search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bike accident"

    • உடல் முழுவதும் சகதியானது
    • தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை தோட்டப்பாளையம் வழியாக கழிவுநீர் கால்வாய் செல்லும் கானாறு உள்ளது.

    தோட்டப்பாளையம் அருகந்தம் பூண்டி சர்ச் எதிரே செல்லும் கானாற்று கால்வாயில் தடுப்பு சுவர் கடந்த பல மாதங்களுக்கு முன்பு உடைந்து விழுந்தது.

    கானாற்றின் தடுப்பு சுவர் உடைந்து விழுந்ததால் அந்த வழியாக இரவு நேரங்களில் பைக் ஆட்டோக்களில் செல்பவர்கள் தவறி கானாற்றில் விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர்.

    நேற்று இரவு அந்த வழியாக சென்ற தொழிலாளி பைக்குடன் கானாற்றில் விழுந்து காயமடைந்தார். மேலும் அவரது உடல் முழுவதும் சகதியானது. இதனைக் கண்ட அப்பகுதி வாலிபர்கள் கானாற்றில் விழுந்த நபரை வெளியே தூக்கி காப்பாற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் ஒட்டி வந்த பைக்கின் முன் பகுதி சேதம் அடைந்தது. கானாற்றில் தடுப்பு சுவர் அமைத்து விபத்துக்களை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • அண்ணனை ஊருக்கு அனுப்பிவிட்டு திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் உடல்களை மீட்டு விசாரணை

    போளூர்:

    போளூர் அருகே அரும்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40), லாரிடிரைவர். இவருக்கு சரிதா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தன் அண்ணன் வெங்கடேசனை ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.

    அவரை தேவிகாபுரத்தில் பஸ் ஏற்றி விட்டு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது போளூரில் இருந்து தேவிகாபுரம் நோக்கி கோட்டி என்பவர் மொபட்டில் பிரகாஷ் என்ற நண்பருடன் வந்து கொண்டிருந்தார்.

    முடையூர் காளியம்மன் கோவில் அருகே வரும்போது 2 பேரின் பைக்கும் நேருக்கு நேர் மோதியது. இதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கோட்டி, பிரகாஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அக்கம்பக்கத் தினர் அவர்களை மீட்டு சிகிச் சைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோட்டி பரிதாபமாக இறந் தார். பிரகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருவர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த கொடைக்கல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45). இவர் பைக்கில் துரை (54) என்பவரை ஏற்றிக்கொண்டு, கொடைக்கல் கிராமத்திலி ருந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன், பைக் மீது மோதியது. இதில் முத்துக் குமார், துரை ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவம னைக்கு எடுத்துச்சென்ற போது முத்துக்குமார் வழியி லேயே இறந்துவிட்டார். துரைக்கு கிச்சை அளித்து அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கொண்டப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியது
    • போலீசார் உடலை மீட்டு விசாரணை

    ஆரணி:

    ஆரணி அடுத்த கீழ் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 23). இவர் களம்பூரில் உள்ள ரைஸ் மில்லில் வேலை செய்து வந்தார்.

    இவரது நண்பரான சதீஷ்குமார் என்பவருடன் நேற்று பைக்கில் ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தார். பாபா நகர் அருகே வரும்போது வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறி பைக்கில் இருந்து பரசுராமன் தவறி கீழே விழுந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த பரசுராமனை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.

    ஆனால் வரும் வழியிலேயே பரசுராமன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையின் வளைவில் திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வெங்கடசமுத்திரம் அடுத்த கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 60). ஆம்பூரில் உள்ள கடையில் டெய்லராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு செல்வதற்காக கோவிந்தாபுரம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். சாலையின் வளைவில் திரும்பும் போது எதிரே வந்த மாட்டி வண்டியின் மீது எதிர்பாராத விதமாக இவர் ஓட்டி வந்த பைக் மோதியது.

    இதில் அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அணைப்பட்டி சாலையில் சென்றபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்த போது தடுமாறி கீழே விழுந்தார்.
    • படுகாயமடைந்த கல்லூரி மாணவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே சித்தர்கள்நத்தம் சக்கிலிய ப்பட்டியை சேர்ந்தவர் சென்றாயன் மகன் முகேஸ்க ண்ணா (வயது18). இவர் ஆத்தூர் அரசு கூட்டுறவு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    தனது சகோதரி செல்ல ம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருந்து வாங்க நிலக்ேகாட்டைக்கு பைக்கில் சென்றார். அணைப்பட்டி சாலையில் சென்றபோது திடீரென நாய் குறுக்கே வந்ததால் பிரேக் பிடித்தார். அப்போது நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

    அக்கம் பக்கத்தி னர் அவரை மீட்டு நிலக்கோ ட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்ட முகேஸ்க ண்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் அருண்பிர சாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்த ஊழியர் படுகாயமடைந்தார்.
    • ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே தேவாரம் தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரபு (39). இவர் போடியில் உள்ள வங்கியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். தேவாரம் சாலை கோணம்பட்டி தண்ணீர்தொட்டி பகுதியில் வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்தது.

    இதனால் நிலைதடுமாறிய பிரபு பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கும், அங்கிருந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதுகுறித்து போடி தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்;

    ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் அர விந்தன் (வயது 35). இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது உறவினர் திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பெரியாங்குப்பம் பகுதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நாய் குறுக்கே வந்தது.

    இதில் நிலை தடுமாறி அருகே உள்ள கால் வாய் தடுப்புச்சுவரில் மோதி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலை முடிந்து வீட்டிற்க்கு சென்ற போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த காட்டுக் கொல்லையை சேர்ந்தவர் பழனி (வயது 21). இறைவன் காட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (27). இருவரும் வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

    நேற்று இரவு வேலை முடிந்து இருவரும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்.

    பொய்கையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அவர்களுக்கு முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பி உள்ளது. இதை கவனிக்காததால் இவர்களது பைக் லாரியின் மீது மோதியது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் பிணத்தையும் மீட்டு பிரயோக பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தடுமாறி கீழே விழுந்து பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமார் (வயது27). இவர் மேட்டுபாளையம் பகுதியில் உள்ள பாய் தயாரிக்கும் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இருசக்கர வாகனத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது வாணியம்பாடியில் இருந்து வளையாம்பட்டு நோக்கி சர்வீஸ் சாலையில் பைக் வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் நிர்மல் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கேசவன்(வயது 43),கட்டிட மேஸ்திரி.

    இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான கணபதி(36) என்பவருடன் ஆலங்காயத்தில் இருந்து நிம்மியம்பட்டு நோக்கி பைக்கில் சென்றார்.

    அப்போது சுண்ணா ம்புபள்ளம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி பைக் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்த ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த கேசவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கணபதி மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவர் செல்வராஜை தேடி வருகின்றனர்.

    • பள்ளத்தில் இறந்து கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மேல்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 65), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீட்டுக்கு வர வில்லை.

    இதனால் மனைவி மல்லிகா மற்றும் மகன், மகள்கள் அவரை தேடினர். இந்தநிலையில் மேல்நெல்லி தட்டச்சேரி செல்லும் சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து கலவை சப்- இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அவர் தடுமாறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    ×