என் மலர்
நீங்கள் தேடியது "Father Arrested"
- நித்யாவுக்கு மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தது மறு புறம் என வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பெரியகோட்டை கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவருடைய மகன் வினோத்குமார்(வயது 38). இவர் புகைப்பட கலைஞராகவும், டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி நித்யா(35). இந்த தம்பதியினர் மணவாழ்க்கை நன்றாக சென்று கொண்டு இருந்தது. இவர்களது அன்பான இல்லற வாழ்க்கையின் பயனாக இவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.
இதில் மூத்த மகள் ஓவியா(12) 6-ம் வகுப்பு படித்து வந்தாள். 2-வது மகள் கீர்த்தி(8) 3-ம் வகுப்பு படித்து வந்தாள். 3-வதாக 5 வயதில் ஈஸ்வரன் என்ற மகன் இருந்தான்.
இந்த நிலையில், நித்யாவுக்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பாழாய்ப்போன இந்த கெட்ட சகவாசத்தால் நித்யா தனது அன்பான கணவரையும், குழந்தைகளையும் மறந்து கள்ளக்காதலனே கதி என்றானார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து, தனது கள்ளக்காதலனுடன் நித்யா சென்று விட்டார். கள்ளக்காதலனுடன் தனது மனைவி ஓடிச்சென்ற பிறகும் மனைவியை பிரிய முடியாத சூழ்நிலையில் வினோத்குமார் இருந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை சந்தித்து மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.
அப்போதும் மனம் இரங்காத நித்யா கள்ளக்காதலனை விட்டு கணவருடன் வரமறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
மனைவி தன்னை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய வேதனை ஒரு புறம். 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு தவித்தது மறு புறம் என வினோத்குமார் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார்.
இதனால் மனைவி மீது மிகுந்த ஆத்திரம் அடைந்த வினோத்குமார் நேற்று மாலை வீட்டில் குழந்தைகளுக்கு பலகாரங்கள் வாங்கி கொடுத்து சாப்பிடுமாறு கூறி உள்ளார். குழந்தைகளும் தந்தை வாங்கி கொடுத்த பலகாரங்களை ஆசை ஆசையாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பாவம் அவர்களுக்கு தெரியவில்லை... அதுதான் தங்களது இறுதி சாப்பாடு என்பது.
அப்போது தனது மனதை கல்லாக்கிக்கொண்ட வினோத்குமார் தான் பெற்ற குழந்தைகள் என்றும் பாராது தனது 3 குழந்தைகளையும் துடிக்க, துடிக்க சரமாரி கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்.
இதில் 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பிணமானார்கள். பின்னர் குழந்தைகளை கொலை செய்த வினோத்குமார், மதுக்கூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தான் தனது 3 குழந்தைகளையும் கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
- மாணவி மற்றும் அவரது தாயிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
- சிறுமிக்கு பிறந்த குழந்தை தற்போது குழந்தைகள் நலக்குழு பராமரிப்பில் உள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீடடில் வைத்து குழந்தை பெற்றார். அவருக்கு ரத்தப்போக்கு அதிகமானதை தொடர்ந்து கண்ணங்காட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து 10-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற விவகாரம் வெளியே தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தனக்கு தெரியாது என்று தாய் கூறினார். மாணவியிடம் விசாரித்தபோது கர்ப்பத்துக்கு காரணமானவர் யார்? என்பதை கூறவில்லை.
இருந்தபோதிலும் மாணவி மற்றும் அவரது தாயிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவியின் கர்ப்பத்துக்கு அவரது தந்தையே காரணம் என்பது தெரியவந்தது. 48 வயதான அவர் வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்தார்.
அவரை உடனடியாக சொந்த ஊருக்கு திரும்பி வருமாறு போலீசார் கூறினர். இதையடுத்து அவர் வளைகுடா நாட்டில் இருந்து விமானம் மூலம் மங்களூருக்கு வந்தார். அங்கிருந்து தனது ஊருக்கு ரெயிலில் வந்த மாணவியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
மாணவி பெற்றெடுத்த குழந்தைக்கு அவர்தான் காரணம் என்பதை உறுதி செய்ய மாணவியின் தந்தைக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுமிக்கு பிறந்த குழந்தை தற்போது குழந்தைகள் நலக்குழு பராமரிப்பில் உள்ளது. குழந்தை பெற்றெடுத்த 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பத்துக்கு காரணமான தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் காசர்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நேற்று வழக்கம்போல் விவசாய பணிகளை முடித்துக்கொண்டு சுந்தரவேலு வீடு திரும்பினார்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கொலை நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு (வயது 45). விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பூங்கொடி (35) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு ஜெயதுர்கா (10), ஜெயலட்சுமி (7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் அதே கிராமத்தில் அமைந்துள்ள பள்ளியில் 5 மற்றும் 2-ம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த சில மாதங்களாகவே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனை அக்கம்பக்கத்தினர் தலையிட்டு சமரசம் செய்து வைத்து வந்தனர். கணவன், மனைவி சண்டை போட்டு வந்தால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும், அவர்களின் மனநிலையும் மாறிவிடும் என்று அவர்கள் அறிவுரை கூறினார்கள். இருந்தபோதிலும் கடன் பிரச்சினை உள்ளிட்டவைகளால் தம்பதிக்கிடையே தகராறு தீர்ந்தபாடில்லை.
