், ஞானப்பா–தையின் திறப்பாகவும் இருக்கிறது. வாழ்வின் உயரிய தேடல்களை கொண்ட–வர்களுக்கு இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சத்குரு நவீன காலத்தின் போற்றத்தக்க யோகியாக உள்ளார். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் ஆன்மீகத்தை கொண்டு சேர்க்கும் யோகியாக இருக்கிறார். இந்த சிவராத்திரி நன்னாள், நம் ஒவ்வொரு நாளையும் பிரகாச மானதாக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் சத்குரு பேசியதாவது:-
மனித உடலுக்கு சக்தியானது பொதுவாக உணவு வாயிலாக 60 முதல் 70 சதவீதம் வரையும், சூரிய ஒளி, காற்று, நீர் போன்றவை வாயிலாக 30 முதல் 40 சதவீதம் வரை கிடைக்கிறது. இதை தலைகீழாக மாற்ற வேண்டும்.
அதாவது உணவு வாயிலாக 30 முதல் 40 சதவீதமும், இதர சக்தி இயற்கை வழியிலும் பெற வேண்டும். அப்படி இருந்தால் எப்போதும் சந்தோஷமாகவும், பர–வசத்துடனும் இருக்கலாம்.
ஹார்டுவர்டு மருத்துவ பல்லைக்கழகத்துடன் இணைந்து நாம் சில ஆய்வு மேற்கொண்டோம். அதில் நம் மரபணு மாற்றங்களுக்கு மூளையில் சுரக்கும் சில வேதி மாற்றங்கள், நரம்பியல் மாற்றங்கள் தான் காரணம் என தெரியவந்துள்ளது.
கருவில் இருக்கும் குழந்தையின் செ யல்பா ட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் இசைக்கு உண்டு. எனவே நல்ல இசையை கேளுங்குள். அதற்கு இசை ஞானம் இருக்க வேண்டும் என்பதில்லை. நல்ல இசையாக இருந்தால் போதும்.இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால், புதுச்சேரி துணை முதல்-அமைச்சர் நமச்சிவாயம், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நடிகைகள் கங்கனா, தமன்னா, ஜூஹி சாவ்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கேரளா நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் அவர் நாளை மறுநாள் தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.
- கேரளா சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு லட்சத்தீவுக்கு செல்கிறார்.
திருவனந்தபுரம்:
ஜனாதிபதி திரவுபதி முர்மு தென்மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
தமிழ்நாட்டிற்கு கடந்த மாதம் 18-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கோவையில் உள்ள ஈசா மையத்திற்கு சென்றார். இந்த நிலையில் அவர் இன்று மாலை கேரளா வருகிறார்.
கொச்சியில் உள்ள கடற்படை தளத்திற்கு செல்லும் அவர் அங்கு முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலை பார்வையிடுகிறார்.
இன்று இரவு கொச்சியில் தங்கும் அவர் நாளை (17-ந்தேதி) காலை மாதா அமிர்தானந்தாமயி தேவி மடத்திற்கு செல்கிறார். பின்னர் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
தொடர்ந்து கேரளாவின் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தால் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்ட டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் தொழில்நுட்ப புத்தகங்களையும் வெளியிடுகிறார்.
கேரளா நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் அவர் நாளை மறுநாள் (18-ந்தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு தனி படகில் செல்கிறார்.
தொடர்ந்து விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்கிறார். அங்கு ராமாயண சித்திர தரிசன கூடத்தை பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு அவர் மீண்டும் கேரளா செல்கிறார்.
கேரளா சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு லட்சத்தீவுக்கு செல்கிறார். அங்கு கவரட்டி தீவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் அங்கு மகளிர் சுய உதவி குழுவினரை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
கேரளாவுக்கு இன்று வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுகளில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
- ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார்.
