search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு
    X

    சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

    • குப்பைகளை சேகரித்து தீயிட்டு கொளுத்திய போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த புது வசூரை சேர்ந்தவர் பங்கஜவள்ளி (வயது 76). இவர் கடந்த 11-ந் தேதி வீட்டிற்கு முன்பாக இருந்த குப்பைகளை சேகரித்து தீயிட்டு கொளுத்தினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பங்கஜ வள்ளியின் சேலையில் தீப்பிடித்து மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதனை பார்த்த அவரது உறவினர்கள் பங்கஜவள்ளி மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    பின்னர் சிகிச்சைக்காக பங்கஜ வள்ளி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சை பெற்று வந்த பங்கஜவள்ளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×