அவ்வப்போது பூங்கொடி கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் அருகிலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். அப்போதெல்லாம் சுந்தரவேலு, மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்து வருவது வாடிக்கையான ஒன்றாகவே இருந்தது. அதேபோல் இருவீட்டாரின் பெற்றோரும் அவர்களுக்கு சண்டை போடாமல் குடும்பம் நடத்த அறிவுறுத்தினர்.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் விவசாய பணிகளை முடித்துக்கொண்டு சுந்தரவேலு வீடு திரும்பினார். அப்போது மீண்டும் கணவன், மனைவிக்கு ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியது. இதில் கடும் கோபத்திற்கு ஆளான சுந்தரவேலு, மனைவியை சரமாரியாக தாக்கினார். இதைப்பார்த்த மகள்கள் இருவரும் அழுதுகொண்டே சிறிது நேரத்தில் தூங்கிவிட்டனர்.
இன்று அதிகாலை எழுந்த சுந்தரவேலு மனைவி மீதான ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து முதலில் மனைவியை சரமாரியாக வெட்டி சாய்த்தார். இதில் நிலைகுலைந்த பூங்கொடி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். இதைப்பார்த்த தூங்கிக் கொண்டிருந்த பிள்ளைகள் இருவரும் எழுந்து பயத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
இதையடுத்து கல்நெஞ்சம் படைத்த சுந்தரவேலு, மகள்களையும் கொலை வெறியுடன் பார்த்தார். இதனால் அஞ்சி நடுங்கியவாறு நின்று கொண்டிருந்த மகள்களை சற்றும் ஈவு, இரக்கமின்றி சுந்தரவேலு அரிவாளால் வெட்டினார். இதில் அவர்களும் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்து அலறல் சத்தம் வந்ததால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தூக்கம் கலைந்து எழுந்து ஓடிவந்தனர். அப்போது திறந்து கிடந்த வீட்டிற்குள் தாய், இரண்டு மகள்கள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
பின்னர் இதுகுறித்து உடனடியாக அவர்கள் அருப்புக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தாலுகா போலீசார் கொலையுண்டு கிடந்த பூங்கொடி, அவரது மகள்கள் ஜெயதுர்கா, ஜெயலட்சுமி ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மனைவி, 2 மகள்களை கொடூரமாக கொலை செய்த சுந்தரவேலு, நேராக அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்று கொலைக்கு பயன்படுத்திய அரிவாளுடன் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கொலை சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார் கொலைக்கான காரணம் என்ன? 2 பெண் குழந்தைகளையும் கொலை செய்யும் அளவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கொலை நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
குடும்பத்தகராறில் மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
- விபத்து குறித்து சபாபதி மனைவி ஆனந்தி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- பைக்கை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது கீழ்ப்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சபாபதி (வயது45). இவர் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 5-ந் தேதி தனது பைக்கில் வீட்டில் இருந்து கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் ஓட்டி வந்த பைக் சபாபதி பைக் மீது மோதியது. இதில் சபாபதிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிறகு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
விபத்து குறித்து சபாபதி மனைவி ஆனந்தி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்.
இதில் பைக்கை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது கீழ்ப்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்தது. எனவே புதிய மோட்டார் வாகன தடைச் சட்டத்தின் படி சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த அவரது தந்தை கூலித் தொழிலாளி விஜயகாந்த் (43) என்பவரை குற்றவாளியாக சேர்த்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நிபந்தனை ஜாமினில் விடுவித்தனர். சிறுவனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கக்கூடாது எனவும் 12 மாதங்களுக்கு பைக்கின் பதிவு சான்றிதழை இடை நீக்கம் செய்யவும் வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
- வர பிரசாத்தின் மூத்த மகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்.
- விரக்தியில் இருந்த வர பிரசாத் தனது 2-வது மகள் நன்றாக படிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் வர பிரசாத். இவர் சவ ஊர்வலம் வாகன டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் இருந்தனர். 2-வது மகள் லிகிதா ஸ்ரீ (வயது 16).
இவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து வந்தார். பிரசாத்தின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஆனாலும் தனது மகள்களை நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என அவர் எண்ணினார்.
ஆனால் அவருடைய மூத்த மகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த வர பிரசாத் தனது 2-வது மகள் நன்றாக படிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் லிகிதா ஸ்ரீயும் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இவரது காதல் விவகாரம் தந்தை வரப்பிரசாத்திற்கு தெரியவந்தது. அப்போது தனது மகளிடம் நீ காதலிக்கும் வாலிபர் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளது. எனவே அவனை நீ காதலிக்க கூடாது என கட்டுப்பாடு விதித்தார்.
இருப்பினும் லிகிதா ஸ்ரீ வாலிபர் உடன் தொடர்ந்து பழகி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வரப்பிரசாத் நேற்று மாலை மகள் கல்லூரியில் இருந்து வந்தவுடன் வாலிபர் உடனான காதலை கைவிடும்படி எச்சரித்தார்.
இதற்கு லிகிதாஸ்ரீ மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த வரபிரசாத் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மகளின் கழுத்தை அறுத்தார். கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. வலி தாங்க முடியாமல் லிகிதா கதறி துடித்தார்.
சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இறந்து போன மகள் உடலுடன் செல்போனில் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
அப்போது அவர் தனது பேச்சை கேட்காமல் வாலிபரை காதலித்ததால் மகளை கழுத்து அறுத்துக் கொண்டதாக வீடியோவில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசில் சரண் அடைந்தார்.
தனக்கு பிடிக்காத வாலிபரை காதலித்ததற்காக பெற்ற மகளையே தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தர்மராஜ் தனக்கு உடல்நிலை சரியாகி விட்டதாக கூறி மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டார். இதுபற்றி அபிஷா மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார்.
- நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி குழந்தையை கொலை செய்ய முயற்சி செய்த தர்மராஜை கைது செய்தனர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கீழகோடன்குளம் கீழத்தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். கட்டிட தொழிலாளி.
இவருக்கும் பரப்பாடி அருகே உள்ள பாண்டிச்சேரியை சேர்ந்த அபிஷா (வயது 23) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு எட்வின் (3), செல்லம் (2) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று இவரது 2-வது ஆண் குழந்தை செல்லத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அபிஷா, தர்மராஜிடம் பணம் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அபிஷா குளிப்பதற்காக அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த போது, ஆண் குழந்தை செல்லம் அழுதபடி இருந்தது. இதுபற்றி கணவர் தர்மராஜிடம் கேட்டதற்கு அவர் குழந்தைக்கு எறும்பு பொடியை பாலில் கலந்து கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அபிஷா உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக முனைஞ்சிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
அப்போது தர்மராஜ் தானும் எறும்பு பொடியை குடித்து விட்டதாக கூறி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ளார். அங்கிருந்து 2 பேரும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே தர்மராஜ் தனக்கு உடல்நிலை சரியாகி விட்டதாக கூறி மருத்துவமனையில் இருந்து வெளியேறி விட்டார். இதுபற்றி அபிஷா மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி குழந்தையை கொலை செய்ய முயற்சி செய்த தர்மராஜை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், தர்மராஜின் பெற்றோருக்கு சொந்தமாக வீடு, தோட்டம் உள்ளது. இதில் தர்மராஜிக்கு இதுவரை பங்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவருக்கும், அவரது பெற்றோருக்கும் தகராறு இருந்து வருகிறது. இந்நிலையில் தர்மராஜின் தாயார் செல்வகனிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அபிஷா, மாமியார் வீட்டிற்கு சென்று வீட்டு வேலைகள் செய்து கொடுத்தார். இது தர்மராஜிக்கு பிடிக்கவில்லை. இதையொட்டி அவர் மனைவியிடமும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
அந்த ஆத்திரத்தில் குழந்தைக்கு விஷம் குடித்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது உறுதியானது.
- பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த அப்பாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் புகார் கொடுத்தார். இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் மகேஷ் ஆலோசனையின்பேரில், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.
அந்த சிறுமி கூறுகையில், நான் ஜெய்ஹிந்த்புரம் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறேன். என் தந்தை பெயிண்டராக உள்ளார். அவர் எனக்கு ஒரு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்தார். இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். நான் உயிருக்கு பயந்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தேன். அவரது தொல்லை சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. வேறு வழியின்றி தாயாரிடம் விஷயத்தை தெரிவித்தேன் என்றார்.
