search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜனாதிபதி"

    • பள்ளி மாணவர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆசிரியையாக மாறி கலந்துரையாடினார்.
    • நாம் அதிக மரங்களை நட வேண்டும்.

    நம் இந்திய திருநாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் திரவுபதி முர்மு அடியெடுத்து வைத்துள்ளார்.

    பெண்களுக்கு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழும் அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

     

    டெல்லியில் ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவின் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆசிரியையாக மாறி கலந்துரையாடினார்.

    மாணவர்களுடனான உரையாடலின்போது ஜனாதிபதி, மாணவர்களின் லட்சியங்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பாடங்களை பற்றி கேட்டறிந்தார். மாணவர்கள் விஞ்ஞானிகள், மருத்துவர்களாக விரும்புகிறார்கள் என்பதை அறிந்த பின்னர் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    புவி வெப்பமடைதல் குறித்து மாணவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி, நீர் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் முயற்சியில் அதிக மரங்களை நடுமாறு மாணவர்களை ஊக்குவித்தார்.

    நாம் அதிக மரங்களை நட வேண்டும். மழைநீர் சேகரிப்பு மூலம் தண்ணீர் வீணாவதை குறைக்கவும் அதை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காற்று மாசுபாடு குறித்தும், அதை குறைப்பதற்கான வழிகள் குறித்தும் அவர் உரையாடினார்.

    • தமிழ்நாட்டில் உயர்த்தபட்ட மின் கட்டணம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களது நிலைப்பாடு.

    அரியலூர்:

    அரியலூரில் தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உயர்த்தபட்ட மின் கட்டணம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மின் கட்டண உயர்வை முதல்வர் பரிசீலனை செய்ய வேண்டும்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் அனைத்து கட்சிகளும் விடுத்த கோரிக்கையையடுத்து மயிலாடுதுறை-மைசூர் விரைவு ரெயில் தற்போது கடலூர் வரை நீட்டிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்களது நிலைப்பாடு. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    அரியலூர் வழியாகச் செல்லக்கூடிய அனைத்து ரெயில்களும் அரியலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என தெற்கு ரெயில்வே ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளேன்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை கட்சி நிர்வாகிகள் என கூறக்கூடாது. அவர்கள் கட்சி, ஜாதி ரீதியாக செயல்படுவதில்லை ஒரு குழுக்களாக செயல்படுகிறார்கள்.

    ஆம்ஸ்ட்ராங்கை என்ன காரணத்துக்காக கொலை செய்தார்கள் என்பதை கண்டறிவது தான் முக்கியமாகும். எனவே தான் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

    இக்கொலை வழக்கில் முக்கியமான நபர்கள் யார் என்பதை கண்டறிந்து அவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை குற்றவாளிகள் திரை மறைவில் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

    கடந்த 10 ஆண்டுகளில் கார்ப்பரேட் கம்பெனிகள் நலனில் கருத்தில் கொண்டு தான் நிதிநிலை தயாரித்து உள்ளார்கள். மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கை தயாரிப்பதில்லை.

    இப்போதும் வரக்கூடிய நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்க இயலாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
    • சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    உச்சநீதிமன்ற நீதிபதிகளாக என்.கோடீஸ்வரர் சிங், ஆர்.மகாதேவன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    ஜம்மு ஐகோர்ட் தலைமை நீதிபதி கோடீஸ்வரர், சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாகினர்.

    காலியாக இருந்த 2 இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

     

    பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • இது தொடர்பான வீடியோவை ஜனாதிபதி அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    • விளையாட்டின் மீதுள்ள தனது ஆர்வத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு வெளிப்படுத்தியுள்ளார்.

    ராஷ்டிரபதி பவனில் உள்ள பேட்மிண்டன் மைதானத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேட்மிண்டன் விளையாடியுள்ளார்.

    இது தொடர்பான வீடியோவை ஜனாதிபதி அலுவலகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    இந்த வீடியோவின் மூலம் விளையாட்டின் மீதுள்ள தனது ஆர்வத்தை முதல் முறையாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளிப்படுத்தியுள்ளார்.

    • மோடி அரசு எழுதிக் கொடுத்த ஜனாதிபதி உரையை பார்த்தால், பிரதமர் மோடி பாசாங்கு செய்வது தெரிகிறது.
    • மக்கள் மாற்றத்தை விரும்பினாலும், அவர் எதுவும் நடக்காதது போல் நடிக்கிறார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி உரை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    மோடி அரசு எழுதிக் கொடுத்த ஜனாதிபதி உரையை பார்த்தால், பிரதமர் மோடி பாசாங்கு செய்வது தெரிகிறது. பாராளுமன்ற தேர்தல் முடிவு அவருக்கு எதிரானது. '400 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்' என்று அவர் கூறியும், மக்கள் பா.ஜனதாவுக்கு 272 தொகுதிகளை கூட அளிக்கவில்லை.

