என் மலர்
நீங்கள் தேடியது "bike accident"
- நாய் குறுக்கே வந்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்த ஊழியர் படுகாயமடைந்தார்.
- ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே தேவாரம் தம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரபு (39). இவர் போடியில் உள்ள வங்கியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். தேவாரம் சாலை கோணம்பட்டி தண்ணீர்தொட்டி பகுதியில் வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் வந்தது.
இதனால் நிலைதடுமாறிய பிரபு பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கும், அங்கிருந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து போடி தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாய் குறுக்கே வந்ததால் பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்;
ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் அர விந்தன் (வயது 35). இவர் தனியார் தோல் தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது உறவினர் திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பெரியாங்குப்பம் பகுதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு நாய் குறுக்கே வந்தது.
இதில் நிலை தடுமாறி அருகே உள்ள கால் வாய் தடுப்புச்சுவரில் மோதி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலை முடிந்து வீட்டிற்க்கு சென்ற போது விபரீதம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த காட்டுக் கொல்லையை சேர்ந்தவர் பழனி (வயது 21). இறைவன் காட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (27). இருவரும் வேலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
நேற்று இரவு வேலை முடிந்து இருவரும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்.
பொய்கையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது அவர்களுக்கு முன்னால் சென்ற லாரி திடீரென திரும்பி உள்ளது. இதை கவனிக்காததால் இவர்களது பைக் லாரியின் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் பிணத்தையும் மீட்டு பிரயோக பரிசோத னைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தடுமாறி கீழே விழுந்து பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமார் (வயது27). இவர் மேட்டுபாளையம் பகுதியில் உள்ள பாய் தயாரிக்கும் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இருசக்கர வாகனத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது வாணியம்பாடியில் இருந்து வளையாம்பட்டு நோக்கி சர்வீஸ் சாலையில் பைக் வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.
மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் நிர்மல் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்
- போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கேசவன்(வயது 43),கட்டிட மேஸ்திரி.
இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான கணபதி(36) என்பவருடன் ஆலங்காயத்தில் இருந்து நிம்மியம்பட்டு நோக்கி பைக்கில் சென்றார்.
அப்போது சுண்ணா ம்புபள்ளம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த கேசவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கணபதி மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவர் செல்வராஜை தேடி வருகின்றனர்.
- பள்ளத்தில் இறந்து கிடந்தார்
- போலீசார் விசாரணை
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மேல்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 65), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீட்டுக்கு வர வில்லை.
இதனால் மனைவி மல்லிகா மற்றும் மகன், மகள்கள் அவரை தேடினர். இந்தநிலையில் மேல்நெல்லி தட்டச்சேரி செல்லும் சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கலவை சப்- இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அவர் தடுமாறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
- வீடு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 36) கூலி தொழிலாளி. இவர் தனது பைக்கில் அதே பகுதியை சேர்ந்த சரண் (27) என்பவரை ஏற்றிக்கொண்டு ஆம்பூருக்கு சென்றார்.
பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது சின்ன கொமெஸ்வரம் வீர கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து ஓசூர் சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில் வெங்கடேசன் மற்றும் சரண் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார், விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 32). இவர் ஆயுதப் படை பிரிவில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.
வேலூர் காகிதப்பட்டறை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் 42 இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு ஜெயபால் வேலூரில் இருந்து சத்துவாச்சாரி நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சதீஷ் காகிதப்பட்டறையில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
காகிதப்பட்டறை ரோட்டில் வந்தபோது எதிர்பாராத விதமாக சதீஷ் பைக்கும், ஜெயபால் பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் ஜெயபால் படுகாயமும், சதீஷ் லேசான காயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயபாலை மீட்டு பூட்டுதாக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
லேசான காயமடைந்த சதீஷ் ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையை கடந்த போது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
காட்பாடி, கிளித்தான் பட்டறை அருகே உள்ள வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் தனுஷ் (வயது 17).
இவர் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் கிளித்தான் பட்டறை அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
காட்பாடி எல்.ஜி.புதூரை சேர்ந்த கதிரவன் (19). என்பவர் பைக்கில் வேகமாக வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கதிரவன் ஓட்டி வந்த பைக் தனுஷ் மீது மோதியது.
இதில் தனுஷ் மற்றும் கதிரவன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் தனுஷ் பரிதாபமாக இறந்தார்.
சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கதிரவனும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக் மோதியதில் பள்ளி மாணவனும் வாலிபரும் இறந்த சம்பவம் காட்பாடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஜல்லிகற்களில் சிக்கி தவறி கீழே விழுந்தார்
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 35). இவர் சென்னை மடிப்பாக்கத்தில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
நேற்று காலை சென்னை செல்வதற்காக அருள்தாஸ் பைக்கில் சென்றார். அனந்தலை தனியார் கல் குவாரி அருகே வந்த போது சாலையில் கிடந்த ஜல்லிகற்களில் பைக் சிக்கியது. இதில் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தார். அருள்தாஸ் பலத்த காயமடைந்தார்.
இதை தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் அருள் தாசை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அருள்தாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலை முடிந்து வீடு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). இவர் கட்டிட தொழில் வேலை செய்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் கட்டிட வேலைக்கு கார்த்திக் சென்றார். வேலை முடிந்து மாலை பைக்கில் வீடு திரும்பினார்.
அப்போது ஆத்தூர்குப்பம் அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விரமாக பைக் மோதியது. இதில் கார்த்திக் பலத்த காயம் அடைந்தார்.
அங்கிருந்து பொது மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாட்ட றம்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.