இதனையடுத்து போலீசார் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது உறுதியானது. பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த அப்பாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
- 13 வயது மாணவி ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- விமலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவையை சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவியின் தந்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இதனையடுத்து சிறுமியின் தாய் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விமல் (வயது 35) என்பவரை திருமணம் செய்தார்.மாணவியின் தாய் கூலி வேலை செய்து வருகிறார். அவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் மாணவியின் வளர்ப்பு தந்தை மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனை வெளியே கூறினார் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் மாணவி தனது தாயிடம் சொல்லாமல் இருந்தார்.இதனை தனக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்ட விமல் தொடர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் காரணமாக மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார்.
இதனையடுத்து மாணவியை அவரது தாய் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 2 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர். இது குறித்து டாக்டர்கள் அவரது தாயிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் தனது மகளிடம் கர்ப்பத்துக்கு யார் காரணம் என விசாரித்தார்.
அப்போது மாணவி வளர்ப்பு தந்தை விமல் தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாகவும், அவர் தான் கர்ப்பத்துக்கு காரணம் என தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் 13 வயது மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வளர்ப்பு தந்தை விமலை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ததை பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற காரணத்தால் பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- வருணை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை:
சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் அருகே காரணை பெரியார் நகரில் வசித்து வருபவர் வருண். இவரது மனைவி விஜயலட்சுமி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வருணின் பெற்றோருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்துள்ளது.
திருமணத்துக்கு முன்பே வருணுடன் நெருங்கி பழகியதால் விஜயலட்சுமி கர்ப்பமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வருணை அழைத்து பேசி இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். அப்போது வருண் இந்த திருமணத்தில் எனது பெற்றோருக்கு விருப்பம் இல்லை. அவர்கள் வரமாட்டார்கள். பின்னர் பேசி சமாதானம் செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளார். வருணின் பெற்றோர் இல்லாமலேயே திருமணம் அரங்கேறி உள்ளது.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஜயலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது பெற்றோருக்கு தெரியாமலேயே வருண் இந்த குழந்தையை வளர்த்து வந்தார். திருமணத்துக்கு பின்னர் மாமனார் வீட்டின் ஆதரவுடனேயே வருண் வசித்து வந்த நிலையில் மாமனார் குடும்பத்தினருடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் தனது பெற்றோருடன் சென்று விடலாம் என்று வருண் எண்ணியுள்ளார்.
வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து குழந்தையையும் பெற்றுவிட்டது தெரிந்தால் தனது பெற்றோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைத்த வருண் தான் பெற்றெடுத்த குழந்தை என்றும் பாராமல் 4 மாத ஆண் குழந்தையை கொலை செய்ய திட்டமிட்டார். இதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குழந்தையை வெளியில் அழைத்துச் சென்ற வருண் வாய், மூக்கை பொத்தி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை சிறிய படுக்கை விரிப்பில் சுற்றி பெரும்பாக்கம் சுடுகாட்டு பகுதிக்கு உடலை தூக்கிச் சென்று புதரில் வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல இருந்துள்ளார். இதன் பின்னர் மனைவி விஜயலட்சுமியிடம் சென்று, தமது குழந்தை கூடுவாஞ்சேரியில் எனது தோழி மகாலட்சுமியின் வீட்டில் உள்ளது. எங்கள் வீட்டுக்கு சென்று நாம் காதலிக்கும் விஷயத்தை முதலில் சொல்வோம். குழந்தையை பற்றி எதுவும் கூறிவிடாதே என்று கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். விஜயலட்சுமியும் இதனை சரி என கேட்டுவிட்டு அமைதியாக இருந்தார்.
இதன் பின்னர் விஜயலட்சுமியை அழைத்துக் கொண்டு தனது பெற்றோரை பார்க்க சென்ற வருண், இவர்தான் எனது காதலி, எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று கூறியுள்ளார். இதனை நம்பி வருணின் பெற்றோரும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து விஜயலட்சுமி, வருணிடம் குழந்தையை வாங்கிக் கொண்டு வந்து விடலாம். நான் உங்கள் வீட்டில் பேசி சமாதானம் செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் வருணோ குழந்தை இருக்கும் இடம் பற்றி முன்னுக்குப்பின் முரணாக பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விஜய லட்சுமி, தனது கணவரின் தோழியான மகாலட்சுமியின் வீட்டை தேடி கண்டுபிடித்து நேரில் போய் விசாரித்தார்.
அப்போது மகாலட்சுமி, விஜயலட்சுமியிடம் உங்கள் குழந்தையை 4 மாதங்களுக்கு முன்பே வருண் அழைத்து சென்று விட்டார். 3 நாட்கள் மட்டுமே எனது வீட்டில் குழந்தை இருந்தது என்று கூறி குண்டை தூக்கி போட்டுள்ளார்.