    மக்கள் மாற்றத்தை விரும்பினாலும், அவர் எதுவும் நடக்காதது போல் நடிக்கிறார். கைதட்டல் வாங்குவதற்காக ஜனாதிபதியை பொய்களை படிக்க வைத்துள்ளார்.

    விலைவாசி உயர்வு, மணிப்பூர் வன்முறை, ரெயில் விபத்துகள், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்கள், பா ஜனதா ஆளும் மாநிலங்களில் தலித், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகிய 5 முக்கிய பிரச்சனைகள், ஜனாதிபதி உரையில் ஒரு இடத்தில் கூட இடம்பெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாகும்.
    • இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு கிடைக்கும்.

    பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம்தேதி தொடங்கியது. இதில் மக்களவையில் மட்டும் புதிய எம் பிக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் என முதல் 3 நாட்களும் அலுவல்கள் நடந்தன.

    இதைத்தொடர்ந்து புதிய அரசின் முதல் மாநிலங்களவை இன்று கூடியது. பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார்.

    அப்போது, "70 வயதை கடந்த அனைத்து இந்திய மக்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் 55 கோடி மக்கள் பலனடைந்து வருவதாக" திரவுபதி முர்மு தெரிவித்தார்.

    ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டு திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு கிடைக்கும். இதன்மூலம் 12 கோடி குடும்பங்கள் பலனடைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    • பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல.
    • செங்கோலை மக்கள் வந்து பார்க்கும் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும்.

    புதிய பாராளுமன்றத்தில் செங்கோலை வைக்க ஆரம்பத்தில் இருந்தே எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில், மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த நிலையில், இன்று கூடிய முதல் மாநிலங்களவையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது பாராளுமன்றத்தில் செங்கோல் அகற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பினர்.

    பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல. முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழும் செங்கோல். செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆர்.கே.சௌத்ரிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

    புதிய பாராளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டபோது, அரசு ஒரு பெரிய நாடகத்தை நடத்தியது. செங்கோலை அகற்ற வேண்டும் என்ற சமாஜ்வாதியின் ஆலோசனை நல்லது. சமாஜ்வாதி எம்.பி. கூறியது நல்ல ஆலோசனையே என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறி உள்ளார்.

    இது ஜனநாயக நாடு, செங்கோலை அகற்ற வேண்டும். செங்கோலை மக்கள் வந்து பார்க்கும் அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.பி. மிசா பார்தி கூறி உள்ளார்.

    பாராளுமன்ற மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து ஏழைகளுக்கு அதிகாரம் செல்வதின் அடையாளம் தான் செங்கோல் என்று பாராளுமன்றத்தில் திரவுபதி முர்மு கூறினார்.

    • இந்திய மக்கள் எப்போதுமே ஜனநாயகம், தேர்தல் மீது தங்கள் முழு நம்பிக்கையையும் வெளிப்படுத்தி உள்ளனர்.
    • சந்திரயான் திட்டம் குறித்து தேசம் பெருமை கொள்ள வேண்டும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

    குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற்றவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்.

    இந்திய மக்கள் எப்போதுமே ஜனநாயகம், தேர்தல் மீது தங்கள் முழு நம்பிக்கையையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

    சந்திரயான் திட்டம் குறித்து தேசம் பெருமை கொள்ள வேண்டும்.

    50 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25-ந்தேதி எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் மூலம் அரசியல் சாசனத்தின் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது.

    ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம், அங்கு இந்திய அரசியல் சாசனம் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது.

    கொரோனா, பூகம்பம், போர் சூழல்கள் போன்ற எந்த ஒரு சோகமாக இருந்தாலும், மனித குலத்தை காப்பாற்றுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

    வளர்ந்த இந்தியாவை கட்டி எழுப்புவது ஒவ்வொரு குடிமகனின் லட்சியமும் உறுதியும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    எமர்ஜென்சி காலம் குறித்து ஜனாதிபதி பேசியபோது, எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.

    • போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க, கடும் தண்டனை விதிக்கும் வகையில், புதிய சட்டத்தை அரசு இயற்றி உள்ளது.
    • வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

    * உத்தரப்பிரதேசம், தமிழகத்தில் பாதுகாப்பு வழித்தடத்தை செயல்படுத்தி வருகிறோம்.

    * பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி முன்பை காட்டிலும் 18 மடங்கு அதிகரித்துள்ளது.

    * போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க, கடும் தண்டனை விதிக்கும் வகையில், புதிய சட்டத்தை அரசு இயற்றி உள்ளது.

