என் மலர்
நீங்கள் தேடியது "girl molested"
- சுற்றுலா தலத்துக்கு காரில் செல்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றனர்.
- கடைக்கு சென்ற மகளை காணாமல் அவரது பெற்றோர் தவித்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா தன்யா பகுதியை சேர்ந்த சிறுமி அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர்கள் மோகித் ( வயது 20) மற்றும் பிரதீப் (24). இவர்கள் டாக்சி டிரைவர்கள்.
பக்கத்து வீட்டினர் என்பதால் சிறுமி அவர்களிடம் பழகி வந்தார். சம்பவத்தன்று சிறுமி அங்குள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்க சென்றார். அப்போது மோகித், பிரதீப் ஆகிய இருவரும் சிறுமியிடம் பேச்சு கொடுத்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள சுற்றுலா தலத்துக்கு காரில் செல்வதாக கூறி சிறுமியை அழைத்து சென்றனர். ஹால்ட்வானியின் கத்கோடம் பகுதியில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் கார் சென்றபோது சிறுமியை அவர்கள் கட்டாயமாக மது குடிக்க வைத்தனர். பின்னர் காரிலேயே வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதனிடையே கடைக்கு சென்ற மகளை காணாமல் அவரது பெற்றோர் தவித்தனர். பின்னர் அவர்கள் கத்கோடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் உடனடியாக தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது கத்கோடம் சாலை ஓரத்தில் கார் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்தனர்.
உள்ளே சிறுமி அரைகுறை ஆடையுடன் மயங்கிய நிலையில் கிடந்தாள். உடனே போலீசார் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதாள். இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி டாக்சி டிரைவர்கள் மோகித், பிரதீப் ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் உத்தரகாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 15 வயது சிறுவன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வளைகுடா நாட்டிற்கு சென்றுவிட்டார்.
- இந்த வழக்கில் தொடர்புடைய 45 வயது மதிக்கத்தக்க ஆண் கைது செய்யப்படவில்லை.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் சந்தேரா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை, 15 வயது சிறுவன் உள்பட 5 பேர் கடந்த சில மாதங்களாக பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கடை ஊழியர் நவுசாத் பொருட்களை வினியோகம் செய்ய சிறுமியின் வீட்டுக்கு வந்தபோது, தனியாக இருந்த அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதேபோல் சிறுவன் உள்பட மற்ற 4 பேரும் சிறுமி தனியாக வீட்டில் இருந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
இதனை அறிந்த சிறுமியின் உறவினர்கள், அதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை சீரழித்த 15 வயது சிறுவன், சிறுமியின் மைத்துனர் உள்பட 5 பேர் மீதும் வழக்கு பதிந்தனர். இந்த சம்பவத்தில் நவுசாத், பயாஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
15 வயது சிறுவன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வளைகுடா நாட்டிற்கு சென்றுவிட்டார். ஆகவே அவரையும், இந்த வழக்கில் தொடர்புடைய 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஆகிய இருவரும் கைது செய்யப்படவில்லை. சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய அவரது மைத்துனர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறுமியின் உடலை அடைத்து வைத்த அறையிலேயே குல்வர்தன் மது போதையில் இரவு முழுவதும் தூங்கினான்.
- சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி அருகே உள்ள நீருகட்டு வாரி பள்ளியை சேர்ந்தவர் கோபிநாத். நெசவு தொழிலாளி. இவரது மகள் ரிஷிகா பிரியா (வயது 7). பெற்றோர்கள் இருவரும் தனித்தனியாக வேலைக்குச் சென்று தங்களது 2 குழந்தைகளையும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்து வந்தனர்.
நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை என்பதால் ரஷிகா பிரியா தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்தார். அவரது பெற்றோர் வேலைக்குச் சென்று இருந்தனர்.
சிறுமியின் எதிர்த்த வீட்டை சேர்ந்தவர் குல்வர்தன் (30). மது மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையானவர். வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை குல்வர்தன் நைசாக பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து துடிதுடிக்க கொலை செய்தார்.
யாருக்கும் தெரியாமல் இருக்க வீட்டில் இருந்த பிளாஸ்டிக் டிரம்மில் சிறுமியின் உடலை அடைத்து வைத்தார். வீட்டிற்கு வெளியே விளையாடிய சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
கணவன், மனைவி இருவரும் பதறி அடித்து கொண்டு வந்து அப்பகுதியில் உள்ளவர்களுடன் சேர்ந்து சிறுமியை தேடிப் பார்த்தனர். ஆனால் அவர்களால் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து மதனப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். இந்த நிலையில் சிறுமியின் உடலை அடைத்து வைத்த அறையிலேயே குல்வர்தன் மது போதையில் இரவு முழுவதும் தூங்கினான்.
நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் போலீசார் குல்வர்தன் வீட்டின் கதவை தட்டினர். மது போதையில் இருந்த குல்வர்தன் கதவை திறக்கவில்லை. ஜன்னல் வழியாக பார்த்தபோது குல்வர்தன் தூங்கிக்கொண்டு இருந்தார்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் குல்வர்தன் ரிஷிகா பிரியாவை அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
மீண்டும் குல்வர்தன் வீட்டிற்கு சென்ற போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். குல்வர்தன் போலீசாரை தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ரிஷிகா பிரியாவின் உடலில் ஆடை இல்லாமல் கொலை செய்யப்பட்டு பிளாஸ்டிக் டிரம்மில் அடைக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.
போலீசார் சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் சிறுமியின் பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் மும்பை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
குல்வர்தனை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட வேண்டும். இல்லை என்றால் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தனர். போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் குல்வர்தனுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- அத்தையின் கணவர், அவரது மகன் மற்றும் தனது தந்தையால் சிறுமி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
- சிறுமி 8 வயதாக இருக்கும் போது அவரது தாய்மாமன் பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
கேரளாவை சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவளது தந்தை மற்றும் உறவினர்களே இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவர போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள புன்னப்பிரா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, தனது தோழியை சந்தித்த போது கடந்த 4 ஆண்டுகளாக தந்தை மற்றும் உறவினர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருவதாக கூறி கண்ணீர் விட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
விசாரணையில் சிறுமியின் தாய், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் தந்தையின் சகோதரி வீட்டில், சிறுமி தங்கினார். அங்கு தான் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
அத்தையின் கணவர், அவரது மகன் மற்றும் தனது தந்தையால் சிறுமி இந்த நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானது தெரிய வந்ததை தொடர்ந்து தந்தை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சிறுமி 8 வயதாக இருக்கும் போது அவரது தாய்மாமன் பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பான புகாரில் போக்சோ வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மஜாம் அலியை கைது செய்தனர்.
- வாழ்நாள் முழுவதும் (அதாவது சாகும் வரை) சிறை தண்டனை விதித்து கடந்த 2022-ம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த 20.1.2020 அன்று பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். மாலை 4.30 மணி அளவில் வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அந்தப் பகுதியில் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜாம் அலி (வயது 20) என்பவர் அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்றுள்ளான்.
அவர் முட்புதற்களுக்குள் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். பின்னர் சிறுமி அணிந்திருந்த உடையில் இணைக்கப்பட்டிருந்த கயிற்றின் மூலமாக அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பிவிட்டார். சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அதே பகுதியில் புதருக்குள் பிணமாக சிறுமி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மஜாம் அலியை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. மு வில் மஜாம் அலி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் (அதாவது சாகும் வரை) சிறை தண்டனை விதித்து கடந்த 2022-ம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக மஜாம் அலி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் பா.நம்பி செல்வன் ஆஜராகி, சிறுமி கொலை வழக்கில் நேரடி சாட்சியங்கள் கிடையாது. சூழ்நிலை சாட்சிகள் மற்றும் விஞ்ஞானபூர்வமான சாட்சிகளின் அடிப்படையில் கீழ் கோர்ட்டு மேல்முறையீட்டாளருக்கு தண்டனை விதித்து உள்ளது.
இறந்த சிறுமியின் உடலில் மேல்முறையீட்டாளர் முடி இருந்தது. இது அவருடையது தான் என்பது விஞ்ஞானபூர்வமான பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது. மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டாளருக்கு கீழ் கோர்ட்டு விதித்த சாகும் வரை தண்டனையை உறுதி செய்தும், அவருடைய மேல்முறையீட்டு மனுவை தள்ளு படி செய்தும் உத்தரவிட்டனர்.
- பயந்து போன இருவரும் பெற்றோரிடம் சொல்லாமல் அமைதி காத்தனர்.
- சிறுமியின் பெற்றோர் சைதாபாத் போலீசில் புகார் செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த சைதாபாத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.
