search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்த மூதாட்டி சாவு
    X

    விஷம் குடித்த மூதாட்டி சாவு

    • எலி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த சின்ன வெங்காயப்பள்ளி டேக்கன் வட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சின்ன பாப்பா (வயது 70). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி அதிகாலை அதிகமான வயிற்று வலி காரணமாக வீட் டில் இருந்த எலி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந் துள்ளார்.

    இதை பார்த்த அவரது குடும்பத்தினர், சின்ன பாப்பாவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மகன் குணசேகர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

    Next Story
    ×