search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband suicide"

    • கடும் கோபம் கொண்ட ரகுநாதன் தனது மனைவியையும் சரமாரியாக தாக்கினார்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ளது கோழித்துறை பகுதி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன்(வயது40). கூலித்தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி ராணி(35) என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ரகுநாதன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.

    தினமும் ரகுநாதன் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற ரகுநாதன் இரவில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை பார்த்த அவரது மனைவி கண்டித்தார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை.

    அவரது மகள் ஏன் தினமும் குடித்து விட்டு வருகிறீர்கள் என கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரகுநாதன், மகளை அங்குள்ள அறையில் பூட்டி வைத்து தாக்கினர்.

    இதை பார்த்து அதிர்ச்சியான ராணி கதவை திறந்து மகளை காப்பாற்றினார். பின்னர் மகன்களையும், மகளையும் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.

    கடும் கோபம் கொண்ட ரகுநாதன் தனது மனைவியையும் சரமாரியாக தாக்கினார்.

    ஆத்திரம் தீராத அவர் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து ராணியின் தலை மற்றும் உடல் முழுவதும் தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.

    பின்னர் ரகுநாதனும் குடிபோதையில் அப்படியே படுத்து விட்டார். சில மணி நேரங்கள் கழித்து போதை தெளிந்து எழுந்த அவர், மனைவி இறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியானார்.

    மனைவியை அடித்து கொன்று விட்டோமே என்றும், போலீசார் எப்படியும் தன்னை விசாரிப்பார்கள் என்ற பயத்திலும் இருந்த ரகுநாதன் அதிகாலையில், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்து கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்தவர்கள், ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் ராணி இறந்த நிலையிலும், ரகுநாதன் தூக்கில் பிணமாகவும் தொங்கி கொண்டிருந்தனர்.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மகளை பார்க்க வேணு தனது மனைவியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
    • ஸ்ரீஜாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி குன்னம்தானம் பகுதியை சேர்ந்தவர் வேணு(வயது45). இவரது மனைவி ஸ்ரீஜா(35). இவர்களுக்கு பவித்ரா என்ற மகள் இருக்கிறார்.

    வேணு மற்றும் அவரது மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு எற்பட்டு வந்திருக்கிறது. இதனால் அவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். அவர்களது மகன் ஸ்ரீஜாவுடனே வசித்து வந்திருக்கிறார்.

    இந்நிலையில் மகளை பார்க்க வேணு தனது மனைவியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு நடந்துள்ளது. அதில் ஆத்திரமடைந்த வேணு, தனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினார். பின்பு அவர் தனது கழுத்தையும் கத்தியால் அறுத்துக்கொண்டார்.

    ஸ்ரீஜாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு கணவன்-மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதுகுறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து கீழ்வாய்ப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு திருவல்லாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    ஸ்ரீஜா உடலில் 13 இடங்களில் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்துள்ளன. கணவன்-மனைவி இருவரின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கணவரால் கொல்லப்பட்ட ஸ்ரீஜா, தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர்.
    • தற்கொலை குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது40). தொழிலாளி. இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இரவு கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆசீர்வாதம் தான் விரும்பிய வேறு ஒரு நிகழ்ச்சியை பார்க்க டி.வி. சேனலை மாற்றுமாறு கூறினார். மேலும் மனைவியிடம் இருந்த ரிமோட்டையும் கேட்டார். ஆனால் அவரது மனைவி நிஷா டி.வி. ரிமோட்டை கொடுக்க மறுத்து அவர் பார்த்து கொண்டு இருந்த டி.வி. நிகழ்ச்சியையும் மாற்ற மறுத்தார்.

    இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆசீர்வாதம் அறையில் இருந்து வெளியே வந்து மகனை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனைவியுடன் மீண்டும் மோதல் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து கோபித்துக் கொண்ட ஆசீர்வாதம் பெரும்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதேபோல் அவரது மனைவி நிஷாவும் கொண்டஞ்சேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். இந்தநிலையில் வீட்டுக்கு திரும்பி வந்த ஆசீர்வாதம் திடீரென அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இந்த விபரீத முடிவை எடுத்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்ப ட்டது.
    • மனமுடைந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டி 6-வது வார்டு அம்பலகாரர்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(29). காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஜெய சுருதி என்ற மனைவியும், 10 மாத கைகுழந்தையும் உள்ளது.

    குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்ப ட்டது. சம்பவத்தன்று மனைவி மற்றும் குழந்தை யைமாமனார் வீட்டில் இறக்கிவிட்டு சென்ற பிரபாகரன் மீண்டும் குடித்துவிட்டு வந்தார். இதனால் அவரது மனைவி வீட்டிற்கு வரமாட்டேன் என கூறினார். மனமுடைந்த பிரபாகரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.




    • மேகநாதன் தனது விவசாய நிலத்தில் கரும்பு மற்றும் ரோஜா செடிக்களை வளர்த்து வருகிறார்.
    • வயலுக்கு சென்ற மனைவி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் கணவன் மேகநாதன் வயலுக்கு சென்று பார்த்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா, பொம்மராஜுபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 55) விவசாயி. இவரது மனைவி துளசி (50). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ள நிலையில் மகள்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து அவரவர்கள் கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர்.

    மகன் கல்லூரியில் படித்து வருகிறார். மேகநாதன் தனது விவசாய நிலத்தில் கரும்பு மற்றும் ரோஜா செடிக்களை வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் காட்டு விலங்குகள் தோட்டத்திற்குள் நுழைவதை தடுக்க மின் வேலி அமைத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் தோட்டத்தில் ரோஜா பூக்களை பறித்து வருவதற்காக நேற்று காலை துளசி தனியாக தோட்டத்திற்கு வந்தார். அப்போது கணவன் அமைத்த மின்வேலியில் அவர் சிக்கி உடலில் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

    வயலுக்கு சென்ற மனைவி நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் கணவன் மேகநாதன் வயலுக்கு சென்று பார்த்தார். அங்கு மனைவி துளசி மின் வேலியில் சிக்கி உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் அமைத்த மின்வேலியில் தனது மனைவியே சிக்கி இறந்து விட்டாரே என மன உளைச்சலில் தோட்டத்தில் உள்ள மாமரத்தில் தூக்குப்போட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

    இதை கண்ட கிராமத்தினர் இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கணவன்-மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவி அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மனைவி பிரிந்து சென்றதால் மணிகண்டன் மிகவும் மனவேதனை அடைந்தார்.
    • நேற்று இரவு வீட்டிற்கு வந்த மணிகண்டன் திடீரென படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கொளத்தூர்:

    கொளத்தூர் அடுத்த வெற்றி நகர் ஜெகதீசன் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது26). இவர் ஆட்டோ டிரைவராகவும் போட்டோகிராபராகவும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சன்மதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

    மணிகண்டனுக்கும் அவரது மனைவி சன்மதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சன்மதி பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    மனைவி பிரிந்து சென்றதால் மணிகண்டன் மிகவும் மனவேதனை அடைந்தார். நேற்று இரவு வீட்டிற்கு வந்த மணிகண்டன் திடீரென படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மணிகண்டனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இவரது கணவருக்கு சக்கரை வியாதியும் ரத்த கொதிப்பும் இருந்தது, இந்நிலையில் இவர் கடந்த ஒரு வாரமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால், அவரது மனைவி திட்டியதாக கூறப்படுகிறது
    • இதனால், வயலுக்கு அடிக்கவைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் எலவடி கிராமத்தில் வசிக்கும் முருகன் (வயது47) விவசாயம் தொழில் செய்து வரும் இவருக்கு லட்சுமி (42) என்ற மனைவியும் அஜித்(24) அபிதா(22) என்ற மகனும் மகளும் உள்ளதாக கூறப்படுகிறது. அஜித் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக தெரிகிறது. அபிதாவிற்கு திருமணம் ஆகி சென்றுவிட்டார் என கூறப்படுகிறது

