search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old woman dies"

    • டிரைவர் கைது
    • திருப்பதி கோவிலுக்கு சென்ற போது விபரீதம்

    வேலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 65). இவர் அதே பகுதி யை சேர்ந்த உறவினர்கள் மற்றும் நபர்களுடன் திருப் பதி ஏழுமலையான் கோவி லுக்கு நேற்று பஸ்சில் சென்றார்.

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த வல்லம் டோல்கேட் அருகே சென்ற போது இயற்கை உபாதை களை கழிக்க பஸ்சை நிறுத்தி னர். நல்லம்மாள் பஸ்சில் இருந்து கீழே இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் நல்லம் மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரி சோதனை க்காக அடுக்கம்

    பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராணிப்பே ட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த நாரா யணபுரம் பகுதியைச் சேர்ந்த பஸ் டிரைவர் வேணுகோபால் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூஜை செய்ய தீபம் ஏற்றியபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர் கொணவட்டம், லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி பாப்பம்மாள் (வயது 90). இவர் கடந்த 13-ந் தேதி பூஜை செய்வதற்காக வீட்டில் தீபம் ஏற்றிக்கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பாப்பம்மாள் சேலையில் தீ பிடித்து எரிய தொடங்கியது. தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் பாப்பமாளை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனியப்பன். இவரது மனைவி அங்கம்மாள் (88). இவர் தோட்டத்திற்கு மாட்டை பிடித்துக்கொண்டு ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
    • கபிலர்மலை நோக்கி வந்த இரு சக்கர வாகனம் ஒன்று அங்கம்மாள் மீது மோதியுள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள பெரியசோளிபாளையம் செம்மடை பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி அங்கம்மாள் (88). இவர் தோட்டத்திற்கு மாட்டை பிடித்துக்கொண்டு ஜேடர்பாளையத்தில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது செம்மடையில் இருந்து கபிலர்மலை நோக்கி வந்த இரு சக்கர வாகனம் ஒன்று அங்கம்மாள் மீது மோதியுள்ளது. இதில் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் படுகாயமடைந்த அங்கம்மாளை அவ்வழியாக சென்றவர்கள் காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த பெரியசோளிபாளையம் செம்மடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (45) என்பவர் படுகாயமடைந்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர் புகாரின் பேரில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையை கடந்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    கர்நாடக மாநிலம், கோலாரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி ஜெகதா (வயது 70). இவர் கொணவட்டத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார்.

    நேற்று முன்தினம் காலை கொணவட்டம் அரசு போக்குவரத்து பணி மனை அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஜெகதா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஜெகதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெகதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கே.வி.குப்பத்தை சேர்ந்த லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • மாரியப்பன். இவரது மனைவி பெரியா (70), இவர் நேற்று முன்தினம் அங்குள்ள எடப்பாடி-குமார பாளையம் சாலையை மேற்கில் இருந்து கிழக்காக கடக்க முயன்றார்.
    • அதிவேகமாக வந்த ஆம்னி கார் மோதி தூக்கி வீசப்பட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தேவூர் அருகே உள்ள பூலா கவுண்டம்பட்டி வடக்கு காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பெரியா (70), இவர் நேற்று முன்தினம் அங்குள்ள எடப்பாடி-குமார பாளையம் சாலையை மேற்கில் இருந்து கிழக்காக கடக்க முயன்றார்.

    கார் மோதி பலி

    அப்போது எடப்பாடியில் இருந்து குமாரபாளையம் நோக்கி அதிவேகமாக வந்த ஆம்னி கார் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் அந்த கார் அதே வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இதனை பார்த்த அவரது மகன் கந்தசாமி அவரை மீட்டு ஈேராடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தென்னை மரத்தான் வளைவு இலகூத்தூர் பகுதியை சேர்ந்தவர் காவேரி ( 67), தொழிலாளியான இவர் தனக்கு சொந்த மான ஆட்டை விற்பதற்காக நேற்று முன்தினம் இருப்பாளி சந்தைக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். வன்னாங்குட்டை-இருப்பாளி ரோட்டில் சென்ற போது அவரது மகனின் மடியில் இருந்த ஆடு திடீரென துள்ளிதயதால் நிலை தடுமாறிய வாகனம் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட காவேரி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு ேசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிக்சசை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார், இது குறித்து பூலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சம்பவத்தன்று சரஸ்வதியை விஷப்பூச்சி கடித்துள்ளது.
    • சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அழுகுளி பிள்ளையார் கோயில் துறையில் வசித்து வருபவர் கந்தசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 66). இந்நிலையில் சம்பவத்தன்று சரஸ்வதியை விஷப்பூச்சி கடித்துள்ளது.

    இதையடுத்து உறவினர்கள் சரஸ்வதியை கோபி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இதுகுறித்து சரஸ்வதியின் மகன் ரகுநாதன் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நன்செய் இடையாறு பகுதியில் 80 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.
    • இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு பகுதியில் 80 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் மூதாட்டியை பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்து விட்டார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

    • குப்பைகளை சேகரித்து தீயிட்டு கொளுத்திய போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த புது வசூரை சேர்ந்தவர் பங்கஜவள்ளி (வயது 76). இவர் கடந்த 11-ந் தேதி வீட்டிற்கு முன்பாக இருந்த குப்பைகளை சேகரித்து தீயிட்டு கொளுத்தினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பங்கஜ வள்ளியின் சேலையில் தீப்பிடித்து மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனை பார்த்த அவரது உறவினர்கள் பங்கஜவள்ளி மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    பின்னர் சிகிச்சைக்காக பங்கஜ வள்ளி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சை பெற்று வந்த பங்கஜவள்ளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராசாத்தி தனது மகன் ராஜாகண்ணு வீட்டில் வசித்து வந்தார்.
    • கோத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோத்தகிரி

    கோத்தகிரி அருகே கொட்டகம்பை பகுதியை சேர்ந்தவர் மல்லன். இவருடைய மனைவி ராசாத்தி (வயது 60). இவர் தனது மகன் ராஜாகண்ணு வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் ராசாத்தி வீட்டின் மேல் தளத்தில் காய போட்டிருந்த துணிகளை எடுத்து வருவதற்காக படிகட்டுகளில் ஏறி சென்றார். அப்போது கால் தவறி 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்து உள்ளார். நீண்ட நேரமாகியும் ராசாத்தி வராததால், குடும்பத்தினர் மேலே சென்று பார்த்தனர். அப்போது ராசாத்தி காயமடைந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராசாத்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எலி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன வெங்காயப்பள்ளி டேக்கன் வட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சின்ன பாப்பா (வயது 70). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி அதிகாலை அதிகமான வயிற்று வலி காரணமாக வீட் டில் இருந்த எலி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந் துள்ளார்.

    இதை பார்த்த அவரது குடும்பத்தினர், சின்ன பாப்பாவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மகன் குணசேகர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

    • பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
    • இதுகுறித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஞ்சமுக விநாயகர் கோவில் அருகே 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார்.

    இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எப்படி இங்கு வந்தார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயங்கிய நிலையில் இருந்தார்.
    • அவரை, அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகம், அம்மா உணவகம் அருகே, கடந்த 19.06.2022 அன்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயங்கிய நிலையில் இருந்தார். அவரை, அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை முடிந்து வெளியே சென்ற மூதாட்டி, மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த மாதம் 22-ந் தேதி மூதாட்டி இறந்து போனார்.

    உயிரிழந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×