    * வினாத்தாள் கசிவு பிரச்சனைகளை களைய கட்சி, அரசியலைத்தாண்டி நாம் ஒன்றிணைய வேண்டும்.

    * வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

    * வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை அரசு நிச்சயம் தண்டிக்கும்.

    காசி தமிழ் சங்கம் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் உள்ளிட்ட கலாச்சாரத்தை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சிகளை அரசு தொடங்கி உள்ளது என்று கூறினார்.

    ஜனாதிபதியின் உரையின்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பேசுமாறு எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். தொடர்ந்து நீட்... நீட்... என முழக்கமிட்டனர்.

    • பிரதமரின் கிராமப்புற சாலை வசதி திட்டம் கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது.
    • 0 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

    * நாட்டில் உள்ள 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    * பெண்களின் வருவாயை அதிகரிப்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களின் திறனை அதிகரிக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பெண்களின் வருவாயை அதிகரிக்கவும், அவர்களின் மரியாதையை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    * பிரதமரின் கிராமப்புற சாலை வசதி திட்டம் கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது.

    * மின்சாரத்தை விற்பனை செய்து வருவாய் பெருக்க, சூரிய ஒளி மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    * பின்தங்கிய பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, பிரதமரின் ஜன் மன் திட்டத்தின் மூலம் ரூ.24,000 கோடி செலவழிக்கப்பட்டு வருகிறது.

    * 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படுகிறது என்று கூறினார்.


    • உலக சந்தையில் இந்திய உணவு பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
    • வடகிழக்கு மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் தொலை தொடர்பு வசதி மற்றும் இணைப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

    * கொரோனா பெருந்தொற்று, உலகளாவிய சிக்கல்களுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

    * உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறது.

    * உற்பத்தி, சேவைகள், விவசாயம் ஆகிய மூன்றுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    * உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது.

    * பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ரூ.3,20,000 கோடி மதிப்பிலான உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    * எந்த அளவுக்கு நாம் தற்சார்பு அடைகிறோமோ அந்த அளவுக்கு விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.

    * உலக சந்தையில் இந்திய உணவு பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

    * இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவு தானியங்களை ஊக்கப்படுத்த ஸ்ரீ அன்ன திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    * வந்தே மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

    * உலகின் பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்தியா தீர்வுகளை வழங்கி வருகிறது.

    * நாட்டில் உள்ள 21 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவை உள்ளது.

    * வடகிழக்கு மாநிலங்களில் அனைத்து இடங்களிலும் தொலை தொடர்பு வசதி மற்றும் இணைப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    * அசாம் மாநிலத்தில் மிகப்பெரிய செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. உற்பத்தியின் மையங்களாக வடகிழக்கு மாநிலங்கள் மாற உள்ளது.

    * மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டசபை, பாராளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    * 3-வது ஆட்சிக்காலத்தில் மேலும் 3 கோடி இலவச வீடுகள் கட்டிக்கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    • பாரதத்தில் மீண்டும் பெரும்பான்மை கொண்ட அரசு 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
    • உலக பொருளாதாரத்தில் 5-வது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம்தேதி தொடங்கியது. இதில் மக்களவையில் மட்டும் புதிய எம் பிக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்தல் என முதல் 3 நாட்களும் அலுவல்கள் நடந்தன.

    இதைத்தொடர்ந்து புதிய அரசின் முதல் மாநிலங்களவை இன்று கூடியது. பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெறும் முதலாவது கூட்டத்தொடரில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார்.

    இதற்காக பாராளுமன்றத்திற்கு வந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி வரவேற்றார். செங்கோலுடன் பாராளுமன்ற அவைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைத்து செல்லப்பட்டார். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோரும் ஜனாதிபதியை வரவேற்றனர்.

    இதைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில்,

    * மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தலை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததற்காக தேர்தல் ஆணையத்திற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய நாட்டின் மக்கள் அனைவரும் உற்சாகத்தோடு தங்கள் கடமையை ஆற்றி இருக்கிறார்கள்.

    * 18-வது மக்களவையின் புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த முறையும் பெண்கள் அதிக அளவில் வாக்களித்து வரலாறு படைத்துள்ளனர்.

    * பாரதத்தில் மீண்டும் பெரும்பான்மை கொண்ட அரசு 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

    * 60 ஆண்டுகளுக்கு பின், ஆட்சியில் இருக்கும் அரசு 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

    * அரசின் மீது மூன்றாவது முறையாக மக்கள் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.

    * இந்த நிதியாண்டுக்கான முதல் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    * மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற சிந்தனையின் அடிப்படையில் முன்னேற்ற பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.

    * Reform, perform, transform என்ற சிந்தனையுடன் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

    * உலக பொருளாதாரத்தில் 5-வது மிகப்பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது என்று கூறினார்.

    ×