இதனை தொடர்ந்தே விஜயலட்சுமி உஷாராகி மணிமங்கலம் போலீசில் புகார் செய்தார். தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ரவி மற்றும் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
வருணிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் 4 மாத குழந்தையை கொலை செய்து உடலை முட்புதரில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து உடல் வீசப்பட்ட இடத்துக்கு வருணை அழைத்துச் சென்ற போலீசார் சம்பவ இடத்தில் இருந்து எலும்புக் கூடுகள் சிலவற்றை மீட்டுள்ளனர். குழந்தையின் உடலை சுற்றி வீசிய சிறிய படுக்கையும் கையில் அணிவிக்கப்பட்டிருந்த சிறிய வளையத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். வருணை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ததை பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற காரணத்தால் பெற்ற குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- குடித்து விட்டு ஊர் சுற்றி வந்த மகனை கத்தியால் குத்தி கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
- கொலை குறித்து திட்டக்குடி டி. எஸ். பி. காவியா விசாரணை நடத்தி வருகிறார்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கொடிக்களம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (60). இவரது மகன் விநாயகம் (28). இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆறுமுகத்துக்கும் விநாயகத்திற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு குடித்துவிட்டு வீடு திரும்பிய விநாயகத்துடன் சண்டை ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் தனது மகன் விநாயகம் நெஞ்சில் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த விநாயகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் விநாயகம் மாரடைப்பால் இறந்ததாக கூறி உடலை அடக்கம் செய்ய தயார் செய்து கொண்டிருந்த நிலையில் ஆவினங்குடி போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் விநாயகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மகனை கொலை செய்து நாடகமாடிய ஆறுமுகத்தை கைது செய்தனர். இதுகுறித்து திட்டக்குடி டி. எஸ். பி. காவியா விசாரணை நடத்தி வருகிறார்.
- சந்திரசேகர் மணிகட்டு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.
- ஒரு மகள் வாயில் நுரை தள்ளிய நிலையிலும், மற்றொரு மகள் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும் பிணமாக கிடந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அம்பலவயல் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு சிவானந்தனா (வயது 12), தேவனந்தனா (9) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.
கடந்த மாதம் (ஜூன்) 12-ந்தேதி மகள்கள் 2 பேரையும் குருவாயூர் பாடிச்சேரே நாடாவிற்கு அழைத்துச்சென்றார். அங்குள்ள லாட்ஜில் மகள்களுடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் அவர்கள் தங்கி இருந்த அறை திறக்கப்படாமல் இருந்ததால் சோதனை செய்யப்பட்டது. அப்போது சந்திரசேகர் மணிகட்டு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவரது மகள்கள் அதே அறையில் இறந்து கிடந்தனர்.
ஒரு மகள் வாயில் நுரை தள்ளிய நிலையிலும், மற்றொரு மகள் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையிலும் பிணமாக கிடந்தார். காயத்துடன் கிடந்த சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகள்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிகிச்சையில் இருந்த சந்திரசேகரிடம் விசாரித்தபோது 2 மகள்களில் ஒருவருக்கு ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்தும், மற்றொரு மகளை தூக்கில் தொங்க விட்டும் கொன்றது தெரியவந்தது. மேலும் தனது கையை பிளேடால் அறுத்தும் தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சந்திரசேகர் டிஸ்சார்ஜ் ஆனார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். எதற்காக மகள்களை கொன்றார்? என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ஒன்றும் அறியாத குழந்தை தன் கண்ணெதிரிலேயே துடிதுடித்து இறந்ததை கண்ட தாய் கதறி அழுதார்.
- போலீசார் ரமேஷை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம் ஊத்தூலூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நிர்மலா தம்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார்.
கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
ரமேஷ் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் நிர்மலா தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் மாமியார் வீட்டிற்கு வந்த ரமேஷ் வெளியே சென்று மது குடித்துவிட்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்தார்.
அப்போது கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை எட்டி உதைத்தார்.
இதனால் குழந்தை தொட்டிலில் இருந்து வெளியே வந்து சுவற்றில் மோதி மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் குழந்தை துடிதுடித்து பரிதாபமாக இறந்தது.
ஒன்றும் அறியாத குழந்தை தன் கண்ணெதிரிலேயே துடிதுடித்து இறந்ததை கண்ட தாய் கதறி அழுதார்.
இதனை கண்டு சிறிதும் வேதனை அடையாத ரமேஷ் தனது மூத்த மகனை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார். நிர்மலா கதறி அழும் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ரமேசை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் ரமேஷை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