கன்னியாகுமரி:
இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக திரவுபதிமுர்மு நாளை (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 9 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கும் அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் உயர் அதிகாரிகள் முக்கிய விருந்தினர்கள் வரவேற்கிறார்கள்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். அதன் பிறகு அவர் அங்கு இருந்து கார்மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகு துறைக்கு செல்கிறார். அங்கிருந்து தனிப்படகு மூலம் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்கிறார். அவரை விவேகானந்த கேந்திர அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் கேந்திர நிர்வாகிகள் வரவேற்கிறார்கள்.
பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு விவே கானந்தர் நினைவு மண்ட பத்தை சுமார் 30 நிமிடம் சுற்றி பார்க்கிறார். அதன் பிறகு அங்கிருந்து அதே படகு மூலம் கரைக்கு திரும்புகிறார்.பின்னர் கார் மூலம் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்கிறார். அங்குள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை பார்வையிடுகிறார். அதன் பின்னர் பாரத மாதா கோவிலுக்கும்செல்கிறார். பின்னர் காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் வருகையொட்டி பலத்த போலீஸ் பாது காப்பு ஏற்பாடு செய் யப்பட்டு உள்ளது. பாது காப்புபணியில் 1500 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். ஜனாதிபதி வருகையை யொட்டி கன்னியாகுமரி நகரப் பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும் ஹெலிகாப்டர் தளம், அவர் தங்கி இருக்கும் அரசு விருந்தினர் மாளிகை, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை, விவே கானந்தர் நினைவு மண்ட பம், விவேகானந்த கேந்திரா வில் உள்ள ராமாயண தரிசன சித்திர கண் காட்சி கூடம் மற்றும் பாரத மாதா கோவில்ஆகிய இடங் களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தி வருகிறார்கள்.மேலும் போலீஸ் மோப்பநாய் மூலமும் போலீசார் அவர் செல்லும் பாதைகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஜனாதிபதி வருகையை யொட்டி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது. கூட்டத்துக்கு குமரி மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதுகாப்பு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன், பயிற்சி உதவி கலெக்டர் குணால்யாதவ், பத்ம நாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாக பொறுப்பாளர் ராஜ்குமார், கேந்திர நிர்வாக அதிகாரிஅனந்த ஸ்ரீபத்மநாபன், கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், பூம்பு கார் கப்பல் போக்கு வரத்து கழக மேலாளர் செல்லப்பா, குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ் குமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாளர் உதயகுமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில் குமார் உள்பட அனைத்து துறைகளைச் சேர்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரியில் ஜனாதிபதி ஓய்வெடுக்கும் புதிய அரசு விருந்தினர் மாளிகை புதுப்பிக்கும் பணிதீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தைசுற்றிலும் உள்ள பகுதி சீரமைக்கப் பட்டு வருகிறது. அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தை சுற்றி புதர்மண்டி கிடந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது. அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்லும் படகுகள்நிறுத்தி வைக்கப்படும்படகுதுறை க்குசெல்லும்சாலைஇரவு-பகலாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திரா வளாகத்திலும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
- அரசு எந்திரம் முற்றிலும் செயல் இழந்து விட்டது.
- உத்தரகாண்ட் அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் சிக்ரோடா கிராமத்தை சேர்ந்தவர் மீனு (23) இவர் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அலுவலகங்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் உத்தரகாண்ட் அரசு 341 சட்டப்பிரிவை மீறி தாழ்த்தப்பட்ட சாதி பட்டியலில் பல சாதிகள் சேர்கப்பட்டு உள்ளது.
அரசு எந்திரம் முற்றிலும் செயல் இழந்து விட்டது. அதனால் உத்தரகாண்ட் அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். இவர் தாழ்த்தபட்ட வகுப்பை சேர்ந்தவர் ஆவார்.
- கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஜனாதிபதியை வரவேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார்.
கன்னியாகுமரி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாகுமரிக்கு வருகிறார். இதையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதியை வரவேற்பதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார்.
- தேஜ்பூர் விமானப்படை நிலையத்தில் இருந்து போர் விமானத்தில் (சுகோய் 30 எம்.கே.ஐ. ரகம்) பறக்கிறார்.