சிறுமியும், அவரது 7 வயது சகோதரனும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றனர். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பினர். பெற்றோர் வேலைக்கு சென்றதால் சிறுமி தனது சகோதரருடன் வீட்டில் இருந்தார். சிறுமி தனியாக இருப்பதை அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் கவனித்தார்.
கஞ்சா போதையில் இருந்த வாலிபர் சிறுமியின் வீட்டிற்கு வந்து சிறுமியை சரமாரியாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் சிறுமியையும், அவரது சகோதரனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றார். இதனால் பயந்து போன இருவரும் இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லாமல் அமைதி காத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமை குறித்து தெரிவித்தார். சிறுமியின் பெற்றோர் சைதாபாத் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- வழக்கு தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி. இவர் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தனது தாயுடன் வசித்து வந்த மாணவியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதை தொடர்ந்து அவருடைய நண்பர்களும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த 2 ஆண்டுகளாக 14 பேர் மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த நிலையில் மாணவி கர்ப்பமானார். பயந்து போய் மாணவி இந்த விவகாரத்தை வெளியே கூறவில்லை. தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவருடைய தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் மாணவியை 14 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தாய் திட்டியதால் சிறுமி கோபித்துக் கொண்டு 2 மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
- வாலிபர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் 15 வயது சிறுமி சுற்றித்திரிவதாக திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சென்ற போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு மூலமாக விசாரித்தனர். விசாரணையில் சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பது தெரியவந்தது. சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் சிறுமி பல்லடத்தை சேர்ந்தவர் என்பதும், தாய் திட்டியதால் கோபித்துக் கொண்டு 2 மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இந்த நிலையில் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த மினி பஸ் டிரைவர் முகமது நசீர்(வயது 22) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வாலிபர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கொங்கு நகர் அனைத்து மகளிர் போலீசார் முகமது நசீரை போக்சோவில் கைது செய்தனர்.
- போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது.
- சிறுமி புகார் அளித்த வாலிபரிடம் டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்நிலையில் 13 வயது சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது அவர் கர்ப்பமாக இருந்ததை அறிந்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தன் மகளிடம் கேட்ட போது ஒரு வாலிபர் தன்னை வன்கொடுமை செய்ததாக கூறினார். இதுகுறித்து பெற்றோர் தரப்பில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என தெரிகிறது.
சிறுமி புகார் அளித்த வாலிபரிடம் டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதன் முடிவுகள் வராததால் வாலிபர் கைது செய்யப்படவில்லை. சிறுமி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருப்பதால் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமியின் தாய் தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் தனது மகளின் நிலைக்கு காரணமான வாலிபர் கைது செய்யப்படாததை நினைத்தும், மனைவி தற்கொலை செய்ததை நினைத்தும் கவலையில் இருந்த சிறுமியின் தந்தை இன்று தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சின்னாளபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.
- அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 45 வயது மீனவர் ஒருவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
அவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த பெண்ணுக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் கள்ளக்காதலியின் மகள் மட்டும் இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு சென்ற அவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார். நடந்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாய் இது குறித்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் சிவ பிரகாசம் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தார். இதற்கிடையே சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.
இந்த நிலையில் நேற்று முத்தியால்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
- மாணவி, ஆஸ்பத்திரியில் இருந்து கழிவறைக்கு சென்றார். அங்கு அந்த மாணவிக்கு குழந்தை பிறந்தது.
- கழிவறையில் இருந்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி சென்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர், அவரை கண்ணூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அந்த மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் மாணவி, ஆஸ்பத்திரியில் இருந்து கழிவறைக்கு சென்றார். அங்கு அந்த மாணவிக்கு குழந்தை பிறந்தது.
கழிவறையில் இருந்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி சென்றனர். அவர்கள் அங்கு வலியால் துடித்து கொண்டிருந்த மாணவியை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கும், குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தகவல் அறிந்து அங்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மாணவியிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
இதில் மாணவியை அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 53) என்ற தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கிருஷ்ணன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஜாமீனில் வெளியே வந்த தீபக்குமார் சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
- சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தீபக்குமாரை 2-வது முறையாக போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:
ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் தீபக்குமார் (27). திருமண மேடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு தீபக்குமார் ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீபக்குமாரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த தீபக்குமார் அந்த சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். கடந்த மாதம் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து சிறுமியிடம் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தீபக்குமார் தான் சிறுமியின் குழந்தைக்கு தந்தை என தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தீபக்குமாரை 2-வது முறையாக போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






