என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl molested"

    • போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது.
    • சிறுமி புகார் அளித்த வாலிபரிடம் டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் 13 வயது சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது அவர் கர்ப்பமாக இருந்ததை அறிந்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து தன் மகளிடம் கேட்ட போது ஒரு வாலிபர் தன்னை வன்கொடுமை செய்ததாக கூறினார். இதுகுறித்து பெற்றோர் தரப்பில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது.

    சிறுமி புகார் அளித்த வாலிபரிடம் டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதன் முடிவுகள் வராததால் வாலிபர் கைது செய்யப்படவில்லை. சிறுமி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருப்பதால் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் தாய் தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் தனது மகளின் நிலைக்கு காரணமான வாலிபர் கைது செய்யப்படாததை நினைத்தும், மனைவி தற்கொலை செய்ததை நினைத்தும் கவலையில் இருந்த சிறுமியின் தந்தை இன்று தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சின்னாளபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.
    • அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 45 வயது மீனவர் ஒருவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    அவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் கள்ளக்காதலியின் மகள் மட்டும் இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு சென்ற அவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார். நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் இது குறித்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் சிவ பிரகாசம் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தார். இதற்கிடையே சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

    இந்த நிலையில் நேற்று முத்தியால்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    • மாணவி, ஆஸ்பத்திரியில் இருந்து கழிவறைக்கு சென்றார். அங்கு அந்த மாணவிக்கு குழந்தை பிறந்தது.
    • கழிவறையில் இருந்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி சென்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர், அவரை கண்ணூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுபற்றி மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் மாணவி, ஆஸ்பத்திரியில் இருந்து கழிவறைக்கு சென்றார். அங்கு அந்த மாணவிக்கு குழந்தை பிறந்தது.

    கழிவறையில் இருந்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி சென்றனர். அவர்கள் அங்கு வலியால் துடித்து கொண்டிருந்த மாணவியை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கும், குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மாணவியிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

    இதில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 53) என்ற தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கிருஷ்ணன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஜாமீனில் வெளியே வந்த தீபக்குமார் சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தீபக்குமாரை 2-வது முறையாக போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் தீபக்குமார் (27). திருமண மேடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    கடந்த ஆண்டு தீபக்குமார் ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீபக்குமாரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த தீபக்குமார் அந்த சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். கடந்த மாதம் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இதுகுறித்து சிறுமியிடம் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தீபக்குமார் தான் சிறுமியின் குழந்தைக்கு தந்தை என தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தீபக்குமாரை 2-வது முறையாக போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சிவமணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
    • புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அரசு ஆஸ்பத்திரி டிரைவர் சிவமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த 17 வயது சிறுமி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    சேலம் அருகே உள்ள காடையாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வருபவர் சிவமணி (வயது 50). இவர் அந்த மாணவியிடம் நல்லவர் போல் பழகி மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்தினார். அதன் பிறகு நாளடைவில் அவர், மாணவியிடம் தவறாக பழக தொடங்கினார். இதற்கு மாணவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது பற்றி வீட்டில் சொல்லி விடுவதாக கூறி எச்சரிக்கையும் விடுத்தார். ஆனால் சிவமணி கேட்கவில்லை.

    மாணவியை பின்தொடர்ந்து தன்வலையில் வீழ்த்தினார். தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், தனக்கு சொத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தைகளை அள்ளி விட்டு, மாணவியை பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.

    இதை அறிந்த மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    சிவமணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அரசு ஆஸ்பத்திரி டிரைவர் சிவமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைதான அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    • 17 வயது சிறுமியை கடத்தி போதைக்கு அடிமையாக்கி 3 மாதங்களாக ஒரு கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஓட்டல் உரிமையாளர் ஜோசி தாமஸ், லாட்ஜ் உரிமையாளர் சாலாம், மானேஜர் அஜித்குமார், பூந்துறையை சேர்ந்த பெண் கிரிஜா உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் பெற்றோரிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

    சிறுமியை காணாமல் தவித்த பெற்றோர் இது பற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை போலீசார் மீட்டனர். அந்த சிறுமியின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் அவர் போதைக்கு அடிமையாகி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அந்த சிறுமிக்கு கவுன்சிலிங் கொடுத்து விசாரித்தனர். இதில் அந்த சிறுமியை கடந்த 3 மாதங்களாக 4 மாவட்டங்களுக்கு கடத்தி சென்று ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதன் விபரம் வருமாறு:-

    கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, அருகில் உள்ள பஸ் நிலையத்திற்கு சென்று உள்ளார். அங்கு சிறுமியை வாலிபர் ஒருவர் சந்தித்து பேசியுள்ளார். அவர் சிறுமியை அருகில் உள்ள லாட்ஜூக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு சிறுமிக்கு போதை மருந்து கொடுத்து அவர் மயக்கத்தில் இருந்த போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை லாட்ஜ் உரிமையாளரும் சீரழித்துள்ளார்.

    மறுநாள் அங்கிருந்து தப்பி வந்த சிறுமியை இன்னொரு நபர், வேலை தருவதாக கூறி அவரது வீட்டுக்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார். இப்படி திருச்சூர், வயநாடு, பாலக்காடு உள்பட 4 மாவட்டங்களுக்கு அந்த சிறுமியை கடத்தி சென்று 3 மாதங்கள் செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளனர்.

    இவை அனைத்தையும் தெரிந்து கொண்ட போலீசார் அந்த சிறுமி கொடுத்த தகவலின் பேரில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஓட்டல் உரிமையாளர் ஜோசி தாமஸ், லாட்ஜ் உரிமையாளர் சாலாம், மானேஜர் அஜித்குமார், பூந்துறையை சேர்ந்த பெண் கிரிஜா உள்பட 8 பேரை கைது செய்தனர்.

    இதில் 13 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    17 வயது சிறுமியை கடத்தி போதைக்கு அடிமையாக்கி 3 மாதங்களாக ஒரு கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • பிளஸ்-2 மாணவியை யாரோ வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.
    • சம்பவம் குறித்து இண்டூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த புகார் அனைத்து மகளிர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், மிட்டாசின்னஅள்ளி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி.

    இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    தினமும் பள்ளிக்கு அந்த மாணவி சைக்கிளில் சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று பள்ளியை விட்டு புறப்பட்ட மாணவி குறித்த நேரத்துக்கு வீடு திரும்பவில்லை.

    இந்நிலையில் மாணவியின் உறவினர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் மாணவி வழக்கமாக வீட்டுக்கு வரும் பாதையில் சென்றுள்ளார்.

    அப்போது ஒரு புதர் அருகே மாணவியின் சைக்கிள் மட்டும் நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதியில் தேடி பார்த்த போது சற்று தொலைவில் மாணவி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    உடனடியாக அவரை அங்கிருந்து தூக்கி சென்று பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அந்த மாணவியை யாரோ வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.

    இது தொடர்பாக இண்டூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த புகார் அனைத்து மகளிர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை வழிமறித்து பலாத்காரம் செய்தது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கல்லூரி மாணவர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

    மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 2016-ம் ஆண்டு சிறுமிக்கு பிடித்த சாக்லெட் மற்றும் பணம் கொடுத்து ஆசை காட்டி பூசாரி நடராஜன் பழகினார்.
    • பூசாரி நடராஜன் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.

    ராயபுரம்:

    மண்ணடியை சேர்ந்தவர் நடராஜன்(62). கோவில் பூசாரி. அவரது கோவிலுக்கு அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமி அடிக்கடி வந்தாள். சிறுமி கோவிலில் சிறு, சிறு பணிகளை செய்து வந்தாள்.

    இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சிறுமிக்கு பிடித்த சாக்லெட் மற்றும் பணம் கொடுத்து ஆசை காட்டி பூசாரி நடராஜன் பழகினார். பின்னர் அவர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.

    இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் முத்தியால்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கண்ணகி வழக்குப்பதிவுசெய்து பூசாரி நடராஜனை கைதுசெய்தார்.

    இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நடராஜனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • மாணவி வீட்டில் தனிமையில் இருப்பதை அறிந்த வாலிபர் அத்துமீறி வீட்டினுள் நுழைந்து மாணவியை மிரட்டி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
    • மாணவி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் அந்த இடத்திற்கு ஓடி வந்துள்ளனர்.

