என் மலர்
நீங்கள் தேடியது "aruppukottai"
- நேற்று வழக்கம்போல் விவசாய பணிகளை முடித்துக்கொண்டு சுந்தரவேலு வீடு திரும்பினார்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கொலை நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
அருப்புக்கோட்டை:
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு (வயது 45). விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பூங்கொடி (35) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு ஜெயதுர்கா (10), ஜெயலட்சுமி (7) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் அதே கிராமத்தில் அமைந்துள்ள பள்ளியில் 5 மற்றும் 2-ம் வகுப்பு படித்து வந்தனர். கடந்த சில மாதங்களாகவே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனை அக்கம்பக்கத்தினர் தலையிட்டு சமரசம் செய்து வைத்து வந்தனர். கணவன், மனைவி சண்டை போட்டு வந்தால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும், அவர்களின் மனநிலையும் மாறிவிடும் என்று அவர்கள் அறிவுரை கூறினார்கள். இருந்தபோதிலும் கடன் பிரச்சினை உள்ளிட்டவைகளால் தம்பதிக்கிடையே தகராறு தீர்ந்தபாடில்லை.
அவ்வப்போது பூங்கொடி கணவருடன் கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் அருகிலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவார். அப்போதெல்லாம் சுந்தரவேலு, மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்து வருவது வாடிக்கையான ஒன்றாகவே இருந்தது. அதேபோல் இருவீட்டாரின் பெற்றோரும் அவர்களுக்கு சண்டை போடாமல் குடும்பம் நடத்த அறிவுறுத்தினர்.
இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் விவசாய பணிகளை முடித்துக்கொண்டு சுந்தரவேலு வீடு திரும்பினார். அப்போது மீண்டும் கணவன், மனைவிக்கு ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியது. இதில் கடும் கோபத்திற்கு ஆளான சுந்தரவேலு, மனைவியை சரமாரியாக தாக்கினார். இதைப்பார்த்த மகள்கள் இருவரும் அழுதுகொண்டே சிறிது நேரத்தில் தூங்கிவிட்டனர்.
இன்று அதிகாலை எழுந்த சுந்தரவேலு மனைவி மீதான ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து முதலில் மனைவியை சரமாரியாக வெட்டி சாய்த்தார். இதில் நிலைகுலைந்த பூங்கொடி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். இதைப்பார்த்த தூங்கிக் கொண்டிருந்த பிள்ளைகள் இருவரும் எழுந்து பயத்துடன் நின்று கொண்டிருந்தனர்.
இதையடுத்து கல்நெஞ்சம் படைத்த சுந்தரவேலு, மகள்களையும் கொலை வெறியுடன் பார்த்தார். இதனால் அஞ்சி நடுங்கியவாறு நின்று கொண்டிருந்த மகள்களை சற்றும் ஈவு, இரக்கமின்றி சுந்தரவேலு அரிவாளால் வெட்டினார். இதில் அவர்களும் சம்பவ இடத்திலேயே உயரிழந்தனர். அதிகாலை நேரத்தில் வீட்டில் இருந்து அலறல் சத்தம் வந்ததால் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தூக்கம் கலைந்து எழுந்து ஓடிவந்தனர். அப்போது திறந்து கிடந்த வீட்டிற்குள் தாய், இரண்டு மகள்கள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
பின்னர் இதுகுறித்து உடனடியாக அவர்கள் அருப்புக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தாலுகா போலீசார் கொலையுண்டு கிடந்த பூங்கொடி, அவரது மகள்கள் ஜெயதுர்கா, ஜெயலட்சுமி ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மனைவி, 2 மகள்களை கொடூரமாக கொலை செய்த சுந்தரவேலு, நேராக அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சென்று கொலைக்கு பயன்படுத்திய அரிவாளுடன் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கொலை சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார் கொலைக்கான காரணம் என்ன? 2 பெண் குழந்தைகளையும் கொலை செய்யும் அளவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் கொலை நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
குடும்பத்தகராறில் மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்த சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
அருப்புக்கோட்டை அருகே உள்ள எம்.ரெட்டிய பட்டி முத்துராமலிங்க புரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 45) விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி. இருவருக்கும் அந்த பகுதியில் அருகருகே தோட்டம் உள்ளது. தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அழகர்சாமி தனது தோட்டத்தில் குப்பைகளை எரித்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அழகர்சாமியும், அவரது பேரன் தமிழரசனும் சேர்ந்து கட்டையால் கண்ணனை தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த கண்ணனை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்தார். எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகர்சாமி, தமிழரசனை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
பாலையம்பட்டி:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ளது ராமசாமி நகர். இங்குள்ள அய்யங்கரன் என்பவரது தோட்டத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண் முகம் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது ஆடைகள் அலங்கோலமாக கிடந்தன.
இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
முகம் கருகிய நிலையில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்த பெண்ணின் கையில் சங்கீதா என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. அவர் அருகே விஷபாட்டில்களும் கிடந்தன. அந்த பெண்ணை யாராவது இந்த தோட்டத்துக்கு கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்றும், அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை தீ வைத்து எரித்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்? என்பதை அறிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.






