search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife murdered"

    • ஜான்சிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாயிலிருந்து நுரை தள்ளியது.
    • ஜான்சியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாதவத் தருண் (வயது 24). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி ஜான்சி(20) இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    ஜாதவத் தருண் தனது மனைவியுடன் ஐதராபாத்துக்கு குடி பெயர்ந்தார். ஐ.எஸ். சதன் பிரிவில் உள்ள காஜாபாக்கில் அவர்கள் வசித்து வந்தனர்.

    தம்பதிக்கு 2 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் ஜான்சிக்கு கடந்த ஏப்ரல் 16-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரவு கணவன், மனைவி இருவரும் தனிமையில் இருந்தனர்.

    அப்போது ஜாதவத் தருண் ஜான்சியை உல்லாசத்திற்கு அழைத்தார். குழந்தைகளை கவனித்ததால் உடல் சோர்வாக உள்ளது எனக் கூறிய ஜான்சி மறுப்பு தெரிவித்தார்.

    ஆனாலும் மனைவியை தொடர்ந்து வற்புறுத்தினார்.

    ஜான்சி மறுத்ததால் அவரிடம் அத்துமீற தொடங்கினார்.

    இதனால் ஜான்சி கத்தி கூச்சலிட்டார். சத்தம் வெளியே கேட்காமல் இருக்க ஜாதவத் தருண் தனது மனைவியின் வாயை கையால் பொத்தினார். அப்போது மூக்கையும் சேர்த்து அழுத்தினார்.

    இதனால் ஜான்சிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாயிலிருந்து நுரை தள்ளியது. அவர் சுயநினைவை இழந்தார். இதனை கண்டு திடுக்கிட்ட ஜாதவத் தருண் பதறியடித்தபடி வெளியே ஓடி வந்தார்.

    இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக ஓவைசி மருத்துவமனைக்கு ஜான்சியை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஜான்சி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாக சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜான்சி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தனது மனைவி திடீரென இறந்து விட்டதாக ஜாதவத் தருண் தெரிவித்தார். ஆனால் ஜான்சியின் பெற்றோருக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டது.

    இது குறித்து ஜான்சியின் தந்தை சைதாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் ஜான்சி மூச்சுத்திணறல் காரணமாக இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தருணை அழைத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் ஜாதவத் தருணை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • 2 ஆண்டுகளாக வீட்டு வேலைகளை செய்து வருகிறேன்
    • கணவர் வாக்குமூலம்

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த தோப்புக்கான சடாய் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 35). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பானுமதி (32). இவர்களுக்கு மதன்ராஜ், கார்த்திகேயன் என 2 மகன்கள் உள்ளனர். பானுமதிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை மகன்கள் இருவரும் டியூஷன் சென்று விட்டனர். அந்த நேரத்தில் கணவன் மனைவியிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சேட்டு பானுமதி கழுத்தை நெறித்தார்.

    மேலும் தலையானால் முகத்தை அமுக்கி கொலை செய்தார். பின்னர் எதுவும் நடக்காதது போல் வெளியே சென்று விட்டார்.

    டியூசன் முடிந்து வந்த அவரது மகன்கள் தாய் படுத்திருப்பதாக நினைத்து எழுப்பினர். அவர் எழுந்தி ருக்காததால் உடனடியாக பானுமதியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாய கமூர்த்தி விசாரணை நடத்தினார். இதில் சேட்டு பானுமதியை கொலை செய்தது தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பாக சேட்டு போலீசில் அளித்த வாக்குமூ லத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது மனைவி பானுமதிக்கு கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. 10 நாட்களுக்கு முன்பு கர்ப்பப்பை பிரச்சனை காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

    அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் 2 ஆண்டுகளாக வீட்டில் வேலைகளை நான் தான் கவனித்து வந்தேன். ஆனாலும் எனது மனைவி வேலை சரியாக செய்யவில்லை எனக் கூறி திட்டிக் கொண்டே இருந்தார். சம்பவத்தன்று எனது மகன்கள் டியூசன் சென்றிருந்தனர். அந்த நேரத்தில் நான் சரியாக கவனிப்பதில்லை வேலை செய்வதில்லை எனக்கூறி பானுமதி என்னை திட்டினார்.

    இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரது கழுத்தை நெரித்தும் தலையனையை முகத்தில் வைத்து அழுத்தியும் கொலை செய்தேன். பின்னர் எதுவும் தெரியாதது போல நடந்து கொண்டேன். மருத்துவ பரிசோதனையில் நான் கொலை செய்ததை கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மதுரையில் காதல் திருமணம் செய்த மனைவியை கணவர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மதுரை:

    மதுரை சுந்தரராஜபுரம் எல்.எல். ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சித்ராதேவி (வயது29). இவர் நேற்று நள்ளிரவு வீட்டுக்குள் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து சென்று கொலையான பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சித்ரா தேவியை அவரது கணவர் சதீஷ்குமார் உருட்டுக்கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது. இதற்கிடையே சித்ராதேவியை அடித்துக் கொன்றதாக, சதீஷ்குமார் போலீசாரிடம் சரணடைந்தார். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கூறும்போது, நானும் சித்ராதேவியும் காதல் திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சித்ராதேவி அதே பகுதியில் வசிக்கும் சிலரிடம் சகஜமாக பேசி வந்தார். இதனால் எனக்கு அவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை கண்டித்து வந்தேன். இதன் காரணமாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அப்போது எல்லாம் சித்ராதேவி கோபித்துக்கொண்டு அனுப்பானடியில் உள்ள தாய் பார்வதி வீட்டுக்கு செல்வது வழக்கம். பின்னர் நான் அவரை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வருவேன். இதனால் எனக்கு மாமியார் வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நான் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தேன். அப்போது எனக்கும், சித்ராதேவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினேன். இதில் சித்ராதேவி இறந்து விட்டார் என்றார். இதனைத் தொடர்ந்து மனைவியை அடித்துக்கொலை செய்த சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரையில் காதல் திருமணம் செய்த மனைவியை கணவர் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தவறான நடத்தையை கைவிடாததால் தனது மனைவியை கொன்றதாக உதவி இயக்குனர் வாக்குமூலம் அளித்துள்ளார். #BodyPartsInDumbyard #WomanKilled
    கைதான சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணன் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமா ஆசை அதிகமாக இருந்தது. இதனால் இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்து வந்தேன். சந்தியாவை திருமணம் செய்த பிறகு 2 குழந்தைகள் பிறந்தன.

    மகன், மகள் இருவரும் தூத்துக்குடியில் எனது பெற்றோரின் அரவணைப்பில் படித்து வருகிறார்கள்.

    சென்னை வந்து ஜாபர்கான்பேட்டையில் நான் வசித்து வந்தேன். என்னுடன் சண்டை போட்டு விட்டு தாய் வீட்டுக்கு சென்ற சந்தியா சென்னையில் தங்கியிருந்து வெளியில் ஊர் சுற்றுவதாக கேள்விப்பட்டேன். இதற்காக அவளை அழைத்து கண்டித்தேன். சினிமா தொடர்பு காரணமாக சந்தியாவின் நடத்தை மாறியது. அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் பலமுறை எச்சரித்தேன். இருப்பினும் சந்தியா நான் சொல்வதை கேட்கவில்லை. இஷ்டப்படி வெளியில் செல்வது, எப்போதும் போனில் பேசுவது என இருந்தார்.

    இதனை கண்டிக்கும் நேரங்களில் எல்லாம் என்னுடன் சண்டை போட்டார். விவாகரத்து செய்து விடுவேன் என்றும் மிரட்டினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இது தொடர்பாக எனக்கும் சந்தியாவுக்கும் பிரச்சினை வெடித்தது. இருவரும் வீட்டுக்குள்ளேயே கடுமையாக சண்டை போட்டோம். அப்போது சந்தியா என்னை வாய்க்கு வந்தபடி பேசினார்.

    நான் சொல்கிறபடி ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நான் திரும்ப திரும்ப கூறினேன். ஆனால் சந்தியாவோ எனது விருப்பப்படிதான் வாழ்வேன் என்று கூறினார். இதன் காரணமாக எனக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.

    இதனால் சந்தியாவை கொலை செய்து அவள் உடலை 4 துண்டுகளாக துண்டித்தேன். ஆடு வெட்டும் கத்தியால் தலையை தனியாக வெட்டி எடுத்து பார்சல் போட்டேன். இடுப்புக்கு கீழே முழங்கால் வரையில் தனியாக துண்டித்து இன்னொரு பார்சல் போட்டேன்.

    கழுத்துக்கு கீழ் இடுப்பு வரையிலான உடல் பாகத்தையும், இடது கையையும் மற்றொரு பார்சலாக கட்டினேன். இரண்டு கால்களையும், வலது கையையும் தனியாக பார்சல் போட்டேன்.

    19-ந்தேதி கொலை செய்து விட்டு ஒருநாள் முழுவதும் என்ன செய்வது என்று தெரியாமல் காத்திருந்தேன். அதன் பிறகு மறுநாளே கத்தியால் உடலை துண்டித்தேன்.

    கொலையில் இருந்து தப்பிப்பதற்காக 20-ந்தேதி இரவில் உடல் பாகங்களை தனித்தனியாக வீசினேன்.