    களியக்காவிளை:

    களியக்காவிளை அருகே பாலோடு கலூர் பகுதியை சேர்ந்த வாலிபர் உண்ணிக்குட்டன் (வயது 26). இவர் படிப்பு முடித்து விட்டு வேலை தேடிவந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் வாலிபருக்கு பழக்கம் ஏற்பட்டு 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

    காலையில் பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு செல்லும் மாணவியை வாலிபர் ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர். இதனால் மாணவி உண்ணிக்குட்டனிடம் உள்ள பழக்கத்தை நிறுத்தினார். இதனால் வாலிபர் மாணவியிடம் கடும் கோபத்தில் இருந்துள்ளார். மேலும் மாணவி செல்லும் இடங்களில் எல்லாம் வாலிபர் சென்று மாணவியை மிரட்டினார். இதுகுறித்து மாணவி பெற்றோரிடம் கூறினார்.

    இந்த நிலையில் மாணவி வீட்டில் தனிமையில் இருப்பதை அறிந்த வாலிபர் அத்துமீறி வீட்டினுள் நுழைந்து மாணவியை மிரட்டி மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். மாணவி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் அந்த இடத்திற்கு ஓடி வந்துள்ளனர்.

    அதற்குள் வாலிபர் கதவை சாத்தி விட்டு தான் தற்கொலை செய்ய போவதாக மிரட்டியுள்ளார். ஊர் மக்கள் கதவை உடைத்து வாலிபரை மடக்கி பிடித்துள்ளனர்.

    இதுகுறித்து பாலோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வாலிபரின் செல்போனை பறிமுதல் செய்து வாலிபர் உண்ணிகுட்டன் வேறு ஏதாவது பெண்களை இப்படி மிரட்டி உள்ளாரா? என்று விசாரணை நடத்தினர்.

    மேலும் மாணவி கொடுத்த புகாரின் பேரில் பாலோடு போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது உறுதியானது.
    • பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த அப்பாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பெற்ற மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் புகார் கொடுத்தார். இதில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் மகேஷ் ஆலோசனையின்பேரில், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

    அந்த சிறுமி கூறுகையில், நான் ஜெய்ஹிந்த்புரம் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறேன். என் தந்தை பெயிண்டராக உள்ளார். அவர் எனக்கு ஒரு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்தார். இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். நான் உயிருக்கு பயந்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்தேன். அவரது தொல்லை சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. வேறு வழியின்றி தாயாரிடம் விஷயத்தை தெரிவித்தேன் என்றார்.

    இதனையடுத்து போலீசார் அந்த சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது உறுதியானது. பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த அப்பாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • 48 வயதுடைய பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர், அந்த பெண்ணின் பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • தாயின் கள்ளக்காதல் விவகாரத்தை அறியாத அந்த பெண்ணின் மகள், தன்னுடைய 12 வயது மகளை தாய் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அவரும் தனது பேத்தியை பராமரித்து வளர்த்து வந்தார்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்தவர் வசந்த் (வயது 27). இவர் யாகப்பா நகர் பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அந்த கறிக்கடையில் சில மாதங்களுக்கு முன்பு 48 வயதுடைய பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்தார்.

    அப்போது வசந்திற்கும், அந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அதே பகுதியில் தனி வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணுக்கு கணவர், மகள், மருமகன் மற்றும் 12 வயது பேத்தி உள்ளனர்.

    தாயின் கள்ளக்காதல் விவகாரத்தை அறியாத அந்த பெண்ணின் மகள், தன்னுடைய 12 வயது மகளை தாய் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். அவரும் தனது பேத்தியை பராமரித்து வளர்த்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு வசந்த் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

    அப்போது கள்ளக்காதலியின் பேத்தியான 12 வயது சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிகிறது.

    இந்த நிலையில் வசந்த்தின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பாட்டியிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலகவதி விசாரணை நடத்தி சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வசந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து கைது செய்தார்.

    48 வயதுடைய பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபர், அந்த பெண்ணின் பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 2019-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்துல் ஹக்கீமை போலீசார் கைது செய்தனர்.
    • வழக்கை விசாரித்த கோர்ட்டு, அப்துல் ஹக்கீமுக்கு 62 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். இவர் அங்குள்ள மதரசா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு பட்டாம்பி போக்சோ கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, அப்துல் ஹக்கீமுக்கு 62 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.

    ×