    . முருகனுக்கு சர்க்கரை வியாதியும் ரத்த கொதிப்பும் இருந்து வருவதாகவும் அதற்கு மருந்து சாப்பிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முருகன் கடந்த ஒரு வாரமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவரை அவரது மனைவி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் முருகனை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் முருகன் இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த 3 நாட்களாக சக்திவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
    • கோபம் அடைந்த சக்திவேல் அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    கடலூரை அடுத்த வெங்கடாம் பேட்டையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 48). விவசாயி. கடந்த 3 நாட்களாக சக்திவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதன் காரணமாக அவரது மனைவி மகேஸ்வரி சக்திவேலை திட்டி உள்ளார். இதனால் கோபம் அடைந்த சக்திவேல் அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி உமா தூங்கியவுடன் சமையல் அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து ஈவு இரக்கமின்றி மனைவியின் கழுத்தை அறுத்தார்.
    • சிறிது நேரத்தில் உமா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் சிம்மாதிரி (வயது60). கூலித் தொழிலாளி. இவரது மனைவி உமா (45). தம்பதிக்கு கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சிம்மாதிரிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் சண்டையிட்டு வந்தார். இதேபோல் கடந்த சனிக்கிழமை இரவும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் தூங்கச் சென்றனர். மனைவி மீது இருந்த ஆத்திரத்தில் சிம்மாதிரி தூங்காமல் விழித்துக் கொண்டே இருந்தார்.

    மனைவி உமா தூங்கியவுடன் சமையல் அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்கிருந்து கத்தியை எடுத்து வந்து ஈவு இரக்கமின்றி மனைவியின் கழுத்தை அறுத்தார்.

    சிறிது நேரத்தில் உமா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பக்கத்து அறைக்கு சென்ற சிம்மாதிரி அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நீண்ட நேரம் சிம்மாதிரியின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது உமா ரத்த வெள்ளத்திலும், சிம்மாதிரி மற்றொரு அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் அருகே மனைவியிடம் கோபித்து சென்ற கணவன் தற்கொலை செய்து கொண்டார்.
    • தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    புதுவை மாநிலம் குருவி நத்தம் சேர்ந்தவர் நாகராஜ். (வயது 65). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது சம்பவத்தன்று நாகராஜ் குடிப்பதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். இதற்கு மனைவி தேவகி பணம் தர மறுத்துள்ளார் இதனால் நாகராஜ்  கோபித்துக் கொண்டு அழகிய நத்தம் பகுதியில் இருந்த மோட்டார் கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த தூக்கணம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    சென்னை கே.கே.நகரில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    சென்னை,கே.கே.நகர் ராணி அண்ணாநகர் குடியிருப்பில் வசித்து வந்தவர் சீனிவாசன். கே.கே.நகர் பஸ் டெப்போவில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பத்மாவதி, கடந்த சில நாட்களாக சீனிவாசன் அடிக்கடி விடுமுறை எடுத்துவிட்டு வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.

    நேற்று மாலை போதையில் வீட்டுக்கு வந்த சீனிவாசனை, மனைவி பத்மாவதி கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த சீனிவாசன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சித்தோடு அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    சித்தோடு அடுத்த பெருமாள் மலை, பெரிய மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 37). இவரது மனைவி சுதா. கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பிரபு கடந்த 23-ந் தேதி மனைவியுடன் கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். மறுநாள் காலை பிரபுவின் தந்தை அம்மாசை பிரபுவை எழுப்புவதற்காக அவரது அறைக்கு வந்தார்.

    அப்போது பிரபு அவரது அறையில் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர் பிரபு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். பிரபு எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×