    அனைத்தையும் வெளியில் மோட்டார் சைக்கிளிலேயே கொண்டு சென்று 2 கால்கள், ஒரு கையை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் வீசினேன். அதுதான் பெருங்குடியில் போலீசிடம் சிக்கி கொண்டது.

    உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி வீசியதால் போலீசாரால் என்னை கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தேன். எப்போதும் போல எனது பணிகளில் ஈடுபட்டு வந்தேன்.

    இவ்வாறு பாலகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. #BodyPartsInDumbyard #WomanKilled
    பாளையில் திருமணம் முடிந்த 25-வது நாளிலேயே காதல் மனைவியை தலை துண்டித்து கொன்ற ஜெயில் வார்டன் ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள தாழையூத்து அடுத்த தென்கலத்தை சேர்ந்தவர் பாலகுரு (வயது27). இவரது மனைவி வேலம்மாள் (21).

    காதல் திருமணம் செய்த 25-வது நாளான நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவி இருவரும் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டனர். பாளை பொட்டல் நான்கு வழிச்சாலையில் சென்றபோது காதல் கணவர் வேறு எதற்கோ தன்னை அழைத்து செல்கிறார் என்று தெரிந்த வேலம்மாள் மோட்டார் சைக்கிளை நிறுத்த சொல்லி கீழே இறங்கி உள்ளார்.

    அப்போது பாலகுரு மோட்டார் சைக்கிளில் தயாராக வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவி வேலம்மாளை ஓட ஓட விரட்டி சரமாரி வெட்டி படுகொலை செய்தார்.

    பின்பு தனியாக தலையை துண்டித்து எடுத்து சாலையின் மறுபுறம் வீசி விட்டு, பாளை போலீசில் சரண் அடைந்தார். நேற்று காலை போலீசார் அவரை சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று கொலை செய்யப்பட்ட வேலம்மாள் உடலையும், தலையையும் மீட்டனர்.

    இது தொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுருவை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து பாலகுரு போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 2011-ம் ஆண்டு மதுரை மத்திய ஜெயிலில் வார்டனாக பணியில் சேர்ந்து வேலை பார்த்து வந்தேன். கடந்த ஆண்டு எனக்கு உடல் நிலை சரியில்லாததால் விடுமுறையில் வீட்டுக்கு வந்தேன். அப்போது என்னை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது அங்கு எனது ஊரை சேர்ந்த வேலம்மாள் நர்சிங் மாணவியாக இருந்தது தெரியவந்தது. ஒரே ஊர் என்பதால் நாங்கள் செல்போன் மூலம் அடிக்கடி பேசி பழகி வந்தோம். இதில் எங்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த மாதம் 30-ந்தேதி நான் தனிமையில் வீட்டில் இருந்த வேலம்மாளை சந்தித்து பேச அவரது வீட்டிற்கு சென்றேன்.

    அப்போது நான் அவருடன் ஒன்றாக இருந்ததாக கூறி வலுக்கட்டாயமாக மறுநாளே எனக்கும், வேலம்மாளுக்கும் கோவிலில் திருமணம் செய்து வைத்து விட்டனர். இதற்கு எனது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உறவினர்கள்- நண்பர்களை அழைத்து விமரிசையாக திருமணம் நடத்தாதது எனக்கும் ஒரு குறையாக தெரிந்தது.

    இதனால் நான் என் மனைவியை இப்படி அவசரப்பட்டு விட்டாயே என்று சத்தம் போட்டேன். ஆனால் அவள் தனிக்குடித்தனம் இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தாள். இந்த பிரச்சினை காரணமாக நான் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பாளை மத்திய ஜெயில் வார்டனாக பணி மாறுதல் பெற்று வந்தேன்.

    இதனால் தினசரி பணி முடிந்ததும் வீட்டுக்கு வருவேன். அப்போது வேலம்மாள் செல்போனில் அடிக்கடி வெளியில் பேசிக்கொண்டு இருப்பாள். வாட்ஸ்-அப்பிலும் எப்போதும் பலருடன் பேசுவாள். இதனால் எனக்கு அவளது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இப்படி எனது வாழ்க்கையை சீரழித்து விட்டாளே என்று நினைத்து அவளை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். அதன்படி திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி இடையில் கொலை செய்ய வேண்டும் என்று அரிவாளை எடுத்து மறைத்து வைத்து இருந்தேன். அதன்படி பாளை பொட்டல் அருகே வந்த போது என் மனைவி வேலம்மாளை வெட்டிக்கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை பாலகுருவை போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர். எந்த சிறையில் வார்டனாக இருந்தாரோ, அதே சிறையில் கைதியாக பாலகுரு அடைக்கப்பட்டார். இதுகுறித்து பாளை சிறை அதிகாரிகள், மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி இன்று பாலகுருவை ‘சஸ்பெண்ட்’ செய்து சிறைத் துறை டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.


    ×