search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடிக்கடி திட்டிக்கொண்டே இருந்ததால் மனைவியை கொன்றேன்
    X

    அடிக்கடி திட்டிக்கொண்டே இருந்ததால் மனைவியை கொன்றேன்

    • 2 ஆண்டுகளாக வீட்டு வேலைகளை செய்து வருகிறேன்
    • கணவர் வாக்குமூலம்

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த தோப்புக்கான சடாய் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 35). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பானுமதி (32). இவர்களுக்கு மதன்ராஜ், கார்த்திகேயன் என 2 மகன்கள் உள்ளனர். பானுமதிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை மகன்கள் இருவரும் டியூஷன் சென்று விட்டனர். அந்த நேரத்தில் கணவன் மனைவியிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சேட்டு பானுமதி கழுத்தை நெறித்தார்.

    மேலும் தலையானால் முகத்தை அமுக்கி கொலை செய்தார். பின்னர் எதுவும் நடக்காதது போல் வெளியே சென்று விட்டார்.

    டியூசன் முடிந்து வந்த அவரது மகன்கள் தாய் படுத்திருப்பதாக நினைத்து எழுப்பினர். அவர் எழுந்தி ருக்காததால் உடனடியாக பானுமதியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாய கமூர்த்தி விசாரணை நடத்தினார். இதில் சேட்டு பானுமதியை கொலை செய்தது தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பாக சேட்டு போலீசில் அளித்த வாக்குமூ லத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது மனைவி பானுமதிக்கு கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. 10 நாட்களுக்கு முன்பு கர்ப்பப்பை பிரச்சனை காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

    அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் 2 ஆண்டுகளாக வீட்டில் வேலைகளை நான் தான் கவனித்து வந்தேன். ஆனாலும் எனது மனைவி வேலை சரியாக செய்யவில்லை எனக் கூறி திட்டிக் கொண்டே இருந்தார். சம்பவத்தன்று எனது மகன்கள் டியூசன் சென்றிருந்தனர். அந்த நேரத்தில் நான் சரியாக கவனிப்பதில்லை வேலை செய்வதில்லை எனக்கூறி பானுமதி என்னை திட்டினார்.

    இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரது கழுத்தை நெரித்தும் தலையனையை முகத்தில் வைத்து அழுத்தியும் கொலை செய்தேன். பின்னர் எதுவும் தெரியாதது போல நடந்து கொண்டேன். மருத்துவ பரிசோதனையில் நான் கொலை செய்ததை கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×