- காஜிரங்கா தேசிய பூங்காவில் 'காஜ் உத்சவ்-2033'- கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதல் அசாம் மாநிலத்தில் 8ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் 8ம் தேதியன்று (சனிக்கிழமை) தேஜ்பூர் விமானப்படை நிலையத்தில் இருந்து போர் விமானத்தில் (சுகோய் 30 எம்.கே.ஐ. ரகம்) பறக்கிறார்.
மேலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது அசாம் பயணத்தின்போது நாளை (7-ந்தேதி) காஜிரங்கா தேசிய பூங்காவில் 'காஜ் உத்சவ்-2033'- கொண்டாட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
கவுகாத்தி ஐகோர்ட்டு தொடங்கப்பட்டதன் 75-வது ஆண்டு விழா நாளை நடக்கிறது. இதிலும் ஜனாதிபதி முர்மு கலந்துகொண்டு பேசுகிறார். இந்த தகவல்களை ஜனாதிபதி மாளிகையின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
- விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டார்
- கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது.
கன்னியாகுமரி :
மொரிசியஸ் நாட்டு ஜனாதிபதி பிரித்தீவ் ராஜ் சிங் ரூபன் நேற்று கன்னியாகுமரி வந்தார். அவருக்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு அவர் மாலை 6-20 மணிக்கு கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதிக்கு சென்று கடலில் சூரியன் மறைந்த காட்சியை கண்டு களித்தார். இரவு கன்னியாகுமரியில் தங்கினார். 2-வது நாளாக இன்று அதிகாலை 6 மணிக்கு முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதிக்கு சென்றார். அங்கு நின்ற படி சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தார். அதன் பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். இங்கு வந்து அவரை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்புஅளித் தனர். அதன் பிறகு அவர் பகவதி அம்மன் கோவிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பின்னர் அவர் கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகு துறைக்கு சென்றார். அங்கு வந்து அவரை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு அவர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தனிபடகில் சென்றார். அங்கு வந்த அவரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி.தாணு வரவேற்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அவருக்கு சுற்றி காண்பித்து விளக்கி கூறினார்.அதன் பிறகு அவர் படகு மூலம் அருகில் உள்ள திருவள்ளுவர் பாறைக்கு சென்றார். அங்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வியந்தார். மொரிசியஸ் நாட்டு ஜனாதிபதி விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட சென்றதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு நேற்று காலை 10 மணி வரை படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். 2மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு பிறகு விவேகா னந்தர் மண்டபத்துக்கு தொடங்கியது அதன் பிறகு சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டு வந்தனர். அவர் சென்ற பாதையான விவேகானந்தர் ராக் ரோடு மற்றும் சன்னதி தெரு பகுதியில் கடைகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டு இருந்தன. அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல அதிகாலையில் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரி வேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க செல்லவும் போலீசார் தடை விதித்தனர். இதனால் சூரியன் உதயமாகும் காட்சியை காண கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மொரிசியஸ் நாட்டு ஜனாதிபதி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது.
- 4 நீதிபதிகள், பாரம்பரிய முறைப்படி தேவநகரியில் நேற்றுமுன்தினம் கையெழுத்திட்டனர்.
- 4 நீதிபதிகளையும், ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சக்திவேல், ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால், சென்னை தொழிலாளர் கோர்ட்டு முதன்மை நீதிபதி சி.குமரப்பன், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி கே.ராஜசேகர் ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் கடந்த ஆண்டு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம், மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளித்து, ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டு, 4 பேரையும் நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளித்தார். பின்னர், இந்த 4 நீதிபதிகள், பாரம்பரிய முறைப்படி தேவநகரியில் நேற்றுமுன்தினம் கையெழுத்திட்டனர். இந்த ஆவணம், மத்திய அரசு மூலமாக ஜனாதிபதிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த 4 நீதிபதிகளையும், ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.